Tuesday, August 9, 2011

நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க!


இது
பதிவுலக அரசியல் பதிவு இல்லைங்கோ.....

நான் நெல்லைக்கு வந்த போது,
"நெல்லை பதிவர்கள் சங்க முன்னேற்ற கழக" தலைவர் : "உணவு உலகம் " புகழ் - அண்ணன் குல மாணிக்கம் - திரு. சங்கரலிங்கம் அவர்களையும் ,
மகளிர் அணித்தலைவி - சமூக சேவகி - "மனதோடு மட்டும்
" கௌசல்யாவையும் நான்கைந்து முறைகள் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

எங்க ஊரில பெரிய ஆபிசர் ஆச்சே..... பந்தா எப்படி இருக்குமோ - அலுவலகத்தில் ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து appointment தருவார் என்று ஒரு எண்ணத்தில் தான் சென்றேன். அண்ணன் படு கூல் ஆக , அலுவலகத்துக்கு வெளியிலேயே கௌசல்யாவுடன் , காத்து இருந்தது, சந்தோஷ அதிர்ச்சி.

தான்
ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.






நடக்கவிருந்த நெல்லை பதிவர் சந்திப்பு மீட்டிங் பற்றி ஏற்பாடுகளை உறுதி செய்யத்தான், இந்த குட்டி மீட்டிங். ஒரு சின்ன அலுவலக அறை. குட்டி மீட்டிங்க்கு குட்டி பில்டிங் ...என்னே ஒரு symbolic shot .....!

காளி மார்க் கடலை மிட்டாய், சூடான அல்வா, மிக்சர் சகிதமாக வரவேற்றார். முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு. அப்போ, கொடுத்த ஒரு ஆத்மார்த்தமான கடலை மிட்டாய் போஸ் ஒன்றை , அண்ணன் கிளிக்கி கொண்டார். அப்புறம் தான் சொன்னாங்க.... நெல்லை பதிவர் சந்திப்புக்கு advertisement ஆக அதை போட்டோ ஷாப் மாற்றி விட்டார். அவ்வ்வ்வ்......

எல்லாவற்றிலேயும் பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிக்க வேண்டும் என்றே கர்மமாக தான் இருப்பதை சொல்லாமல் சொன்னார்.

அடுத்த முறை சந்தித்தது நெல்லை பதிவர் சந்திப்பின் போதுதான். சங்கரலிங்கம் அண்ணன், சான்சே இல்லை..... ஏற்பாடுகளில் அமர்களப்படுத்தி இருந்தார். அவரது, ஆட்பலம் - பவர் பலம் எல்லாம் தெரிந்தன. ஆனால் அவரோ சந்திப்பை ஒளிபரப்ப டைரக்ட் ஆக ஆன்லைன் வீடியோ வரவில்லையே என்று பதிவுலக நண்பர் , நிரூபன் அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று டென்ஷன் ஆகி கொண்டு இருந்தார்.

தன்னடக்கத்துடன் , சக பதிவரின் கருத்துக்காக மரியாதை கொடுக்கும் குணத்தை சொல்லாமல் சொன்னார்.

அங்கே, பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்பும் கருத்தாழமிக்க பதிவர்களையும், தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பை பற்றி சொல்ல, தனி பதிவு வேண்டும்.......

"ஆண்டவா
..... அங்கே இருந்த மாதிரியே, கமென்ட் அடிக்காமல் என் வாயை பொத்தி கொண்டு, இந்த பதிவை எழுதி முடிக்க உதவி செய்யும். ஆமென்."
(அதற்காக, பின்னூட்டத்தில் அதை இதை சொல்லி , என்னை உசுப்பேத்தி அடுத்த பதிவு அதை பத்தி எழுத வச்சுறாதீங்க, மக்காஸ்! எழுதுனாலும் எழுதிடுவேன். மி த பாவம்! )

அப்புறம், ஒரு orphanage சென்று பள்ளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்புக்கு ஒரு நாள், அண்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த குழந்தைகளின் நிலை, மனதை உருக்குவதாக இருந்தது. அந்த ஆசிரமத்துக்கும் பள்ளிக்கும் அண்ணனும் கௌசல்யாவும் செய்து வரும் உதவிகள், பல.

http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_4498.html


சமூக அக்கறையோடு அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டால், எந்த அளவுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சொல்லாமல் சொன்னார்.

பயணங்கள் மற்றும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக நிறைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் நேரம் அமையவில்லை. (என் அப்பாவின் மறைவுக்கு பின், நான் இந்தியா சென்ற முதல் ட்ரிப். நெல்லையில், எங்கள் வீட்டில் அந்த சோகத்தின் சாயல் இன்னும் பரவி இருந்தது. அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.)

அதனால், கடைகளுக்கு செல்லவும் முடியாமல் இருந்தேன். நெல்லை ட்ரிப் மறக்க முடியாதபடி செய்த அண்ணனை சந்தித்து விடை பெற்று கொண்டு வரலாம் என்று நினைத்து, ஊரை விட்டு கிளம்பும் முன் போன் செய்தேன். தன் அலுவலகத்தில் தான் இருப்பதாக சொன்னார். ஐந்து நிமிடங்கள் செல்லலாம் என்று முடிவெடுத்து வந்தேன். அப்பொழுது, என் நேரப் பற்றாக்குறையை புரிந்து கொண்டவர், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தார்.

நான் முதலில் அவரை சந்தித்த குட்டி அலுவலக கட்டிடம் இடிந்து போய் இருந்தது. காரணம் கேட்டேன். "உங்கள் முதல் சந்திப்புக்கு மறு நாள் தான் இப்படி ஆகி போச்சு. சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!" என்றார்.
தற்காலிக அலுவலக கட்டிடமாக, பக்கத்தில் இருந்த ஒரு பழைய கல்யாண மண்டபம் இயங்கி கொண்டு இருந்தது. "அண்ணா, நான் வந்த வேளை. உங்களுக்கு பெரிய அலுவலகம் கிடைச்சுடுச்சு." என்றேன்.
"இந்த முறை வந்துட்டு போறீங்க .... என்ன ஆகுதுன்னு பார்க்கிறேன், " என்றார்.

(கொசுறு செய்தி: இப்பொழுது சுகாதார துறையில் இருந்து உணவு துறை பிரிந்து வந்து, தனி துறையாக ஆக்கப்பட்டு, 300 பயனுள்ள பதிவுகள் கொடுத்த அண்ணனுக்கு பெரிய position கிடைச்சுடுச்சே!)

பக்கத்தில் இருந்த ஒரு பெரிய அட்டை பெட்டியை என்னிடம் கொடுத்தார். "பலகாரங்கள் வாங்க கூட, நேரம் இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாயே. இதில், முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம், மிக்சர், அல்வா எல்லாம் இருக்குது. அமெரிக்காவுக்கு எடுத்து கொண்டு போக," என்றதும், நிஜமாக என் கண்களில் நீர்.

பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். (அத்தோட பலகார பெட்டியும், ஹி ...ஹி....ஹி....ஹி.....)

ஏதோ அவரது பதிவுகளில், பின்னூட்டத்தில் விளையாட்டாக அண்ணன் என்று சொல்ல ஆரம்பித்தேன். அதை கருத்துடன் ஏற்று கொண்டு அவர் காட்டிய அன்பு, மதிப்பு மிகுந்தது. என் கணவர், " ஏதோ பதிவுலக அண்ணன் பார்த்து விட்டு வருவதாக சொல்லிட்டு போனே. வரும் போது, பொங்கல் சீர் பெட்டி மாதிரி ஒன்றை தூக்கி கொண்டு வந்து இருக்கிற. கரும்பும், எனக்கு பட்டு வேட்டி - சட்டையும் மட்டும் தான் மிஸ்ஸிங்," என்று கமென்ட் அடித்தார். அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு , அவருக்கும் ஒரு முறை கிடைத்து இருந்தது. மச்சான்ஸ் இரண்டு பேரும் இப்போ க்ளோஸ் தோஸ்த்து ஆகிட்டாங்க.

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!




Tuesday, August 2, 2011

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

போன பதிவை வாசித்து விட்டு, என்னுடைய பார்வையில் - இந்திய பயண அனுபவங்களை - இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் என்று ஒரு question paper எடுத்து என் கையில் கொடுக்காத குறையாக நேயர் விருப்பம் கேட்டுப்புட்டாங்க.... (இப்படி உசுப்பேத்தி.....உசுப்பேத்தியே...... ஹி,ஹி,ஹி,ஹி ....... )

இந்தியாவில் அது சொத்தையாக இருந்துச்சு.... இது நொள்ளையாக இருந்துச்சுனு நான் புலம்ப போறதில்லை. என்னவோ, இந்தியாவை இதற்கு முன்னாலே பார்த்திராத ஆளு மாதிரியும் அலம்பல் விடப்போறது இல்லை. பிறந்து வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் - எந்த அளவுக்கு மாறி இருக்கும் என்று தெரியாமலா தாமிரபரணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்தேன்? சும்மா தமாசு பண்ணாதீங்க....


உப்பு காசுக்கு பெறாத விஷயங்கள் தானே "வெட்டி பேச்சு" கண்ணுக்கு தென்படும். அதை போய் பெருசு படுத்தி பேசினால், நான் தான் ஏதோ வேற்று கிரகத்து ஆளு விசிட் அடிச்ச மாதிரி லுக்கு விடுவாங்க.... அதான் இங்கே இன்னைக்கு பதிவில் கொட்டுகிறேன்.

நெல்லை பக்கம் கமென்ட் அடிப்பாங்க: "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்?
பொண்ணு நிறமும் கலர்னு சொல்லுவாங்க ..... கொக்ககோலா - காளிமார்க் Bovonto வாங்கி வர சொன்னாலும், "நல்ல கலரா" (சோடா) பார்த்து வாங்கி வர சொல்வாங்க...
இதுல உள் குத்து எதுவும் இருக்கா என்று எந்த நெல்லை பொண்ணுக்கும் தெரிஞ்சது இல்லை.
மொத்தத்தில், சிகப்போ வெள்ளையோ மஞ்சளோ இருக்கிற பொண்ணை வச்சு காமெடி பண்ணுவாங்க.

ஊருக்கு போய் இருந்தப்போ ஒரு தமிழ் சினிமா பாட்டு : "உன்னை வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? ......" என்று அடிக்கடி டிவியில போட்டாங்க. யாரு அந்த பொண்ணு என்று கேட்டேன்.
"டாப்சி பன்னு" என்று பதில் வந்துச்சு.
செல் போன் சிம் கார்டுக்குத்தான் அங்கே ஒரு கடையில இப்படி என்னவோ சொன்ன மாதிரி ஞாபகம். பொண்ணு பேரை கேட்டால், எதுக்குடா டெலிபோன் பில்லுக்கு பணத்தை கொடுக்க சொல்ற? என்று அருவாளை எடுக்காத குறையா கேட்டால்...... அதுதான் அந்த பொண்ணோட பேரு என்று விளக்கம் கொடுத்தாங்க...

பக்கத்தில் இருந்த சினிமா பிரியை பெரியம்மா ஒருத்தங்க, " அந்த காலத்துல, தெலுங்கு படத்துல நடிக்கணும்னா அந்த ஊருக்கு ஏத்த மாதிரி ஒரு பேரு.... தமிழ் படத்துல நடிக்கணும்னா இந்த ஊருக்கு ஒரு பேருனு வைப்பாங்க.... இப்போ என்ன பேர் வச்சுட்டும் நடிக்க வந்துடலாம். மவராசி வெள்ளையா இருந்தா போதும்னு" அலுத்துக்கிட்டாங்க.

அந்த பாட்டை மீண்டும் கேட்டேன்.... அந்த ஒற்றை வரிக்கு அர்த்தம் ஆராய்ஞ்சு பார்த்தால் எனக்கு பயமாக இருந்துச்சு. அந்த பாட்டை கேட்கிறதை விட்டுட்டேன்.

ஏதோ சொல்ல வந்துட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டு போறியே என்று நினைக்காதீங்க. ஒரு டிவி ப்ரோக்ராம் பார்க்கிறதுக்குள்ள - எத்தனை தடவை என்னையே வெள்ளாவியில் வச்சு வெளுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கிட்டு "கலர்" தீவிரவாதிகளாக வந்து மாத்தி மாத்தி கலங்கடிக்கிற டிவி விளம்பரங்களை பார்த்து டர் ஆவது? அந்த effect ......

வெயிலில் சற்று கருத்து போவதை தாங்காமல் துடிக்கும் கலர் பொண்ணுங்க இந்த கருமாந்திர கிரீம் பூசினால், பழைய கலர் வந்துடும்னு ஆரம்பிச்ச ஐட்டம் ஒண்ணு ...... எல்லா கருத்தம்மாக்காளையும் வெள்ளையம்மா ஆக்கிடுவதாக நம்ப வச்சு பெரிய பிசினஸ் ஆனது ஊரறிஞ்ச விஷயம். ஒரு கட்டத்தில் திராவிட இனம் அழிஞ்சு எல்லோரும் ஆர்ய இனமா ஆகி விடுவாங்களோ என்று நினைக்க வச்சுட்டாங்க.

பொண்ணுங்க மட்டும் தான் வெள்ளை ஆகணுமா? ஆண்களுக்கு இல்லையா என்று வைக்கால்பட்டியில் இருந்து ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.

அப்புறம், கருத்த பொண்ணுங்க எல்லாம் சிகப்பழகு கிரீம் பூசி கலராயிட்டாங்க. அதனால் எங்களை இன்னும் அதிக கலரா காட்டுங்க என்று தூங்காவரட்டிபட்டியில் இருந்து , "டான்சி பின்னு" போராட்டம் நடத்திய பின், பேயை கண்டு பயத்துல வெளிறி போய் ரத்தம் வடிஞ்சு நிக்கிற மோகினி மாதிரி வெள்ளை வெளேர் என்று மாற்றி காட்ட இப்போ - face wash - White beauty பவுடர்/கிரீம் - என்று நிறைய வந்துடுச்சு. அவங்க விளம்பரத்தில் காட்டுற வெள்ளாவியில் வச்சு நிஜமாகவே வெளுத்த வெள்ளைக்காரிகளை காட்டும் போது, நான் ஓடி போய் டிவி brightness குறைச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு.... இல்லைனா என் கண்ணு அவிஞ்சு போய்டும் போல இருந்துச்சு.



நீங்களே சொல்லுங்க.... இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு ஆகணுமா?

ஒரு நண்பரிடம் (அவர் ஒரு மருத்துவர்) பேசி கொண்டு இருந்த போது, இந்த "வெள்ளாவி கிரீம்" பிசினஸ் பற்றி டாபிக் வந்துச்சு. அவர் சொன்னது, " இந்திய சீதோஷ்ண சூழ்நிலைக்கு வரும் வெயில் மற்றும் வெப்ப கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க melanin (மெலனின்) அவசியப்படுகிறது. அதை இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது. " சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாய் ஆயிடும் என்று அதிலுள்ள கெடுதல்களை சொல்லி கொண்டே போனார்.

http://en.wikipedia.org/wiki/Melanin

"The photochemical properties of melanin make it an excellent photoprotectant. It absorbs harmful UV-radiation and transforms the energy into harmless heat through a process called "ultrafast internal conversion". This property enables melanin to dissipate more than 99.9% of the absorbed UV radiation as heat. This prevents the indirect DNA damage that is responsible for the formation of malignant melanoma and other skin cancers."

அதுக்குத்தான் வெயிலுக்கு காட்டாம வளர்க்க - இருக்க சொல்றாங்களோ..... அட....அட... அவங்க கடமை உணர்ச்சியை பாராட்டணும்.

ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.

அடுத்த பதிவில் : நாட்டுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று இல்லாத மற்றுமொரு டாபிக்கில் உங்களை சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெறுவது :

என்றும் அன்புடன் வெட்டி பேச்சு பேசும் சித்ரா !!!!

Sunday, July 31, 2011

நன்றி! மீண்டு வருகிறேன்.


அனைவருக்கும் வணக்கம்.

இந்தியா போனது ஒரு மாதம் என்றால், jetlag மற்றும் ஊரு நினைப்பில் இருந்து மீண்டு வந்து சகஜ நிலைக்கு வரவும், ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு bonding ...... பாசப் பிணைப்பு....


ப்லாக்
பக்கம் வரலாம் என்றால்..... இங்கே பதிவுலகில் ஏகப்பட்ட மாறுதல்கள், குளறுபடிகள் வந்து வந்து வந்து வந்து வந்து போய் கொண்டு இருப்பதாக பதிவுலக நண்பர்கள் சிலரிடம் இருந்து அன்பான "ரிப்போர்ட்". இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வரலாம் என்றால், மேலும் சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான "கட்டளைகள்" ......."உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....

அப்படி இப்படினு காலைத் தேச்சு ஒரு வழியாக மீண்டு வந்து - மீண்டும் எழுதியே தீருவது என்று முடிவு பண்ணிட்டேன். இது எச்சரிக்கை இல்லை, அறிக்கை. (நானும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்து இருக்கேன்ல......)

தமிழ் நாட்டில் இருந்த முப்பது நாட்களில், 26 நாட்கள் ஊர் சுத்தலிலே போய் விட்டன. சந்தித்த பல அற்புதமான மனிதர்கள் - அற்பமான மனிதர்கள்; அடித்த சேட்டைகள் - எடுத்த சாட்டைகள் - பற்றியெல்லாம் எழுதாமல் எப்படி இருப்பது?

இந்த பதிவில், ஊரில் நடந்த வெட்டி பேச்சுக்களில் இருந்து ஐந்து துளிகள்:



கடையில் பரிச்சயமான ஒரு நபர்: "இப்போ எங்கே இருக்கீங்க?"
வெட்டி பேச்சின் பதில் : "அமெரிக்காவில தான்."
அவர்: " அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே....."
வெட்டி பேச்சு : "ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க...."
அவர்: "மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். "
வெட்டி பேச்சின் பதில் அல்ல, ரியாக்ஷன்: "ஞே!!!!!"



நெடு நாள் கழித்து சந்தித்த உறவினர் ஒருவர்: "சித்ரா, இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கியா?"
வெட்டி பேச்சின் பதில்: "இங்கே இருக்கிற சென்னையில் இருந்து கிட்டு, அமெரிக்காவில் இருக்கிறதாக எல்லோர்கிட்டேயும் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்."



டிவி பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உறவுக்கார பெண் : "ஹமாம் சோப்பு போட்டு குளிச்சா, 'என் வீட்டில், பத்து ஸ்கின் ப்ரோப்லேம் - நோ டென்ஷன்'ங்கறா. அப்போ, என் வீட்டு மாமியார் தருகிற 'பத்து ப்ரோப்லேம் - நோ டென்ஷன்' ஆக எதை போட்டு குளிக்கிறதுனுதான் தெரியல."
வெட்டி பேச்சின் பதில்: "எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."



நெல்லையில்
எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."



நெருங்கின உறவினர் ஒருவர்: "வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்?"
வெட்டி பேச்சின் பதில்: "திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்."
உறவினர்: " நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன? Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே."
வெட்டி பேச்சின் பதில்: "மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். "
உறவினர்: "பிளாக்கர்னா என்ன செய்றீங்க? "
வெட்டி பேச்சின் பதில்: "இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்."
உறவினர்: "அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா?"
வெட்டி பேச்சின் பதில்: "ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
உறவினர்: "ஞே!!!!"


பதிவர்
என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....
அட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்?