Thursday, August 26, 2010

பாப் கார்ன்

நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.  (தொழில் தர்மம் கருதி, பெயர்கள் தரப்படவில்லை.......  யம்மா, என்னா பில்ட்-அப்பு!)  அப்படி நான் எழுதாததால்,  என் சமையல் படு கேவலமாக இருக்கும் போல என்று நினைப்பில் எனக்கு கமென்ட் வேறு முந்தைய பதிவுகளில் போட்டு உள்ளார்கள்.  அவ்வ்வ்வ்.....
இல்லைப்பா..... நான் நல்லாவே சமைப்பேன்..... (உண்மை.... உண்மை..... உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.) Fancy யாதான் எதுவும் சமைக்கத் தெரியாது.  தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது போல மற்ற வகை சமையலில் பிரமாதப்படுத்த தெரியாது.  அவ்வளவுதான்...

மேலும்,  பதிவுலகில்  போட்டியே வைத்து களைகட்டும் அளவுக்கு சமையல் ராணிகள் கலக்குறாங்க......

இருந்தாலும்,  வித்தியாசமான இந்த ரெசிபி, எனக்கு கிடைத்ததும் என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.   "எந்திரன்" ஸ்பெஷல் என்றும் வைத்து கொள்ளுங்களேன்.....  இந்த ஸ்பெஷல் பாப்கார்ன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
இனிமே யாரும் என்னை சமையல் குறிப்பு எதற்கு எழுத மாட்டேங்கறீங்க என்று சொல்லக்கூடாத அளவுக்கு இந்த ரெசிபி பண்ணிடும் என்று நினைக்கிறேன்.  

தேவையான பொருட்கள்:

 ஒரு சின்ன மர டேபிள் அல்லது ஸ்டூல்
ஐந்தில் இருந்து பத்து செல் போன்கள்
(டிப்ஸ்)  அந்த செல் போன்களின் நம்பர்கள் தெரிந்து இருப்பது நல்லது.
ஐந்து அல்லது ஆறு - நன்கு காய்ந்த சோளம் (பாப்கார்ன் செய்வதற்கு ஏற்ற முறையில்)

ஸ்டார்ட் த மூஜிக்:

மர டேபிள் எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
மூன்று அல்லது நான்கு செல் போன்கள் எடுத்து அரணாக நடுவில் சுற்றி வைக்கவும்.
செல் போன்கள் மத்தியில் உருவாகும் வட்டத்தில் (இடத்தில்)  பாப் செய்ய வேண்டிய கார்ன் எடுத்து வைக்கவும்.
கையில் இருக்கும் மற்ற செல்போன்கள் உதவியுடன்,  டேபிள் மேல் இருக்கும் செல் போன்களுக்கு டயல் செய்யவும்.
ரிங் சத்தம் கேட்கட்டும்.  missed கால் ஆக போகட்டும். எடுத்து பதில் பேச வேண்டாம்.
பட் பட் என்று பாப்கார்ன் வெடித்து ரெடி ஆகிவிடும்.
எடுத்து சாப்பிட்டு விடவேண்டியதுதான்.

என்ன ஒரு மாதிரியாக என்னை பார்க்கிறீங்க?
கீழே உள்ள வீடியோவில் செய்முறை தெளிவாக உள்ளது.
    



இந்த அளவுக்கு microwave radiation வெளிப்படும் செல் போன் என்று தெரிகிறதல்லவா?  அவசியத் தேவைகள் தவிர செல் போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது, மக்களே!!!  அது மட்டும்  அல்லாமல் பாக்கெட்டிலும் அதிக நேரம் வைத்து இருப்பது நல்லது அல்ல.....  வேறு ஏதாவது வெடித்து உடம்புக்குள்ளே பாப்கார்ன் ஆகப்போகுது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

மேற்கொண்டு ஆய்வுகளுக்கு:

Senate Hearing on Cell Phones and Brain Cancer:
  http://www.youtube.com/watch?v=npK5HSxukyA

Wikipedia: 
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health

Environmental Health:
http://environment.about.com/od/environment/a/cell_phones.htm

Tuesday, August 24, 2010

பணம் என்னடா பணம்!

"தமிழ் உதயம்"  ரமேஷ்  அவர்கள்,  ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி...  

http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post.html

இந்த தலைப்பில் எவ்வளவு   அருமையாக அவர் எழுதி இருக்கிறார் என்று அந்த பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும்.   எல்லா கோணங்களிலும் அவர் யோசித்து எழுதி விட்டதால்,  இந்த தலைப்பை நாம  இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா?  (யம்மா, இந்த எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து,  திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான்  மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்....... சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி  சீன் பத்தி  சொன்னாலே அதிருதுல........ ஹையா.... அதிலும் பணம் டீலிங்தான்...... ஆரம்பமே, இந்த தலைப்புக்கு  அமர்க்களமா அமைந்து விட்டது........... கூல்!)

அவர் தந்து இருக்கும் தலைப்பு:    பணம் குறித்த எனது அனுபவம்  வைத்து ஒரு பகிர்வு. 

நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்...  அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   இப்போ,  பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?


என்னதான் மாமா, பாட்டிம்மா, தாத்தா  என் கையில காசு கொடுத்தாலும்,  அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு"  வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்.... சரி, சரி....... விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
(சித்ரா, அடக்கி வாசி.......!!!)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க?   நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய  வேலையை  -   official கடமையை  - அவர்  செய்யாமல் இருக்கும் போது,  அவரை திட்டி - அடிச்சு -  துவைச்சு - அதை   செய்ய வைக்காமல் - அவருக்கு  அஹிம்சை முறையில்,  பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த  வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு  நினைவு படுத்தவா?  யார் கண்டா? இருக்கலாம்.....

அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க..... இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை  அவருக்கு கொடுத்து பாருங்க,  இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற,  literal மீனிங் இல்லைப்பா..... பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....

டீக்கடை பெஞ்ச்ல உக்கார்ந்துகிட்டு பழைய தினத்தந்தி பேப்பர் நியூஸ் படிக்கலைனா எப்படி?

திடீர் பணக்காரர்கள் குறித்து, நான் எனது சித்தப்பாவுடன்  வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருந்தேன்.  அப்பொழுது அவர்,   தமிழ்நாட்டுல lottery ban வருவதற்கு முன் திருநெல்வேலி பேப்பர்ல வந்த ஒரு நியூஸ் பத்தி சொன்னாங்க.......
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒருவருக்கு, ஒரு முறை lottery ல சில லட்சங்கள் பரிசாக கிடைச்சுச்சாம்.   அப்போ  நிருபர், "இனி என்ன செய்யப்போறதா இருக்கீங்க?"  என்று கேட்டதற்கு,
" ஒரு டீச்சர்க்கோ டாக்டர்க்கோ லாட்டரி  பரிசு விழுந்தா,  அவங்க செய்யுற வேலையை - பார்க்குற தொழிலை  விட்டுருவாங்களா? எனக்கு தெரிந்த தொழில், பிச்சை எடுக்கிறதுதான்.  lottery பணம் வந்துட்டுனு அதை விட்டுற முடியுமா? ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்,"  என்று நியூஸ்பேப்பர்ல நிஜமாகவே பேட்டி கொடுத்து இருந்தாராம்.  அவருக்கு ரொம்ப தங்க மனசு......

அப்புறம்,  எனக்கு பிடித்த சில பணம் குறித்த quotes - புதுமொழிகள் - பாத்துட்டு இன்றைய வெட்டி பேச்சை முடிச்சிக்கலாமா?

Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work.  ......... Robert Orben 

 It is pretty hard to tell what does bring happiness; poverty and wealth have both failed.
.........  Kin Hubbard

I finally know what distinguishes man from other beasts: financial worries. ........ Jules Renard

There's no reason to be the richest man in the cemetery (grave). You can't do any business from there.
..........Colonel Sanders  (KFC)

A man explained inflation to his wife thus: 'When we married, you measured 36-24-36. Now you're 42-42-42. There's more of you, but you are not worth as much.'  .......... Joel Barnett.

Sunday, August 22, 2010

எனக்கே எனக்கா?


 சில சமயம்,  நண்பர்களுடன் சீரியஸ் ஆக  பேசி கொண்டு இருக்கும் போது கூட ,  intention இல்லாமலே,  ஏனோ காமெடி டைம் ஆகி விடுகிறது.

எனக்குதான்  BLOGGOTOPICTIS  நோய் தாக்கி விட்டதா? ( (எல்லா விஷயங்களையும்  Bird's eye view மாதிரி Blogger's eye  கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் நோய்)
இல்லை,  வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், இருக்கும் கவலைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும்  தெரியவில்லை.  ம்ம்ம்ம்ம்ம்.........

எங்கள் தோழி,  தேன்மொழியை நாங்கள் தேனா என்று அழைப்போம்.  ஒரு சமயம்,  மற்றொரு நண்பருடன் பேச,  தொலைபேசியில் அழைத்து இருந்தார்.
"ஹலோ"
"ஹலோ! நான் தேனா பேசுறேன்."
"ஹலோ,  நீங்கள் தேனா (honey) பேசுங்க. இல்லை, பாலா (milk)  பேசுங்க. முதலில் யார்னு பேரை சொல்லிட்டு பேசுங்க."

..... இன்னொரு சம்பவத்தையும் நான் கண்டிப்பாக சொல்லணும். 

எங்கள் நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது.  வேறு மாநிலத்தில் இருக்கும் அவர்களை, ஒரு லீவில் பார்க்க சென்ற போது, குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. நாங்கள் சென்று இருந்த வேளையில்,   அவர்களை காண வேறு ஒரு நண்பரும்,  தன் மனைவியுடன்  வந்து இருந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி, சில நாட்கள் முன் தான் அமெரிக்கா வந்து இருந்தார்கள்.  
நானும்,  அந்த புது பெண்ணும்,  குழந்தையுடன் உள் அறையில் இருந்த நண்பரின் மனைவியை காண உள்ளே சென்றோம்.

நான்:  "எப்படி இருக்கீங்க?"
தோழி: "இப்போ, பரவாயில்லை, சித்ரா."
நான்:  "ரொம்ப கஷ்டமாக இருந்ததா?"
தோழி:  " ஆமாம்,  வலி தாங்க முடியாம இருந்தது. "
நான்:  " அப்படித்தான் இருக்கும்ப்பா... இது ஈஸினு யாரும் சொல்லலியே."
தோழி:  "அதாங்க..... சேர்த்தே இரண்டையும் எடுத்துடுங்க என்று டாக்டர் கிட்ட சொன்னேன். கேட்க மாட்டேனுட்டார். இப்போ, நான் கொஞ்சம் recover ஆகி இருக்கும் நேரம்,   திரும்ப  அடுத்ததுக்கும் போகணும்."
புது பொண்ணு:  "அப்படியா? எப்போ?"
தோழி:   "அடுத்த வாரம்,  டாக்டர்  வர சொல்லி இருக்கிறார்."
புது பொண்ணு:  "இந்தியாவுல இப்படி எல்லாம் விட மாட்டாங்க..... என்ன அமெரிக்காவோ?  ஒரு குழந்தை  பிறந்து, ஒரு மாதம் ஆகி போச்சு...... இன்னும் இரண்டாவதை  டெலிவர் பண்ணலைனா என்ன அர்த்தம்?  டெலிவரி date முடிஞ்சும் இப்படி இருக்கிறது, குழந்தைக்கு நல்லது இல்லை.  உங்களுக்கு பாருங்க, மறுபடியும் வலி, வேதனை...... எல்லாம்."
தோழி:  "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா?  சரியா போச்சு.  நான் போன வாரம் பிடிங்குன பல் பத்தி சொல்றேன். இன்னொரு பல்லை, அடுத்த வாரம் எடுக்கப் போறாங்க.... டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
நான்:  "நியாயமான கேள்வி. அவரவர் வலி  அவரவர்க்கு."

எனக்கே எனக்கா? இப்படி நண்பர்கள், எனக்கே எனக்கா?   ...........
இன்னும் எத்தனை பேர், இப்படி உலகத்துல கடவுள் படைத்து விட்டிருக்காரோ? அதில் எத்தனை பேர் , எனக்கு நண்பர்களாகப் போகிறவர்கள் என்றும் எழுதி இருக்கிறதோ?   ம்ம்ம்ம்ம்ம்ம்........
தம்பட்டம் தாயம்மா:  "எப்படி சித்ரா, வழக்கம் போல......  புலம்புற மாதிரியே,  நல்லா பெருமை அடிச்சிக்குற?
நீ நடத்தும்மா!"