Wednesday, November 4, 2009

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை


விஜய் அன்டோனியின், "ஆத்திச்சூடி ... ஆத்திச்சூடி  ...... இது new age ஆத்திச்சூடி !" பாடலில் வரும் நியாயமான கேள்வி போல், "என்ன சித்ரா, நீங்க எப்ப பாத்தாலும் உங்களை பற்றியே எழுதிக்கிட்டு இருக்கீங்களே. அரசியல் பத்தியும் நாட்டு நடப்பை பற்றியும் எப்ப எழுத போறீங்கனு தெரியுமாஆஆஆஆ.??????" னு கேக்கிறவங்களுக்கு: "கேளு, மக்களே கேளு - வாயை மூடிக்கிட்டு கேளு -  மாலு நகி மாலு - அரசியல் நகி மாலு. இந்த bloggai படிச்சு புட்டா உனக்கு முளைக்கும் வாலு!" என்று அந்த பாடலில் இருந்தே அநியாயமான பதிலும் copy அடிச்சுட்டு எழுதுறேன்.

இன்னொரு காரணமும் உண்டு. நாளைக்கு யாராவது, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்டால் அரசியல் கட்சிகள்  பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்லலாம் அல்லவா? நிறைய பேர் இப்படித்தான் நாட்டு மேல அக்கறை கொண்டு பாட்டு எழுதிறாங்க, blog எழுதுறாங்க, பேட்டி கொடுக்கிறாங்க, வசனம் பேசுறாங்க, புலம்புறாங்க, திட்டுறாங்க, ஏன் - ஒரு படி மேல போய் உண்ணாவிரதம் கூட இருக்குறாங்க ....... இதெல்லாம் மாற்றம் ஏதும் கொண்டு வராத வழிமுறைகள் - ஆக்கப் பூர்வமாக நாட்டுக்கு துரும்பை கூட எடுத்து போடாத வெட்டி பேச்சு என்று தெரிந்தும் ...................

பாரதியார் பாடல்கள்,  காந்தியடிகள் பேச்சு, திருப்பூர் குமரன் செயல் எல்லாம் வெள்ளையனை வெளியேற்றி சுதந்தரம் பெற்று தரும் - புரட்சி வரும் அளவுக்கு -  அனலுடன் இருந்தன.  நம் blogging,  "நாட்டு நடப்பு" reality மறக்க
நல்ல time-pass. சூப்பர் திண்ணை பேச்சு - டீ கடை பெஞ்சு அரட்டை.

புது Blogger சித்ராவின் பேட்டி: "அரசியல் சேட்டை" பத்திரிகை நிருபர் வருகிறார்.

நிருபர்:   வணக்கம்.
சித்ரா:    வணக்கம். கொஞ்ச blog matter வந்ததிலேயே, இப்படி ரித்தீஷ் மாதிரி பேட்டி கொடுக்கும் அளவு வருவேன்னு எதிர் பாக்கலை. எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். இவ்வளுவுக்கும் நான் அம்பது ரூபா கூட செலவு பண்ணலை. பிரியாணி பொட்டலம் ஒண்ணு கூட வாங்கி கொடுக்கலை.

நிருபர்:   மன்மோகன் சிங் ஆட்சி பத்தி?
சித்ரா:    அவங்க ஆச்சி உயிரோட இல்லை. சோன்யா காந்தி மேடம் அவங்க ஆச்சி வயசு இல்லை. அதானல அவர் ஈன குரலில் strongaa ஏதாவது பேசி செய்ய முயற்சிக்கிரார்னு நான் நினைக்கிறேன்.

நிருபர்:    ADMK future?
சித்ரா:     அம்மா செல்வியா ஏன் இருந்தோம்னு நினைக்கிறாங்க. வாரிசு அரசியல் policy பத்தி தெரியாம தத்து எடுத்த புள்ளையையும் விலக்கிட்டு அவங்க futureaiye கேள்வியா பாக்கிறாங்க. சசிகலா வயசு கம்மினாலும் ஏதோ பொண்ணு role ல சமாளிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னதான் close ஆனாலும் தோழி வேறு; குடும்பம் வேறு.

நிருபர்:     நீங்க ADMK future பற்றி கேட்டா, ஜெயலலிதா future பற்றி பேசுறீங்க.
சித்ரா:      ADMK வேறு; ஜெயலலிதா வேறா? என்ன சொல்றீங்க? ஜெயலலிதாவுக்கு அப்புறம் ADMK நிலைமை என்னன்னு அந்த அம்மாவே யோசிக்காதபோது நான் ஏன் யோசிக்கணும்?

நிருபர்:     நீங்க விஜயகாந்த்'s DMDK கட்சியை ஆதரிக்கிறீர்களா?
சித்ரா:      கேப்டன் களம் இறங்கிட்டாரு. அவர் இரண்டு மகன்களும் இன்னும் கொஞ்சம் பெரிதானதும் முழு மூச்சா DMK குடும்ப அரசியல் மாதிரி வர நல்ல வாய்ப்பிருக்கு.  இதுக்கு மேல என் கருத்தை சொல்லி நான் ஆதரிக்கிறேனா இல்லையானு  என் ரசிகர்களை influence பண்ண நான் விரும்பலை.

நிருபர்:    ப.ம.க.????
சித்ரா:     பக்காவான  மங்கி (monkey) கட்சி.  இவருக்கு மற்ற கட்சிகளின் support வேணும்னு மரம் விட்டு மரம் தாவுவார். மக்களுக்கு அப்படி ஒரு கட்சி இருக்கு, அப்படி ஒரு கட்சி தலைவர் இருக்காருன்னு மறந்திட கூடாதுன்னு அறிக்கை மேல அறிக்கை விட்டு attendance கொடுப்பார். குடும்ப அரசியல் பண்ண மாட்டேன்னு ஆரம்பத்தில்  ராமதாஸ் சத்தியம் பண்ணினதாக ஞாபகம். அவர் மகன் MP ஆகலையா? அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா......

நிருபர்:     சரத் குமார் கட்சி பற்றி?
சித்ரா:      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  (அ.இ.ச.ம.க. - a.k.a. - அகில இளிச்ச சன மங்கி (monkey) கழகம்) என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்சி பெயரை வச்சிருக்கார். மொட்டையா சரத் குமார் கட்சின்னு நீங்க மட்டும் இல்லை, எல்லாரும் சொல்றது சரி இல்லை. 16 வயதினிலே படத்தில் சப்பாணி கமல், மயிலிடம், "என்னை யாரு கோபால்னு கூப்பிடுறா? சப்பாணி சப்பாணினுதான் கூப்பிடுறாங்கன்னு" அங்கலாச்ச மாதிரி நேத்து கூட சரத்குமார் என்ட்ட புலம்பினார். கட்சி பெயரையே மக்கள் தெரிஞ்சிக்க முயற்சிக்கலை. கட்சியப் பற்றி?

நிருபர்:    அப்போ கார்த்திக் கட்சியை பற்றி?
சித்ரா:      ஒரு நிமிஷம். (google....google.....google....)
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - All India Parliamentary People's Party - 
(AIPPP) - அய்யோ பாவம் பரிதாபம் party.
 இதுவும் ஒரு கட்சி; அதுக்கும் ஒரு தலைவர்னு இருக்க விடுறாங்களே.  serious அரசியலுக்கும் வாழ்க்கைக்கும்  ஒரு comedy relief தேவைதான். அதுக்காக இப்படியா? அவர் comedy kingaa இல்ல அவர் கூட கூட்டணி வச்சிருக்கிற சரத்குமார் comedy kingaa னு ஒரு போட்டி வைக்கலாம்.

நிருபர்:     இப்போ ஒரு முக்கியமான கேள்வி: DMK பற்றி?
சித்ரா:       நாட்டை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்தை மட்டும் இல்லை -  நாட்டையே பங்கு போட்டு பிரித்து கொடுத்த ஒரு "உயர்ந்த" தமிழ் வரலாற்று நாயகனை குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அரசியல், குடும்பம், டி.வி., சினிமா, இலக்கியம், வியாபாரம் சேர்ந்த ஒரு கதம்ப குடும்பம்,  நாட்டை ஆள்கிறது. ஜன நாயக ஆட்சியா? அப்படினா இப்படிதான் போல  என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அர்த்தம் மாற்றத்  தெரிந்த சூத்திரதாரர்கள். மனைவி, துணைவி, இணைவி மற்றும் அவர்கள் மூலமுள்ள வாரிசுகள் கொண்டு நடத்தப்படும் action packed குடும்ப சித்திரம். இந்த மெகா மெகா சீரியல் இன்னும் எப்படியெல்லாம் போகும்? சிந்துபாத்திடம் கேட்க வேண்டும்.  மூன்றோடு  (அல்லது மூன்றை மட்டும்) நிறுத்திக் கொண்டதற்காக,  நான் தமிழ் மக்கள் சார்பாக கட்சி தலைவருக்கு  நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மனைவி, துணைவி, இணைவி மாதிரி அடுத்த  decent தமிழ் வார்த்தை அதிகார பூர்வமாக தமிழில் அறிமுகப் படுத்திவிட்டு தொடருமோ என்னவோ? தமிழ் வாழ்க!

நிருபர்:      நீங்க ஏன் நக்கலாவே பேசுறீங்க?
சித்ரா:       இதெல்லாத்தையும் சகிச்சுகிட்டு சினிமா, டி.வி. மோக போதைகளில் சுயநல லாபங்களில்  தன்னை அடகு வைத்து இருக்கும் தமிழ் மக்களிடம் இல்லாத நக்கலா? லொள்ளா? குசும்பா? தமிழ் வாழ்க! தமிழ் நாடு வாழ்க! தமிழ் மக்களை ஏலம் விட்டு வாழும் கட்சி தலைவர்கள் வாழ்க! இவர்கள்தான் அரசியல்வாதிகள் என்று வரை படுத்தி கொண்ட ஜன நாயகம் வாழ்க!

நிருபர்:      நன்றி. கடைசியா ஒரு கேள்வி.  நீங்க அரசியல் கட்சி  எப்ப ஆரம்பிக்க  போறீங்க?
சித்ரா:       பிரியாணி பொட்டலம் வாங்க sponsors கிடைக்கணும். ஒரு டி.வி. சேனல் ஆரம்பிக்கணும். இப்போ கிண்டல் பண்ண அத்தனை கட்சிகளோடும் சந்தர்ப்பம் பார்த்து கூட்டணி வைக்க சந்திச்சு பேசணும். எனக்கு அடைமொழி பெயர்கள் கொடுக்க நண்பர்களிடம் கெஞ்சணும்.  வசூல் ராஜாக்களை சந்திக்கணும். publicity க்கு ஏதாவது ஏடாகூடமாக நடத்தி  காட்டணும்.  போஸ்டர் எழுத ஒட்ட ஆள் பிடிக்கணும். அறிக்கை நிறைய விடணும்.  ஒரு universitya சரி கட்டி doctor பட்டம் வாங்கணும். எல்லாத்துக்கும் மேல சினிமாவில் ரெண்டு படமாவது நடிக்கணும். போங்க சார். எனக்கு இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்ல. வந்ததும்............

29 comments:

goma said...

பிரியாணி இல்லாமலேயே சொல்றேன்...அசத்திட்டீங்க...பேட்டி அருமை

Alarmel Mangai said...

conventil padithu uruppattum, uruppadamalum pona penkal katchi (cpuuppk) thodanki jamaichu poduvom, chitra.

aanal naanthan kolkai parappu seylalaraaka iruppen!!!!!!!!!!!!!!! ippave sollitten, aaama.

Chitra said...

Goma Madam, Thank you. neenga thodarnthu aatharavu kodunga. seekiram katchi aarambichuralaam......
kolkai parappu seyalaalar readyaa irukkaanga.

Chitra said...

Ammu, nalla chikku pukku katchi, ponga.....

Vishy said...

I grew up reading Arasu, Thuglak, Madan, Lena and Andumani. each of them have their own style.. நக்கல் பதில்களுக்கு Chithra's style is the best.. Especially, answer to Sarathkumar question is awesome.. Hopefully, once this blog gets into google suggest and its going to be a major pit stop for all tamil folks on the internet highway...

Chitra said...

he, he, he, Vishy. chumma thamaash pannaatheenga. idhudhaan, Coimbatore kusumbaa?

Chitra said...

Vishy, thank you very much. neenga compare panna aalunga ellaam titanic. naan chinna boat. irundhaalum, cloud 9 il irundhu keele irangi vandha piragu pesuren.

தமிழினிமை... said...

TN-2-420-AUTO IS IN THE WAITING..

தமிழினிமை... said...

For u-KOLHAI PARAPPU SEYALAALAR is ready........For them-KOLAI PARAPPU SEYALAALARHAL ARE READY...ennammaa kannu?mitchelle thalamayin keezh irukkum obamavin thalamayin keezh irukka viruppamillayaa?

தமிழினிமை... said...

Paaththu nadandhukka thaayee...ennamoe manasula thoeniyadha vesanappattu sollippoettaen.AUTO CONFIRMEDunu solraavalae -adhu ambuttum unmayaa?ennavoe kaekkanumnu thoenichchi kaettupputtaen..poeittu vaaraen makkaaaa...

தமிழினிமை... said...

VADIVELU GANESH-idhellaam thaevayaa?thaevayaa?thaevayaa? 2-MADURAI MUTHU-indha pulla paattukku IDLYyaiyum KUNDAANnaiyum paththi ezhudhikkittu irundhichchi-ellaam indha SOLOMON panra vaela...3-MADHAN BABU-ippa neengalae paaththeengalla,ivanga enna vaela panraangannu-AUTO ANUPPALAAMAA VAENDAAMAA-idhappaththi neenga enna solreenga? 4-CITY BABU-he he he hi hi hi-CONFIRMEDu..idhukku maela naan ennaththa solla?5-CHINNA CAPTAIN-varrtttaa?akkung...auto ....?readiyaa irukku.. 6-THOHUPPAALINI USHA-naan vaera ennaththa sollikkittu?....beppae..bepparappae...

தமிழினிமை... said...

VISHY,AMMU,GOMAMMAA-ungalin VAASAN EYE CARE(naanga irukkoem(auto vandhavudanae appeeeeeeat aayiruvoem)}paarvaikku-DHAYAVU SEIDHU INDHA PULLAYA ROMBA SUPPORT PANNAADHEENGA!paavam idhu oru pachcha mannu-nambi 5 jeevan irukku-..1-solo,2-selvam,3-chellam,4-indha BLOGu,5-indha blog onnayae comment ezhudhuradhukku nambiyirukkira naanu..Appuram ,makkaa..unga ishtam,kashtam..

Chitra said...

indha salambalukkellaam asara maattOm, appu. auto ingittu varaikkum varaadhule. naangalum katchi aarambichittaa, black catso red catso pink catso vachchikiruvomla.......

தமிழினிமை... said...

"CPUUPPK" katchiyin MAAAAAAAAAAAAAAnilath thalaivi -MAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAANBUMIHU "NELLAI CHITHRAA"vin aduththa release-"AUTOva AMUKKIPPUDUVAEN"-just call her auto rani-(idhu thamizh padangalin TITLElukku keezhae varum INGLIPEEZ caption)

Chitra said...

thai kulangal mattum illa, thanthai kulangalaiyum seththukka vali sollula.

Anto Rajkumar said...

Chitra…I am glad that this blog is growing fast. I appreciate that you have expanded your repertoire to include topics beyond friends & family. I suggest you to add some photos / cartoons to add more colours. Keep going… Anto

Chitra said...

vaada, en thambiye.... un pangukku neeyum ennai usuppEththu...........

தமிழினிமை... said...

Thandhai kulanga thaana? ippa solomon paakkiraaru paaaaaroooooooo...ippa kayya pesayaraaru paaruuuu...ippa thalayila nangu nangunnu kutturaaru paaruuuuuu...(PASANGA BAKKODA STYLE)

தமிழினிமை... said...

Kaippulla...inimaelum thaangaadhu.Ippadiyae usuppaeththi usuppaeththiththaaan BLOGu muzhukka PINJUPOENA BUNnaa kedakkudhu..Ippa avan pangukku thambi vaera O.C.yila thanni kudikka vandhuttaan.Idhellaam SHAKILA kanakaa enga eppidi mukki,monangi nikka poehudhoe...Indha "MAANGAA KOTTA MARAMaa MOLACHCHA MANDAI"kku onnum PIRIYA maataengudhu.. maattaengudhu....

Chitra said...

Amudha, namakku elutha theriyum. vettiyaa pesa theriyum. indha maan thoppai ellaam naanga kavanikkiradhu illai. ha,ha,ha.....

ஜெட்லி... said...

என்னங்க வெளிநாட்டில் இருக்கிறதுனால
ஆட்டோலாம் வராதுன்னு தைரியமா??
இப்போலாம் பிளேன்ல கூட ஆள
அனுப்புறாங்க.... உஷாரா இருங்க,....

//புது Blogger சித்ராவின் பேட்டி: "அரசியல் சேட்டை" பத்திரிகை நிருபர் வருகிறார்.//

என்ன ஒரு பில்ட் அப்.....

Chitra said...

jetli sir, நான் இருக்கிற சின்ன ஊரில் ஏர்போர்ட் கிடையாதே..... என்ன, அடுத்த வாட்டி, சென்னை வரும்போது disguise இல் வருணும். சினிமா அகராதிப்படி, ஒரு கருப்பு புர்கா போதுமே.

KASBABY said...

enna oru villathanam.......




enka,eppavume ippadithaanaa?....illa ippadithaan eppavumevaa...

Chitra said...

சே, சே, சே, எப்பாவது காமெடி பண்ணும்போது வில்லத்தனம் எட்டி பாத்து விடுகிறது.

நசரேயன் said...

அரசியல்ல உங்களுக்கு சிறப்பான எதிர் காலம் இருக்கு

Chitra said...

இந்த மாதிரி ஒரு தோழி உசுப்பி விட்டுதான் blog எழுத ஆரம்பிச்சேன். உங்களை மாதிரி இன்னும் ஐஞ்சு பேர் உசுப்பி விட்டா, கார்த்திக் மாதிரி கட்சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சு விடுவேன். யார் கண்டா?

CS. Mohan Kumar said...

//ப.ம.க.????
சித்ரா: பக்காவான மங்கி (monkey) கட்சி. //

ஹ ஹா ஹா.

சரத் குமார் கட்சிக்கு என்ன சொன்னீங்கன்னு சரியா விளங்கல. சங்கி மங்கி கட்சின்னு சொல்லிருன்தீன்களோ? Nice

பஹ்ரைன் பாபா said...

SUPER.. SUPER.. SUPER..

ராஜ நடராஜன் said...

நல்லாத்தானே கலக்குறீங்க!

என்னது 2009 பதிவா?

ஆவ்வ்வ்வ்வ்வ்!(வடிவேலு கூட சண்டை...அதனால ஆவ்)