Showing posts with label entertainment media. Show all posts
Showing posts with label entertainment media. Show all posts

Monday, January 31, 2011

படிக்க ஆசை... ஆனால், வேலை பார்க்க பேராசை.


நேற்று எங்களுக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க....


 இன்று, வேறு ஒரு பதிவு எழுத தயார் ஆகி கொண்டு இருந்த பொழுது,  ஒரு சீரியஸ் பதிவு எழுத வேண்டியதாகி விட்டது.
மன்னிக்கவும்.

இங்கு பரப்பரப்பு இல்லாத பெரிய நியூஸ்.... ஆனால்,  இந்தியாவில் பரபரப்பா பேசப்படுற நியூஸ் இது, என்று நண்பர் ஒருத்தர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார்.
http://timesofindia.indiatimes.com/world/us/Duped-Indian-students-ignored-red-flags/articleshow/7393658.cms

இதை விட தெளிவாக எழுத முடியாதே ...... உண்மையை சொல்லி இருக்காங்க....

உனக்கென்ன தெரியும்னு கேட்காதீங்க.....  இங்கே வெட்டியாக இருக்கிற நேரம் எல்லாம், சில  Indian Students' Association உடன் சேர்ந்து  ஏதாவது ப்ரோக்ராம் organize செய்வதில், ஒத்தாசையாய் இருப்பது எனது பொழுதுபோக்கு.  அவர்களின் மன நிலைகளும் எண்ண அலைகளும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புகளும் கிடைத்து இருக்கின்றன.


அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க, "லார்டு லபக் தாஸ்"  வீட்டாளுக மட்டும் தான் என்று இருந்தது தான் அந்த காலம்.  இப்போ, யார் வேண்டுமானாலும் படிக்க வரலாம் என்கிற அளவுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் வந்து இருக்கின்றன.
எல்லாம் செய்து கொடுத்தாலும், கடைசியிலே  மாங்கு மாங்குனு படிச்சு எழுதினால் தான் ஒழுங்கான டிகிரி கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். 

 மாணவர்களுக்குரிய F1 டைப் விசா பெற்று,  வருபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் பெருகி கொண்டு தான் வந்து இருக்கிறது. இதுவும் நல்ல விஷயம் தான்.

http://www.nriol.com/oisnet/usastudentstats.asp
 அந்த லிங்க்ல் உள்ளது படி,  2009 கணக்கு படி  அமெரிக்காவுக்கு அதிகமாக படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தில் வந்து இருக்கிறது.  அந்த வருடம்,   103,260 மாணவர்கள், இங்கே வந்து இருக்கிறார்கள்.  இதுவும் நல்ல விஷயம் தான்.

மேட்டர் என்னன்னா, இப்படி படிக்க வர எல்லோருமே,  "நல்லா படிச்சு, டிகிரி வாங்குறதுதான் என் உயிர் .... என் மூச்சு.... என் கடமை..... என் கட்டுப்பாடு......" என்று வருவது இல்லை.   பெயர் வாங்கி உள்ள பெரிய பல்கலைகழகங்கள்  எல்லாம் சேர்ந்தால்,  "rules and regulations" ரொம்ப பேசுறாங்கப்பு..... எனக்கு நோகாமல் நொங்கு எடுக்கணும்.  அதுக்கு என்னா வழி?" அப்படின்னு இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்னாலேயோ ..... இல்லை  வந்தவுடன்,  பிரத்யேக Forum ...காரம் மூலமாகவோ எங்கே  சீப்பா fees  இருக்கும்?  எங்கே  அமெரிக்க மண்ணுல காலை வச்ச உடனேயே ..... இந்த கையில ஒரு வேலையை கொடுத்து, அடுத்த கையில டாலர்ஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும் என்று பார்த்து கிட்டு ..... யோசிக்காமல் குதிச்சுடுறாங்க....

வாசித்து பார்த்தால்,  குறுக்கு வழியில கைலாசம் போக எப்படி ஆலோசனை கேக்குறாங்க..... அது தப்புன்னு சொல்றவங்க பேசுறதை, இந்த காதில் வாங்கி .... அந்த காதில் எப்படி விடுறாங்க என்று தெரியும்.

இந்த மாதிரி மாணவர்களை டார்கெட் செய்து, சில online universities  .... சட்டத்தில் இருக்கிற ஓட்டையை .... பெருசாக்கி, தங்களுக்கு சாதகமாக மாற்றி,  இந்த மாணவர்களுக்கு  வசதியாக்கி கொடுத்து இருக்காங்க.  ஒரு டிகிரி வாங்கி முடித்த பின் , அல்லது முடிக்கும் தருவாயில், தாங்கள் படித்து இருக்கும் துறை சம்பந்தமான வேலைகளில் - trainee - ஆக இருக்க மட்டுமே  பயன்பட  கொடுக்கப்படும் CPT மற்றும் OPT work permits ..... இவர்களுக்கு,  university il  சேர்ந்த  முதல்  வாரத்திலேயே  கிடைக்கும் படி செய்து விடுகிறார்கள்.   தங்களின் துறையில் மட்டும் இல்லாமல்,  பெட்ரோல் பங்க் வேலையில் இருந்து IT வேலை வரை, எல்லா வேலைகளையும் செய்ய இந்த வொர்க் பெர்மிட் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதனால், நியாயமாக அந்த வேலை கிடைக்க வேண்டிய இன்னொரு இந்தியருக்கு கூட அந்த வேலை கிடைக்காமல் போய் விடும் நிலை உள்ளது. 

இந்த பல்கலைகழகங்களில்,   ஆன்லைன் வகுப்புகள்  மட்டும் தான். அதுவும் கண் துடைப்புக்காக மட்டுமே.  அதை அமெரிக்காவில் எந்த மூலையில் இருந்து கொண்டும்,   இவர்கள்  படிப்பது போல, பாவ்லா கட்டிக் கொள்ளலாம்.  எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில், கட்டிய  fees க்காக ஒரு diploma டிகிரியோ .... ஒரு வெத்து மாஸ்டர்ஸ் டிகிரியோ கொடுத்துடுவாங்க.
 
இந்த டிகிரியை வைத்து அமெரிக்காவில் எங்கும் வேலை வாங்க முடியாது என்பதை, இந்த மாணவர்கள் புரிந்து கொள்வதில்லை.  பெரும்பாலும் இந்த universities எல்லாம்,  blacklisted ஆக இருக்கும்.  அதை பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை. 

இப்படிப்பட்ட பல்கலைகழகங்களை தவிர்க்க சொல்லி, எத்தனையோ Forum மற்றும் பல்வேறு வழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு.  

இப்பொழுது பிடிபட்டு, இழுத்து மூடப்பட்டு இருக்கும் Tri-valley University - ஒரு சீனப் பெண்மணியின் கவனிப்பின் கீழ் இருந்து இருக்கிறது.  அந்த பல்கலைகழகத்தின் கட்டடத்தை பார்த்தாலே, அது போலி என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.

அப்படி இருந்தும் அதில் சேர்ந்தது - 90 % மேலாக இந்தியர்கள்தான்.    H 1 B வொர்க் விசா வாங்கி வந்து இங்கே வேலை பார்க்கும் சில இந்தியர்களின் கணவருக்கோ, மனைவிக்கோ H 4 விசா (Dependent visa) கொடுக்கப்படும்.  ஆனால், இந்த விசாவை வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது.  ஆனால், இப்படிப்பட்ட  பல்கலைகழகங்களில் சேர்ந்து கொண்டு, தங்கள் விசா status மாற்றி கொண்டு,  வேலைக்கு செல்பவர்களும் உண்டு.

இந்த மாய வலையில், தெரிந்தோ தெரியாமலோ விழும் சில மாணவர்கள்,  தாங்கள் படிக்க வந்த நல்ல பல்கலைகழகங்களில் இருந்து, மாற்றி கொண்டு  - டிகிரி பற்றி கவலைப்படாமல் உடனே பணம் சம்பாதிக்கும் ஆசையில்,  இங்கே சேர்ந்து விடுவதும் உண்டு. 

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,  Tri-Valley University இல், இது வரை மாட்டி இருக்கும் பெரும்பாலானோர்,  ஆந்திராவை சேர்ந்தவர்கள்.  இவர்களில் பலர்,   தாங்கள் எந்த மாதிரி பாதையில் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை நன்கு தெரிந்து கொண்டவர்களே.

மாட்டாத வரை, செய்வது தவறல்ல என்ற மன நிலையை என்னவென்று சொல்வது?  

இந்த பல்கலைகழகம் பற்றிய சந்தேகம் வரவும், அரசாங்கம் விசாரணை ஆரம்பித்து விட்டது.   விசாரிக்கப்பட்ட மாணவர்களில் சிலர்,  வெளியே தகவல்கள் கொடுத்து அலெர்ட் செய்து இருக்கிறார்கள்.  அதை பலர் புறக்கணித்து இருப்பது, இப்பொழுது வெளியே வந்து இருக்கிறது.  வார்னிங் மெசேஜ்களை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்ட வெகு சிலரே,  உடனே வேறு  மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டு விலகி விட்டார்கள். 

Tri-Valley University இல்  உள்ள மாணவர்களின் தகவல்கள் அத்தனையும் அரசாங்கத்தின் கையில் .....
இதில் வேடிக்கை என்னவென்றால்,  நானூறுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முகவரியாக, ஒரே வீட்டின் முகவரியை தந்து இருக்கிறார்கள். 

இப்பொழுது, அந்த ஊரில் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருக்கும் அத்தனை மாணவர்களும் உடனே Immigration office,  தொடர்பு கொள்ள சொல்லி உத்தரவு வந்து இருக்கிறது.  இதில்,  H 4 விசாவை மாற்றி விட்டு,  "அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாய் இருக்கும்"  இந்தியர்களுக்கு வயிற்றில் புளி கரைத்து இருக்கிறது.  ஏனெனில், அவர்களது இந்த டம்மி வொர்க் பெர்மிட் விசா status ரத்து செய்யப்படும் போது, அவர்கள் "out of status" ஆக நேரிடலாம். அதனால், தன் கணவரையோ, மனைவியையோ விட்டு விட்டு இந்தியா திரும்பி செல்லும் நிலை நேரிடலாம்.

இதை போன்ற நிலைகளை தவிர்க்க,  இங்குள்ள Immigration lawyers மற்றும் Telugu Association of North America (TANA) வின் உதவிகளை நாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஊரிலேயும்,  sensation news ஆக்கி,  இந்திய அரசாங்கத்தை உதவிக்கு அழைக்கிறார்கள். 
 
நம்ம நாட்டில் இருக்கும் அரசாங்க விதிகளை மதித்து - அதற்கு உட்பட்டு இருப்பது, ஒவ்வொரு இந்தியரின் மனப்பக்குவத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது ஆக இருக்கலாம்.  ஆனால், தாய் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வரும் போது, அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து, அதற்கேற்ப நடக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறதல்லவா? 

நம்ம ஊரில், "நம்ம நாட்டாமை வீட்டு பையானாம்.... கேஸ் போடாதே!" என்றோ, "நம்ம MLA வுக்கு வேண்டியவராம். கண்டுக்காதே!" என்றோ சொல்லி,  தவறுக்கு தண்டனை இல்லாமல் போவதை  சாதரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்ட  பலருக்கு,  இது கஷ்டம் தான்.

  இருந்தாலும் இந்த மாணவர்களுக்கு,  எந்தவித discrimination ம் அமெரிக்க அராசங்கம் காட்டவில்லை.  சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அது மட்டுமே செய்யப்படுகிறது.   விசாரணைக்குப் பின், தெரிந்தே தவறு செய்தவர்களின் விசா - பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள்,  வேறு எங்கும் விதிகளை மீறி,  சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் முழுதும் எடுத்து முடிக்கும் வரை, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க chip transmitters காலில்  பொருத்தப்பட்டு இருக்கின்றன.   இவர்களை,  சிறையில் அடைக்க வகை இருந்தும்  (giving fraudulent information, knowingly) அப்படி  செய்யாமல் , அவர்களை Voluntary deportation - தாங்களாகவே முன் வந்து இந்தியா திரும்ப செல்ல, அமெரிக்க அரசாங்கம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அப்படி திரும்பி இந்தியா செல்ல விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம், இவர்களுக்கு உதவும் வண்ணம் மாற்று ஏற்பாடு செய்து, அமெரிக்காவிலேயே தங்கும் படி செய்ய எதிர்பார்க்கிறார்கள்.

அது எப்படி உனக்குத் தெரியும் அப்படின்னு கேட்கிறீங்களா?  TANA மூலமாக இந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் TANA Students' Chair  ஆக இருக்கும்  அஷோக் கொல்லாவுடன் (Ashok Kolla)  தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  இவர் இந்த பல்கலைகழகத்தில் படிக்கவில்லை என்றும், இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள ஆந்திர மாணவர்களின்  பிரதிநிதியாக தான் இருப்பதால்,  TV 9 முதல் கொண்டு பேட்டி தந்து இருப்பதாக தெரிவித்தார்.  அந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும் இந்திய அரசாங்கம் தலையிட்டு - ஆவன செய்ய வேண்டும் என்று மாணவர்கள்
விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும்,  அந்த பல்கலைகழகம் தான் தவறான தகவல்கள் தந்து மாணவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சொன்னார்.

அந்த மாணவர்களை, victims என்ற பொழுது மட்டும் வந்த சிரிப்பை, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன்.  ஒரு பதிவுக்கு உள்ள கமென்ட் போடுவது போல இருந்தால்,  "ஹா, ஹா, ஹா, ஹா,  ஹி, ஹி, ஹி, ஹி,   ஹோ, ஹோ, ஹோ, ஹோ, ஹையோ ஹையோ ஹையோ ..... " என்று சிரித்து இருக்கலாம்.  ப்ச்.....



ஈஸியாக கிடைக்குதே என்று  தெரிந்தே சென்ற இந்த மாணவர்கள்,  victims என்றால்,   அங்கே தமிழ்  மீனவர்களை சுட்டு கொண்டு இருக்கிறாங்கப்பா..... அவங்களை என்னவென்று சொல்வது?  முதலில் அதை கவனிங்கப்பா... அப்புறம் இதை பற்றி கவலைப்படலாம். 

ஒழுங்காப் படிக்க வந்து,  நல்ல பல்கலைகழகங்களில் இருக்கும் எல்லா இந்திய மாணவர்களையும்,  Garnier Shampoo products சொல்ற மாதிரி, அமெரிக்காவில் பத்திரமாக பார்த்துக்கிறாங்க....  மரியாதையாகத்தான் நடத்துறாங்க.  அவர்களுக்கு, இந்த பிரச்சனை எதுவும்  இல்லை.

வேலியில் ஓடுவது ஓணான் என்று தெரிந்தும்,  எடுத்துக் கொண்டு, இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால்? ............   ம்ம்ம்ம்ம்ம்...........  
 
  இந்த சம்பவம் கேள்விப்பட்டதும்,  எங்கள் மாணவ குழுவில் ஒரு தமிழ் நண்பர், "இந்த ஆந்த்ரா பசங்களே இப்படித்தான், சித்ரா.... எப்படியாவது loophole பிடித்து அமெரிக்காவில் தங்க புளப்பை பாத்துக்கிடுவாங்க. இப்போ மாட்ட ஆரம்பிச்சிருக்காங்க!" என்று சொல்லிக் கொண்டு இருந்த பொழுது  - அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர்,  "Hey man!  Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது.  "சித்ரா, எனக்குத்தான் அவங்க ஆந்த்ரா.... இவங்களுக்கு, இந்தியர்கள்.  என்னையும் அவர்களையும், இந்தியர்களாக பார்க்க மட்டும் தான் இந்த அமெரிக்கனுக்குத் தெரியும்.  ஆந்த்ரா, தமிழ்,  மலையாளம் என்று இல்லை.... அதை ஒரு நிமிஷம் மறந்துட்டேன்.  ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை.  ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்.

என்னத்த சொல்ல......????   நான் அவர் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தேன்.  
 




 
 

Tuesday, December 7, 2010

"ஆசிமோ" - எந்திரன்

Hello, World!

 எந்திரன் படம் பார்த்துட்டு வந்து மாதங்கள் ஆகி போச்சு....  படம் நல்லா இருந்துச்சா - இல்லையா - அது சரியா - இது சரியா - அது சரியில்லை - இதுல குறை என்று மத்தவங்க பேசிக்கிட்டு இருந்தப்போ,   எனக்கு சின்ன புள்ள மாதிரி,  ஒரே ஆர்வக் கோளாறு ஆகி போச்சு.   எனது  ஆர்வம் எல்லாம் எப்போ "சிட்டி"  மாதிரி ஒரு ரோபோவை கண்டுப்பிடிக்க போறாங்க -  விஞ்ஞானி வசீகரன், சிட்டியை அறிமுகப் படுத்தின மாதிரி அதை எப்போ,  எப்படி, யாரு  அறிமுகப்படுத்துவாங்க - படத்தில வர மாதிரி இருக்குமா - இல்லை, வேற மாதிரி இருக்குமா  என்று ஒரே நினைப்ஸ் தான்.  நிறைய அதை பத்தி வாசிக்க ஆரம்பித்தேன்.

அப்படி ஒரு நாளில் தான்,  ஏற்கனவே Honda கார் கம்பெனி - ஜப்பான்ல Humanoid Robot Research க்கு முன்னோடியாக இருந்து கொண்டு -  2007 ஆம் ஆண்டு, ஒரு மாடல் அறிமுகப்படுத்தி இருக்காங்க என்று தெரிஞ்சிக்கிட்டேன்.   அதன் பெயர் - சிட்டி இல்லை - ஆசிமோ .    Humanoid research செய்து வரும் அனைவருக்கும், இப்பொழுது செல்ல பிள்ளையாக இருப்பது, இந்த ஆசிமோ தான்.  இது,  பத்து வருட ஆராய்ச்சி வேலையில் உருவான குழந்தை அல்ல,  இருபத்திரண்டு வருட ஆராய்ச்சியின் ஆக்கம்.

http://asimo.honda.com/

அது இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் தான் இருந்தாலும், உலக நாடுகளுக்கு அது ஏற்கனவே பயணம் செய்ய ஆரம்பித்து, மற்ற விஞ்ஞானிகளுக்கு ,  Humanoid Robot குறித்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக செல்ல ஒரு புது வழியைக் காட்டி கொண்டு இருக்கிறது.  (இன்னும் வில்லன் விஞ்ஞானி  யாரும்  "ரெட் சிப்" போட்டு விட்டு வேடிக்கை பார்க்கலியே...... தப்பிச்சோம்!)

ஆசிமோவை - அவர்கள் பயன் படுத்த நினைக்கும் காரியங்களும் கிட்டத்தட்ட "எந்திரன்" படத்துல சிட்டி செய்ற வேலைகளுக்காகத்தான்.  - தீ விபத்தில் மக்களை காப்பாற்றுவது,  மருத்துவ உதவி,  Toxic சூழ்நிலையில் சுத்தப்படுத்தி உதவுவது ........ (ஆஹாங்...... இன்னும் உணர்வுகள் - டூயட் - ரேஞ்சுக்கு ஆராய்ச்சி போகல...... ஹோண்டா மக்காஸ், சீக்கிரம் ....சீக்கிரம்....... வேலையை பாருங்க........ )

ஆசிமோ - உண்மையான எந்திரன்  வீடியோவை பார்த்தேன், மக்கா.  சூப்பர்.  எந்த நிமிடமும் அந்த ஹெல்மெட்டை கழட்டி விட்டு, ஒரு ஆளு  வந்து ஹாய் சொல்ற மாதிரியே தோணுச்சு. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....   இரண்டாவது முறை வீடியோ பார்க்கும் போதுதான், அது முழுவதும் எந்திரன் - மனிதன் இல்லை என்றே என் மூளைக்கு ரிஜிஸ்டர் ஆச்சு. (சரி,  சரி, கற்பூர புத்திக்கு ஒரு லெவல் கம்மிதான் ......)

சென்செர் (Sensors)  மற்றும் கேமராக்கள் வைத்து - எதிலும் தடுக்கி விழாமல் balance செய்து அது நடப்பதை கூட, இந்த வீடியோவில் விளக்கி சொன்ன பின்,  இன்னும் ஆர்வமும் வியப்பும் கூடி விட்டது. நீங்களும் பாருங்களேன். 



http://www.youtube.com/watch?v=cfaAiujrX_Y

பூம் பூம் ரோபோடா..... ரோபோ டா.......
பூம் பூம் - ஆசிமோடா..... ரோபோடா......

ஹையோ....ஹையோ...... இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கிறது.  ஒழுங்கா Physics வகுப்புகளில்,  கொட்டம் அடிக்காமல் படிச்சு இருந்தால்,  இன்னும் நல்லா புரியுமே....   அதனால் என்ன, இனிமேலா  நான் விஞ்ஞானியாக  ஆகப் போறேன்?.......  ஆசிமோவை பார்த்து,  வியந்து நிற்கத்தானே போறேன்....  அதற்கு  இந்த  அளவுக்கு "ஞானம்"  போதுமே! ஹி, ஹி,  ஹி ,ஹி.......

நான் டென்த்  படிக்கும் (???) போதுதான் கடைசியா அறிவியல் புத்தகத்தை தொட்டது.  இறுதி தேர்வு எழுதியதும்,  மூணு தடவை தலையை சுத்தி தாமிரபரணி ஆத்துல புத்தகத்தை மிதக்க விட்டாச்சு.  காமர்ஸ் குரூப் இரு கரம் நீட்டி  அழைக்க, ஏதோ எதிர்காலத்துல Reserve Bank of India வே என்னை நம்பித்தான் இருக்க போகுதுன்னு ஒரு நினைப்புல,  சந்தோஷமாக சேர்ந்தாச்சு.  ச்சே,  நிறைய சாதித்து இருக்க வேண்டிய ஒரு நல்ல விஞ்ஞானியை ( ஹலோ, நான் என்னை சொன்னேன்!)   உலகம் இழந்துடுச்சோ?

யாரது,  என் பஞ்ச் டயலாக்,  "  நினைப்ஸ் தான்,  புளைப்ஸ் கெடுக்த்ஸ்," னு என்கிட்டேயே சொல்றது?  பிச்சிப்  புடுவேன் பிச்சி!   ஹா, ஹா, ஹா, ஹா.......

  Bye for now, World!


Saturday, November 27, 2010

நன்றி மறப்பது நன்றன்று

இந்த ஸ்பெஷல் நட்சத்திர  வாரத்தை, என்னால் மறக்கவே முடியாது.

நவம்பர் 22 முதல் 28 வரை தமிழ்மண நட்சத்திரமாக இருக்க, என்னை  தேர்ந்து எடுத்த தமிழ்மண குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னை பொறுத்தவரை எல்லாம் இறைவன் செயல் தான்.  சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - சில சமயம், காரணங்கள் நமது சாதாரண அறிவுக்கு எட்டாமல் போகலாம்.     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,  வேறு ஒரு புரிதலில் வாழ்க்கையின் அர்த்தம் - காரணங்களுடன் எல்லாமே கடந்து போகலாம்.

எனக்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டியது இருந்ததால்,  அதில் என்ன எழுதலாம் - எப்படி எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்ததில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்து கொண்டு இருக்கும் சில சம்பவங்களின் இறுக்கமான சோக பிடியில் இருந்து வெளியே வர பெரிதும் உதவியது.  திங்கள் அன்று "முன்ன பின்ன செத்து இருந்தால்தானே? " என்று புலம்பி ஆரம்பித்த வாரத்தில்,  "மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்"  என்று நான் கற்று கொண்டேன்.   இந்த வாரத்தை,  எப்படி மறக்க முடியும்?   உங்களின்  ஆதரவான பின்னூட்டங்கள்  மூலம், எனக்கு தேவையான சப்போர்ட் மற்றும் உங்களின் தூய அன்பினை கண்டு நெகிழ்ந்தேன்.  பதிவர்களாக இருப்பவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.  அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.


நவம்பர் 26 , வெள்ளி அன்று - அர்ச்சனாவின் பெற்றோரும் அவளது அண்ணனும் இங்கு வந்து விட்டார்கள்.  டிசம்பர் 4 , அர்ச்சனாவின் பிறந்த நாள் வருவதால், அது முடிந்த பின்,  வேறு ஒரு நாளில்   அர்ப்பணாவின் மறைவை குறித்து   அவளுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
அர்ச்சனா இன்னும் intensive care unit தான் இருக்கிறாள்.   இரண்டு வாரங்களுக்குள், அட்லாண்டாவில் உள்ள ஒரு Rehab மருத்துவமனைக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.  அவளுக்கு அங்கு வைத்து ஆறு மாதங்கள் வரை தெரபி மற்றும் treatment தொடர்ந்து நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் தள்ளி போய்விட்டால், இப்பொழுது போல அடிக்கடி நான் அவளை பார்க்க முடியாது.   அவள் பூரண நலன் பெற்று திரும்பி வர தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

நவம்பர் 28 , என் தந்தை, திரு. பொ.ம. ராசமணி அவர்களின்  முதலாம் ஆண்டு நினைவு நாள்.  அவரை பற்றி பெருமையுடன் நினைத்து பார்த்து, அவரை எனக்கு தந்தையாக தந்த இறைவனுக்கு நன்றி  சொல்கிறேன்.
என் அம்மாவுக்கு அவர் காதலுடன் எழுதி இருந்த  கவிதைகளை, என் தம்பி ஒரு கவிதை தொகுப்பு புத்தகமாக - "ஆதலால் காதல் செய்வீர்!" என்ற தலைப்பில்,  அவர் நினைவு நாளான இன்று,  நெல்லையில் வெளியிடுகிறான்.  அந்த தொகுப்பு -  புத்தகமாக வர வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமும் என்று சொல்லி சென்று இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், எனது தம்பியின் திருமணத்தின் போது, என்றும் இளமையாய் நின்ற என் தந்தை வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த படம். 

தொடர்ந்து தங்களது பரிந்துரை மூலமாகவும் - பின்னூட்டங்கள் மூலமாகவும் - வோட்டு மூலமாகவும் - விருதுகள் தந்தும்,  நானும் ஒரு தமிழ்  பதிவர் என்ற அங்கீகாரம் கொடுத்து,  என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. 


எல்லா புகழும் இறைவனுக்கே!

Wednesday, November 24, 2010

CNN வெளியிட்டுள்ள டாப் 10 ஹீரோக்கள்

வணக்கம்:  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா"

கடந்த எட்டு  வாரங்களாக சிறந்த சேவைகள் செய்பவருக்கான விருதுக்கென ஓட்டு எடுப்பு, CNN நடத்தியது.  அதன் முடிவுகள் இப்பொழுது வெளியாகி உள்ளன.
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/index.html


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு:
http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html

2010 CNN Hero of the Year ஆக - இதுவரை,  செக்ஸ் அடிமைகளாக இருந்த சுமார் 12000 பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை மீட்டெடுக்க உதவிய அனுராதா கொய்ராலா அம்மையார் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

 இவரது சேவைகளுக்கு மேலும் உதவும் வகையில், இவருக்கு $100,000 வழங்கப்பட்டது.
 டாப் 10 ஹீரோக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்,  அவர்கள் சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம்
$ 25,000 வழங்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கும் மேலான நாடுகளில் இருந்து,  10,000 க்கும் மேலான நபர்களை , அவர்களது சமூதாய சேவைகளுக்கென மக்கள்  சிபாரிசு செய்து இருந்தனர்.  ஒரு குழு அமைத்து அவர்களில் சிலரை தேர்ந்து எடுத்து வாக்கெடுப்புக்கு அறிவித்தனர்.  வாக்கெடுப்பு மற்றும் குழுவின் பரிந்துரை படி,  பத்து பேர்களை தேர்ந்து எடுத்து கௌரவித்து உள்ளனர்.

Alphabetical order படி (ranking படி அல்ல) தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்:

Guadalupe Arizpe De La Vega  :

Juarez என்ற மெக்ஸிகோ  நகரத்தில்  மருத்துவமனை கட்டி, இலவச மருத்துவம் ஏழை மக்களுக்கு  கிடைக்க செய்தவர்.

Susan Burton :

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில்,  மது மற்றும் drug போதைக்கு அடிமையாகி சிறைக்கு கூட சென்று வந்துள்ள பெண்களுக்கு மறுவாழ்வும் வீட்டு வசதியும் செய்து கொடுத்து, அவர்கள் திருந்தி வாழ சேவை செய்பவர்.

Linda Fondren :

அமெரிக்காவில், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில்,  அதிக உடல் எடையால் பல நோய்களுக்கு உள்ளான மக்களுக்கு தீவிர பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊட்டுவதன்  மூலம் உடல் இளைக்க உதவுகிறார்.

Anuradha Koirala :


1993 ஆம் ஆண்டில் இருந்து,  நேபால் நாட்டில்,  செக்ஸ் அடிமைகளாக   விற்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு மறு வாழ்வுகளும் வேண்டிய உதவிகளும் கிடைக்கும் படி சேவை செய்து வருகிறார். இந்திய நேபால் எல்லையிலும் கண்காணித்து , இப்படி விற்கப்பட்டு வரும் பெண்களை காப்பாற்றி வருகிறார்.


Narayanan Krishnan :

 2002 ஆண்டு முதல், தனது அக்ஷயா டிரஸ்ட் மூலம்,  கைவிடப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து,  உணவு வழங்கி வருகிறார்.



Magnus MacFarlane-Barrow :


1992 ஆம் ஆண்டில் இருந்து , Scotland நாட்டில் இருந்து Mary's meals என்கிற சேவை நிறுவனம் மூலம்,  உலகத்தில் பல பகுதிகளில் இருக்கிற 400,000 குழந்தைகளுக்கு இலவச உணவு கிடைக்கும் வண்ணம் உதவி வருகிறார்.


Harmon Parker :


1997 ஆம் ஆண்டில் இருந்து, கென்யா நாட்டில்,  தன் கைப்பட சிலர் உதவியுடன் 45 மரப்பாலங்கள் காட்டாறுகளுக்கு மேல கட்டியுள்ளார்.  திடீர் என்று பிரவாகமாக எடுத்து வரும் வெள்ளங்களில் இருந்தும்,  கொடிய மிருகங்களிடம் இருந்தும்  இந்த பாலங்கள் மூலமாக ஏழை மக்கள் தப்பிக்க உதவி வருகிறார்.


Aki Ra:

1993 ஆம் ஆண்டு முதல், கம்போடியா நாட்டில்,  சுமார் 50,000 landmines (கண்ணி வெடிகள்)  கண்டுபிடித்து எடுக்க உதவி வருகிறார்.

Evans Wadongo :

23 வயதுதான் ஆகும் இவர், கென்யா நாட்டில்  புகை அடிக்கும் மண்ணெண்ணையும் தீயையும் மட்டுமே எரிபொருளாக - ஒளிக்காக - நம்பி அவதி பட்டுக்கொண்டு இருந்த பல கிராம மக்களுக்கு பயன் படும் விதமாக சூரிய வெப்பம் (Solar Power) கொண்டு எரியும் lanterns கண்டுபிடித்து விநியோகம் செய்து வருகிறார். 


Dan Wallrath :

2005 ஆம் ஆண்டில் இருந்து,  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் காயம்பட்டு திரும்பி வந்துள்ள போர் வீரர்கள் சிலருக்கு, இலவச வீடுகளை, சிலர் உதவியுடன் தன் கைப்பட கட்டி கொடுத்து வருகிறார்.  இப்பொழுது, இந்த குழு ஐந்து வீடுகளை அமெரிக்காவில்,  Texas மாநிலத்தில் கட்டி வருகின்றது.

  தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் ,  மனித நேயம் மட்டும் இருந்தால்,  சமூதாயத்தில்  மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள்,  எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம். 

இவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் சமூதாயத்தில் மேல் உள்ள அக்கறையையும்  மதித்து, இவர்களுக்கு வோட்டு போட்டு,  அங்கீகாரம் கிடைக்க செய்த அனைவருக்கும் நன்றிகள்.  இனி, இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம். 

(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள்  எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!!  ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......) 

நன்றி, வணக்கம்.  இப்படிக்கு ஒரு ஆதங்க  பெருமூச்சுடன்,  உங்களிடம் இருந்து விடை பெறுவது, தம்பட்டம் தாயம்மா. 


 

Thursday, September 2, 2010

ஆஸ்கார் விருது மட்டும் தான் விருதா?

நம்மூரிலும்  ஒரு சிறந்த   performance க்கு பாராட்டாக,  "இது ஆஸ்கார் விருது"க்கு உரிய நடிப்பு - நடிகர் - என்று சொல்கிறார்கள்.  அதே வேளையில்,  வெளிநாடுகளில் - குறிப்பாக - அமெரிக்காவில் இருக்கும் மற்ற சில "சிறப்பு" விருதுகள் புறக்கணிக்கப்பட்டு வருவது வெட்டி பேச்சின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.  ஏன்? நம்மூரிலும் இந்த விருதுகள் கொடுக்கும் அளவுக்கு "திறமைசாலிகள்" இல்லையா?

உறுதிமொழி:  இது வேடிக்கை பேச்சு அல்ல.  உண்மையிலேயே, இத்தகைய விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்றன.

1.  The Razzies :  The Golden Raspberry Awards:
 யார்  யாருக்கு  கிடைக்கும் :   மிகவும் மோசமான முறையில் சினிமாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு - நடிக நடிகைகள் - டைரக்டர் - தயாரிப்பாளர் - என்று பட்டியல் நீள்கிறது.

பரிந்துரைக்க காரணம்:  சினிமாவில் சிறந்த சேவைக்கு மட்டும் விருதுகளும் மரியாதையும் கொடுத்து  உற்சாகப்படுத்துவதை   போல,  நேர் மாறாக தங்கள் "திறமை(குறைவு)களை" வெளிப்படுத்துபவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்.

விருதின் பெயர் காரணம்:  1981 ஆம் ஆண்டு,   ஹாலிவுட் திரையுலக புள்ளிகளில் ஒருவரான ஜான் வில்சன் என்பவர், ஆஸ்கார் விருது வழங்கிய நேரம், தான் ஏற்பாடு செய்து இருந்த பார்டியில் அந்த வருடத்தின் worst films and performance குறித்து பேசி,  அதற்கு உரியவர்களை தேர்ந்து எடுக்க சொல்லித் தன் விருந்தினர்களை விளையாட்டாக கேட்டு கொண்டார்.  அந்த ஐடியா, "சூப்பர் ஹிட்" ஆகி விட்டது.  இன்று 650 ஆட்கள் கொண்ட நடுவர் குழு, உண்மையிலேயே வோட்டு எடுத்து முடிவு செய்து விருது வழங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வருடமும், இந்த விருது, ஆஸ்கார் விருது வழங்கப்படும் நாளுக்கு முன் தினம் ஒரு பெரிய விழாவில் வைத்து வழங்கப் படுகிறது.
இந்த விருதுகளை, பெரும்பாலும் பலர் புறக்கணித்து  மறுத்தாலும், அதையும் சந்தோஷமாக ,  தங்களின் திறனை  improve செய்து கொள்ள உந்தும் விருதாக கருதி, நேரில் சென்று வாங்கி கொண்டு நன்றி சொல்லும் அளவுக்கு உள்ள Sportive உள்ளம் கொண்டவர்களும் உண்டு.

குறிப்பிடத்தக்கவர்கள்:  2004 ஆம் ஆண்டு Hale Barry என்ற நடிகை,  இந்த விருதை  நேரில் வந்து   வாங்கி கொண்டு,  தனது  மோசமான நடிப்பு திறமையையும்  நன்கு வெளிக்கொண்டு வந்த அந்த பட டைரக்டர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொள்வதாக சொல்லிய போது, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.  இவர் 2002 ஆம் ஆண்டுதான் "Monster's Ball" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


2.  The Ig Nobel Prize: 


யார் யாருக்கு கிடைக்கும்:  அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தங்களது வித்தியாசமான கற்பனைத் திறனை - காரணத்தை - பயன்படுத்தி கொள்பவர்.  (அதாவது, இதையும் போய் ஆராய்ச்சி பண்ண,  ரூம் போட்டு யோசித்தார்களா! என்று மற்றவரை அயர வைப்பவர்கள். )

பரிந்துரைக்க காரணம்:  தங்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி கொள்ளாமல்,  தனக்கு வந்த அசாதாரண ஐடியாவை துணிந்து ஆராய்ச்சி செய்ய முன்வந்தவர்களை அடையாளம் கண்டு "கௌரவிப்பது".

விருதின் பெயர் காரணம்:  Ignoble என்ற ஆங்கில வார்த்தையை ஆதாரமாக கொண்டது.  (தமிழ் அர்த்தம்: யோக்கியதை அற்ற ..... தரமற்ற....)  ....... இப்போ புரிந்து இருக்குமே!
"Annals of Improbable Research "  என்ற பத்திரிகை, வருடா வருடம் விருதுக்கு உரியவர்களை தேர்ந்து எடுத்து "அகௌரவப்" படுத்துகிறது. அவ்வ்வ்வ்.......
1995 இல்,  பிரிட்டிஷ் அரசாங்கம் மூலமாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் யாருக்கும் இது கொடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு இது பிரபலமானது.

குறிப்படத்தக்கவர்கள்:  Bra ஒன்றையே அவசர கால நேரத்தில்,  பெண்கள் Gas mask ஆகவும் உபயோகித்துக் கொள்ளும் விதத்தில் கண்டு பிடித்தவர்.
மாட்டுச் சாணத்தில் இருந்து வனில்லா (vanilla) flavoring எடுக்க முயன்றவர்.

3.  The Darwin Awards:
யார் யாருக்கு கிடைக்கும்:   இதை வாங்க முதலில்,  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்,  அந்த வருடம் இறந்திருக்க வேண்டும்.  இறந்தவருக்கு எதற்கு விருது என்றா கேட்கிறீங்க?
பரிந்துரைக்க காரணம்:   "அவர் எப்படி இறந்தார்?" என்பதை பொறுத்தது.  இருப்பதிலேயே மிகவும் முட்டாள்த்தனமான தனது  செயலால் - காரணத்தால் -  ஒருவர் இறந்து இருக்க வேண்டும்.  (the most idiotic way of death)

 அப்படி இறந்த காரணங்களை பரிசீலித்து, அவரின்  முட்டாள்த்தனத்தையும் "கௌரவிக்கும் வகையில்" ,  posthumous ஆக இந்த விருதுக்கு,  அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
விருதின் பெயர் காரணம்:     Mr.Charles Darwin அவர்களின்,  "Survival of the fittest" படி,  ஒரு குழு விளையாட்டாக 80 களில் ஆரம்பித்த விருது இது.   "To honor the unfortunate people who “do a service to humanity by removing themselves from the gene pool."

 குறிப்படத்தக்கவர்கள்:   பெட்ரோல் tank ஒன்றில்,  போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக,  tank உள் இருட்டாக இருக்கிறதே என்று, கையில் இருந்த சிகரட்டு லைட்டர் கொண்டு பற்ற வைத்து உள்ளே எட்டி பார்த்த ஒருவர்,  tank வெடித்து சிதறி, அதே இடத்தில் உயிர் இழந்தார்.
24 வது மாடியில் இருக்கும் தனது அலுவலக ஜன்னல்  கண்ணாடி, எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று காண்பதற்காக முழு வேகத்துடன் ஓடி வந்து அந்த கண்ணாடியில் மோதிய ஒரு வக்கீல்,  கண்ணாடி உடைந்து  அவ்வளவு உயரத்தில் இருந்து .............. (கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்க!)

பதிவுலக மக்களாகிய  எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பதிவர்களே - பதிவுகளை தவறாமல் வாசிக்கும் வாசகர்களே!  அலை கடல் என திரண்டு வாரீர்!  இந்த மூன்று விருதுகளுக்கும்,  தமிழ்நாட்டில்  மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!!  (எங்கே போய் கூறணுமா?  மக்கா...... எனது கமென்ட்ஸ் ஏரியாலதான் ...... ஹையோ..... ஹையோ....!)

Thursday, August 26, 2010

பாப் கார்ன்

நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.  (தொழில் தர்மம் கருதி, பெயர்கள் தரப்படவில்லை.......  யம்மா, என்னா பில்ட்-அப்பு!)  அப்படி நான் எழுதாததால்,  என் சமையல் படு கேவலமாக இருக்கும் போல என்று நினைப்பில் எனக்கு கமென்ட் வேறு முந்தைய பதிவுகளில் போட்டு உள்ளார்கள்.  அவ்வ்வ்வ்.....
இல்லைப்பா..... நான் நல்லாவே சமைப்பேன்..... (உண்மை.... உண்மை..... உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.) Fancy யாதான் எதுவும் சமைக்கத் தெரியாது.  தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது போல மற்ற வகை சமையலில் பிரமாதப்படுத்த தெரியாது.  அவ்வளவுதான்...

மேலும்,  பதிவுலகில்  போட்டியே வைத்து களைகட்டும் அளவுக்கு சமையல் ராணிகள் கலக்குறாங்க......

இருந்தாலும்,  வித்தியாசமான இந்த ரெசிபி, எனக்கு கிடைத்ததும் என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.   "எந்திரன்" ஸ்பெஷல் என்றும் வைத்து கொள்ளுங்களேன்.....  இந்த ஸ்பெஷல் பாப்கார்ன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
இனிமே யாரும் என்னை சமையல் குறிப்பு எதற்கு எழுத மாட்டேங்கறீங்க என்று சொல்லக்கூடாத அளவுக்கு இந்த ரெசிபி பண்ணிடும் என்று நினைக்கிறேன்.  

தேவையான பொருட்கள்:

 ஒரு சின்ன மர டேபிள் அல்லது ஸ்டூல்
ஐந்தில் இருந்து பத்து செல் போன்கள்
(டிப்ஸ்)  அந்த செல் போன்களின் நம்பர்கள் தெரிந்து இருப்பது நல்லது.
ஐந்து அல்லது ஆறு - நன்கு காய்ந்த சோளம் (பாப்கார்ன் செய்வதற்கு ஏற்ற முறையில்)

ஸ்டார்ட் த மூஜிக்:

மர டேபிள் எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
மூன்று அல்லது நான்கு செல் போன்கள் எடுத்து அரணாக நடுவில் சுற்றி வைக்கவும்.
செல் போன்கள் மத்தியில் உருவாகும் வட்டத்தில் (இடத்தில்)  பாப் செய்ய வேண்டிய கார்ன் எடுத்து வைக்கவும்.
கையில் இருக்கும் மற்ற செல்போன்கள் உதவியுடன்,  டேபிள் மேல் இருக்கும் செல் போன்களுக்கு டயல் செய்யவும்.
ரிங் சத்தம் கேட்கட்டும்.  missed கால் ஆக போகட்டும். எடுத்து பதில் பேச வேண்டாம்.
பட் பட் என்று பாப்கார்ன் வெடித்து ரெடி ஆகிவிடும்.
எடுத்து சாப்பிட்டு விடவேண்டியதுதான்.

என்ன ஒரு மாதிரியாக என்னை பார்க்கிறீங்க?
கீழே உள்ள வீடியோவில் செய்முறை தெளிவாக உள்ளது.
    



இந்த அளவுக்கு microwave radiation வெளிப்படும் செல் போன் என்று தெரிகிறதல்லவா?  அவசியத் தேவைகள் தவிர செல் போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது, மக்களே!!!  அது மட்டும்  அல்லாமல் பாக்கெட்டிலும் அதிக நேரம் வைத்து இருப்பது நல்லது அல்ல.....  வேறு ஏதாவது வெடித்து உடம்புக்குள்ளே பாப்கார்ன் ஆகப்போகுது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

மேற்கொண்டு ஆய்வுகளுக்கு:

Senate Hearing on Cell Phones and Brain Cancer:
  http://www.youtube.com/watch?v=npK5HSxukyA

Wikipedia: 
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health

Environmental Health:
http://environment.about.com/od/environment/a/cell_phones.htm

Monday, May 3, 2010

தப்பு கணக்கு:


பலருக்கு தெரிந்த செய்தியாக இருக்கலாம்.  ஆனால், கருத்துக்காக இங்கே:

இயற்கைக்கு முரணாக  சென்றால்  என்ன ஆகும்?
மனுஷன் கையை வைச்சா...... அது ராங்கா போய் விடும்.
 http://www.mentalfloss.com/blogs/archives/20692
வாசித்து  பாருங்கள்!

சில zoo authorities, animals in captivity வைத்து ....................... என்ன கொடுமை, இது?  அந்த zoo  சுவரில் முட்டிக்க வேண்டியதுதான்.

கணக்கே தப்பாக:
A + A = A
B + B = B
 if, 
A = male lion and B = Tigress  (ஆண் சிங்கமும் பெண் புலியும்)
A + B = Liger
A = female lion and B = male tiger (பெண் சிங்கமும் ஆண் புலியும்)
A + B = Tiglon

லிகர்:   Liger:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Liger




டிக்லான் :  Tiglon:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Tiglon




These are real photos (from Google Images) போட்டோ ஷாப் உதவி இல்லாமலே,  இப்படி சும்மா விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இயற்கைக்கு மாறாக செல்லும் போது, விபரீதங்கள் தான். அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி என்ன பலன்? 
Save the Planet - Save it wisely  - Save it in the nature's way. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள். Artificial harmones,  Artificial creatures.............Where is the boundary line?   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  .... முடியல..... கடவுள் படைப்புக்கு எதிராகவும் இருக்குது. பரிணாம வளர்ச்சிக்கு எதிராகவும் இருக்குது! மூன்றாவது க்ரூப்பா, இப்படி கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க.....

பி.கு.:

   மற்ற பதிவர்கள் சொல்லும் போது அப்புறம் இப்புறம் என்று தள்ளி போட்டுக் கொண்டு இருந்த போது,  நேத்து என் கனவில் சிங்கம்புலியும் புலிசிங்கமும் வந்து புலம்பியதால் ............ இருங்க, இருங்க...... சிங்க்லியும் புல்ங்கமும் வந்து புலம்பியதால், உடனே எழுதிட்டோம்ல......... 


Wednesday, April 21, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு


எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவுக்கு சைவகொத்து பரோட்டா அவர்கள் கூப்பிட்டு இருக்காக......
 
விதிகள்: 
(பல  தமிழ் படங்கள் பார்த்துட்டு விதியை நொந்துருக்கேன். )

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே  
(சே, ரஷ்ய படங்கள்,  பிரெஞ்சு படங்கள், ஜப்பானிய படங்கள் எல்லாம் ஜஸ்ட் missed ஆச்சு)
 
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டு  டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
(ஜக்குபாய் படம் எல்லாம் தமிழ் படங்கள் லிஸ்ட்ல சேரணும் என்று எப்படியெல்லாம் ரூல்ஸ் போடுறாங்கப்பா..)
 
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
(கந்தசாமியில் ஷ்ரேயா , மத்த ஹீரோயினி அக்காஸ்,  ரசிகா அக்கா, மமைத்கான் அக்கா வெல்லாம் - என்ன அழகா "twinkle twinkle little star " பாட்டுக்கு ஒவ்வொரு படத்திலேயும்  சின்ன பாப்பாவா  ஆடுறாங்க......)

VCD மற்றும் DVD தீஞ்சு போகும் அளவு பார்த்த இந்த ரஜினி படங்களை லிஸ்ட்டில் இருந்து எடுத்துட்டு  பத்து படங்கள் எழுதுறதுன்னு முடிவு பண்ணினேன்.  ரஜினி நடித்த படங்கள் பெயரில் வந்த போலிகளை கண்டு ஏமாறுவதில்லை.

முள்ளும் மலரும்,  தில்லு முல்லு,   சிவாஜி ,   பாட்ஷா,  வீரா ,  படையப்பா,
அண்ணாமலை,   அவள் அப்படித்தான்,    நெற்றிக்கண் ,  கழுகு, ராணுவ வீரன்,
நினைத்தாலே இனிக்கும் ,  பொல்லாதவன்,   தீ,  தம்பிக்கு எந்த ஊரு
எங்கேயோ கேட்ட குரல்,   தனிக் காட்டு ராஜா,  மூன்று முகம் ,   மன்னன் , 
நல்லவனுக்கு நல்லவன்   தர்மதுரை ,  படிக்காதவன் , மாப்பிள்ளை ,   தளபதி.

1. உலகம் சுற்றும் வாலிபன்: 
 2.  Mask of Zorro - தமிழ் டப்பிங் செய்யப்பட்டது.
ஆமாம், தமிழ் படங்கள் என்ற விதியில் டப் செய்யப்பட்டு வரும் ஆங்கில பெருங்காய டப்பா படங்கள் சேருமா? 
 இல்லை, நாட்டு சரக்கு தான் என்று தமிழ் டப்பிங்கில் வரும் தேமே ஹிந்தி படங்களும் கலர்புல் தெலுங்கு படங்களும் சேருமா? 
இல்லை,  லாஜிக் மீறுவது என்று ஆச்சு. இதுல "made in china" ரேஞ்சுல மீறுவோமே என்று தமிழ் டப்பிங்கில் வரும் Kung Fu chinese படங்களும் சேருமா? 

தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா. 
சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா. 

எந்த பத்து படங்களை தேர்வு செய்யலாம் என்று யோசித்து (??!!) கொண்டிருந்த போது,  Fast Food Joint ஒன்று செல்ல வேண்டியது இருந்தது. அங்கும் படங்கள் ஞாபகம்....... junk food பாத்தா என்று கேட்கப்படாது .....
  
அப்போ,  எங்களுக்கு பரிச்சயம் இல்லாத  ஒரு இந்தியர் உள்ளே வந்தார். ஆளு ஊருக்கு - சாரி, நாட்டுக்கு புதுசு போல. உணவு ஆர்டர் செய்ய அவ்வளவு யோசித்து முடிவு எடுத்த பின், (அவரையும் யாரோ தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க போல......)  கவுன்ட்டர் பக்கம் நெருங்கி, தயக்கத்துடன்: 

நம்ம ஆளு:  "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு:  "For here or to go?"
நம்ம ஆளு:           "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு:   "O.K.  Now,  what do you want me to do with your cheeseburger combo meal?"

அப்பொழுதுதான், நம்ம ஆளுக்கு கவுன்ட்டர் ஆளு, தன்னை பற்றி விசாரிக்க "for here or to go?" என்று கேட்கவில்லை.  சீஸ் பர்கரை தான் அங்கேயே வைத்து சாப்பிட போகிறாரா  இல்லை,  pack செய்து எடுத்துக் கொண்டு போக போகிறாரா  என்று தெரிந்து கொள்ள, "for  here or to go?" என்று கேட்டு இருக்கிறார் என்று விளங்கி, அசடு வழிய........... 
  
படங்களின் லிஸ்ட் போடுவதை அப்படியே விட்டு விட்டு,  "இது நம்ம ஆளுக்கு" ஒரு ஹலோ சொல்ல கிளம்பினேன்.  ............  வர்ட்டா.......!