Monday, November 2, 2009

தம்பி, தங்க கம்பி.....(paasakiligal)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.............

மத்தவங்களை பத்தி தெரியலை. எந்த படைக்கும் நான் அஞ்சேன். Saibol இல்லைனாலும் இன்னொரு prescription strength medicine கொடுத்து என்னை காப்பாத்திடுவான். தம்பியே டாக்டரா இருந்தா அப்படி ஒரு வசதி.

என் ஒவ்வொரு இந்தியா trip பையும் கலகலப்பாக மாற்றி அடுத்து எப்போடா போவோம்னு எதிர் பார்க்க வைப்பதில் என் தம்பிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.  இன்று என் தம்பியின் companyai ரொம்ப தேடுகிறது.

நான் தமிழ் பாடங்களில் செய்யுளை படிக்க திணறிக் கொண்டிருந்த போது, செய்யுளின் இலக்கணம் அறிந்து, வெண்பா உட்பட சில செய்யுட்களை அவனே உருவாக்குவான். அவனுடைய கவிதைகள், நாடகங்கள். நடிப்புக்கு நான் முதல் விசிறி. He is a performer.

மூன்று வருடங்கள் முன்பு வரை நானும் அவனும் சேர்ந்து போனால், சகோதரி சகோதரன் போகிறார்கள் என்று சொல்லியவர்களை விட குண்டோதரியும் குண்டோதரனும் போகிறார்கள் என்று சொல்லியவர்கள்தான் அதிகம். யார் கண் பட்டதோ - இப்போ அவன் diet, exercise, healthy measure என்று சொல்லி அவன் மட்டும் மெலிந்து - - - comedy piece மாதிரி இருந்தவன், சூப்பர் ஹீரோ மாதிரி மாறிட்டான். நல்லா இருக்கட்டும்.

மூளையே தனியா முட்டை போட்டு அறிவு குஞ்சுகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு examsukku படிப்பான். ஆனால் exams எழுதி முடித்த கையோடு அன்று இரவே நைட் ஷோ ஒரு படத்துக்கு போவான் பாருங்க ...... தியேட்டரில் ரிலீஸ் ஆகி    மூன்றே நாட்கள் ஓடிய - தியேட்டரின் projector operator உட்பட பத்தே பேர் ஒரு காட்சி வீதம் பாத்த படங்கள் லிஸ்டில் உள்ள - படமாக இருக்கும். "ஏண்டா? அப்படி ஒரு படம் பாக்க போன?" என்று கேட்டால், "மூளை இப்பதான் balanced levelukku வந்திருக்கு. ஓவரா படிச்சிட்டேன். இந்த படம் பார்த்த பிறகு சரியா இருக்கு" என்பான்.

எந்த exams எழுதினாலும் first rank or gold medal  வாங்கும்படி கடவுள் அவனுக்கு ஆசிர்வாதம் தந்திருக்கிறார். ஆனால் நான் அவனிடம், அப்பா அம்மாவிடம் இருந்து intelligence genes,  எனக்கு  அதிகம் எடுத்து கொள்ளாமல், என் share ஐயும் சேர்த்து அவனுக்கு கொடுத்து விட்டாதாக சொன்னாலும் எனக்கு நன்றி சொல்லுவான்.

அவனுக்கு உள்ள கிரிக்கெட் பைத்தியத்திற்கு treat செய்ய  அவனே psychiatrist ஆயிட்டான்னு கேலி பண்ணி கொண்டிருந்ததை, இன்னொரு ஆத்மா என்னை தட்டி, உன்னை அக்காவை வச்சிக்கிட்டு அவன் வேற என்னவா ஆவான் என்றதும், நிறுத்தி விட்டேன்.

நாங்கள் சண்டை போட்டு கொண்ட நாட்களை விட ஒருவரை ஒருவர் மொக்கை  - கடி - போட்டு "காயப்" படுத்தி கொண்ட நாட்கள் அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசும் போது,  வயசு, சைசு, படிப்பு, பொறுப்பு, வித்தியாசம் எல்லாம் மறைந்து உள்ளே தூங்கி கொண்டிருக்கும் குழந்தை தனம் விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறது. என் தம்பிக்குள் ஒரு நண்பனை காண்கிறேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்க கூடாதா என்று ஏங்குவதை விட, நம்முள் இருக்கும் குழைந்த தனமான குறும்பு உணர்வுகளை வெளியே கொண்டு வரும் உறவுகளை அடையாளம் கண்டு கொண்டால் என்ன? அவர்களோடு இருக்கும் போது பெரியவர்களின் கோப தாப - ஈகோ - மரியாதை - எதிர்ப்பார்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டால் என்ன?

என் தம்பியை அடுத்த  முறை சந்திக்கும் போது கண்டிப்பாக ஒரு தேங்காய் மாங்காய் பட்டாணி  சுண்டல் பொட்டலம் வாங்கி பங்கு போட்டு சாப்பிட வேண்டும் - பங்கு பிரிக்கும் போது சண்டை போட வேண்டும் - சண்டையில் சுண்டல் கீழே விழ வேண்டும் - கோபத்தில் அவனை திட்ட வேண்டும் - அம்மாவிடம் தம்பியை பற்றி குறை சொல்ல வேண்டும் - வேறு பொட்டலம் வாங்க வேண்டும் - அவனுக்கு கொடுக்காமல், "வெவெவ்வே..." சொல்ல வேண்டும் - சுண்டல் சாப்பிட்டு விட்டு அவன் சட்டையில் கைய துடைக்க வேண்டும் - அவன் அடிக்க வரும் போது ஓட வேண்டும் - அவன் மனைவியிடம் நானும் என் கணவரிடம் அவனும் முறையிட வேண்டும் ...................

11 comments:

தமிழினிமை... said...

.................................................................................................................................................................................................................................................................................................

தமிழினிமை... said...

vaarththaihalae illai...the style is awesome..neeyae unakku pidiththamaana vaarththaihalaal nirappikkoL..

தமிழினிமை... said...

i too feel like seeing him

தமிழினிமை... said...

avanoeda foto post panniyirukkalaamla?innum azhahu aeriyirukkum indha padhivukku..

Chitra said...

Amudha, indha maadham avanukku birthday. adhaan romba romba romba thedittu...........

தமிழினிமை... said...

EngaL iniya thambi- THE GREAT BRAIN HATCHER,GUNDOETHARANAAI irundhu KUCHIDHARANAAI maarivitta MENTAL DOCTOR(PSYCHIATRISTnu thamizhla sollalaamla...?),ellaa mokka padangalayum paarkkum MOKKA MANNAARSAAMI,DHONIyaai irundhu AANI Pudungiyirukka vandiyavar (ippozhudhu mara aani pudungubavar)GUNDOEDHARIyaai irukkum, OBAMAvin thalama(i)yin keezh THAMBI PAITHTHIYAM pidiththu thiriyum, than arumai sahoedhari edai kuraya vaendum enbatharkaahavae avarudan pattani sundalukku mallukattum -engal arumai thambikku INIYA PIRANDHA NAAL VAAZHTHTHUKKAl!...

Chitra said...

adengappa............. Amudha, supera kalakkira. En thambi Vellore CMC ila thaan psychiatristaa irukkaan. adhu oorukku. enakku innum thambiyaathaan irukkaan. naanga rendu perum pattani sundal sappidarathu oru special treat.........

தமிழினிமை... said...

Vetti paechchu, padichchu padichchu naan VELLOREukku thaan poehanum...Enekkenna kavala?...Thambi udayaaL Padaikku(so...,si...ukku) anjaaL...Anyway,nallaaththaan keeeeeeeeeeeeedhu

CS. Mohan Kumar said...

Nice post. I also have a sister who is a Doctor! What a coincidence!!

Does your brother reads your blog?

பாலா said...

விக்ரமன் படம் பார்த்த எபெக்ட் :))
கொடுத்து வைத்த தம்பி !

Ramesh said...

//ஒரு தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் பொட்டலம் வாங்கி பங்கு போட்டு சாப்பிட வேண்டும்

நெகிழ்ச்சியாகவும் ஆசையாவும் இருக்கிறது. அப்படியே எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்..