Showing posts with label தத்துவ உளறல்கள். Show all posts
Showing posts with label தத்துவ உளறல்கள். Show all posts

Thursday, May 5, 2011

அன்னையர் தின பெருமூச்சு

மீண்டும் வணக்கங்கள்:

என்னை குறித்து கடந்த சில நாட்களாக - ஈமெயில் வழியாகவும் - போன் மூலமாகவும் - facebook messages மூலமாகவும் நலம் விசாரித்த அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துச்சு.

கடந்த இரண்டு வாரங்கள் - எப்பப்பா....
புயல் அடிச்சுது......
பேய்மழை அடிச்சுது ......
மரங்கள் விழுந்துச்சு ......
வேலிகள் பறந்துச்சு......
வெள்ளம் வந்துச்சு.....
இன்டர்நெட் தொடர்பு போச்சு.....
தொலைபேசி தொடர்பு போச்சு....
கரண்ட் கட் ஆச்சு.....

எல்லாம் "old is gold" technology style தான்....

நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
அதிசயம் என்னவென்றால், நோ கம்ப்ளைன் - நோ புலம்பல் - நோ அழுகை.

ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன். போதுமான அளவுக்கும் மேலே மழை பார்த்து விட்டோம். மெல்ல சாரல் அடிக்கும் மழையில், அழகு தெரிகிறது. ரசிக்க முடிகிறது. இப்படி புயல் மழை வந்தால், ஒதுங்கி இருக்கத்தான் செய்கிறது. பயமுறுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!
போர்டு கேம்ஸ் எடுத்து வச்சு , குட்டீஸ் கூட விளையாடுறது. (வெளியில் அடிச்ச புயல் காத்திலேயும் மழையிலேயும் அங்கே போய் விளையாட அனுப்ப முடியல) -
சீக்கிரமே தூங்க போறது. ஒரே ஒரு பிரச்சனை - அதிகாலையில் சீக்கிரமே முழிப்பு தட்டிடும். திரும்பவும் அதிகால ஆதிகால வாழ்க்கை தொடர்ந்துச்சு.

மாறுதல்கள் - எப்படி இருந்தாலும் - வித்தியாசமா இருக்கிறது, ஒரு விதத்தில், நல்லாத்தான் இருந்துச்சு. பயந்த மாதிரி எதுவும் இல்லை.

சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.

எங்கள் வீட்டுப் பகுதியில் தான் முதலில் எல்லாவற்றையும் சரி செய்தார்கள். ஏதாவது சொல்லணும் போல இருக்குது. ஆனால், தன்னடக்கம் தடுக்குது.

இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....

விட்ட கதையை தொடர்ந்து சொல்றேன். கரண்ட் மற்றும் இன்டர்நெட் தொடர்பு எல்லாம் சரி பண்ணாங்களா...... அப்புறம், கரண்ட் - போன் - இன்டர்நெட் வராத ஒரு நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் வந்து தங்கி இருந்தாங்க. அவங்க ஏரியாவில் சரி செய்ததும் கிளம்பி போனாங்க. அதுவரை, நல்லா டைம் பாஸ் பண்ணோம். நாள் பூரா, சூப்பர் அரட்டை கச்சேரி தான்.

முதலில் புயல் ஏன்டா வந்துச்சுன்னு நினைச்சேன். ஆனால், அது வர வரைக்கும் - நான் உண்டு - என் குடும்பம் உண்டு - என் வலை உலக பொழுதுபோக்கு உண்டு என்று குறுகிய வட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.

ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....

இந்த மாதிரி வெள்ள சமயங்களில் விளையாடுகிற காய்ச்சல் - வாந்தி - சரியா எங்க வீட்டிலேயும் கதவை தட்டி, குட்டி மகனிடம் ஆஜர் போட்டுட்டு போச்சு. இப்போதான் சரி ஆச்சு.

நேத்து, என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"

"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!



அப்புறம், இந்த வார இறுதியில் Michigan பக்கம் யாராவது போனீங்க என்றால், இரண்டே வாரங்களுக்கு பூத்து குலுங்கும் Tulip மலர்களுக்கு என்று Festival ஒன்று Holland என்ற ஊரில் நடக்கும். அதை பார்க்க மறக்காதீங்க. சில வருடங்களுக்கு முன், "Mother's Day Sunday" அன்னைக்கு அங்கு சென்று இருந்தோம்.

பொதுவாக, மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் தான் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெள்ளை நிறத்தில் இருந்து deep purple வரை உள்ள பல வண்ணங்களில் - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று - tulip மலர்கள் பூத்து குலுங்குகின்றன.


Holland, Michigan - Tulip Festival: http://www.tuliptime.com/



Dutch மக்கள் பலர் அங்கே வந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரில் கட்டடமைப்பு - பழக்க வழக்கங்கள் எல்லாம் டச் ஸ்டைல் தான். திருவிழா கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்காக நடனக் கலைஞர்கள் ஊருக்கு நடுவில் உள்ள ஒரு பூங்காவில் கூடி டச் பாரம்பரிய நடனங்கள் ஆடி காட்டுவார்கள். சூப்பர்!


Clog எனப்படும் மர ஷூஸ் போட்டு கொண்டு ஆடியது அருமையாக இருந்துச்சு.




மனதை கொள்ளை கொண்ட அழகு மலர்கள் - நடனங்கள் கண்டு ரசித்து கொண்டாடிய அன்னையர் தினத்தை மறக்க முடியாது.



தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.

படங்கள்: நன்றி: கூகுள் புயல்.











Wednesday, March 23, 2011

தமிழ் பெண் எழுத்து???!!!

 தம்பட்டம் தாயம்மாவும்  நானும் ரொம்ப நாள் கழித்து சந்தித்து கொண்டோம்.  சென்ற வாரம் நடந்த செமினார் பற்றி அவளிடம் கூறிவிட்டு, அதை பற்றி தான் பதிவு எழுதப் போகிறேன் என்று சொல்லி கொண்டு இருந்த பொழுது, அங்கே பதிவுலக தோழி, ஆசியா ஓமர் வந்து சேர்ந்தாங்க.....

ஆசியா:   சித்ரா,  எப்படி இருக்கீங்க?  உங்களை, நான் ஒரு தொடர்பதிவுக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைத்து இருக்கிறேன்.
http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html

சித்ரா:  இப்போதானே லீவு முடிஞ்சுது..... அதற்குள்ள தொடர்பதிவா? என்ன டாபிக்?

ஆசியா: "பெண் எழுத்து " பற்றி நீங்களும் எழுதணும்னு ஆசைப்படுகிறேன்.

சித்ரா:  பெண் எழுத்து????  புதுசா இருக்கே....  நான் சின்ன வயசுல தமிழ் இலக்கண கிளாஸ்ல பாதி தூங்கியும் தூங்காமலும் டீச்சர் சொல்றதை கேட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. "அவன் - ஆண் பால்; அவள் - பெண் பால்"  இதை பத்தி நான் என்ன எழுதுறது? 

ஆசியா:   அய்யோ சித்ரா...... அது பத்தி இல்லை.... பெண் எழுத்து பத்தி.

சித்ரா:   Kindergarten/UKG கிளாஸ்ல  பசங்களும் பொண்ணுங்களும் ஒண்ணா படிச்சோம்.  அப்போ பசங்களும், "அ" என்ற  தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னாங்க.... பொண்ணுங்க, நாங்களும் - "அ"  என்ற தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னோம்.   பொண்ணுக்கு என்று தனியா தமிழ் எழுத்து என்று எதையும் சொல்லி கொடுத்த மாதிரி நினைவு இல்லையே.... ஒரு வேளை, அன்னைக்குத் தூங்கிட்டேனோ?
தமிழில், உயிர் எழுத்து - மெய் எழுத்து - உயிர்மெய் எழுத்து தானே உண்டு. பெண் எழுத்து என்று இருக்கா என்ன?

 தம்பட்டம் தாயம்மா:   ஏ புள்ள சித்ரா...... தலைப்பை பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது.  பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ?  தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!

சித்ரா:  தாயம்மா, பப்ளிக் பிளேஸ். ...... சும்மா இரு! 

ஆசியா:  சித்ரா, நீங்க எழுத்து உலகில் பெண்கள் பங்கை  பற்றி சொல்லணும்.

 (அந்த படத்தில், மேலே டேபிள்ல  கம்ப்யூட்டர்கள் ரெஸ்ட் எடுக்குது... பெண்கள், தரையில் உட்கார்ந்து....கஷ்டப்பட்டு எழுதுறாங்களே....)

தம்பட்டம் தாயம்மா:  அடியே.... உன்னை பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்றாங்க டோய் ....

ஆசியா:  நீங்க ரெண்டு பேரும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்களா?  நான் எவ்வளவு சீரியஸ் ஆக பெண்கள் எழுத்துக்களில் இருக்கும் "கடமை...கண்ணியம்.... கட்டுப்பாட்டை" பற்றி  
 எழுதி இருக்கேன். அதை பற்றி மேலும் உங்கள் கருத்துக்களை சொல்ல சொல்லி தான் இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு....

சித்ரா:  நான் தமிழ் ப்ளாக் மட்டும் அல்ல,  சில ஆங்கில பதிவுகள் - ஐரோப்பா,  ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் இருந்து எழுதுவதையும் வாசித்து இருக்கிறேன். அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல.  அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம  சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால்,  "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்.

தம்பட்டம் தாயம்மா:  அப்போ, இந்த முட்டுக்கட்டை இருக்கிறது  இந்திய  பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்று நினைக்கிறியா?

சித்ரா:  தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  உட்பட்ட மற்ற இந்திய மொழிகளின்  எழுத்துக்களும்  ரஷ்யன், mandarin சைனீஸ், அரபிக் உட்பட்ட மற்ற உலக மொழி எழுத்துக்களும் எனக்கு  ஒண்ணுதான். அவங்க என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும்,  எல்லாமே அச்சுல வச்சு பிழிஞ்ச இடியாப்பம், முறுக்கு மாதிரி தான் அழகா தெரியுதே தவிர,  என்ன சொல்ல வராங்க  என்று  எனக்கு ஒண்ணும் புரியல.    இந்தியாவில் மத்த பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று எனக்கு  தெரியாது. ஆனால், கண்டிப்பாக தமிழ் பெண்களுக்கு இல்லை என்று சொல்வேன்.

ஆசியா:  எதை வச்சு சொல்றீங்க?

தம்பட்டம் தாயம்மா:  எனக்கு புரியுதே.
ஆண் எழுத்தாளர்கள்,  தங்கள் கருத்துக்களுக்கோ,  கருவுக்கோ (topics) , எழுத்துக்கோ எந்த வித வரைமுறையும்  இங்கே கிடையாது.
ஆனால்,  ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......

 கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால்,  "லோலாயி,  எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......

கொஞ்சம் "யூத்தா" எழுதினா,  "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....

கொஞ்சம் காரசாரமா எழுதினால்,  "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.

மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.

தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.

எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.

இவ்வளவு ஏன்?   முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது,  இன்னொரு  பொண்ணாகவே கூட இருக்கலாம். இப்படி ஒரு இமேஜ்குள்ள மாட்டிக்காமல், சுதந்திரமாக எதை பத்தியும் எழுத இங்கே முடியாதே.

சித்ரா:  தாயம்மா,   வழக்கம் போல ......குட்டையை தெளிவா குழப்பிட்டா....   எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம் உண்டு....  Science fiction  மற்றும்   Harry Potter மாதிரி தீம்ல எல்லாம் எதனால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் நிறைய எழுதுறது இல்லை .....


 ஆசியா:  சொன்னாப்புல...... காதல்,  சமையல்/மருத்துவ/குடும்ப நல குறிப்பு,  பயணம்,  ஆன்மிகம், சமூதாய நலம், அனுபவம்/ஆதங்கம் போன்றவையே கருவாக கொண்ட  கவிதைகள், கட்டுரை, சிறுகதை என்ற குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் தங்கி விடுகிறோம்.

சித்ரா:  சேலை கட்டினாலும் சரி, சல்வார் போட்டாலும் சரி .... ஆண் பிள்ளை கையில் இருக்கும் செல் போன் ஆயுதத்திற்கு ஒதுங்கி,  "கவனமாக"  இருக்க சொல்லி, பெண்களுக்கு மட்டும் தான் எச்சரிக்கை வருது.   அதற்காக பொது இடங்களில், எல்லா ஆண்களையும் விட்டு விலகியா ஓட முடியும்?
அவள் உணர்வுகளுக்கு  மதிப்பு கொடுத்து, "ஆண்களே, அப்படியெல்லாம் தொல்லைகள்/துன்பங்கள்/மிரட்டல்கள்  பெண்களுக்கு தராமல் டீசன்ட் ஆக நடந்து கொள்ளுங்கள்" என்று பேச்சு வருதா?
எது நடந்தாலும், பொண்ணுங்க ஜாக்கிரதையாக இல்லாததால் தான் நடந்துச்சுன்னு ஒரு பார்வை.  இப்படி ஒரு சமூதாய கண்ணோட்டம் இருக்கும் போது, அதே தான் எழுத்துலகுக்கும் வருதுன்னு நினைக்கிறேன். 

தம்பட்டம் தாயம்மா:  ஆசியா, உன்னை பெண் எழுத்து பற்றி தொடர் பதிவு எழுத சொன்னால், நீ என்ன தமிழ் பொண்ணு தலை எழுத்து பத்தி பேசிக் கிட்டு இருக்க?"

சித்ரா, ஆசியா:  அவ்வ்வ்வ்வ்.......!!! 

படங்கள்:  கூகிள் அக்காவுக்கு நன்றி. 
 



Tuesday, February 15, 2011

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு, டூயட் பாடலாமா?


 வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.  

Valentine's Day Special ஆதரித்தும் - எதிர்த்தும் தமிழ் நாட்டில் சில விஷயங்கள் நடந்ததை கேள்விப்பட்டேன்....

கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு....  ஆனால், எனக்கு ஒரு டவுட்டு!   அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக  - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே  follow பண்ணிடுறாங்க?

  நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை... அதுவும் இந்த வருடம்,  வார நாளில் (திங்கள்) வந்ததால் - சும்மா கடைகளில் greeting cards - ரோஜா மலர்கள் - heart shaped balloons - chocolates மட்டும் நல்லா sales ஆச்சு ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு.... Valentine's Day ,  சனி - ஞாயிறு வந்தால் மட்டும் கொஞ்சம் களை கட்டும்.... அம்புடுதேன்!

Valentine's Day -   அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல்,  காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... 

சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க....   "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" என்று ஆன பிறகு,    பேரை காப்பாத்திருவோம்ல....  பில்ட் அப்பு! பில்ட் அப்பு!


அமெரிக்காவில், Valentine's Day ஒட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை - (February மாதத்தில் - இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை)   உலக திருமண நாள் ஆக கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில், இது விசேஷம்.  நம்ம ஊரிலும் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன். 
World Marriage Day

http://wmd.wwme.org/purpose-history.html

 பெண்ணின் ரோல் என்னன்னு சொல்றாங்களாம்?
கல்யாணம் வரை - காதலி;
கல்யாணத்திற்கு பின் - மனைவி;
குழந்தைகளுக்கு பின் - தாய் தான்... ஆனால், கணவருக்கு????? 
அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான். 
காதலியாக கவனிக்கப்பட்டு - வர்ணிக்கப்பட்டு;
மனைவியாக கொண்டாடப்பட்டு ;
அப்புறம் அன்னையாக ஆனதும்,  "உன் வழி -  குழந்தைகள்  வழி ... தாண்டாதே" என்று அடக்கி விடப்படுவதால் தான் பல குடும்பங்களில்,  கணவர் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இல்லாமல் போய் விடுகிறது... காதலிச்சு கல்யாணம் செய்தவர்கள் கூட,  கல்யாண வாழ்க்கை கசந்து -   பெரிய சண்டைகள் இல்லை என்றாலும்,  சள்ளு புள்ளு என்று ஒருத்தர் மேல ஒருத்தர் எரிஞ்சு விழுந்துக்கிட்டே -  குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று  நான் சொல்லல,  ஆய்வு (research)  சொல்லுது.

http://www.itwire.com/science-news/health/24374-married-couples-less-happy-with-children
 
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது? என்று வேறு ஒரு ஆய்வு நடத்துனாங்களாம்.  அதில்,  கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல்,  காதலோடு தங்களுக்கென்று   நேரம் ஒதுக்கி,  அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.


இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சொல்லப்படாது.... 

பொதுவாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலைப்பளு அதிகம் இருப்பதால்,  எல்லா கவனமும் அவர்களிடம் மட்டும் சென்று விடுவதால்,  களைப்பு தான் மிஞ்சும்.  மாறி வரும் கால கட்டத்தில்,  அது மன சோர்வைத் தான் கொண்டு வருமாம்.  அவர்கள் உணர்வுகளும் நாள் ஆக ஆக மரத்து போக ஆரம்பிக்குமாம்.  எத்தனை நாளைக்குத்தான் தாக்கு பிடிக்க முடியும்?  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்,  தன் தனித்தன்மையை (special quality) அடையாளம் கண்டு பாராட்டும் அல்லது பாராட்டுகிற மாதிரி பேசும்    இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்குதாம்.  இந்த  பீலிங்க்ஸ் எல்லாமே  வேண்டாத affair  ஆக மாறுவதில்லை.... ஆனால், ஒரு வீக் மொமென்ட்ல மாறவும் செய்யுமாம்.  இது குடும்ப  தலைவிகளுக்கு மட்டும் அல்ல,  குடும்ப தலைவர்களுக்கும் இதே டென்ஷன் - இதே கண்டிஷன்  - இதே மனநிலை - இதே effect தானாம்.   இந்த சூழ்நிலை, அதிகமாக 32 - 52  வயதுக்குள் இருக்கும் தம்பதியினர் மத்தியில்  காணப்படுகிறதாம்.

 இதையெல்லாம் தவிர்க்க,  கணவனும் மனைவியும் தனியாக - மாதத்தில் ஒரு நாளாவது தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டுமாம்.  அது ஒரு புத்துணர்வையும்  - திருமண வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டையும் கொண்டு வருமாம்...  அப்போதான்,  குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதோ - இல்லை வேறு எந்த குடும்ப பிரச்சனைகளும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்காதாம்.  தாயாக தியாக உள்ளத்தோட செய்யும் காரியங்களை விட,  காதல் உள்ளத்தோடு குடும்பத்தில் வேலைகளை செய்யும் போது, உற்சாகமாய் - அழகாய் - புது பொலிவோடு இருக்குமாம்.

காதல் கொண்ட நெஞ்சங்கள் -  எல்லா தடைகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்க எப்படி முடியுதுன்னு எத்தனை தமிழ் படங்கள்ல பார்த்து இருக்கோம்....  அதான்..... தியாக தீபங்களை விட,  காதல் ஜோதிகள் - கஷ்டங்களை ஈஸியாக கையாண்டு கொள்ளுமாம்.  

  
நாங்க போற கத்தோலிக்க ஆலயத்தில்,  அருகில் உள்ள பல்கலைகழகத்தில் உள்ள  Catholic Students' Association   இல் உள்ள மாணவர்கள் - மாணவிகள் - ரொம்ப ஆக்டிவ் ஆக ஆலய காரியங்களில் பங்கு கொள்வாங்க...  அவர்களில்  சிலர்  உலக திருமண நாள் ஒட்டி வந்த வெள்ளிக் கிழமை மாலை,  தங்களின் Valentine's Day weekend mood எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு,   volunteers ஆக வந்து 6 p.m. to 9 p.m. -  சர்ச் ஹால் இல் வைத்து,  எங்கள் ஆலயத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின்  (Registered Members) குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்கள். அந்த நேரத்தில்,   குழந்தைகள் படமும் - பாப் கார்ன் - ஐஸ் கிரீம் - board games - எல்லாம் உண்டு என்று சொல்லி இருந்தாங்க...  அதற்கு அவர்கள் சார்ஜ் எதுவும் வாங்கவில்லை.

சமூதாயத்துக்கு, அக்கறையோட தங்களால் செய்யக்கூடிய பங்கு என்று சொல்லிட்டாங்க....
அதற்காக free சர்வீஸ் என்று மக்களும், "ஹி, ஹி, ஹி,... தேங்க்ஸ் " என்று மட்டும் சொல்லிட்டு போகவில்லை.
""Thank You" greeting cards - வீட்டில் செய்த cookies  அல்லது சின்ன பரிசு - அந்த மாணவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னது, அருமையாக இருந்துச்சு... கல்லூரி  மாணவர்கள் செய்கிற உதவியை, appreciate பண்ணிய விதம் பிடித்து இருந்துச்சு.


குழந்தைகளை அங்கே விட்டு விட்டு,   தனியாக அந்த நேரத்தில்,  Flame of love புதுப்பித்துக் கொள்ள, அந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளும் படி பரிந்துரைக்கப் பட்டது.    வீட்டு வேலைகளை - ஷாப்பிங் வேலைகளை - அந்த நேரத்தில் செய்யாமல்,  டிவி - சினிமா என்று  இங்கே உட்கார்ந்து கிட்டு, அங்கே பே என்று பார்த்துக் கொண்டு இருக்காமல்,  இருவர் மட்டுமே தங்கள் அன்பை- காதலை -  ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் விதமாக அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று சொன்னாங்க...


Restaurant இல் வைத்து dating மாதிரி  ஒரு ஸ்பெஷல் டின்னெர் - அல்லது
ஒரு ஜாலி கார் டிரைவ் - அல்லது
இயற்கையை ரசித்துக் கொண்டு ஒரு வாக் - அல்லது
மனம் விட்டு பேசி,  ஒருவருக்கொருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்று சில வழிமுறைகளும் காதல்  உறவைப் புதிப்பித்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டன.

அமெரிக்காவில்  திருமண தோல்விகள் நிறைய இருப்பதற்கும்,  விவாகரத்து அதிகம் இருப்பதையும்  சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு - அதற்கு என்னவெல்லாம் செய்து அதை மேற்கொள்ளலாம் என்று முயற்சி எடுக்க ஆரம்பித்து இருக்காங்க.... 

அப்புறம்  ஞாயிற்றுக் கிழமை அன்று  பாதிரியார்,  Sunday Mass time ல எல்லாத் தம்பதியினரையும் எழுந்து கொள்ள சொன்னாங்க...
புதுசா கல்யாணம் ஆன ஜோடியில் இருந்து, கல்யாணம் ஆகியே  அறுபத்து இரண்டு  வருடங்கள் ஆன ஜோடி வரை எழுந்து நின்னாச்சு....
கணவரும் மனைவியும்  வலது கரங்களை பிடித்து கொள்ள சொன்னாங்க.....
இருவரும், ஒருத்தரை ஒருத்தர் கண்களை பார்த்து புன்னகைக்க சொன்னாங்க....
அப்புறம் திருமண நாளில் சொல்லிய உறுதி மொழியை (wedding vows)  புதுப்பித்துக் கொடுத்தார்.
அப்புறம், அப்புறம் என்ன..... இங்கே உள்ள வழக்கப்படி  - இச் ..... இச்... கொடுக்க சொன்னாங்க...
எனக்கு அந்த டைம்ல நிஜமாவே வெட்கம் வந்துடுச்சுப்பா.....ஆமாம்ப்பா...
சர்ச்ல அமர்ந்து இருந்த அத்தனை பேரும் கைதட்டி வாழ்த்து சொன்னாங்க... குழந்தைகளும் சேர்த்து.....
புதுசா கல்யாணம் ஆன பீலிங்க்ஸ் தான்.....

 எல்லா வேலையையும், இனி  ஒரு துள்ளலோட செய்ய சொல்லுது ......


இதெல்லாம்,  அமெரிக்காவுக்குத்தான் தேவை..... தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை என்று சொல்லாதீங்க... Self-Denial இல்லாமல், யோசித்து பார்த்தால் -  இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில்  stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது.  இதுவும் விரைவில் தேவைப்படலாம்....


எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை....  இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ? 


 

Sunday, December 5, 2010

ஒரு வினாடியில் "வடை" போச்சே!

இரண்டு சம்பவங்களை, இன்று  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  சென்ற வாரம்,  எங்க பக்கத்து ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்:

வீட்டில் எல்லோரும் வெளியே சென்று இருந்த நேரத்தில் - அந்த வீட்டு   குடும்ப தலைவர்,  தன் துப்பாக்கி எடுத்து தற்கொலைக்கு முயன்று விட்டார்.  சுட்ட அடுத்த நொடியில், அவர் நினைத்த படி உயிர் போகவில்லை.   மரண பயம் மனதில் படற,  தானே அவசர உதவிக்கு 911 போன் கால் செய்து உதவி நாடி இருக்கிறார்.  ஐந்து நிமிடங்களுக்குள்,  உதவி வந்து மருத்துவமனையில் சேர்த்தும் பயன் அளிக்காமல், சில மணி நேரங்கள் கழித்து இறந்து விட்டார்.


இறக்கும் முன், மரண வாக்குமூலமாக அவர்  மருத்துவர்களிடம் தெரிவித்தது என்ன தெரியுமா?  "சுடும் வரை,  எனக்கு பயம் இருந்தது.  எனக்கு இருந்த கஷ்டங்களை மட்டுமே நினைத்து கொண்டே இருந்தேன்.  பயம் குறைந்தது. உடனே சுட்டு விட்டேன். அடுத்த நொடியே, நான் நினைத்தது போல இறக்காமல் இருந்த பொழுது,  வாழ்க்கையின் அருமை புரிந்தது.  மரண பயம் வந்து விட்டது. என் பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றி விட்டது. நான் வாழ ஆசைப்படுகிறேன்.  என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்," என்று கேட்டு இருக்கிறார்.
 அடங் கொக்க மக்கா -  கஷ்டங்களை மட்டும் நினைத்து depression  (அதிக மன சோர்வு) ஆகி,  இந்த முடிவு வந்ததற்கு பதில், கொஞ்சமாவது positive ஆக யோசித்து கொண்டு இருந்து இருந்தால்,   இந்த நிலை அவருக்கு இல்லையே..... மக்கா, இந்த பதிவை  வாசிக்கும் யாராவது "அப்படி இப்படி"  நினைத்து வாழ்க்கையின் எல்லையை நோக்கி ஓட நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் - அப்படியே ஒரு அபௌட் டர்ன், ப்ளீஸ்.   போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! 

அது ஒரு புறம் இருக்க,   எங்க நண்பர் முருகன்,  எங்களிடம் பகிர்ந்து கொண்ட  ஒரு  சம்பவம்:

முருகன் வேலை பார்க்கும் ப்ராஜெக்ட் ஒன்றில் கூட வேலை செய்யும் தமிழர் ஒருவர், ரவி.   தனக்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் ஆரம்பித்து இருப்பதாக சொல்லி,   தமிழகத்திற்கு  வந்து இருந்தார்.   அவரது  அம்மா, இவருக்காக தேர்வு செய்து வைத்து இருந்த பெண்கள் ஒரு லிஸ்ட் போடும் அளவுக்கு இருந்ததாம்.  ரவி அவர்களை நேரில் ஒவ்வொருவராக பார்த்து - சந்தித்துப் பேசி  - இறுதி தேர்வு செய்து -  முடிவு எடுக்க ஏற்பாடாம். 

ஒவ்வொருவராக பார்த்து,  பெண் வெள்ளையாக - அழகாக - இல்லை என்ற காரணத்தைத் தன் அம்மாவிடம் சொல்லி கழித்து விட்டார்.  லிஸ்ட்ல் இன்னும் இரண்டு பெண்கள் தான் பார்க்க வேண்டியது இருந்தன.


நண்பர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை.  முருகன்  வெளிப்படையாகவே ,   " நீ பெரிய ஹீரோ லுக்னு நினைப்பாடா?  பொண்ணு மட்டும் வெள்ளை வெள்ளைனு ஏண்டா அலையுற?  வெள்ளை தான் அழகுனு - சோப்பு, கிரீம் கம்பெனிகாரன் தவிர வேற எவனும் சொன்னதில்லை.  வெள்ளை பொண்ணை உனக்கு பிடிச்சு இருந்தாலும் - அவளும்,   'இந்த மாப்பிள்ளை வேண்டாம்.    அமாவாசையும் பௌர்ணமியும் சேர்ந்து வந்தாப்புலதான்  இருக்க போகுதுனு,'  சொல்லிட்டா என்ன செய்ய போறே?" என்று சொல்லிட்டாரு.

    "அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி" என்று நெல்லை பக்கம் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். அது  போல, ஏதோ தான் அமெரிக்காவில் இருப்பதே பெரிய காந்த சக்தி என்பது ரவியின்  பதில்  வாதம்.
  நினைப்ஸ் தான்,  புளைப்ஸ் கெடுக்த்ஸ்.

லிஸ்ட்டில் பாக்கி இருந்த   ஒரு பெண்ணின் தந்தையை,  ரவியின்  குடும்பம்,  கோவிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து இருப்பதாகவும், இன்றே பெண்ணையும் அங்கே பார்த்து விடலாம் என்றும் ரவியின் அம்மாவிடம், பெண்ணின் தந்தை  சொல்லி இருக்கிறார்.  பெண்ணின் தந்தை , நல்ல கருப்பு நிறம்.  பெண்ணும் அப்படித்தான் என்ற நினைப்பில், தன் அம்மாவிடம்,  எப்படியாவது இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று கூறி விட்டு,  ரவி  காருக்கு வந்து விட்டார்.   அம்மாவும்  இவர் பேச்சை கேட்டு,   இடத்தை தட்டி கழித்து விட்டு காருக்கு வந்து விட்டார்கள்.

கிளம்பு முன், இளநீர் அருந்தி கொண்டு இருந்த பொழுது,  அந்த பெண்ணின் தந்தை, தனது மனைவி மற்றும் மகளுடன்,  அவரது காரில்  ஏறுகின்ற பொழுது,  ரவி  தற்செயலாக பார்த்து இருக்கிறார்.  பெண்,  இவர் எதிர்ப்பார்த்து தேடி கொண்டு இருந்த நிறம்.  ரவி  நினைத்த மாதிரி, அப்பாவின் நிறத்தில் இல்லாமல், அம்மாவின் நிறத்தில்...... அவ்வ்வ்வ்.....

அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சியும், அம்மா  மறுத்து விட்டார். "அந்த இடம் வேண்டாம் என்று நீ சொன்னதை கேட்டு,  கோவில்னு கூட பார்க்காம,  என்னவெல்லாம் பொய் சொல்லி - அவங்க மனம் கோணாம -  வேண்டாம்னு  சொல்லி விட்டு வந்து இருக்கேன். இப்போ, எந்த முகத்தை வச்சுக்கிட்டு போவேன்?" என்று சொல்லி விட்டார்.

ரவி , முருகனை அழைத்து, " எனக்கு எப்படிடா தெரியும்?  பனமரம் நிறத்துல அப்பா வந்து நிற்கிறார். உரிச்சு வச்ச  பனங்கிழங்கு நிறத்துல மகள் இருப்பாள்னு நான் நினைச்சேனா?, " என்று "நியாயம்" கேட்டு இருக்கிறார்.
முருகன், "அந்த பொண்ணுக்கு கோவிலுக்கு வந்த  நல்ல நேரம்டா. தப்பிச்சிட்டா!" என்றார்.

 இந்த ட்ரிப்ல எதுவும் அமைந்து வராமல்,  திரும்பி வந்து விட்டு,  இன்னும் "வடை போச்சே" என்று அந்த பெண்ணை நினைத்து கொண்டு, ரவி   புலம்பி கொண்டு இருக்கிறார்.  இவரை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  இந்த vivel சோப்புல இருந்து எல்லா சிகப்பழகு கிரீம்கள்  வரை இந்த  "கலர் மேஜிக்  கொசுக்கடி"  தொல்லை தாங்க முடியல......... Perfect Radiance - பரிபூரண சர்மம் - மாசு மருவற்ற மென்மையான (???) அழகு - எல்லாம் சிகப்பழகுக்கு மட்டும் தான் என்று பெரிய ஆராய்ச்சி எல்லாம்  பண்ணி கண்டுபிடிச்ச மாதிரி  சொல்லிட்டாகப்பு....... அதை நிசம்னு நினைச்சு, இந்த பயபுள்ள இப்படி அலையுதே!!!

சிகப்பழகு கிரீம் அதிகம் பயன்படுத்துவதால்  வரும் தீமைகள் பற்றி:
 http://www.naturalnews.com/022893.html

ம்ம்ம்ம்........

Monday, November 22, 2010

மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.

நேற்றைய பதிவின் மூலம், இங்கு அருகில்  உள்ளவர்களிடம்  வெளிப்படையாக காட்ட முடியாத - சொல்ல முடியாத - என் உணர்வுகளை பகிர்ந்து இருந்தேன்.  எழுத்தில் கொட்டியபின்,  மனம் அமைதி ஆனது.   ஆறுதலாக, கரிசனையுடன்  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.   

இங்கு உள்ள  இறுகி போன சூழ்நிலை - மன நிலையில் இருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது, சில நிமிடங்கள் அர்ப்பணாவை பற்றி நினைத்தேன்.  அவளது மறைவின் சோக பிடியில் இருந்து நான்  வெளி வர,  அவள் வாழ்ந்த வாழ்க்கையே எனக்கு உதவுகிறது. 
  


அர்ப்பணாவின் வாழ்க்கை,   சீக்கிரம் முடிந்து போய் இருக்கலாம். ஆனால், கடைசி நிமிடம் வரை, நன்றாக சிரித்து விட்டு சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய் இருக்கிறாள்.  "Live for the moment" என்று எங்கள் அனைவருக்கும் காட்டி விட்டு சென்று இருக்கிறாள்.  யாரும் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது,  பிறர் நலன் கருதியும்  உதவி செய்து,  வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்.   தன் காரியமாக மட்டும் இருந்து விட்டு, நல்ல படியாக வாழ பாக்கி வைத்து விட்டு செல்ல கூடாது  என்று சொல்லி கொடுத்து இருக்கிறாள்.  A quote to share:  (Author unknown)
 தோழிகள், அனைவரும் சந்திக்கும் போது, பலர்,  அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள்.  இவள் எப்பொழுதும் சந்தோஷமாக - positive ஆக பேசி கொண்டு இருப்பாள்.  "நீங்க எல்லாம் இங்கே இப்படி கவலை படுவதால் மட்டும்,   அங்கே அந்த வேலை அல்லது பிரச்சனை,  தானாக  முடிந்து விடுமா?  அப்புறம் எதற்கு அதை பற்றியே நினைத்து கொண்டு , புலம்பி கொண்டு இருக்கீங்க?  அவரவருக்கு இருக்கும் டென்ஷன் இல் இருந்து விடுபட,  ஒரு change குத்தானே சந்தித்து கொள்கிறோம். இங்கேயும் அதே டென்ஷன் நினைப்புதானா?" என்று உணர வைப்பாள்.


"அடுத்து வரப் போகும்  கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும்  நினைங்க.  வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது.  உற்சாகமாக இருக்கும்" என்பது அவளின் பாலிசி.
Life is not just a terrifying thing, but a terrific thing too.  


அர்ப்பணாவின் மறைவிலும்,   எங்களால்  இன்னும் புன்னகைக்க முடிகிறது என்றால்,  அவளை பற்றி நினைக்கும் போது, அவள் வாழ்ந்த வாழ்க்கையில்  உள்ள அர்த்தமும் ஒரு காரணம். எங்கள் புன்னைகைகளில் அவளும் வாழ்கிறாள்.
  என்னை பழைய உற்சாகத்துடன் மீட்டு எடுத்து கொண்டு வர இதுவே போதுமே!!!!
இப்படி ஒரு நட்பு  கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும்.  கிடைத்து விட்டு "போனால்" அல்ல.

தமிழ்மண நட்சத்திரத்துக்காக , எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, August 24, 2010

பணம் என்னடா பணம்!

"தமிழ் உதயம்"  ரமேஷ்  அவர்கள்,  ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி...  

http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post.html

இந்த தலைப்பில் எவ்வளவு   அருமையாக அவர் எழுதி இருக்கிறார் என்று அந்த பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும்.   எல்லா கோணங்களிலும் அவர் யோசித்து எழுதி விட்டதால்,  இந்த தலைப்பை நாம  இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா?  (யம்மா, இந்த எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து,  திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான்  மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்....... சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி  சீன் பத்தி  சொன்னாலே அதிருதுல........ ஹையா.... அதிலும் பணம் டீலிங்தான்...... ஆரம்பமே, இந்த தலைப்புக்கு  அமர்க்களமா அமைந்து விட்டது........... கூல்!)

அவர் தந்து இருக்கும் தலைப்பு:    பணம் குறித்த எனது அனுபவம்  வைத்து ஒரு பகிர்வு. 

நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்...  அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   இப்போ,  பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?


என்னதான் மாமா, பாட்டிம்மா, தாத்தா  என் கையில காசு கொடுத்தாலும்,  அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு"  வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்.... சரி, சரி....... விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
(சித்ரா, அடக்கி வாசி.......!!!)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க?   நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய  வேலையை  -   official கடமையை  - அவர்  செய்யாமல் இருக்கும் போது,  அவரை திட்டி - அடிச்சு -  துவைச்சு - அதை   செய்ய வைக்காமல் - அவருக்கு  அஹிம்சை முறையில்,  பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த  வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு  நினைவு படுத்தவா?  யார் கண்டா? இருக்கலாம்.....

அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க..... இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை  அவருக்கு கொடுத்து பாருங்க,  இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற,  literal மீனிங் இல்லைப்பா..... பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....

டீக்கடை பெஞ்ச்ல உக்கார்ந்துகிட்டு பழைய தினத்தந்தி பேப்பர் நியூஸ் படிக்கலைனா எப்படி?

திடீர் பணக்காரர்கள் குறித்து, நான் எனது சித்தப்பாவுடன்  வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருந்தேன்.  அப்பொழுது அவர்,   தமிழ்நாட்டுல lottery ban வருவதற்கு முன் திருநெல்வேலி பேப்பர்ல வந்த ஒரு நியூஸ் பத்தி சொன்னாங்க.......
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒருவருக்கு, ஒரு முறை lottery ல சில லட்சங்கள் பரிசாக கிடைச்சுச்சாம்.   அப்போ  நிருபர், "இனி என்ன செய்யப்போறதா இருக்கீங்க?"  என்று கேட்டதற்கு,
" ஒரு டீச்சர்க்கோ டாக்டர்க்கோ லாட்டரி  பரிசு விழுந்தா,  அவங்க செய்யுற வேலையை - பார்க்குற தொழிலை  விட்டுருவாங்களா? எனக்கு தெரிந்த தொழில், பிச்சை எடுக்கிறதுதான்.  lottery பணம் வந்துட்டுனு அதை விட்டுற முடியுமா? ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்,"  என்று நியூஸ்பேப்பர்ல நிஜமாகவே பேட்டி கொடுத்து இருந்தாராம்.  அவருக்கு ரொம்ப தங்க மனசு......

அப்புறம்,  எனக்கு பிடித்த சில பணம் குறித்த quotes - புதுமொழிகள் - பாத்துட்டு இன்றைய வெட்டி பேச்சை முடிச்சிக்கலாமா?

Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work.  ......... Robert Orben 

 It is pretty hard to tell what does bring happiness; poverty and wealth have both failed.
.........  Kin Hubbard

I finally know what distinguishes man from other beasts: financial worries. ........ Jules Renard

There's no reason to be the richest man in the cemetery (grave). You can't do any business from there.
..........Colonel Sanders  (KFC)

A man explained inflation to his wife thus: 'When we married, you measured 36-24-36. Now you're 42-42-42. There's more of you, but you are not worth as much.'  .......... Joel Barnett.

Tuesday, August 17, 2010

மொழி மொழியாம் பழமொழியாம்

 ஓர் நண்பரின் அப்பா, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவர். பழைய கால விஷயங்களையும் கிண்டல் அடிப்பார்.  இன்றைய நிலவரங்களையும் நன்கு விமர்சிப்பார். அவருடன் பேசும் போது, நேரம் போவதே தெரியாது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்."   - பழைய மொழி.
நேர்மையாய் இருக்கும் அதிகாரிகளைத் தான் தமிழக  அரசு,  இன்று "கொல்கிறது" ..........
'இன்றைய அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா,'  என்ற மக்களின் எண்ணப்போக்கும் காரணமோ?

நியூஸ்:
http://timesofindia.indiatimes.com/city/chennai/IAS-crusader-refuses-to-give-up-fight-against-corrupt-forces/articleshow/6238906.cms

அப்படியே,  பழமொழிகள் பற்றி பேச்சு வந்தது.  அவர், "அந்த காலத்தில, பல சமயங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல  என்று தெளிவுபடுத்தி கொண்டு) ,    அறிவில் முதிர்ந்தவர்  யோசித்ததை - புரிந்து கொண்டதை  -  அப்படியே பால பாடமாக மற்றவர்கள் மனதில் ஏற்றி விடுவார்கள்.    "ஏன்? எதற்கு?" என்று கேட்க   விடாமல்,   " இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், சாமி கண்ணை குத்திரும்!" என்று சொல்லி பயமுறுத்தி அடக்கி விடுவார்கள்.  அதற்கும் அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு "கொள்ளி வாய் பிசாசு" மற்றும் "மல்லிகைப்பூ கேட்கும் மோகினி பேய்," என்றார்.

சில பழமொழிகள் மற்றும் "எதிர்" பழமொழிகள் சுட்டிக் காட்டி,  எப்படியெல்லாம் குழப்பி உள்ளனர் என்று விளக்கினார்.
அவரவர் தங்கள் வசத்திக்கேற்ப - சூழ்நிலைக்கேற்ப - பொருள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

*   தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
அஞ்சு வயசுல, அண்ணன் தம்பி; பத்து வயசுல, பங்காளி.

*  தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
   தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேற.

* அகன்று இருந்தால் நீண்ட உறவு;  கிட்ட இருந்தால் முட்ட பகை.
சொந்தம் உதவுற மாதிரி, பந்தம் இல்லாதவன் உதவுவானா? 

*  நாலடி  என்றாலும் தனக்கு என்று ஒரு இருப்பிடம் இருக்கணும்.
அசை போட்டு விழுங்குவது,  மாடு; அசையாமல் விழுங்குவது,  வீடு.

*  ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.
வாய்மையே வெல்லும். (Honesty is the best policy)

*  அஞ்சினவனுக்கு யானை; அஞ்சாதவனுக்கு பூனை.
பூனைக்கு மணியை கட்டுவது யார்?

*  புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.
 பசி வந்தால், பத்தும் பறந்து போம்.

*  வாய் உள்ள பிள்ளை, பிழைக்கும்.
நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும்.

*  கடவுள் அமைத்த மேடை.  நாம் அதில் ஆடுகிறோம்.
ஆடத் தெரியாதவள்,  மேடை கோணல் என்றாளாம்.

*  கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
 பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.

*   நாய் வாலை நிமிர்த்த முடியாது.
 அடிக்க அடிக்க,  அம்மியும் நகரும்.

*  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

*  பெண்ணின் மனதையும்  கடலின் ஆழத்தையும்  கண்டது யார்?
ஆழம் தெரியாமல், காலை விடாதே!

* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.
பொறுத்தார்,  பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)

எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." 

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்.


பி.கு.:  மாதவன் சார் அனுப்பியது:  லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் --  முயற்சியுடையார்  இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மற."



Monday, July 5, 2010

தொடர் பதிவு பலி

பதிவுலகத்தில், அப்போ அப்போ உலா வரும் "contagious"  THODARUNGOTITIS சீசன் இது....... ஒருத்தருக்கு வந்தா, ரெண்டு அல்லது மூன்று பேருக்கு மேலா, ஒரே நேரத்தில் தாக்கி ரகளை பண்ணிடும்....  அப்படித்தான்,  இப்போ அமெரிக்க சுதந்திர தின நாள் லீவு , மூணு நாளு முடிச்சிட்டு வந்து பார்த்தா..... எனக்கு நாலு  பேர்கிட்ட இருந்து  "அழைப்பு".....
இதை பத்தி THODARUNGO .....அதை பத்தி THODARUNGO என்று ...... சரி -

முதலில் சாத்தூர் ராமசாமி கண்ணன் அவர்கள் "இருமியது"  - சாரி - இடுகையிட்டது:
http://satturmaikan.blogspot.com/2010/07/blog-post.html

அவர் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த விவரம்: 
முத பலி:
நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான் ( நாங்களாம் யூத்துல).  திடிர்னு நம்ம கடவுள் சார்வாள் உங்க முன்னாடி வந்து மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கைய குழந்தை பருவத்துல இருந்து ஸ்டார்ட் பன்னி புச்சு புச்சா எதுனாச்சும் பன்னிக்கலாம் அப்படின்னு ஒரு வரம் கொடுத்தா என்ன என்னலாம் பண்ணலான்னு நீங்க நினைப்பீங்க. உங்களுக்கு உண்டான 
தலைப்பு:    “ மீண்டும் குழந்தை பருவத்திலிருந்து”.


ராமாசாமி அங்கிள்:    சித்ரா செல்லம், இங்கே வாம்மா ...... யார் வந்துருக்கா பாரு........!!
சித்ரா செல்லம்:   அங்கிள்,  அங்கிள்,  ஆரு ...இது?
ராமசாமி அங்கிள்:   இவர் தான் கடவுள் சார்வாள்.  உனக்கு பிடிச்ச எதுனாச்சும் புச்சு புச்சா பண்ணிக்கலாம்னு சொல்றார். .....   சித்ரா குட்டி,  கடவுளுக்கு ஹாய் சொல்லுடா......
சித்ரா செல்லம்:   ஹாய் ....கடவுள் அங்கிள்..... உங்க சிரிப்பு என்க்கு புச்சிருக்கு.....
ராமசாமி அங்கிள்:  அவருக்கு ஒரு பாட்டு பாடி காட்டும்மா.....
சித்ரா செல்லம்:   என்க்கு குச்சி ஐஸ்  வேணுமே......
ராமசாமி அங்கிள்:  அவரே தருவார்மா ...... பாடு ராஜாத்தி.....
சித்ரா செல்லம்:  அப்போ சரி......
(குழந்தை ஏதோ பாடுகிறாள்...... அது கடவுளுக்கு மட்டும் புரிகிறது.....  ராமசாமி அங்கிள், ஒண்ணும் புரியாமல்,  ஏதோ நேசமித்திரன் சார் கவிதையை,  அவர் வாசித்து விட்டு கமென்ட் போடுற   மாதிரி - புரிந்தும் புரியாமலே - புரியாமல் புரிந்தும் - ஹி, ஹி, ஹி, என்று வழிந்து கொண்டு..... நல்லா இருக்குது, என்கிறார்.....)


சித்ரா செல்லம்:  ஐஸ்-கிரீம்க்கு தேங்க்ஸ், கடவுள் அங்கிள்.  நெம்ப நன்னா இருக்குது....  உங்க  கூட "கண்ணா மூச்சி .....ரே..... ரே......" விள்யாத போலாமா?
ராமசாமி அங்கிள் கூட டூ.... டூ...... டுட்டூ ..... வெவ்வே வெவ்வெவ் வெவ்வே ..... நான் போன வாட்டி,   ப்ளோரிடா போனப்போ, ஐஸ்-கிரீம் வாங்கி தராமா...... டாட்டா சொல்லிட்டார்.... போ..... போ.....
கடவுள் அங்கிள்,  நான் இப்படியே இருக்கேன்..... சரியா?  அங்கிள் கூட சண்டை..... அவர் சீக்கிரம் தாத்தா ஆவட்டும்....
எப்போ பாரு, நான் யூத் யூத் என்று பீலா விடுறார்...... கடவுள் அங்கிள்,  ராமசாமி அங்கிள் கிட்ட பொய் சொல்லக் கூடாதுனு சொல்லுங்க..... ஹையா ஜாலி....... எல்லாம் ஓகேனு சொல்லிட்டாங்க..... அய் லவ் யு, கடவுள் அங்கிள்!  உம்மா.......

ராமசாமி அங்கிள்:   ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா,.......  சின்ன பிள்ளைங்க அப்படிதான்..... கடவுள் சார்வாள்..... கண்டுக்காதீங்க...... சித்ரா குட்டி,    சும்மா ஐஸ்-கிரீம்,  பாட்டு, கண்ணா மூச்சு விளையாட்டு தானா...... இது கடவுள் மா.... கடவுள்..... வேற எதுவும் கேக்க தோணலியா?   அவர் வரம் கொடுப்பார்..... என்ன கேட்டாலும் தருவார்..... நல்லா யோசித்து கேளுமா?
சித்ரா செல்லம்:   எனக்கு இப்போ அதான் வேணும்..... இன்னும் ஒரு ஐஸ்-கிரீம் வேணும்......
ராமசாமி அங்கிள்:   எத்தனை விஷயங்கள் இருக்குது?   சாதி, மதம், சண்டை, கவலை, ஏமாற்றம், இன்னல், ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லாத காலம் வேண்டும் என்று என்னை மாதிரி கேட்க தெரியலியே?
சித்ரா செல்லம்:  அப்படினா என்ன?  அங்கிள், அங்கிள், அங்கிள், ..... உங்களுக்கு காலமே ஐஸ்-கிரீம் வேணுமா? ஹாங்....  என்ன, அங்கிள்?


கடவுள் அங்கிள்:   ராமசாமி,  குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்..... விளையாட்டு,  இனிப்பு,  ஐஸ்-கிரீம், பாசம் -  இது போல தான் அவங்க உலகம்..... இதை பெரியவர்கள் கெடுக்காமல்,  கிடைக்க வேண்டியதை மட்டும் கொடுக்க வழியை பாருங்க.... அதுக்குதான் உங்களை பெரியவர்களாக இருக்க விட்டுருக்கேன்..... சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க...... டி வி, சினிமா, கம்ப்யூட்டர் தான் உலகம்னு குழந்தைகளுக்கு காட்டுறீங்க..... அதையும் தாண்டி, நான் படைச்ச உலகம் இருக்குனு புரிய வைக்க மறக்குறீங்க......  வெள்ளந்தி மனசுல விஷத்தை பாய்ச்சுட்டு, இதெல்லாம் எப்போ மாறுமோ? நல்ல காலம் எப்போ பிறக்குமோ? என்று புலம்புறீங்க.....  எனக்கு நேரமாச்சு..... நான் சித்ரா செல்லத்துக்கும் அவள் கூட இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் நல்ல கதை சொல்ல போறேன்..... வர்ட்டா......


"நிலா நிலா ஓடி வா என்றால்
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
கண்ணீரால், கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்."
இந்த  பருவம் - விலை மதிப்பு இல்லாத பொக்கிஷ பருவம்....... எந்த விலை கொடுத்தும் திரும்ப வாங்க இயலா பருவம்.... அந்த பருவத்தில், நல்ல விஷயங்களை பயிர் செய்...... 

வாசகர்கள்:     ஆமாம்  .....   ஜோரா இருக்குதே...... யார் எழுதியது  இது?  
சித்ரா :  மக்காஸ்...... காமெடி பண்ணாதீங்க...... நான் பதிவுலக குழந்தையா இருந்தப்போ  "கவுஜ"னு கிறுக்கியதுதான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....

பி.கு.  அடுத்த "THODARUNGOTITIS "  பலி கடா யார் ஆகணுமோ  ஆகிக்கோங்க.......................!!!!!!!
 வர்ட்டா......

Thursday, June 17, 2010

டீ கடை பெஞ்சு

அப்படியும் இப்படியுமா, வாரத்துக்கு ஒரு பதிவு/இடுகை என்று ஆகி விட்டது..... எப்போவாவது ரெண்டு.
வேலை பளு அதிகமாய் இருக்கிறது என்றாலும் "வெட்டி பேச்சு" பேசிய வாய், சும்மா இருப்பேனா என்கிறது.

சரி, அப்போ எதையாவது எழுதி தொலை என்று மனம் சொன்னாலும், என்ன எழுதுறது - எதை எழுதுறது  - எதை பத்தி எழுதுறதுனு ஒரே குடைச்சல்........ ஓகே,  அந்த "thinking process"  பற்றி எழுதுனா என்னானு தோணுச்சு......

1 .  சமையல் குறிப்பு:

"திருமணத்துக்கு முன், அம்மா வீட்டு சமையலில் மூக்கு முட்ட சாப்பிட மட்டும்  தெரிந்து வைத்து இருந்தவள், திருமணத்துக்கு பின் வேறு வழி இல்லாமல்  சமைக்க வந்தவள், நான்.    பசி பத்தும் செய்யும் - என்னை சமைக்க வச்சது.  இப்போ ஓரளவு தேறிட்டேன்......   நம்ம பதிவுலக சமையல் மகாராணிகள், ராணிகள், இளவரசிகள் அளவுக்கு இல்லைனாலும்,  ஏதோ சபையில அரசிக்கு பின்னால இருந்து சாமரம் வீசும் - விசிறி கொண்டு இருக்கும் - அந்த பெண்கள் அளவுக்கு சமைக்கிறேன் என்று பேசிக்கிறாங்க..... வேற யாரு,  என் சமையலை சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைத்த பாவப்பட்டவங்க தான்..... இதுல குறிப்பும் போட்டேன்னு வைங்க....... நாட்டுல கரண்டி பஞ்சம் வர வரைக்கும், எல்லோரும் கையுல கரண்டி தூக்கிக்கிட்டு அடிக்க வருவீங்க..... வேணாம்......... விட்டுருவோம்.

2 .   சினிமா விமர்சனம்:

வீட்டுல DVD ல பாத்தாலும் சரி, தியேட்டர்ல பாத்தாலும் சரி -  ஒரே kids friendly movies என்கிற அளவில்,  இப்போ  வீட்டு நிலவரம்.....   எழுதுனா Shrek 4 அல்லது The Spy Next Door பத்திதான் விமர்சனம் எழுதணும்..... அந்த படங்கள் மட்டும் பாக்குற அளவில் இருக்கிறவங்க யாரும் என் பதிவுகளை வாசிக்கிறதில்லை என்று சர்வே சொல்லுது..... அவ்வ்வ்வ்.....

3 .  குழந்தை வளர்ப்பு:

இதை பத்தி நான் சொல்றதை விட,  "நொய், நொய்னு"  அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது என் குழந்தைகளின் தாய் மாமா - அதாங்க, என் தம்பி என்கிற தங்க கம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை........ (இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)

4 .  கணவன் மனைவி   உறவு:

என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும்.  பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?

5 .  கவிதை:

இது வரைக்கும் மூன்று கவிதைகள் (அப்படின்னு நினைச்சிக்கிட்டு), என் ப்லாக்ல போட்டு இருக்கேன்.  என்னை தெரிஞ்சவுங்க,   நம்ம தோழி மனது நோகக் கூடாதுனு, "ஆஹா..... கவிதை அருமை. வாழ்த்துக்கள்!" என்று வெளியே சிரிச்சிக்கிட்டு,  உள்ளே அழுதுட்டு சொல்லிட்டு போய்ட்டாங்க...... என்னை தெரியாம, கவிதைனா என்னனு தெரிஞ்சவுங்க, "ஆஹா..... இந்த வசனங்கள் அருமை.  எந்த படத்துல வருது? பகிர்வுக்கு நன்றி," என்று "உண்மை"யை சொல்லிட்டு போய்ட்டாங்க.... அப்புறம், என்ன செய்ய? நம்ம கவுஜையை நாம் தான் அழகு பாக்கணும்னு, Blog archives ல "கவிதை" னு தனியா label போட்டு,  frame மாட்ட வேண்டியதா போச்சு...  இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த பக்கம் போக வேண்டாம்னு இருக்கேன்.

6 .   sports:

கிரிக்கெட்,  soccer , பாஸ்கட் ball , ஹாக்கினு எழுதுற குரூப் - விளையாட்டின் வரலாறு, பூகோளம், அறிவியல், கணக்குனு பக்கம் பக்கமா எழுதி பின்னி பெடல் எடுக்கிறாங்க.... நான் இன்னும் விளையாடுற கண்ணாமூச்சி,  Sequence கார்டு கேம்,  Pictionary , Taboo , Guesstures எல்லாம்  டிவி ல நேரடி ஒளிபரப்பு ஆகுற அளவுக்கு எப்போதான் வரப் போகுதோ?  ச்சே.....

7 .  இந்திய அரசியல் :

நாட்டு நடப்பு, அவல நிலை, அவசர நிலை பத்தி எல்லாம்,  என் ப்லாக்ல -  நான் பாலாய் பொங்கி - பன்னீராய் தெளிச்சி எழுதுனாலும் எழுதலனாலும் - அது பாட்டுக்கு ஒரு பக்கம் நாறிக்கிட்டு தான் இருக்குது....... போபால் gas வழக்குல, ஏற்கனவே நீதிபதிகள் காமெடி பண்ணிட்டாங்க..... என்னை மாதிரி ஆளுகளுக்கு அவங்க வேலை வைக்கல.
முதல, என் மனசாட்சி என்னை பாத்து கேள்வி கேக்குது: "இந்தியாவுல election நேரத்துல எல்லாம், நீ இங்கே குப்பை கொட்டிக் கிட்டு இருக்கே,  அங்கே உன் பெயருல தவறாம ஏதோ ஒரு கட்சியில இருந்து ஒரு ஆளு போய் கள்ள வோட்டு போட்டுட்டு போறாங்க...... அதுக்கே, நீ கண்டுக்காம இருக்கியே?  உனக்கே இது அசிங்கமா தெரியல?"
இருங்க, ஒரு நிமிஷம். இந்த ipod volume  இப்படி கூட்டி வச்சுட்டேன் என்று வைங்க,  "டொட்ட டோய்ங் ..." சத்தத்துல,  மனசாட்சி சத்தம் கேக்கல.  அப்பாடி!

8 .  பதிவுலக அரசியல்:

அப்படின்னு ஒண்ணு இருக்குறதே, சிலர் சொல்லி தான் எனக்கு  தெரிஞ்சுது. - ஆனால் புரியல.  தெரியாத மேட்டர் மட்டும் இல்ல, புரியாத மேட்டர் கூட எனக்கு வேண்டாம்.  இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி.

9 . உலக பிரச்சினைகள்:

ப்லாக் டீ கடை பெஞ்சுல - எல்லாத்தையும் பத்தி பேசலாம் - உலக ஞானம் வளத்துக்கலாம் - என் சிந்தனைகளை கொட்டிக்கலாம் - என் ஆதங்கத்தை தெரிவிச்சிக்கலாம் - விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் - தகவல் பகிர்ந்துக்கலாம் - கோபப்படலாம் - நொந்துக்கலாம் -  சரி, சரி  - பிரச்சினைகளை தீர்த்துக்க முடியுமா? முற்று புள்ளி வைக்க முடியுமா?  ஒரு பதிவு கணக்குக்கு அப்போ அப்போ ஏதாவது எழுதிடணுமா?  இல்லைனா, உலக அக்கறை - கரிசனம் இல்லைன்னு ஆகி விடுமா?  ம்ம்ம்ம்........

10 .  டி.வி. நிகழ்ச்சிகள்:

நித்தி மேட்டர்ல சன் டிவி எப்போ ஒரு வரைமுறை இல்லாமல் தணிக்கை பற்றி கவலைப்படாமல் - குழந்தைகள் பார்ப்பார்களே என்ற கவலை இல்லாமல் நடந்து கொண்டதோ, அன்றே - சன் டிவி connection கான்செல் செய்து விட்டேன்.    - கமென்ட் போட்டுக்கிட்டு - பதிவுல நொந்து கிட்டு - புலம்பிக்கிட்டே சன் டிவி பாக்கிறதை விட - இந்த புறக்கணிப்பு என் மனசுக்கு ஆறுதலா இருக்குது..... சில விஷயங்களில் வெட்டி பேச்சு  இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.

தம்பட்டம் தாயம்மா:  "அடியே சித்ரா!  நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி மட்டும் வச்சுக்கிட்டு, முக்கியமான பத்து டாபிக் பத்தி முழுசா deal பண்ணாம, எப்படி ஏழு மாசத்துல 74 இடுகைகள் போட்டு வந்துருக்கே?  அப்போ வெட்டி பேச்சு என்று இருக்கிற உன் ப்லாக்ல என்னதான் எழுதிக்கிட்டு இருக்கிற?"

ஆஆஆஆஆஆ........... அதான் இன்றைய வெட்டி பேச்சு இடுகை...... எப்பூடி?

Monday, June 7, 2010

நல்லது, கெட்டது தெரியுமா?

"சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்? நல்லது கெட்டது நாமதான் சொல்லி தரணும்," என்று என் தோழியின் அம்மா, என் தோழியை சத்தம் போட்டு கொண்டிருந்த  "நல்ல" நேரத்தில், அவள் வீட்டினுள் அடி எடுத்து வைத்தேன்.


  அவள் அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு "ஆமாம்" போட்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தேன். நான் வரும் போது, அம்மாவின் அர்ச்சனையில்  உர் என்று இருந்த  என் தோழி,  கொஞ்ச நேரத்தில்,
முகத்தை திருப்பி கொண்டு சிரிப்பதை பார்த்த பின் தான், நான் என்னையும் அறியாமல் விளாயாட்டுத்தனமாக பேசி கொண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். ஆனாலும், என் தோழியை சிரிக்க வைத்து விட்டோமே என்ற சந்தோஷம் எனக்கு.

அதன் பின், என் மனதில் தோன்றிய கேள்விகள்....

குழந்தைகளுக்கு  நல்லது கெட்டது சொல்லி கொடுக்கிற வயது என்ன?
குழந்தைகளுக்குரிய innocence,  எப்பொழுது தொலைகிறது?
அல்லது, தொலைக்க வைக்கப்படுகிறது?
குழந்தை மனதில்,  உலகத்தை குறித்த பார்வை என்ன வென்று தெரிந்து கொள்கிறோமா?
உலகத்தை குறித்த நம் பார்வை என்னவென்பதைத்தான்  குழந்தைகளின் மனதில் விதைக்கிறோமா?
குழந்தையின் வெள்ளை மனதுக்கும் (child-like),  சின்ன புள்ளத்தனத்துக்கும் (childish) உள்ள வித்தியாசம் எப்பொழுது பிள்ளைகளிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது?

இது நடந்து, இரண்டு வருடங்கள் ஆயிற்று. 

என் மகளுக்கு,  பிறந்த நாள் பரிசாக, ஒரு நண்பர்,   "தீயதை பார்க்காதே; தீயதை பேசாதே; தீயதை கேட்காதே" என்ற பொம்மையை (figurine) கொடுத்தார்.

 அவளிடமும் அதை பற்றி சிறிது விளக்கினார். நன்றி சொல்லி பெற்று கொண்ட அவள், பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த தன்  தம்பியிடம் காட்டினாள்.
 
"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு"  (head phones ல பாட்டு)


 கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.   என் மகன்  சொல்வதை திருத்த யாருக்கும் மனம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு, அவன் விளையாட்டு பார்வையில் உலகத்தை பார்க்கட்டுமே......

ஒரு நாள், நல்லது கெட்டது அவனுக்கும் தெரியும். அன்று அவனும், "தீயதை பேசாதே; தீயதை பார்க்காதே; தீயதை கேட்காதே" என்று சொல்லி கொண்டு இருப்பான். 
 

ம்ம்ம்ம்ம்ம்..........  ..... Once innocence is lost, நல்லது கெட்டது புரிந்து விடுகிறது.  இல்லை, நல்லது கெட்டது தெரிவதற்காக, innocence தொலைத்து விடுகிறோமா?   ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இந்த வாரம், என் மகன் செல்வம், தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான்.  :-)

(படங்கள்: கூகிள்)

Monday, May 24, 2010

ஆண் பேச நினைப்பதெல்லாம் .......

எங்கே  ரொம்ப நாளாக  போஸ்ட் எதையும் காணோம் என்று நமது "ரசிக பெருமக்கள் கூட்டம்" கேட்க ஆரம்பிச்சாட்டாங்க....    நிஜமா, ஒரு research பண்ணிக்கிட்டு இருந்தேன்.   unbiased results வர வேண்டும் என பலரை contact  செய்து,   ஆண்கள் பேச நினைப்பதில்,  சில "உண்மைகளை" தெரிந்து கொண்டேன்.   துப்பறிந்து கண்டு பிடித்தவை,   இதோ!

DISCLAIMER:   இந்த "வாக்குமூலத்தை",  என் கணவரிடம் வாங்க முயன்ற போது, சிரித்து விட்டு ரொம்ப விவரமா "s " ஆகி விட்டார்.   அவர் என்  கூடயே இருந்து குப்பை கொட்டணுமே ...... சரி, புளச்சு போங்கனு விட்டுட்டேன்.

  கேள்விகளுக்கு பதில் அளித்த ஆண்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனுபவத்தில் தெரிந்தது என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஒரே கண்டிஷன் தான் போட்டார்கள். அவர்கள் பெயரை போட்டு,  மனைவியிடமோ  girlfriend இடமோ மாட்டி விடக் கூடாது.  ஒத்துக் கொண்டேன்.
நான், ரொம்ப நல்லவா....................!!!  நம்புங்க......!
 
    சில சுவாரசியாமான "வாக்குமூலங்களை"  இங்கே தொகுத்து தந்து,  பகிர்ந்து கொள்கிறேன்.

மற்றும், விதிவிலக்குகள் எல்லா ஆராய்ச்சி முடிவுக்கும் உண்டு. இவை உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால்:  ஹா,ஹா,ஹா,ஹா,....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி........ ஹோ.ஹோ,ஹோ,ஹோ,ஹோ....... (சார், உங்களை பார்த்தா பாவமா இருக்குதுங்க......ஆனாலும் சிரிப்பை அடக்க முடியல......)

                                                 ஆண்களின் பார்வையில்:

தோழர்கள்  இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டால்:

"எப்படி இருக்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
காபி டீ குடிக்க போலாமா, மாம்ஸ்?"
(அல்லது ............ சேர்ந்து "தண்ணி" அடிக்க போலாமா?)



அதே வேளையில், தோழிகள் இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்து கொண்டால்:

"எப்படி இருக்க? என்ன இவ்வளவு வெயிட் போட்டுட்ட?
(இல்லை என்றால், என்ன diet ல் இருக்கியா? இப்படி மெலிஞ்சிட்ட)  
இந்த கலர் சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குது.
உன் அம்மாவுக்கு, மூட்டு  வலி சரியா போச்சா?
உன் அப்பாவுக்கு,  பல் வலி சரியா போச்சா? 
உன் தம்பி, இப்போ என்ன பண்றான்?
உன் அக்கா வீட்டில் பிரச்சினை சரியா போச்சா?
உன் மகனுக்கு அப்புறம் காது வலி வரல இல்ல?
உன் நாத்தனார் இன்னும் சண்டைக்கு வராங்களா?
உன் ஆபீஸ் ஜொள்ளு சபா,  இன்னும்  தொல்லை பண்ணுதா?
நீ இன்னும் அதே வீடுதானா இல்லை, வீடு மாறிட்டியா?
நீ..................??????"
  கேள்வி மேல கேள்வி இருவரும் கேட்டு கொண்டு,  சந்திக்காத நாட்களில் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் அப்டேட் செய்யப்படும்.

ஆணின் தெளிவான பேச்சு:

"எனக்கு பசிக்கிற மாதிரி இருக்குது"    ------------- எனக்கு பசி வயிற்றை கிள்ளுது.
"எனக்கு களைப்பாக இருக்குது "        ................... தூங்க போகலாம் என்று இருக்கிறேன்.
"கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்றேன்."  .................. கிரிக்கெட் மேட்ச் (sports) டிவியில் பார்க்க போறேன்
                                   .................... Facebook/internet ல டைம் பாஸ் பண்ண போறேன்.

கணக்கு: 

வீர பிரதாபங்கள்:
நண்பர்களிடம் =  "வகுத்து"  சொல்லப்படும் ;
மனைவியிடம்/girlfriend இடம் = " பெருக்கி:சொல்லப்படும்;
"figure " பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "கூட்டி" சொல்லப்படும்;
மனைவியிடம்/girlfriend இடம் = "கழித்து" சொல்லப்படும்.

compliment: 

கணவன்:       "சேலை (அல்லது சுடிதார்/டிரஸ்) புதுசா?"
மனைவி:         "நீங்கதானே என் கூட வந்து,  இதை பார்த்து,  கடையிலேயே ரொம்ப நல்லா இருக்குது..... நல்லா இருக்குதுனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க.   நீங்க வாங்கி கொடுத்தது தான்."
கணவன் மனதுக்குள்:
" கடையில் வைத்து நல்லா  இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."


girlfriend அல்லது மனைவியின்  கேள்விகளும் அதற்கு ஆண்  சொல்ல நினைக்கும்  பதில்களும்: 

"இந்த சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குதா?"
சொல்லும் பதில்:     "ரொம்ப நல்லா இருக்குது."

சொல்ல நினைக்கும் பதில்:
.............. நல்லா இருந்தா, அதை முதலிலேயே சொல்லி இருக்க மாட்டோமா?
...............கடையில் பார்த்தப்போ, இதை விட நல்லா இருந்த மாதிரி ஞாபகம்.
................சாரி நல்லாத்தான் இருக்குது,  நீ கட்டிய பின்னும்......

ஒரு expensive பொருள் காட்டி,  "வாங்கலாமா?  அழகா இருக்குமே."
சொல்லும் பதில்:     "அழகுக்கே அழகா?"

சொல்ல நினைக்கும் பதில்:
................. அப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா?
.................  ஆளை விடு.

"அந்த நடிகைதான், உங்களுக்கு பிடிக்குமா?"
சொல்லும் பதில்:     "முந்தி பிடிக்கும். அவ்வளவுதான்."  or
                                "அப்போ பிடித்து இருந்தது...."

சொல்ல நினைக்கும் பதில்:
..............  அவளை மட்டும் இல்ல...... அவளை போல இருக்கிற.....
...............  கனவு வேறு, ஆசை வேறுனு தெரியாதா?
................ சீ, சீ .... இந்த பழம் புளிக்கும் கதையா ஆனப்புறம் வேற என்ன?
.................. ஹூம்........ பிடித்து என்ன செய்ய?

"அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"
சொல்லும் பதில்:     "பொண்ணா? எங்கே?  பொண்ணு ஒருத்தி  போனாளா, என்ன?"

சொல்ல நினைக்கும் பதில்:
...........  "அந்த பிங்க் கலர் சாரி, லோ ஹிப் ல கட்டிக்கிட்டு போனவதானே?"
............. "துப்பட்டா போட்டு மறைச்சாலும், சுடிதார்ல சிக்னு இருந்தவதானே?" 
..............." ஒருத்தியா? அங்கே ஒரு கல(ர்) கல(ர்) கூட்டமே  போகுது. யாரைன்னு பாக்குறது தெரியாம முழிக்கிறேன்." 
.............. " என்னை ஓரக் கண்ணால பார்த்துக்கிட்டே போனாளே. அவளா?"
............... " எனக்கு ஒண்ணு மாட்டாதானு அலையும் போது,  இவ எல்லாம் கண்ணுல பட மாட்டாளே. இப்போ போய்...."
.............."அடிக்கடி  இந்த பக்கம் வரதே அதுக்குதானே."


"பரிவுடன்" கேட்கும் இரண்டு வார்த்தைகளின் அனர்த்தங்கள்:
  
கணவன்/boyfriend    கேட்கும் கேள்வி:     "என்ன ஆச்சு?"

உள்ளே இருக்கும் "பீலிங்க்ஸ்":

...................  "அதுக்குள்ள அழ ஆரம்பிச்சிட்டியா?"
.................... "இன்னைக்கு என்ன நோண்டலோ?"
....................." PMS???"
....................." இன்னைக்கு வரும் போது எனக்கு இருந்த நல்ல 'ஜிங்கு ஜங்கா' மூடுக்கு டாடா!"
................... "இந்த மாத   quota இன்னும் முடியலியா?"
................... " எதுவா இருந்தாலும், அதுக்கு நான் காரணமாக இருக்க கூடாது"
 ................... " புது பிரச்சனையா? இல்லை எப்போவோ உள்ளதின் தொடருமானு தெரியலியே."
..................... " ஆரம்பிச்சாட்டாம்மா ....... ஆரம்பிச்சிட்டா......"
..................... " என் எஸ்கேப் ரூட் எங்கே இருக்குது?"
...................... " என் வீட்டாளுங்க இப்போதைக்கு ஊரில் இருந்து வரலியே. அப்புறம் என்ன?"
......................." காரணம் கண்டிப்பா நான் தெரிஞ்சிக்கணுமா?"
...................... " காரணம் என்னனு இப்போ சொல்றியா? இல்ல,  ஒரு டிவி மெகா சீரியல் டிராமா சீன் நடத்திட்டு, அப்புறம் சொல்ல போறியா?"
..................... " என்ன பாத்தா, 'இங்கே புலம்பலும் பொருமலும் வரவேற்கப்படும்" என்று நெத்தியில் எழுதி ஒட்டுனவன் மாதிரியா இருக்குது?"


எல்லாம் இன்ப மயம்:


ஒரே அர்த்தம் - "இன்னிக்கு 'உம்ம்ம்மா - - - - -  யம்ம்ம்ம்மா' வேணும்."

சொல்வது பல வழிகளில்:   
"இன்னைக்கு என்ன விசேஷம்? ரொம்ப அழகா இருக்கே!"
இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்."
"உனக்கு இது பிடிக்குமே. அதான் வாங்கிட்டேன்."
"எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு களைச்சு போற?"
"நீ சிம்பிளா வந்தா கூட,   நச்னு இருக்குது."  




தெரிந்தவர் ஒருவரின்   " affair"  வெளியாகும் போது: 


பிறரிடம் பேசும் போது:   "எப்படித்தான், பொண்டாட்டிக்கு (girlfriend க்கு) துரோகம் பண்ண, அவனுக்கு  மனம் வந்ததோ?"

மனதுக்குள்: 
................ கொடுத்து வச்சவன்.
................ அவன் எப்போதுமே, risk taker - adventurer - நினைத்ததை முடிப்பவன்.
.................. போயும் போயும் அவள் கூடயா? வேற ஆளு கிடைக்கலியா?  
................. தெரிஞ்சவங்க  நாலு பேருக்கு பயப்படறேனோ இல்லையோ,  இங்கிலிஷில் தெரிஞ்ச நாலு எழுத்துக்காக யோசிக்கிறேன்.  அவை:    
  A .....I......D......S...... 
................ இருக்கிற ஒண்ணுக்கே,  எனக்கு  வாங்கி போட்டு கட்டுப்படி ஆக மாட்டேங்குது..... இல்லைனா.....

தத்துவ  ஜொள்ஸ்:  

Women - - - -   You can't live with them  or without them.........
 Sixth Sense வந்து எத்தனை முறை அறிவுப்பூர்வமாக பேசி warn செய்தாலும்,  மற்ற ஐந்து senses ,  ஓவர் ரியாக்ட் செய்து   "வெற்றி" பெறுகின்றன.

இன்னும் இருந்தால், கமெண்ட்ஸ்  போட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.  :-)


பி.கு.:  1:
  இந்த அகராதி தொகுப்பு சமூக சேவைக்காக - - -  யாரும் எனக்கு  சிலையும்  வைக்க வேண்டாம் - பாமும் வைக்க வேண்டாம்.
 
பி.கு.  2:
ஆண் மக்கள், திறந்த புத்தகமாக கொட்டிட்டாங்க..... இப்போ, எனது அடுத்த வெட்டி ஆராய்ச்சி, பெண்கள் அறிக்கைகளுக்கு,  அர்த்தங்கள் என்ன என்று தொகுக்கலாம் என்று இருக்கிறேன்.  Questionnaire தயார் செய்ய வேண்டும்.  பதில் தெரிய வேண்டிய கேள்விகள் மற்றும் சங்கதிகள் கமெண்ட்ஸ் போடும்போது போட்டால்,  investigate செய்ய ஆரம்பித்து விடுவேன்.  கூடுமானவரை unbiased ஆக இருக்க முயற்சி பண்றேன்........ (ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பா........ இவங்களை நம்ப வைக்கிறதுக்கு உள்ள........ ...ம்ம்ம்ம்......)


அடுத்த  Ph.D.  இதுலதான்..... அதுக்காக:  " டாக்டர் சித்ரா, வாழ்க!" என்று எல்லாம் - ப்ளீஸ் -  யாரும் இப்போவே சொல்லாதீங்க....... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க........ சரியா?

நோ அருவாள் or bad  words .  நன்றி.  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.......

படங்கள்:  நன்றி டு கூகுள்.



Tuesday, March 23, 2010

என்னை மெருகேற்றிய மனிதர்கள்


நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. சிலர் என் ரசனைக்கு உரியவர்கள் - சிலர் என் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் - சிலர் என் மரியாதைக்கு உரியவர்கள் - சிலர் என்னை செதுக்கியவர்கள் - சிலர் என் சந்தோஷ சிரிப்புக்கு உரியவர்கள் - சிலர் என் ஜொள்ளுக்கு உரியவர்கள் - இப்படி................ 

எனது முந்தைய பதிவை படித்து விட்டு,  அதில் உள்ள நகைச்சுவை பிடிப்பை உணர்ந்து, அத்தனை பேரும் சிரித்து கொண்டார்களே தவிர, ஒருவர் கூட சண்டை போட்டு கொண்டு, தேவையில்லாத விவாதத்துக்கு வரவில்லை.  அனைவருக்கும் நன்றி. 

நான் சந்தித்ததில் - பழகியதில் - படித்ததில்/கேள்விப்பட்டதில்  - என்னுள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய சில முக்கியமான ஆண்களை பற்றி ----- இந்த பதிவில் எழுதுகிறேன்.
இன்று நான்,  நானாக இருப்பதற்கு இவர்கள் என் வாழ்வில் - என் சிந்தனையில் - என் மனதில் உண்டாக்கிய பாதிப்புகளே காரணம்.  I thank my Lord for each and every one of them.
                       

திரு.பொ.ம.ராசமணி.
Mr. Po.Ma. Rasamani


நான் செய்த தப்பை,  நான்  பெரிது படுத்தாமல், என்னுடைய உறவினர் ஒருவர் செய்த சின்ன தவறை பெரிது படுத்தி கோபத்தில், நான்  பொங்கி கொண்டிருந்த போது -  அவர் ஒரு புன்னைகையுடன்:

" ஒரு வலைக்குள் மீன் போய்  மாட்டும்  - அந்த வலைக்கு, மீன் வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள் விலங்கு  போய் மாட்டும்  - அந்த வலைக்கு, விலங்கு  வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள்  மனிதன் போய் இருப்பான் - அந்த வலைக்கு கொசு வலை என்று பெயர்.
மனிதன் எப்பொழுதுமே, தன்னை விட தன் சூழ்நிலைகளையும் மற்றவர்களையும்,  குற்றம் சொல்லி  காரணம் காட்டி  பேசுவதில் கில்லாடிகள்." என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட,  என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

இன்றும்,  எந்த மனிதரோடும் பிரச்சினை வரும் போது, முதலில் என் தவறு என்ன என்று ஆராயும் மனப்பக்குவத்தை தந்தவர்.
50 வருடங்களுக்கு மேலாக, தன் நகைச்சுவை பேச்சினாலும் எழுத்துக்களாலும்,  "சிரிப்பு தரும் சிந்தனைகள்" தந்தவர்.
இவரை பற்றி தனியாய் ஒரு பதிவு பின்னொரு நாளில்.................!!!
 

 Dr.அன்டோ ராஜ்குமார்.
Dr. Anto Rajkumar

M.B.B.S.,   D.P.M., M.D. (Psychiatry) -  ஒவ்வொரு டிகிரி வாங்கும் போதும் ஒரு கோல்ட் மெடலும் சேர்த்து  வாங்கி,  ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவராக, சின்ன வயதிலேயே CMC, வேலூரில் கலக்கி கொண்டிருப்பவர்.  சுனாமிக்கு பிறகு  பாதிக்கப்பட்ட மக்கள் நடுவில்,  இவர்  நடத்திய ஆராய்ச்சி கட்டுரையும் மற்றும் சில research articles, British Journal of Psychiatry யில் வெளி வந்திருக்கின்றன. பல international conference சென்று கருத்தரங்கில் பங்கு பெற்று வந்திருக்கிறார்.

 இதை பற்றியெல்லாம் தற்பெருமையுடன் பேசாமல்,   Psychiatry department cricket team (CMC) -  முந்தைய வருட சாம்பியன் ஆன Pharmacy cricket  (CMC) அணியுடன் மோதி  - எப்படி அவரும் அவரது அணியினரும் விளையாடி  ஜெயித்தார்கள் என்பதை  ஒரு உலக கோப்பை வென்ற ஆர்வத்துடன் விவரித்து கூறியது, என்னை ஆச்சர்யப்பட வைத்தது.  தன் தொழிலே வாழ்க்கை என்று இருக்காமல்,  தனது மனதுக்கு பிடித்த - ஆர்வத்துக்குரிய - விளையாட்டில்  சந்தோஷப்படுவதை கண்ட பொழுது - பெரிதாக ஒன்றும் சாதிக்காமலே, என்னுள் குடியிருந்த என் கர்வம்,  என்னை விட்டு விலகி சென்றது.


Solomon :
சாலமன்:

மேற்கண்ட படத்தில் இருக்கும் இவர் சாலமன்.  எனக்கு காதலிக்க கற்று தரும் முன், பெரிய பெரிய காதல் காவியங்கள் கூட அபத்தமாக தெரிந்தது.
எனது ஆத்மார்த்தமான ரசிகர் -  உண்மையான விமர்சகர் - ஆருயிரில் கலந்துள்ள நண்பர் - உற்சாகமாக சுக துக்கங்களில் பங்கு எடுத்து கொள்பவர் -  என்னை எனக்கு அடையாளம் காட்டியவர்.  நாங்கள் சந்தித்தது, எனக்கு இறைவன் தந்த வரம்.

SAINT FR.DAMIEN:

ஹவாய் தீவுகளில் ஒன்றான மொலோகோய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்த சுமார் 8000 தொழு நோயாளிகளுக்கு நடுவில்  வாழ்ந்து   சேவை செய்து  வந்தார். அவர்களில் ஒருவராக தானும் இருந்து அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வந்த அவருக்கும் தொழு நோய் தாக்கி இறந்தார்.  மேலும் விவரங்களுக்கு: 
http://en.wikipedia.org/wiki/Father_Damien

 ஒரு சின்ன உதவி,  நண்பருக்கு செய்ததை  கூட பெரிதாக  நினைத்து கொண்டு, என்னை நானே ஒரு சுய நீதிமானாக (self-righteous person) பாராட்டி கொண்டிருந்தேன்.    தன்னலமற்ற சேவை செய்ய, தன்னையே அர்ப்பணித்த இந்த புனிதரின் உயரிய உள்ளம், என்னை யோசிக்க வைத்தது. நிறை குடம் தளும்பாது என்பதை புரிந்து கொண்டேன்.

  ரஜினிகாந்த்:


இவரையும் -  இவர் படங்களையும் -  இவர் நடிப்பையும் - இவர் கொள்கைகளையும் பலர் பலவிதமாக விமர்சிக்கலாம். எனக்கு எதுவுமே முக்கியம் இல்லை. விமர்சிப்பவர்கள் -  தங்களின்  அறுபதாவது  வயதிலும்,  அந்த ஸ்டைல் லுக்கில் இருந்து கொண்டு விமர்சிக்கட்டும்.
சிறு வயதில், எந்த உற்சாகத்தோடு இவர் படங்களை பார்த்தேனோ, அதே உற்சாகத்தோடு இன்றும் பார்க்கிறேன். விசில் அடிக்க தெரியாத நான், ஒரு umpire விசில் வாங்கி வைத்து இருக்கிறேன். கூட்டத்தோடு கூட்டமாக ஆட்டம் போட்டு, விசில் அடித்து கலகலக்க.  அவரது ஒவ்வொரு படத்தையும்,  இங்குள்ள தியேட்டரில்,  பல நூறு மைல்கள் பயணித்து சென்று,  பார்க்கும் போது  எனக்குள் இருக்கும் சிறுமி குதூகலத்துடன் வெளி வந்து, என்னை மீண்டும் பால்ய காலத்துக்கு அழைத்து செல்கிறாள்.  I never miss my childhood.

 DAVE BARRY:


Pulitzer Prize (1988) வாங்கிய அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் (humor columnist). The Miami Herald தின பத்திரிகையில், 1983 - 2005 தொடர்ந்து எழுதி வந்தவர். பல புத்தகங்களும் நாவல்களும் எழுதி இருக்கிறார். 
Barry has defined a sense of humor as "a measurement of the extent to which we realize that we are trapped in a world almost totally devoid of reason. Laughter is how we express the anxiety we feel at this knowledge."
தன் வீட்டு அடுப்படியில் இருந்து நாட்டு அரசியல் வரை -  எந்த வரைமுறைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் -  தன் கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதில் கில்லாடி.
இவரின் பார்வையில் உலக - சமூதாய  பிரச்சனைகளை பார்க்க ஆரம்பித்த பின், உலகம் - எனக்கு அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.


 என் உடன் பிறவா சகோதரர், செல்வகுமார் அண்ணன்,   தன் வேலைப்பளு மத்தியிலும் நேரம் ஒதுக்கி,   எனக்கு  கரிசனையுடன் அறிவுரை கூறுபவர்.  எனக்கு  இருக்கும் வேலைகளை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு தேவையான என் நேரத்தை ஒதுக்க  நான், இவரிடம் கற்று கொண்டேன்.

இவர்கள் தவிர,  எனக்கு நிறைய கற்று கொடுத்த, என் அருமை நண்பர்களின்  பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருவர் பெயர் சொல்லி, ஒருவரை விட்டு விட எனக்கு பிடிக்காத காரணத்தாலும்  -  பதிவின் நீளம் கருதியும், இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.