Monday, August 29, 2011

பதிவுலகில் காமத்து பால்

ரொம்ப நாள் கழிச்சு "தம்பட்டம்" தாயம்மாவை சந்திக்க வேண்டியது வந்தது.

"என்ன சித்ரா, ஆளையே காணோமே. பதிவுகள் எழுதுறது கூட குறைஞ்சு போச்சே."
"தாயம்மா, வழக்கமான காரணம் தான். பல வேலைகள் வரும் போது, வெட்டிபேச்சுக்கு டைம் இல்லாம போயிடுது. "
"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."


" அதை ஏன் கேட்குற? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யய்யய்யயோ ........ !!!"
" என்ன ஆச்சு?"


"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. மெயில் பதில் சொல்லியே பொழுது போகுது. ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன். அபத்தமான விவாதங்களை அல்ல. "

"உன் சொந்த ப்லாக் உன் கருத்தை - உன் பீலிங்க்ஸ்சு சொல்ல உனக்கு உரிமை இல்லையா?"

" கொஞ்சம் வெட்டி பேச்சுக்கும் நேரம் ஒதுக்கி, பதிவு எழுத உட்கார்ந்தா...... இந்த வார்த்தை/கருத்து - இவங்களை காயப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு எரிச்சல் படுத்தி விடுமோ? - இவங்களுக்கு வருத்தப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு கோபம் உண்டாக்கி விடுமோ? - இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?"

" ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ......சித்ரா, நீ உன் மனசாட்சிக்கும் கூகுள் சொல்ற சட்ட திட்டங்களுக்கு தான் " I agree" என்று டிக் செய்துதானே ப்லாக் ஆரம்பிச்சு வச்சுருக்கே. உலகத்தில உள்ள ஏழு கோடி தமிழ் மக்களும் - அவங்க மனசுல போட்டு வச்சுருக்கிற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுதுறேன் என்றா ஒத்துக்கிட்டு ப்லாக் எழுத வந்தே? அப்புறம் எதுக்கு இந்த வீண் கவலை? "

"ஆஹா.... அப்படி ஒண்ணு இருக்கோ? கரெக்ட். அவங்க அவங்க ப்லாக் அவங்க அவங்க தான் தனிகாட்டு ராஜா/ராணி!"


"சித்ரா, இப்படி சொல்ற நீயே, சிலர் தங்கள் பதிவுகளில் கவர்ச்சி படங்கள் போடுவதை - தான் வைக்கிறதை - எதிர்க்கிறதா ஒரு பேச்சு இருக்குதே. "

" நான் அப்படி யார்க்கிட்டேயும் சொல்லல, தாயம்மா. அந்த டாபிக் அடிப்படையில் பதிவுகள் இருந்தால், நான் வாசிக்காமல் புறக்கணித்து விடுவேன். அதற்கு காரணம் கேட்டாங்க. அப்படி எழுதுறது அவங்க இஷ்டம். அதற்காக எனக்கு இஷ்டமில்லா பதிவுகளை நான் வாசித்து வோட்டு போடணும்னு என்கிற கட்டாயம் இல்லாததால், அந்த பதிவுகளை ஒதுக்கி வச்சுடுவேன் என்று பதில் சொல்லி இருக்கேன். அவ்வளவுதான்."

"சித்ரா, நீ போன பதிவில் ஒரு பதிலில் கூட - " தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள். " - உன்னை சிரிக்க வைக்குதுன்னு சொல்லி இருந்ததற்கு கூட கேள்வி வந்துச்சாமே. "

" ஆமாம், தாயம்மா. இப்போவும் அதையே தான் சொல்றேன். தனக்கு இந்த மாதிரி மேட்டர் தான் - படங்கள் தான் பிடிக்குது - அதை ஆசை தீர தன் பதிவிலும் போட்டு ஜொள்ளிக்கிறேன் ...sorry ..... போட்டு கொள்கிறேன் என்று சொல்லி தங்கள் பதிவுகளில் போட்டுக் கொள்ளட்டுமே. அதை விட்டுப்புட்டு, அப்படி எழுதினால் தான் கூட்டம் சேருது - அப்படித்தான் ஹிட்ஸ் கிடைக்குதுன்னு ஒரு டொச்சு காரணம் சொல்லி - அதையே தமிழ் பதிவுலக வேதவாக்காக புதிய பதிவர்களிடமும் பரப்பி , தான் மட்டும் இல்லை, தமிழ் பதிவுகள் வாசிக்க வருகிறவர்கள் எல்லாருமே "அந்த" மாதிரி முத்திரை குத்துவது போல ஆகிறதே. அந்த மாதிரி இல்லாமல் வரும் என்னை போன்றவர்களின் பதிவுகளையும் வாசிக்க தமிழ் மக்கள் இருக்கிறார்களே? நாம என்ன , கூகுள் சினிமா படமா எடுத்து விடுறோம்? ஒரு குலுக்கல் டான்ஸ் வைக்கலைனா commercial success ஆகாதுன்னு சொல்ல? எல்லாமே ஓசிதானே."


"ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, .......... சிரிச்சு முடியல. இப்போ புரியுது. குமுதம் - குங்குமம் - விகடன் போல பத்திரிகைகளின் பிசினஸ்க்காக கொடுக்கிற காரணம், இன்டர்நெட் பதிவுகள் எழுதுவதற்கு எப்படி ஒத்து வரும்?
அப்படி
கவர்ச்சி படங்கள்தான் பார்க்கணும் என்று இருக்கிற தமிழ் மக்கள் , எதற்கு ஒரு பதிவர் அப்படி ஒரு பதிவு போடுகிற வரைக்கும் காத்து இருக்கணும்? இருபத்துநாலு மணி நேர சர்வீஸ்..... கூகுள் இமேஜஸ் - யுடியூப் என்று இன்டர்நெட் எந்த நேரமும் கவர்ச்சியின் உச்சக்கட்ட படங்களுக்கா பஞ்சம்? கம்ப்யூட்டர் ஆன் செய்து - இன்டர்நெட் கனக்ட் பண்ணி வரவங்க - அப்படி படங்களை பார்க்க ப்லாக் பக்கம் வருகிறதற்கு பதிலாக, நேரிடையாக இவங்க படங்களை சுட்டு போடுற சைட் போய், பார்க்கலாமே. இன்டர்நெட் காரையே திருட வழி இருக்கிறப்போ, கார் டயர் மட்டும் உருட்டிக்கிட்டு போகிற மாதிரி.... ? "


"அதானே தாயம்மா. அப்புறம், ஒவ்வொரு தமிழ் பதிவர்களும் - தங்கள் தனித்துவத்தையும் - தனி திறமைகளையும் அடையாளம் காட்டத்தானே தனக்குன்னு ப்லாக் வச்சுருக்காங்க. . ஆங்கில பதிவுகள் காணப்படுகிற variety , தமிழ் பதிவுகள் குறைந்து போகிறதே, ஏன்? ஒரே மாதிரி மோல்ட்லேயே எழுதணும்னு நினைக்கிறதுதானே."


" அப்புறம், ஒரு பதிவுக்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று ஆங்கில பதிவுகள் வாசிக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன். கூகுள் அந்த அந்த டாபிக் வச்சு பதிவுகள் தேடும் போது, கரெக்ட் ஆக search பண்ணி relevant blog posts லிஸ்ட் பண்ணி காட்டுது. ஆனால், தமிழில் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருப்பது, ஒண்ணுமே புரியல. டைட்டிலேயே ஜொள்ளு விட வாங்க என்று அறிக்கை விட்டு கூப்பிட்டு விட்டு, பதிவில் "ஜெபம் செய்வதன் மகத்துவங்கள்" பத்தி எழுதவா முடியும் ? உனக்கு ஏதாவது புரியுதா, தாயம்மா?"


" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...."


"தாயம்மா, கேலி பண்ணாதே! இவர்களை விட்டால் திருக்குறள்ளேயே , எல்லா தமிழ் மக்களும் வாசிச்சு அதிக ஹிட்ஸ் கிடைக்கத்தான் ஒரு பிரிவுக்கு - "காமத்து பால்" என்று கவர்ச்சியா பேர் வச்சுருக்காங்க என்று சொன்னாலும் சொல்லுவாங்க..... ஹா, ஹா, ஹா, ஹா, ........."


" சில தமிழ் பதிவர்களுக்கு Quantity முக்கியம். எல்லாமே "ரமணா" விஜயகாந்த் மாதிரி statistical information தான். மற்றவர்களுக்கு Quality முக்கியம். இப்படி இரு கோணங்களில் பயணிக்கும் போது, எப்படி பிரபல பதிவர்கள் என்பதற்கும் - பிரபல பதிவுகள் என்பதற்கும் ஒரே மாதிரி இலக்கணம் இருக்க முடியும்?


ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள்.


சென்ற வாரத்தில் , பதிவுலகில் எட்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ILA விவசாயி தனது பதிவில்:

http://vivasaayi.blogspot.com/2011/08/blog-post_25.html

மீள் பதிவாக போட்டு இருக்கும் ஒரு பேட்டியில் இருந்து - தமிழ்மணத்தில் மிக முக்கியமானவரான காசி ஐயா என்பவர் சொன்ன அறிவுரையை - கவனிக்கவும்: அறிவுரை தான் - பதிவுலக சட்டம் அல்ல - இங்கே நானும் மேற்கோள் காட்டி கொள்கிறேன் .
" புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்"

" சித்ரா, ஒவ்வொரு பதிவரும் மனதிற்குள் ஒரு அளவுகோல் (standard) வைத்து இருப்பார்கள் போல. "

தாயம்மா, தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக் அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை.

ஓகே, தாயம்மா..... வழக்கம் போல உன்கிட்ட பேசினாலே எனக்கு பல விஷயங்கள் தெளிவா ஆயிடுது. நான் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு அப்புறமா சந்திக்கிறேன். "




Sunday, August 21, 2011

மூன்று முடிச்சுகள் - தொடர் இம்சை.




http://pinnoottavaathi.blogspot.com/2011/08/3.html


இந்த பதிவின் மூலம், உலக குடிமகன் , ஆஷிக் : வணக்கம்:

நான் பதிவு எழுத வந்த புதிதில், முதல் பின்னூட்டம் இட்ட பதிவர் - இன்று வரை எனக்கு மறக்காமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் கோமா மேடம் அவர்களுக்கும் : வணக்கம்.
http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html


http://vasagarthevai.blogspot.com/2011/08/3.html

பிரபு எம். முக்கும் வணக்கம்.
இவர்கள் மூவரும் என்னை தொடர் பதிவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து இருக்கிறார்கள்.

விரும்பும் மூன்று விஷயங்கள்:

1. தமிழ் பதிவுலகில், தொடர் பதிவு இம்சை இல்லாமல் இருக்க விரும்புகிறேன்.

2. நான் சமைக்கும் மட்டன் பிரியாணி, எங்க ஊரு அண்ணாச்சி ஹோட்டல் பிரியாணி மாதிரி வரும்படி விரும்புகிறேன்.

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(
எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)


விரும்பாத மூன்று விஷயங்கள்:

1. சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்.

2. ஜிவ்வென்று ஏறும் தங்கத்தின் விலை.

3. மயாமி பீச்சுக்கு வரும் "போல்ட்ஸ்".


பயப்படும் மூன்று விஷயங்கள்
:

1. அடுத்த தீவிரவாத ஒழிப்பு சீக்ரட் மிஷனுக்கு , ஒபாமா என்னை அழைத்து விடுவாரோ என்று பயப்படுகிறேன்.

2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன்.

3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.


புரியாத மூன்று விஷயங்கள்
:

1. பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?

2. தமிழ் - ஆங்கிலம் தவிர, வேறு எந்த மொழியில் யார் யார் - என்ன பேசினாலும் .....

3. ராக்கெட் சயன்ஸ்.


மேஜையில்
உள்ள மூன்று பொருட்கள்
:

1. computer

2. keyboard

3. mouse


சிரிக்கவைக்கும்
மூன்று விசயங்கள் (அல்லது மனிதர்கள்)
:

1. தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள்.

2. நான் பேசும் ஹிந்தி

3. இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் பட்டிமன்றங்கள் தான், உண்மையான பட்டிமன்ற இலக்கணம் கொண்டவை என்று தமிழ் மக்களை எளிதாக நம்ப வைத்து விட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் தனித்திறமை.


தற்போது
செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்
:

1. தொடர் பதிவுக்கு அழைத்தவர்களை, மனதார திட்டி ....ஆ.....சாரி, வாழ்த்தி நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

2. keyboard தட்டி , இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

3. மூன்று விஷயங்கள் குறித்த தொடர் பதிவுக்கு, மூன்று கேள்விகள் மட்டுமே ஏன் கொடுக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.


வாழ்
நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்
:

1. தமிழ் பதிவுலகம் விட்டு மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளுடன் விலகி விட வேண்டும்.

2. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.

3. தமிழ்மண மகுடத்தை, இனி தங்கத் தட்டில் வைத்து தான் தர வேண்டும் என்று , அடுத்த முறை பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டும்.


செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள் :

1. ஒரு வழியா இந்த தொடர் பதிவை எழுதி முடித்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

2. மூன்று விஷயங்களுக்கு மேலாக இன்னும் அதிக விஷயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

3. பத்தே நாட்களில், இன்னும் பத்து பவுண்டு எடை கூட செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.


கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள் :


1. தமிழ் தொலைக்காட்சிகளில் , விளம்பரங்களில் வரும் ஆங்கிலத்தமிழ் - மற்றும் ஹிந்தித்தமிழ்.

2. "சித்ரா, உங்க அக்கௌன்ட்ல போட வேண்டிய பில்லியன் டாலர் பணத்தை தவறுதலாக , கனிமொழி மேடம் அக்கௌன்ட்க்கு அனுப்பி விட்டோம்."

3. "உங்களுக்கு சிலை வைக்க போகிறோம்."


கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் :


1. ஜிகிடி, டகால்டி, தில்லாலான்கடி, தக்குடு போன்ற மேலும் பல அரும்பெரும் தமிழ் வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

2. இடத்துக்கு இடம் - ஆளுக்கு ஆள் - தகுந்த மாதிரி அலட்டல் வேலை செய்பவர்களை, நோகாமல் எப்படி நுங்கு எடுப்பது என்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. வேலை ஒழுங்கா நடக்க, பாஷா ரஜினி மாதிரி, "உண்மையை" சொல்ல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.


பிடித்த மூன்று உணவு வகைகள் :

1. நடப்பன ......
2. பறப்பன .....
3. நீந்துவன ......



அடிக்கடி முணு முணுக்கும் மூன்று paadalgal:


எனக்கு பாட்டு பாடியோ, பாடல்களை முணுமுணுத்தோ மற்றவர்களை கொடுமை படுத்த வேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. மன்னிக்கவும்.


பிடித்த மூன்று படங்கள்:

1. ரஜினிகாந்த் படம்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.

3. ஸ்டைல் மன்னன் ரஜினி படம்.


'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்:

1. உயிர்.

2. மூளை.

3. இதயம்.


இதை தொடரா பதிவாக மாற்றும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


Tuesday, August 9, 2011

நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க!


இது
பதிவுலக அரசியல் பதிவு இல்லைங்கோ.....

நான் நெல்லைக்கு வந்த போது,
"நெல்லை பதிவர்கள் சங்க முன்னேற்ற கழக" தலைவர் : "உணவு உலகம் " புகழ் - அண்ணன் குல மாணிக்கம் - திரு. சங்கரலிங்கம் அவர்களையும் ,
மகளிர் அணித்தலைவி - சமூக சேவகி - "மனதோடு மட்டும்
" கௌசல்யாவையும் நான்கைந்து முறைகள் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

எங்க ஊரில பெரிய ஆபிசர் ஆச்சே..... பந்தா எப்படி இருக்குமோ - அலுவலகத்தில் ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து appointment தருவார் என்று ஒரு எண்ணத்தில் தான் சென்றேன். அண்ணன் படு கூல் ஆக , அலுவலகத்துக்கு வெளியிலேயே கௌசல்யாவுடன் , காத்து இருந்தது, சந்தோஷ அதிர்ச்சி.

தான்
ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.






நடக்கவிருந்த நெல்லை பதிவர் சந்திப்பு மீட்டிங் பற்றி ஏற்பாடுகளை உறுதி செய்யத்தான், இந்த குட்டி மீட்டிங். ஒரு சின்ன அலுவலக அறை. குட்டி மீட்டிங்க்கு குட்டி பில்டிங் ...என்னே ஒரு symbolic shot .....!

காளி மார்க் கடலை மிட்டாய், சூடான அல்வா, மிக்சர் சகிதமாக வரவேற்றார். முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு. அப்போ, கொடுத்த ஒரு ஆத்மார்த்தமான கடலை மிட்டாய் போஸ் ஒன்றை , அண்ணன் கிளிக்கி கொண்டார். அப்புறம் தான் சொன்னாங்க.... நெல்லை பதிவர் சந்திப்புக்கு advertisement ஆக அதை போட்டோ ஷாப் மாற்றி விட்டார். அவ்வ்வ்வ்......

எல்லாவற்றிலேயும் பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிக்க வேண்டும் என்றே கர்மமாக தான் இருப்பதை சொல்லாமல் சொன்னார்.

அடுத்த முறை சந்தித்தது நெல்லை பதிவர் சந்திப்பின் போதுதான். சங்கரலிங்கம் அண்ணன், சான்சே இல்லை..... ஏற்பாடுகளில் அமர்களப்படுத்தி இருந்தார். அவரது, ஆட்பலம் - பவர் பலம் எல்லாம் தெரிந்தன. ஆனால் அவரோ சந்திப்பை ஒளிபரப்ப டைரக்ட் ஆக ஆன்லைன் வீடியோ வரவில்லையே என்று பதிவுலக நண்பர் , நிரூபன் அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று டென்ஷன் ஆகி கொண்டு இருந்தார்.

தன்னடக்கத்துடன் , சக பதிவரின் கருத்துக்காக மரியாதை கொடுக்கும் குணத்தை சொல்லாமல் சொன்னார்.

அங்கே, பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்பும் கருத்தாழமிக்க பதிவர்களையும், தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பை பற்றி சொல்ல, தனி பதிவு வேண்டும்.......

"ஆண்டவா
..... அங்கே இருந்த மாதிரியே, கமென்ட் அடிக்காமல் என் வாயை பொத்தி கொண்டு, இந்த பதிவை எழுதி முடிக்க உதவி செய்யும். ஆமென்."
(அதற்காக, பின்னூட்டத்தில் அதை இதை சொல்லி , என்னை உசுப்பேத்தி அடுத்த பதிவு அதை பத்தி எழுத வச்சுறாதீங்க, மக்காஸ்! எழுதுனாலும் எழுதிடுவேன். மி த பாவம்! )

அப்புறம், ஒரு orphanage சென்று பள்ளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்புக்கு ஒரு நாள், அண்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த குழந்தைகளின் நிலை, மனதை உருக்குவதாக இருந்தது. அந்த ஆசிரமத்துக்கும் பள்ளிக்கும் அண்ணனும் கௌசல்யாவும் செய்து வரும் உதவிகள், பல.

http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_4498.html


சமூக அக்கறையோடு அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டால், எந்த அளவுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சொல்லாமல் சொன்னார்.

பயணங்கள் மற்றும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக நிறைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் நேரம் அமையவில்லை. (என் அப்பாவின் மறைவுக்கு பின், நான் இந்தியா சென்ற முதல் ட்ரிப். நெல்லையில், எங்கள் வீட்டில் அந்த சோகத்தின் சாயல் இன்னும் பரவி இருந்தது. அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.)

அதனால், கடைகளுக்கு செல்லவும் முடியாமல் இருந்தேன். நெல்லை ட்ரிப் மறக்க முடியாதபடி செய்த அண்ணனை சந்தித்து விடை பெற்று கொண்டு வரலாம் என்று நினைத்து, ஊரை விட்டு கிளம்பும் முன் போன் செய்தேன். தன் அலுவலகத்தில் தான் இருப்பதாக சொன்னார். ஐந்து நிமிடங்கள் செல்லலாம் என்று முடிவெடுத்து வந்தேன். அப்பொழுது, என் நேரப் பற்றாக்குறையை புரிந்து கொண்டவர், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தார்.

நான் முதலில் அவரை சந்தித்த குட்டி அலுவலக கட்டிடம் இடிந்து போய் இருந்தது. காரணம் கேட்டேன். "உங்கள் முதல் சந்திப்புக்கு மறு நாள் தான் இப்படி ஆகி போச்சு. சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!" என்றார்.
தற்காலிக அலுவலக கட்டிடமாக, பக்கத்தில் இருந்த ஒரு பழைய கல்யாண மண்டபம் இயங்கி கொண்டு இருந்தது. "அண்ணா, நான் வந்த வேளை. உங்களுக்கு பெரிய அலுவலகம் கிடைச்சுடுச்சு." என்றேன்.
"இந்த முறை வந்துட்டு போறீங்க .... என்ன ஆகுதுன்னு பார்க்கிறேன், " என்றார்.

(கொசுறு செய்தி: இப்பொழுது சுகாதார துறையில் இருந்து உணவு துறை பிரிந்து வந்து, தனி துறையாக ஆக்கப்பட்டு, 300 பயனுள்ள பதிவுகள் கொடுத்த அண்ணனுக்கு பெரிய position கிடைச்சுடுச்சே!)

பக்கத்தில் இருந்த ஒரு பெரிய அட்டை பெட்டியை என்னிடம் கொடுத்தார். "பலகாரங்கள் வாங்க கூட, நேரம் இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாயே. இதில், முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம், மிக்சர், அல்வா எல்லாம் இருக்குது. அமெரிக்காவுக்கு எடுத்து கொண்டு போக," என்றதும், நிஜமாக என் கண்களில் நீர்.

பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். (அத்தோட பலகார பெட்டியும், ஹி ...ஹி....ஹி....ஹி.....)

ஏதோ அவரது பதிவுகளில், பின்னூட்டத்தில் விளையாட்டாக அண்ணன் என்று சொல்ல ஆரம்பித்தேன். அதை கருத்துடன் ஏற்று கொண்டு அவர் காட்டிய அன்பு, மதிப்பு மிகுந்தது. என் கணவர், " ஏதோ பதிவுலக அண்ணன் பார்த்து விட்டு வருவதாக சொல்லிட்டு போனே. வரும் போது, பொங்கல் சீர் பெட்டி மாதிரி ஒன்றை தூக்கி கொண்டு வந்து இருக்கிற. கரும்பும், எனக்கு பட்டு வேட்டி - சட்டையும் மட்டும் தான் மிஸ்ஸிங்," என்று கமென்ட் அடித்தார். அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு , அவருக்கும் ஒரு முறை கிடைத்து இருந்தது. மச்சான்ஸ் இரண்டு பேரும் இப்போ க்ளோஸ் தோஸ்த்து ஆகிட்டாங்க.

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!




Tuesday, August 2, 2011

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

போன பதிவை வாசித்து விட்டு, என்னுடைய பார்வையில் - இந்திய பயண அனுபவங்களை - இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் என்று ஒரு question paper எடுத்து என் கையில் கொடுக்காத குறையாக நேயர் விருப்பம் கேட்டுப்புட்டாங்க.... (இப்படி உசுப்பேத்தி.....உசுப்பேத்தியே...... ஹி,ஹி,ஹி,ஹி ....... )

இந்தியாவில் அது சொத்தையாக இருந்துச்சு.... இது நொள்ளையாக இருந்துச்சுனு நான் புலம்ப போறதில்லை. என்னவோ, இந்தியாவை இதற்கு முன்னாலே பார்த்திராத ஆளு மாதிரியும் அலம்பல் விடப்போறது இல்லை. பிறந்து வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் - எந்த அளவுக்கு மாறி இருக்கும் என்று தெரியாமலா தாமிரபரணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்தேன்? சும்மா தமாசு பண்ணாதீங்க....


உப்பு காசுக்கு பெறாத விஷயங்கள் தானே "வெட்டி பேச்சு" கண்ணுக்கு தென்படும். அதை போய் பெருசு படுத்தி பேசினால், நான் தான் ஏதோ வேற்று கிரகத்து ஆளு விசிட் அடிச்ச மாதிரி லுக்கு விடுவாங்க.... அதான் இங்கே இன்னைக்கு பதிவில் கொட்டுகிறேன்.

நெல்லை பக்கம் கமென்ட் அடிப்பாங்க: "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்?
பொண்ணு நிறமும் கலர்னு சொல்லுவாங்க ..... கொக்ககோலா - காளிமார்க் Bovonto வாங்கி வர சொன்னாலும், "நல்ல கலரா" (சோடா) பார்த்து வாங்கி வர சொல்வாங்க...
இதுல உள் குத்து எதுவும் இருக்கா என்று எந்த நெல்லை பொண்ணுக்கும் தெரிஞ்சது இல்லை.
மொத்தத்தில், சிகப்போ வெள்ளையோ மஞ்சளோ இருக்கிற பொண்ணை வச்சு காமெடி பண்ணுவாங்க.

ஊருக்கு போய் இருந்தப்போ ஒரு தமிழ் சினிமா பாட்டு : "உன்னை வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? ......" என்று அடிக்கடி டிவியில போட்டாங்க. யாரு அந்த பொண்ணு என்று கேட்டேன்.
"டாப்சி பன்னு" என்று பதில் வந்துச்சு.
செல் போன் சிம் கார்டுக்குத்தான் அங்கே ஒரு கடையில இப்படி என்னவோ சொன்ன மாதிரி ஞாபகம். பொண்ணு பேரை கேட்டால், எதுக்குடா டெலிபோன் பில்லுக்கு பணத்தை கொடுக்க சொல்ற? என்று அருவாளை எடுக்காத குறையா கேட்டால்...... அதுதான் அந்த பொண்ணோட பேரு என்று விளக்கம் கொடுத்தாங்க...

பக்கத்தில் இருந்த சினிமா பிரியை பெரியம்மா ஒருத்தங்க, " அந்த காலத்துல, தெலுங்கு படத்துல நடிக்கணும்னா அந்த ஊருக்கு ஏத்த மாதிரி ஒரு பேரு.... தமிழ் படத்துல நடிக்கணும்னா இந்த ஊருக்கு ஒரு பேருனு வைப்பாங்க.... இப்போ என்ன பேர் வச்சுட்டும் நடிக்க வந்துடலாம். மவராசி வெள்ளையா இருந்தா போதும்னு" அலுத்துக்கிட்டாங்க.

அந்த பாட்டை மீண்டும் கேட்டேன்.... அந்த ஒற்றை வரிக்கு அர்த்தம் ஆராய்ஞ்சு பார்த்தால் எனக்கு பயமாக இருந்துச்சு. அந்த பாட்டை கேட்கிறதை விட்டுட்டேன்.

ஏதோ சொல்ல வந்துட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டு போறியே என்று நினைக்காதீங்க. ஒரு டிவி ப்ரோக்ராம் பார்க்கிறதுக்குள்ள - எத்தனை தடவை என்னையே வெள்ளாவியில் வச்சு வெளுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கிட்டு "கலர்" தீவிரவாதிகளாக வந்து மாத்தி மாத்தி கலங்கடிக்கிற டிவி விளம்பரங்களை பார்த்து டர் ஆவது? அந்த effect ......

வெயிலில் சற்று கருத்து போவதை தாங்காமல் துடிக்கும் கலர் பொண்ணுங்க இந்த கருமாந்திர கிரீம் பூசினால், பழைய கலர் வந்துடும்னு ஆரம்பிச்ச ஐட்டம் ஒண்ணு ...... எல்லா கருத்தம்மாக்காளையும் வெள்ளையம்மா ஆக்கிடுவதாக நம்ப வச்சு பெரிய பிசினஸ் ஆனது ஊரறிஞ்ச விஷயம். ஒரு கட்டத்தில் திராவிட இனம் அழிஞ்சு எல்லோரும் ஆர்ய இனமா ஆகி விடுவாங்களோ என்று நினைக்க வச்சுட்டாங்க.

பொண்ணுங்க மட்டும் தான் வெள்ளை ஆகணுமா? ஆண்களுக்கு இல்லையா என்று வைக்கால்பட்டியில் இருந்து ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.

அப்புறம், கருத்த பொண்ணுங்க எல்லாம் சிகப்பழகு கிரீம் பூசி கலராயிட்டாங்க. அதனால் எங்களை இன்னும் அதிக கலரா காட்டுங்க என்று தூங்காவரட்டிபட்டியில் இருந்து , "டான்சி பின்னு" போராட்டம் நடத்திய பின், பேயை கண்டு பயத்துல வெளிறி போய் ரத்தம் வடிஞ்சு நிக்கிற மோகினி மாதிரி வெள்ளை வெளேர் என்று மாற்றி காட்ட இப்போ - face wash - White beauty பவுடர்/கிரீம் - என்று நிறைய வந்துடுச்சு. அவங்க விளம்பரத்தில் காட்டுற வெள்ளாவியில் வச்சு நிஜமாகவே வெளுத்த வெள்ளைக்காரிகளை காட்டும் போது, நான் ஓடி போய் டிவி brightness குறைச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு.... இல்லைனா என் கண்ணு அவிஞ்சு போய்டும் போல இருந்துச்சு.



நீங்களே சொல்லுங்க.... இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு ஆகணுமா?

ஒரு நண்பரிடம் (அவர் ஒரு மருத்துவர்) பேசி கொண்டு இருந்த போது, இந்த "வெள்ளாவி கிரீம்" பிசினஸ் பற்றி டாபிக் வந்துச்சு. அவர் சொன்னது, " இந்திய சீதோஷ்ண சூழ்நிலைக்கு வரும் வெயில் மற்றும் வெப்ப கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க melanin (மெலனின்) அவசியப்படுகிறது. அதை இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது. " சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாய் ஆயிடும் என்று அதிலுள்ள கெடுதல்களை சொல்லி கொண்டே போனார்.

http://en.wikipedia.org/wiki/Melanin

"The photochemical properties of melanin make it an excellent photoprotectant. It absorbs harmful UV-radiation and transforms the energy into harmless heat through a process called "ultrafast internal conversion". This property enables melanin to dissipate more than 99.9% of the absorbed UV radiation as heat. This prevents the indirect DNA damage that is responsible for the formation of malignant melanoma and other skin cancers."

அதுக்குத்தான் வெயிலுக்கு காட்டாம வளர்க்க - இருக்க சொல்றாங்களோ..... அட....அட... அவங்க கடமை உணர்ச்சியை பாராட்டணும்.

ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.

அடுத்த பதிவில் : நாட்டுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று இல்லாத மற்றுமொரு டாபிக்கில் உங்களை சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெறுவது :

என்றும் அன்புடன் வெட்டி பேச்சு பேசும் சித்ரா !!!!