Wednesday, April 28, 2010

சும்மா, சும்மா, சும்மா.....



"ஹலோ! "
"ஹலோ!"
"சித்ராவா?  பிஸியா இருக்கீங்களா? சும்மா இருக்கீங்களா?"
" இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து,  சும்மா வந்து உட்கார்ந்தேன். என்ன விஷயம்?"

"சும்மா தான் கூப்பிட்டேன். இன்று எனக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லை. சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கோமே -  சும்மா, யாரையாவது கூப்பிட்டு, சும்மா பேசலாமேன்னு, சும்மா தோணுச்சு. "

"நானும் சும்மாதானே  இருப்பேன்  என்று நினைச்சிட்டீங்க."
 "சும்மா சொன்னேன்.  சும்மா கோபப்படாதீங்க. உங்களை கூப்பிட்டு பேசி நாளாச்சு. சும்மா, அப்படி இப்படினு பிஸியா நாள் எல்லாம் - சும்மா ஜெட் வேகத்துல பறக்குது."

"சும்மா.  இதுக்கெல்லாம், சும்மா கோபம் வருமா?"
" நீங்க, சும்மா விளையாடுறீங்கனு தெரியும். "

"உங்க வீட்டுக்காரங்க  ஆபீஸ் போயாச்சா?"
"அவருக்கு என்ன?   சும்மா லீவ் போட்டு, நம்ம பக்கத்துல இருந்து,  சும்மா  கவனிக்க முடியுமா?  வேலைக்கு போயாச்சு.  ஆனால், ஒரு வாட்டியாவது, சும்மா ஒரு போன் பண்ணி, சும்மாவாச்சும் நான் எப்படி இருக்கேன் என்று சும்மா கேட்டு இருக்கலாம்."

"அவர் ஆபீஸ்ல் சும்மா இருந்தா, சும்மா கூப்பிடாம இருப்பாரா?"
"தெரியுது.  ஆனாலும் அவரை  சும்மா தேடுது. "

"ரொம்ப கஷ்டமா இருக்கா?"
"இல்ல. சும்மா வெறும் காய்ச்சல்தான்.  இப்போதான் ஊருக்கு போன் செய்து, என் அம்மாவிடம்  சும்மா பேசினேன்."
"அம்மா, எப்படி இருக்காங்க?"
"சும்மா, அதை இதை நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டே இருக்காங்க."

"உங்க தாத்தா, எப்படி இருக்காங்க?"
"எப்போ பார்த்தாலும் சும்மா தலை வலிக்குது கால் வலிக்குது அப்படிங்கறார். டாக்டர்,  தாத்தாவுக்கு  ஒண்ணும் இல்ல. வயசாச்சுல. சும்மா அப்படிதான் வலிக்கும்னுட்டார்."

"உங்க அப்பா, எப்படி இருக்காங்க?"
"retirement க்கு அப்புறம், சும்மா அங்கே இங்கே போய்ட்டு வந்து டைம் பாஸ் பண்றார்."

"உங்க தங்கை?"
"படிச்சு முடிச்சிட்டாள். சும்மாதான் இருக்கிறாள்.  சும்மா இருக்கிறதுக்கு, சும்மா ஒரு கம்ப்யூட்டர் course ஏதாவது படிக்கலாமேன்னு - சும்மா போய்க்கிட்டு இருக்கா."
"ஓ. "

"நீங்க அடுத்த மாதம், ஒரு weekend சும்மா இருந்தீங்கனா, சும்மா இந்த பக்கம் - எங்க வீட்டுக்கு,  சும்மா வாங்களேன்."
"எதுவும் விசேஷமா?"
"இல்லை. சும்மாதான். சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சும்மா விசிட் பண்ணா நல்லா இருக்கும்."
"பார்க்கலாம்."

"சும்மா வாங்க.  அப்புறம் சும்மாதான்  சொன்னேன் என்று  வராமா இருக்காதீங்க."
"அப்புறம் போன் பண்றேன்."
"கண்டிப்பா வரணும்.  வந்தா, சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்."
"சும்மா இருந்தா, சொல்றேன்."
"சும்மா சொல்லாதீங்க. வாங்க."

" ஹா,ஹா,ஹா,ஹா.... நான் இப்போ வெளியே போகணும். நான் போனை வைக்கிறேன். நீங்க சும்மாவே இருங்க."
"மனுஷிக்கு காய்ச்சல்னா, சும்மா சும்மா போன் பண்ணி,  சும்மா பேசி,  சும்மா தொந்தரவு படுத்திக்கிட்டு ....... கொஞ்சம் சும்மா இருக்க மாட்டாளா,  என்று நினைச்சிட்டீங்களா?"
 "இல்ல.  நல்லா  ரெஸ்ட் எடுங்க."


அப்புறம், சும்மா இருக்கும் போது,  சும்மா யோசித்து பார்த்தேன்.  அப்பொழுதுதான் புரிந்தது - அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும்,  வேதனைகளும்,  ஆதங்கங்களும், கவலைகளும்,  ஆசைகளும்.
இது  முதலிலேயே தெரியாம போச்சே...... தெரிந்து இருந்தால், சும்மா பேசிக்கிட்டு இருக்காமல்,  ஆதரவாக சும்மா கூட கொஞ்ச நேரம்  பேசி இருந்திருப்பேனே........

சும்மா.........  சும்மா ஒரு வார்த்தைதான் -  ஒன்றும்  இல்லாத வார்த்தை.  ஆனாலும் - சும்மாவுக்கு, எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில். ............

பி.கு.:
 சும்மா - ஒரு வார்த்தை - இங்கிலீஷ்ல எத்தனை வார்த்தைகளை, சும்மா கையாளுது தெரியுமா?
 Idle
Just like that
for no reason
not doing much
not really
for free
not really meaning it
often
unintentional
untrue
goofy
(please, let me know, if there is more......)  - சும்மாதான்......... பரிசு எல்லாம் இல்லை.
ஹிந்தி மொழியில்: சும்மா என்பதற்கு முத்தம் என்று பொருளாம். சர்தாங்க. 

அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர்,
 தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
 நன்றி.
 - யூத்ஃபுல் விகடன்

 எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, April 27, 2010

முகம் ஒன்று -


கவிதை வகை:
சிந்து - நொண்டி சிந்து - கவிதை - புது கவிதை -  ஹைக்கூ -  வசன கவிதை - என்ட்டர் கவிதை -  கவுஜ - ..........

இதிலும் பல வகை:  வாசித்த உடனே -  புரிகிற கவிதை - புரிகிற மாதிரி இருக்கிற கவிதை - புரிகிற மாதிரி நடிக்க வைக்கும் கவிதை - "ஒண்ணும் புரியல" கவிதை ..............

பதிவர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் ஒன்றை கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும் என்று என்னை சிலர், "மிரட்டி விட" ,  இதில் எந்த வகையில் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே, என் முதல் பதில் "மிரட்டல்"  முயற்சி:
முத்தம் போதாதே


அப்புறம், சென்ற வாரம் என் தோழி ஒருத்தியின் அழைப்பின் பேரில், மீண்டும் ஒரு "மிரட்டல்" நடவடிக்கை.
முகப்புத்தகத்தில்  (Facebook) :  இங்கு   பல முகங்களில் ஒரு முகமாக இருப்பது, "கவிதை முகம்":

அதில் பங்கு பெற்ற எனது கவிதை, இதோ:


முகம் ஒன்று  - 
ஒரே முகம் -
மலர் என்றது, காதல் கொண்ட அகம் -
தளிர் என்றது, சேயாய் கொண்ட அகம் -
கடுகு என்றது, வெறுப்பு கொண்ட அகம் -
குரங்கு என்றது, தோழமை கொண்ட அகம் -
அழகி என்றது, அன்பு கொண்ட அகம் -
ஆழி என்றது, அறிவு கொண்ட அகம் -
அம்சம் என்றது, வெற்றி கொண்ட அகம் -
ஆர்வம் என்றது, காமம் கொண்ட அகம் -
அந்நியன் என்றது, அறியாமை கொண்ட அகம் -
தெய்வம் என்றது, தாழ்மை கொண்ட அகம்.
என் ஒரே முகம் -
பிறரின் அகங்கள், (மனங்கள்)
கண்டு கொண்ட வகைகளில்,
எனக்கு, பல முகப் பிம்பங்கள்.
என் ஒரே முகம் -
தெரிவது -
என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?

Sunday, April 25, 2010

ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை.

சில Indian Associations,  அமெரிக்காவுக்கு  புதிதாக  வரும் இந்தியர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளன.  ஆரம்ப நிலை உதவி செய்யும் சில நண்பர்கள், சில சமயம் என்னையும் உடன் அழைத்து போனது உண்டு.   இங்கு வரும் அனைவரும், எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லை.  அதில்  தவறும் இல்லை.

சித்ராவாகிய நான், இப்பொழுது சொல்லப் போவதெல்லாம்  உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்காக ரூம் போட்டு யோசிக்கவில்லை:

நோ ரூம் சர்வீஸ்: # 1

புதிய அறிமுகம்:    சித்ரா, நீங்க தயிர் எங்கே  வாங்கி வந்தீங்க?
சித்ரா:                  பக்கத்தில் உள்ள grocery store ல தான்.
அவள்:                   இந்தியன் கடையா? அமெரிக்கன் கடையா?
சித்ரா:                 American store தான்.  
அவள்:                  நான் அங்கே தயிர் தேடினேன். கிடைக்கவில்லை. 
சித்ரா:                  அந்த கடையிலேயே யாரிடமாவது கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்களே? 
அவள்:                  கேட்கலாம்னு  நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners  ஆக             இருந்தாங்க.    இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
சித்ரா:                              ??????????

நோ ரூம் சர்வீஸ்:  # 2:

சனி, ஞாயிற்று கிழமைகளில்,  பெரும் பாலான  அமெரிக்கன் Grocery stores,  பல உணவு பதார்த்தங்களை taste செய்து, பிடித்து இருந்தால் நாம் வாங்கும் விதமாக, நிறைய samples எடுத்து தருவார்கள்.  புதியவர்  ஒருவரையும் அழைத்து கொண்டு ஒரு கடைக்கு போய் இருந்தோம். samples பற்றி விளக்கி நாங்கள் சொல்வதற்குள்,  "இதெல்லாம் நான் சென்னையிலேயே பார்த்திருக்கேன்.  அங்கேயும் இப்படிதான் samples தருவாங்க.  இதில் நிறைய ஐட்டம்ஸ், இப்போ சென்னையிலேயே கிடைக்குது," என்று சொல்லி கொண்டே,  samples வைக்கப் பட்டிருந்த மேஜை அருகே சென்று, ஒரு சின்ன கப் எடுத்து "மடக்" என்று குடித்து விட்டார்.  அருகில் நின்ற நாங்கள், சிரிப்பை அடக்கி கொண்டிருந்த வேளையில் - அந்த மேஜை அருகே நின்று samples எடுத்து வைத்து கொண்டிருந்த கடை ஆள் ஒருவர், மெதுவாக:
"sir,  you just drank the water from the cup, in which I  washed these spoons that I used  to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன்,  கடையை விட்டு வெளியேறி விட்டார்.

நோ ரூம் சர்வீஸ்:  # 3:

 எங்கள் நண்பர் வாடகைக்கு எடுத்து இருந்த  வீட்டில்,  அவரையும் சேர்த்து நான்கு இந்தியர்கள் தங்கி இருந்தனர். அதிலே ஒருவர், இந்தியாவில் இருந்து வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது.
ஒரு நாள், வீட்டு கதவு தட்டப் படும் ஓசை கேட்டு, புதியவர்  கதவை திறந்து பார்த்தார். வெளியில் ஒரு  white அமெரிக்கன் நின்று கொண்டு இருந்தார். 
" Is Jefferson  home?" 
"Jefferson?  Who is Jefferson?"
"He is my  friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"

.......  நிறைய கதை சொல்லிக்கிட்டே போகலாம். அப்போ அப்போ மாவு கிரைண்டர் சுத்தும் போது எடுத்து விடுறேன்.

அப்புராணியாய் இந்தியாவில் இருந்து வந்த சிலர்,   எல்லாம் பழகி கொண்ட பின்,   இந்தியாவில் இருந்து புதிதாக வரும்  சிலரிடம் காட்டும் பிலிம் இருக்கே................... (நிச்சயமாக, நான் அவள் இல்லை. நம்புங்க.)
அட, அட, அடடா........   அப்படியே  வடிவேலு சார், துபாய் போயிட்டு வந்து பார்த்திபன் சார்  கிட்டேயும் மற்றவர்கள் கிட்டேயும் காட்டுற  பிலிம் விட ரெண்டு ரீல் கூடுதலாக  இருக்கும்.   என்னவோ பிறந்து வளர்ந்தது முதல்  ஒவ்வொரு நாளும் இந்தியாவில்  சாப்பிட்டு விட்டு, அமெரிக்கா வந்துதான்  கை கழுவிட்டு போனது மாதிரி "படம்" காட்டுவாங்க.
"இது கூட தெரியாதா?" என்ற சலிப்பு வேறு.

ஈகோ மற்றும் attitude problem காட்டும்  "படம்":

டைட்டில் ரீல்:   "இதெல்லாம் எனக்கு  இந்தியாவிலேயே அத்துப்படி.  அங்கேயே நான் தினமும் ஜப்பான்  வாட்ச்ல டைம் பாத்து,  லண்டன் சோப்பு  போட்டு  முகம் கழுவி,  டாலர் நோட்லதான் முகம் துடைத்து,  சிங்கப்பூர் பவுடர் போட்டு, துபாய் சென்ட் மணக்கத்தான் வந்து பழக்கம்."
காமெடி ரீல்:  "நோ ரூம் சர்வீஸ் #  ஜோக் ஏதாவது  நடக்கும் ....."
இரண்டாம் பாதி ரீல்:  புதிய இந்திய வரவை கண்டு:   "இது கூட தெரியாம, இவனெல்லாம் எதுக்கு அமெரிக்கா வரணும்? What is this? ஒரே  stupid of the idiot of the nonsense of the washbasin of the India வாக  இருக்கு?"  
கிளைமாக்ஸ் ரீல்:  - நானோ வேறு நண்பரோ  அருகில் இருந்தால், கொடுக்கும் "பஞ்ச்":   "நீங்கள் வந்த புதிதில் நடந்த  காமெடி  கதை எடுத்து விடவா?"   - சில சமயம்,  கன்ட்ரோல் இல்லாமல் ஓவரா போகும் போது, நாங்கள் "flash-back" வார்னிங் இல்லாமலே,  அதை போட வேண்டியது வந்து விடும்.
கடைசி ரீல்:   பிலிம் பார்ட்டி,  "கப்-சிப்"  The End.

முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே.  நண்பர்களுக்குள்  என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது?  தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு  பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன?  

Speak American: A Survival Guide to the Language and Culture of the U.S.A.