Showing posts with label இந்திய அரசியல். Show all posts
Showing posts with label இந்திய அரசியல். Show all posts

Thursday, April 7, 2011

அரசியல் (மு)தல....!

நான் பதிவு எழுத வந்த ஒன்னேகால் வருடத்தில்,  ஒண்ணு ரெண்டு தான்  அரசியல் குறித்த  பதிவுகள் எழுதி இருக்கேன்.  முதலும் முக்கியமான ஆன பதிவு  :  நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்க:

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை

அந்த பதிவை எழுதியபின், எனக்கு என்ன கலங்கிச்சோ தெரியல ...அரசியல் பதிவுகள் பக்கமே அவ்வளவாக போகல.... சரி, இந்த வருஷம் வோட்டு தான் போட முடியல .... வக்கணையாக பேசி,  இன்னொரு  அரசியல் பதிவு இன்று புதுசா  போடலாமேன்னு முடிவு பண்ணி ஒரு காமெடி பதிவு எழுத நினைச்சேன். அப்புறம், அங்கே அரசியல் (மு)தலைகள் எல்லாம் மக்களை வச்சு காமெடி பண்ணி, அவங்க பொட்டியை நிரப்புறாங்களே , அது வச்சு காமெடி பண்ணாம ஒழுங்கா எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன். 

போன வருஷம், நவம்பர் மாதம் நாங்க இப்போ இருக்கிற ஊரில Mayor election நடந்துச்சு.   போட்டியிட்ட வேட்பாளர்கள் எல்லோரும் தனி ஆளாக,  அவரவர் கொள்கைகளை தெளிவாக பிரிண்ட் செய்து, பிட் நோட்டீஸ் கையில வச்சுக்கிட்டு, ஒவ்வொரு வீடாக வந்து ஹலோ சொல்லி பேசி கொடுத்துட்டு போனாங்க.... தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல.  அவங்க கூட கோஷம் போட ஆள் இல்லை ..... கழுத்தை சுத்தி கட்சி கொடி நிறத்துல துண்டு இல்லை.... மைக் இல்லை ..... கலகலப்பு இல்லை...... களேபரம் இல்லை..... என்னங்கடா தேர்தல் பிரச்சாரம் இது என்று நினைச்சிக்கிட்டேன்.   

அதில், Bill Wells என்று ஒரு வேட்பாளர்  வந்துட்டு போனதும், எங்க பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி வந்து,  "உங்களுக்கு இவரைத் தெரியுமா?  இவர் ரொம்ப நல்ல மனுஷன்.    இவர் முன்பு பள்ளிக்கூட பிரின்சிபால் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.  ரொம்ப நல்ல பெயர் எடுத்தவர்.  இவர் குடும்பமும் நல்ல முன் மாதிரியான குடும்பம் என்று  பெயர் வாங்கி உள்ளது.  அவர் மனைவி,  நிறைய பொது நல சேவைகளில் ஆர்வமாக முன்னின்று  பணி செய்பவர்.  இவர் தான் Mayor ஆக வர வேண்டும் என்று நிறைய பேர் பேசிக்கிறாங்க, " என்று சொல்லி விட்டு சென்றார். 

Mayor Bill Wells:  

தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிச்சாங்க.... இப்போ எங்க ஊருக்கு Bill Wells தான் மற்றவர்களை விட அதிக வாக்குகள் பெற்று ஜெயிச்சு Mayor ஆக இருக்கிறார். 
 அப்போதான் பக்கத்து வீட்டு பொண்ணு சொன்னது நியாபகத்துக்கு வந்துச்சு... ஒரு வேட்பாளர் ஜெயிக்க அவர் மட்டும் அல்ல, அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது.  

அதே மாதிரி,   கற்பு கிற்பு என்று அதிகம் அலட்டி கொள்ளாத அமெரிக்க நாட்டில்,  கிளின்டன் (Clinton)  ஜனாதிபதியாக இருந்தப்போ மோனிகா கூட அப்படி இப்படி இருந்துட்டார் என்று விஷயம் வெளியில் வந்தவுடன்,  மீடியா முதல் மக்கள் வரை, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டி குடைஞ்சு எடுத்தாங்க.  

"அட,  மோனிகாவுக்கு ஒரு "முடிவு" கட்டிட்டு - அவள் இருந்த இருக்கிற இடத்துல புல்லு முளைக்கிறதுக்கு வழி பண்ணாம - என்னது ஒரு அமெரிக்க ஜனாதிபதி இப்படி திருதிருனு  மாட்டிக்கிட்டு முழிக்கிறாருனு,"  எங்க நெருங்கிய தோழியோட மாமானார் சொன்னாப்போ,  நாங்க சிரிச்சு இருக்கோம்.

பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி கிட்ட ஒரு நாள் ஆர்வம் தாங்காம கிளின்டன் விவகாரம் எதுக்கு பெரிய விஷயமாச்சு என்று கேட்டுட்டேன்.   திருமணம் ஆனப்புறம்,  ஒரு affair வந்து - டைவர்ஸ் ஆகி - வேற கல்யாணம் செய்துக்கிறது சகஜம் தானே. மேலும்,  இங்கே நம்ம ஊரு மாதிரி சமூதாயத்துக்கு பயந்து  வாழறவங்க கிடையாது.  சுய விருப்பு வெறுப்பு படி தான் முடிவு எடுத்து இருப்பாங்க... அது அவங்க உரிமை என்று மத்தவங்க தலையிட மாட்டாங்க... அப்புறம், கிளின்டன்க்கு மட்டும் என்ன தனி பஞ்சாயத்து என்று வெட்டி பேச்சு பேசியே பழக்கப்பட்டதால  கேட்டுட்டேன். 

Bill Clinton: 


அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க:  "  மக்கள் எல்லோரும் தங்கள் நலவாழ்வை நல்லபடியாக பார்த்துக்கத்தானே, நம்பி ஒரு ஆளை தெரிந்தெடுத்து நாட்டை ஆள பொறுப்பாக நியமிக்கிறோம்.  ஜனநாயக ஆட்சியில், முதலில் அவர் மக்கள் பிரதிநிதி.   எங்களை சர்வாதிகரத்துடன் ஆள வந்தவர் அல்ல.  மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்.  சமூதாயம் எப்படி இருந்தாலும்,  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  உண்மையாக இருக்க வேண்டும். மோனிகா விஷயத்தில், கிளின்டன் பொய் சொன்னது பிடிக்கவில்லை. உண்மையை ஒத்துக்கொண்டு அவர் , மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் பொய் சொல்லி மறைக்கப் பார்த்தார். அதனால் அவமானப்பட்டார். அதன் பின், அவர் தவறு செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டார். அரசியல் தலைவர்களும் மனிதர்கள் தான். தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், மக்கள் தான் புரிய வைக்க வேண்டும்.  பக்கத்து வீட்டில் உள்ளவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது என்னை பாதிக்காத வரை.  ஆனால்,  அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள்.  அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்."

 அப்போதான் எனக்கு நிறைய சந்தேகங்கள் சரமாரியாக வந்துச்சு.... 


  இந்தியாவில் ....சரி வேணாம் விடுங்க.... 
தமிழ்நாட்டில்,  சராசரி மனிதரிடம் சமூதாயத்துக்கு பயந்து வாழும் எண்ணம் இருக்கும் அளவுக்கு, அரசியல் தலைவர்களிடம் இருக்கிறதா?  

கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம்  எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா? 

மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் அரசியல் தலைவர்கள் வருகிறார்களா?  இல்லை, மன்னர் ஆட்சி  காலத்தில் இருந்த மாதிரி,  வாரிசு ஆட்சி தான் ஏற்றது என்ற மன நிலையில் இருக்கிறார்களா? 

சமூதாயத்துக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்களா? 

தலைவன் தவறு செய்தால், அதை திருத்தும் எண்ணத்துடன் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரம் உள்ளதா?  இல்லை சர்வாதிகார நிலமைதானா? 

 இன்னும் நிறைய டவுட்டு   மாறி மாறி வந்துச்சு... அதை எல்லாம் பதிவுல சொன்னா, ஆட்டோ சுமோ எல்லாம் பிளேன்ல ஏறி எங்க வீடு தேடி வரும். எனக்கு எதற்கு வம்பு?  நான் கேக்கலப்பா ...நான் ஒண்ணும் கேக்கல....  ஹையா...... நானும் தமிழ் பொண்ணு தான்...... அப்படியே நீதி நியாயம் தர்மம் என்று பேசாமல்,  வாயை நானே பொத்திக்கிட்டு, கம்முனு  வேற வேலை பார்க்க போறேன் பாருங்க..... 


ஒரு முறை,  காந்தி தீவிரமாக சுதந்திர போராட்டத்தில இறங்கினப்போ,  ரவீந்தரநாத் தாகூர் (அவர் யாருன்னு யாராவது கேட்பீங்களே .... அவர் தாம்ப்பா, தேசிய கீதம் எழுதிய மகான்) காந்தி கிட்ட வந்து சொன்னாராம்:  " இந்திய மக்கள், இது வரை மன்னராட்சியில் பிறகு வெள்ளையர் ஆட்சியில் என்று மட்டுமே இருந்து பழகியவர்கள்.  இரண்டிலுமே ஆட்சி செய்கிறவர்களுக்கு அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி என்றால் என்ன சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.   அதன் பின், சுதந்திர இந்தியாவை அவர்கள் கையில் கொடுங்கள்."
அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"
மக்களை அவர் தயார் செய்வதற்குள், அவரே எதிர்பார்க்காத கலவர நிலையை நாடு சந்திக்க..... பிறகு என்ன நடந்தது என்று வரலாறு சொல்லுமே.   
அப்படியும் இப்படியுமா இத்தனை வருடங்கள் சுதந்திரம் வாங்கி ஓடி போயாச்சு.  மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வைக்கும் முதல் படி - பாடம்  எப்பொழுது நடக்கும்?  தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்?  


அடுத்த வாரம், எல்லோரும் முடிந்த அளவு முயற்சி செய்து வோட்டு போடுங்க.  A/C ரூம் ல இருந்துக்கிட்டு - என்னை மாதிரி வெளிநாட்டில் இருந்துக்கிட்டு கரிசனத்துடன் பதிவு போட்டு கிழிக்கிறதை விட,  வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும்.  

இந்த கட்சி விட்டா அந்த கட்சி  ... இந்த இலவசம் விட்டா அந்த இலவசம்  என்று இருக்காமல்,  தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு,  "நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி  - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள்.  வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..... 


எங்க அப்பா இருக்கும் வரை, இப்படித்தான் தேர்ந்தெடுத்து வோட்டு போடுவார்.  ஒரு முறை, அவர் வோட்டு போட்டு வந்த ஆளுக்கு, தேர்தல் முடிவுகளில் விழுந்த வாக்குகள் மொத்தம் :  61 
 அந்த நல்ல மனிதரை நம்பி வாக்களித்தவர்கள் அறுபது பேர் தான்.  அதில் எத்தனை பேரு அந்த வேட்பாளரின்  குடும்பத்து உறவினர்களோ?   நிச்சயமாக யார் யாரு தனக்கு வோட்டு போட்டாங்க என்று அடையாளம் கண்டு பிடித்து நன்றி சொல்லி  இருப்பார்.  ஆனால்  இன்று வரை, யார் அந்த 61 வது ஆள் என்று தலையை பிச்சிக்கிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். 

இந்த நிலைமை, நம்மூரு அரசியல் நிலவரத்தின் சிரியஸ் விஷயமா இல்லை சீரியஸ் விஷயமா?  



Tuesday, November 23, 2010

வாயை வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்கலாம்

 நானும், ஒரு இந்திய நண்பரும், இரண்டு அமெரிக்கர்களுடன் (மருத்துவ மாணவர்கள்)  சும்மா பேசி கொண்டு இருந்தோம்.  பேச்சு  - அங்கே சுத்தி - இங்கே சுத்தி -  ரைட்டுல திரும்பி -   லெஃப்ட்ல கட் பண்ணி -   ஒரு ரவுண்டு அடிச்சு நேரா  இந்திய கலாச்சாரத்தில் வந்து விழுந்தது.  நாங்களும்  பெருமையாக இந்தியாவில் இன்னும் மேலோங்கி இருக்கும் "Arranged Marriages"  பற்றி சொல்ல ஆரம்பித்தோம்.   "ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை முதல்,  இந்தியாவின் குறைந்த விவாகரத்து விகிதம் வரை எதையும் விட்டு வைக்கவில்லை.

அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவர்களில்,  Ben என்பவர்   ஆங்கிலத்தில்,  "நான் கேட்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள்.   நான் நேற்று தான், எனது வகுப்பில், உலகம் முழுவதும்  இருக்கும் பிரச்சனையான AIDS பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.   உலக நாடுகளிலேயே, AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது  இடத்தில் இந்தியா இருக்கிறது.   நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது?  வட இந்தியாவை விட, தென் இந்தியாவில்  ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகம் பரவி உள்ளதாகவும் statistics  இருக்கிறதே," என்று சந்தேகம் கேட்பது போல  அணுகுண்டு கேள்விகளை வீசி கொண்டு இருந்தார்.

http://www.indexmundi.com/g/r.aspx?t=10&v=35
http://www.indexmundi.com/map/?v=35&l=en&t=10

பேச்சு,  பேச்சாத்தான் இருக்கணும்.  இப்படி லா பாயிண்ட் எல்லாம்  வச்சு கேள்வி கேட்டு "தாக்க" கூடாது என்று சொல்லணும் போல இருந்தது.  ஆனால்,  என் மூளை -    திருவிழா நேரத்துல, அம்மா அப்பா கிட்ட சொல்லிக்காமலே  பலூன்காரன் பின்னால போற சின்ன புள்ளையாட்டம் -  மனசுக்குள்ள ரெட் சிக்னல் அடிக்கவும்,  என் கிட்ட சொல்லிக்காமலே,  ஹாய்யா எங்கேயோ போய்டுச்சு.   "மேல்மாடி"யில்  ஆள் இருக்கிறாப்புல தெரியல.   பரீட்சையில நல்ல கேள்வி கேட்டாலே, தலை நாலு நாளுக்கு வலிக்கிற மாதிரி  சொரிஞ்சி யோசிப்பேன்.  என்னை நிக்க வச்சு நல்லா கேள்வி கேக்குறாங்களே, இதுக்கு நாலு ஆளை வச்சு சொரிஞ்சி யோசிக்கணும் போல.


கூட இருந்த இந்திய நண்பருக்கு வந்ததே கோபம்!  "என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க?  ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை  வச்சு - அப்படி  சொல்லாதீங்க, "  என்று பாய்ந்தார்.

Ben விடாமல், "ஏன்?  அவர்களும்  இந்தியர்கள் - தென் இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.

என்னுடைய லொடலொட வாய், இப்போ "கப்சிப்"!  நண்பரும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் தானே?

" ஒரு அமெரிக்க பெண்ணை, கல்யாணம் கட்டிக்கணும்னா நான் யோசிப்பேன். ஆனால், தென் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கணும்னா, நான் யோசிக்க தேவையில்லை," என்று சூடு குறையாமல் சொன்னார்.

அவரது கையை பிடித்து அழுத்தினேன்.  அமெரிக்காவுல,  இன்னைக்கு நடக்கப் போகும் கொலைக்கு நான்தான்  சாட்சியா அப்படின்னு தோணுச்சு.
"AIDS சர்ச்சை:  தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!"  அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது. 
"கோன் பனேகா HIV? -  ஆந்திர மதராசி? or சென்னை மதராசி?"  அப்படின்னு  வட நாட்டு ஆளு  ஒருத்தர்,  ஹிந்தி  சேனல்ல ஒரு டிவி ப்ரோக்ராம் நடத்துற மாதிரி தெரிஞ்சுது. 

                                       Ben சிரித்துக் கொண்டே, " அமெரிக்கர்கள் அனைவரும் AIDS   நோயாளிகள் என்று எதற்கு நினைக்கிறீர்கள்?  இந்த சர்வே பார்த்த பிறகும், இந்தியாவில் அனைவரும் அப்படித்தான் என்று நான் நினைக்கவில்லையே, " என்றார்.

என் நண்பரோ,  "இந்தியாவில் யாரோ செய்யுற தப்புக்கு, எதற்கு மொத்த  இந்திய  பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும்? பெரும்பான்மையோர் ஒழுங்காத்தான் இருக்கோம்,"என்றார்.
 Ben , நண்பரின் தோளைத் தட்டி கொடுத்த படி,  "நாட்டில் இருக்கும் ஒரு  problem பற்றி பேசாவிட்டால்,  நாட்டில் அந்த problem இல்லவே இல்லை  என்று அர்த்தம் இல்லை.  It is just a form of denial. பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும்.  அதை ஒழிக்க முடியும்," என்று கூறி விட்டு தன் நண்பருடன் சென்று விட்டார்.

புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுத்து இருப்பீங்க .... "அசட்டு "  புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுக்க ஆள் தேடிக்கிட்டு இருந்தீங்கனா,   என் நண்பருக்கு தான் அன்னைக்கு கொடுத்து இருப்பீங்க..... யெம்மா ... என்னா அசடு! என்னா வழிசல்! என்னா சமாளிச்சிஃபையிங்  ஆஃப் இந்தியா ஸ்மைல்!


  அவர்கள் சென்றதும் என்னிடம்,  " அமெரிக்கர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கு தெரியும்.  அவர்கள், இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாம் நினைக்கிறாங்களோ? "

"நான் வேணா ஒரு சர்வே எடுக்கவா?" என்று கேட்டேன்.  

""ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்.  அதையே கண்டுக்காமல் தான், இந்திய கலாச்சாரம் பற்றி பேசிக்கிட்டு இருக்கேன்.  நம்ம நாட்டில் நடக்கிற,  தெரிஞ்சே செய்யுற சில  தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்?   நான் சுவத்துல முட்டிக்கிறதா?  மரத்தில முட்டிக்கிறதா?  எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா? என்று சர்வே எடுத்து சொல்லுங்க," என்று ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா காட்டினார்.

பஞ்ச் டயலாக் அடிக்க என் மூளையின் உதவியை மீண்டும் தேடினேன்.  "மேல்மாடி"யில்  அமைதியாக நின்று, "என் புருஷன்தான் - எனக்கு மட்டும் தான்," என்று  என் கணவரின் முகம் பார்த்து   முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.  தொந்தரவு  செய்யாமல் நடந்தேன்.

இந்தியாவில் AIDS ஒழிப்பு பற்றிய விவரங்களுக்கு:
   http://www.avert.org/aidsindia.htm

ஹலோ

Wednesday, September 15, 2010

கவர்னர்னா கொம்பா முளைச்சு இருக்குது?

இன்று பெருசா காமெடி எல்லாம் இல்லைங்க.....  பிடிக்காதவங்க,  "அபௌட் டர்ன்,"  ப்ளீஸ்.  இல்லை, அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசப்  போறா என்று ஒரு ஆர்வத்துல இருக்கிறவங்க மேற்கொண்டு  வாசிங்க.

நாங்கள் வழக்கமாக செல்லும் ஆலயத்தில்,  ஒரு விழா.  அங்கே Buffet style dinner இருந்தது.   நாங்களும் மற்றவர்களுடன் வரிசையாக நின்று கொண்டு இருந்தோம்.  நீண்ட வரிசையில்,   மிகவும் பின்னால்தான் நாங்கள் நின்று கொண்டு இருக்க, எதேச்சையாகத் திரும்பி பார்த்தேன்.  எங்கள் பின்னால்,  எங்கள்  'பங்கு கோயில் தந்தை'  (Parish Priest) மற்றும்  Diocese Bishop இரண்டு பேரும்  உணவுக்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.  அவர்களது humility பார்த்து அசந்து விட்டு, ஊரு பழக்கத்திற்கு மரியாதையுடன், "Father, why don't you sit down?  We can bring some food and serve you, " என்று சொன்னதும் ஆச்சர்யமுடன் பார்த்தார்கள்.  "Thank you.  We are fine. we will serve  ourselves,"  என்று சொல்லிவிட்டு எங்களுடன் மிகவும் சாதரணாமாக உரையாட ஆரம்பித்தார்கள்.

அடுத்த அதிசயமாக, நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு,  dessert (இனிப்பு)  சாப்பிட ஆரம்பித்த வேளையில், எங்களுக்கு முன்பே சாப்பிட்டு முடித்து விட்டிருந்த   Parish Priest,   ஒவ்வொரு டேபிள் ஆக சென்று சாப்பிட்டு முடித்தவர்களின் தட்டுக்களை எடுக்க ஆரம்பித்து விட்டார்.   ஒரு பெரிய basin உள்  எல்லாவற்றையும்  வைத்து எடுத்துக் கொண்டு போய்,  கழுவும் இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து கொண்டு இருந்தார்.

எந்த வித மரியாதையும்,  சேவையையும் எதிர் பார்க்காமல், தன் பங்கு கோயிலின் வேலைகளை முடிந்த அளவு தானே செய்து கொண்டு இருந்தவரை பாராட்டி விட்டு பேச்சு கொடுத்தோம்.  தன்னடக்கத்துடன் சிரித்துக் கொண்டு,  எங்களிடம்  சொல்லிய விஷயங்கள், எங்களை ஆச்சர்யப் பட வைத்தன.

"எந்த ஒரு பதவியும் -  அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான்.  அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு,  அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல்,  பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான்  பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும்.  நீங்கள் இந்தியாவில் இருந்து வந்து இருப்பதால், இங்கு நடந்த ஒரு கதை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சொல்கிறேன்.

கிறிஸ்டியன் ஹெர்டர்  (Christian Herter)  என்பவர்,  Massachusetts மாநிலத்தில் கவர்னர் ஆக இருந்து விட்டு,  இரண்டாம் முறையாகவும் அந்த பதவிக்காக தேர்தலில் நின்றார்.   காலையில் இருந்து சாப்பிடாமல்,  தேர்தல் விஷயமாக அங்கும் இங்கும் வேலை நிமித்தம் அலைந்து கொண்டு இருந்தவர்,   மதியம் மிகுந்த பசியுடன்,  ஒரு ஆலயத்தில் நடந்து கொண்டு இருந்த Barbecue உணவுக்கு வந்தார்.  வரிசையில் நின்று,  தன் முறை வரும் வரை காத்து இருந்தவர்,  மற்ற சைடு டிஷ் வாங்கி கொண்டு,   தன் தட்டை கோழி பரிமாறி கொண்டு இருந்த பெண்ணிடம் நீட்டினார்.  Barbecue chicken piece ல் ஒரு துண்டு மட்டும்  வைத்து விட்டு, அடுத்தவருக்கு பரிமாற அந்த பெண் முனைந்தார்.  

மிகுந்த பசியுடன் இருந்த கவர்னர்,  " Excuse me.  எனக்கு இன்னொரு துண்டு சிக்கன் தர முடியுமா?" என்று கேட்டார்.
 அந்த பெண்ணும், " மன்னிக்கவும்.  ஒரு ஆளுக்கு ஒரு சிக்கன் பீஸ் தான் தர வேண்டும் என்று எனக்கு உத்தரவு இருக்கிறது," என்றாள்.
 
பொதுவாக எளிமை விரும்பியான கவர்னர்,   பசியினால்  தனது பதவியின்  பலத்தை பார்க்க முடிவெடுத்தார்.
"நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா?  நான் தான் இந்த மாநிலத்தின் கவர்னர்."
அந்த பெண்ணும் விடாமல்,  " நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா?  இந்த கோழி ரோஸ்ட்டை  சரியாக பரிமாற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள பெண்.  இப்பொழுது அடுத்தவர்க்கு வழி விடுங்க, " என்றார்.
("Do you know who I am?   I am the lady in charge of the chicken to be served. Now move along, mister!")

கவர்னர் ஆக இருந்தாலும்,   அந்த இடத்தில் அவருக்கு அதிகாரமோ சலுகையோ இல்லை. அந்த பெண்ணின் பொறுப்புக்கும் கட்டளைக்கும் கட்டுப்பட்டவர் தான் கவர்னர் என்பதை புரிந்து கொண்டவர்,  தனக்கு கொடுக்கப்பட்ட உணவுடன் மறு பேச்சு பேசாமல் சென்றார்.

அவரவர் தங்கள் பணியில், தங்களுக்கு கொடுத்து இருக்கும் கடமைகளை தாழ்மையுள்ள மனசாட்சியுடன் செவ்வன செய்ய வேண்டும்.   இதில் ஆணவம்  எதற்கு?  பதவி தரும் மரியாதையில் மயங்கியவர்கள்,  பதவி போன பின், மன உளைச்சல்க்கு தான் ஆளாக வேண்டும்," என்று சொல்லி முடிக்கவும்,   எனக்கு தலை சுற்றி கீழே விழாத குறை.

என்னங்க...... ஒரு பந்தா செய்யத் தெரியாத அரசியல்வாதியா?    நிஜமா -  இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுத்து,   பெரிய மாலை போட்டு,  பொன்னாடை போர்த்தி,  தங்க கேடயம் கொடுத்து,  ஜால்ரா அடித்து - சே, ச்சே,  தப்பு ....தப்பு...... வாழ்த்தி பேசி,   முதலிடம் முன்னுரிமை கொடுத்து,  காலில் விழுந்து,  தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, .............   ஓ!

ஆமா, நம்மூரில் அரசியல் வாதிகளுக்கு இம்பூட்டும் பண்றாங்களே, இது தனிப்பட்டவரின் மனிதாபிமானத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பதவி செல்வாக்குக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை,  அவரின் பண பலத்துக்கு கொடுக்கிற மரியாதையா?  இல்லை, இத்தனையும் பண்ணலைனா,  வூட்டுக்கு ஆட்டோ வருமே, அந்த பயத்துல பண்ற மரியாதையா?   இல்லை, இப்படி பண்ணா, நமக்கும்  சந்தடி சாக்குல கொஞ்சம் ஏதாவது பலன் கிடைக்குமே என்று நினைத்து கொடுக்கிற மரியாதையா?    ம்ம்ம்ம்ம்ம்.........  என்னவோ போங்க...... அந்த காலத்துல இருந்து அரசனை துதி பாடி..... துதி பாடி............................. ஜனநாயக நாட்டிலேயும் ஜால்ரா அடிக்கிறதே  புளப்பா போச்சு!

 இந்த மாதிரி, நம்ம ஊரிலேயும் இருந்த நல்ல அரசியல்வாதிகள் பத்தி - நடந்த சம்பவங்கள் பற்றி மக்கள் மறந்து போகாம இருக்க நிறைய எழுதுங்கப்பா ..... இல்லைனா, இப்போதைக்கு:
"கடமை (குடும்பத்துக்கு மட்டும்)
கண்ணியம் (அப்படினா கிலோ என்ன விலை?)
கட்டுப்பாடு (ஹா, ஹா, ஹா, ஹா, ..... செம.....)"
என்று சொல்றவங்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு, மக்கள்  நொந்து நூடுல்ஸ் ஆகித்தான் இருப்பாங்க....
என்ன என்னவோ கொள்கை, கோட்பாடு, தேர்தல் அறிக்கைகள் கொடுத்தாலும்,  எந்த அரசியல்வாதியும் சொல்ல வருவது என்னவென்றால்,  " நான் காமெடி பீஸ் ஆவதை தடுக்க, மக்களை காமெடி பீஸ் ஆக்கிடுவேன்." 
  
ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம,  ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப  வச்சுட்டாங்களே!



Tuesday, September 7, 2010

என்ன சொல்றாங்க என்றே தெரியலப்பா.....

  டொடொயிங்..... டோடிங்...... டொடொயிங்......



வணக்கம்.  செய்திகள் வாசிப்பது,  தம்பட்டம் தாயம்மா:

தலைப்பு செய்திகள்:   லாஜிக்கே இல்லாத லாஜிக் செய்திகளுக்கு இந்தியாவின் பிரதம மந்திரியின் அறிக்கைகள் என்றும் குறைவு வைத்ததில்லை. 

 
 தானிய கிடங்குகளில்,  தானியங்கள் கெட்டுப் போகுமுன்  அதை ஏழைகளுக்கு இலவசமாக  வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்  பரிந்துரைத்து உள்ளது.  வறுமை கோட்டின் கீழே இருக்கும்   37 % மக்களுக்கு உணவை அப்படி வழங்குவது சாத்தியப்படாது என்று பிரதமர் தாழ்மையுடன் தெரிவித்து உள்ளார்.  ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் வண்ணம் செய்து இருக்கிறோம்.  அதுவே போதுமானது.  மேலும், இலவச தானியங்கள் கிடைக்கும் படி செய்து விட்டால்,   மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு, அதிகம் விவசாயம் செய்ய ஒரு உந்துதல் இல்லாமல் போய் விடும்.  பிறகு,  உணவே இல்லாது போய்விடும். அப்படி போன பின்,  இலவசமாக வழங்க உணவு இருக்காது என்று கூறி உள்ளார்.  

http://economictimes.indiatimes.com/news/economy/agriculture/Distributing-free-foodgrain-not-practical-PM/articleshow/6506073.cms

இதுல இருக்கிற லாஜிக் யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க..... நானும் தெளிஞ்சிக்கிறேன்.  சாரி, தெரிஞ்சுக்கிறேன். உணவு தானியங்கள் கெட்டு போனாலும் பரவாயில்லையா?    ஓ!   ஒருவேளை பிரதமர், இப்பொழுதுதான் ரஜினியின் "சிவாஜி" படம் பார்த்து இருப்பாரோ?   எல்லோருமே - குறிப்பாக ஏழைகள் - இலவச தானியம், இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி பெற்றுகொண்டால்,  ஒரு incentive இல்லாமல்,  சோம்பேறிகளாய் ஆகிவிட்டு, வேலை செய்யாமல் - விவசாயம் பார்க்காமல் - அப்புறம் நாட்டுல எல்லோருக்கும் சோத்துக்கு வழி ஏது?   விவசாயிகளை பட்டினி போட்டாதான் ஒழுங்கா வேலை செய்வாங்க என்பது போல இருக்குதே...... இந்த சுப்ரீம் கோர்ட் வேற ........ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம..... என்னவோ போங்க..... எல்லாமே அந்த "காசிமேடு" ஆதிக்கே வெளிச்சம்! 


வெட்டி பேச்சு சித்ரா:  தாயம்மா, டேக் இட் ஈஸி...... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி டென்ஷன் ஆகுற?  எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கிறது. உனக்கு லாஜிக் இடிக்குது...... பிரதமருக்கு பிரக்டிகல் மேட்டர் இடிக்குது....உனக்கு நான் புரிய வைக்கிறேன், பாரு.
ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு  தன்கிட்ட இருக்கிற குறைகள்தான்  பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம்.  எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை  ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது?  நீங்களே பாருங்க.......!!!   


 தம்பட்டம் தாயம்மா:   ஆஹா.... நான் என்ன சொல்ல வந்தேன்..... நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கிற? ஏன் இப்படி?
வெட்டி  பேச்சு சித்ரா:  அப்படித்தான்.   நான் இந்தியன் ஆச்சே! 





Thursday, March 18, 2010

தவிச்ச வாய்க்கு தண்ணீர்..... save the water!

" பணத்தை தண்ணீரா செலவழிச்சு, அவள் பிறந்த நாளை கொண்டாடினாங்க....."
"அவ்வளவு சிக்கனமாகவா கொண்டாடினாங்க?"
"நீ வேற.....!  ஹிந்து பேப்பர் பார்க்கலியா?"

((photo: Thanks to Outlook India)http://www.dnaindia.com/img/1359680.jpg


ஹிந்து பேப்பர் மட்டும் இல்லை. இப்போ, BBC நியூஸ் வரைக்கும் பார்த்துட்டேன்.   :-(

பக்கத்து மாநிலம் தானே எக்கேடோ போகட்டும் என்று விட முடியுமா?
"தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியவர் வந்த மாநிலத்து ஆளாச்சே. பாத்துட்டு நெஞ்சு பொறுக்குதில்லை, இந்த நிலை, குலை கெட்ட மனுஷியை கண்டால்......
 2010 - மகளிர் தினத்தை ஒட்டி - மகளிர்க்கு திருஷ்டி பூசணிக்காயாய் இவளை பற்றிய செய்தி.
தண்ணீரை வீணாக்காதீங்கனு விழிப்புணர்வை கொண்டு வர, உலகமே அலறுகிற நேரத்துல, பணத்தை வீணாக்கி ஒரு பிறந்த நாள் திருவிழா.

அடுத்த வருகிற வம்சங்களுடைய தவிக்கிற வாய்களுக்கு தண்ணி இருக்கட்டும் என்று சொன்னா,  இங்கே ஒருத்தி, இப்போவே அவளுடைய மாநில மக்களின் வாயி வயிறு எல்லாம் காய போட்டுட்டு, இப்படி கூத்தடிச்சா?????

வரலாறை திருப்பி பார்த்தால், மாயாவதியின் மாய லீலைகள் 2003 வருடமே பரபரப்பை ஏற்படுத்தி இருக்குங்க.  51 கிலோ கேக் வெட்டி, 100,000 லட்டுக்கள்,   60 quintals  காணக்கில் சிறப்பு மலர்கள்  கொண்டு கொண்டாட்டம் களை கட்டி இருக்கு.  இரண்டு பொருட்காட்சி விழாக்களும் நடந்துருக்கு.  எல்லோரும் அப்போதே சாதாரணமா எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க.  இப்போ விரலுக்கு ஏத்த வீக்கமா, " அப்போவே நான் தில்லாலங்கடி. இப்ப நான் ஜகஜால கில்லாடி. சும்மா விடுவேனா?" என்று வூடு கட்டி அடிச்சு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க.

முன்னாள் ஆசிரியை முதல் மந்திரியா வந்தா, நாம் எல்லா விஷயத்திலேயும் முந்திக்கலாம் என்று ஆசை மயக்கத்தில் இருந்த உத்தர் பிரதேச மக்கள், முகத்தில் அடிச்சு எழுப்ப தண்ணீரை வீணாக்காமல் சேர்த்து வைக்க வேண்டும்.  இதை அவர்களுக்கு  மட்டும் வந்த சோதனையா நினைச்சு சும்மா இருக்கமுடியாது. தனக்கு, பிரதம மந்திரி பொறுப்பு மேல ஒரு ஆசை என்று சொல்லி இருக்காங்க.  அப்படி ஆயிட்டாங்கனு வைங்க, இந்தியாவுக்கே மஞ்சாத் தண்ணி தெளிக்க வேண்டும். தண்ணீரை இப்போவே சேமிச்சு வைங்க.

இந்த மாதிரி தலைவர்கள் ஆட்சியில், மக்கள் கண்களே வற்றாத ஜீவநதிகளாய் இருக்கும். 
தேசிய நதிகள் எல்லாம், தேசிய, மாநில தலைவர்கள் வீடுகளுக்கு மட்டும் கால்வாய் வெட்டி திருப்பிவிடப் பட்டிருக்கும்.

மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கு, நஷ்ட ஈட்டு தொகைக்கு எல்லாம் கஜானா காலி என்ற கையை விரிச்ச மகராசி,  தன்னை விட உயரமான அளவில் ஒரு லஞ்ச பண மாலையை பெருந்தன்மையா வாங்கி கொண்டு, தன் எடைக்கு மேல எடை அளவு கொண்ட கேக் வெட்டி , ரொம்ப "க(இ)ஷ்டமான" மன  நிலையோட பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. எல்லோரும் அதை பார்த்துட்டு, நமக்கு என்ன என்று இந்த விஷயத்துல கை கழுவிட்டு போகணும்னா கூட,  தண்ணி வேணும். ஒரு பில்லியன் மக்களுக்கு மேல கை கழுவனும்னா எவ்வளவு தண்ணி வேண்டும். தண்ணியை வீணாக்காமல் சேமிச்சு வைங்க.

நம்ம வெட்டி பேச்சு மாதிரி, மக்களே சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுறாதீங்க.
பணத்தையும் அந்த கால தண்ணீர் மாதிரி வீணாக்காமல், இந்த கால தண்ணீர் மாதிரி சிக்கனமாக செலவழிச்சு -  நம் நலன் மட்டும் கருதாமல், நமது சந்ததி நலன் கருதியும் ஆக்க வேலைகள் செய்தால் நம்ம நாடு உருப்படும் என்று நம்புவோம்.

  எல்லா  மாநிலத்து முதலை மந்திரிகள் கவனிக்கவும் - நீங்க பல சந்ததிகளுக்கு சேத்து வச்சுட்டீங்க. மத்தவங்க வாழ உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாதீங்க, ப்ளீஸ்.  நீங்கள்  மக்கள் தலையில் தண்ணி தெளிச்சு, உங்கள் நலனுக்கும் எங்கள் நலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியது போதும்.

Conserve the water - Save the water - Save the people of India!!!

Wednesday, November 4, 2009

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை


விஜய் அன்டோனியின், "ஆத்திச்சூடி ... ஆத்திச்சூடி  ...... இது new age ஆத்திச்சூடி !" பாடலில் வரும் நியாயமான கேள்வி போல், "என்ன சித்ரா, நீங்க எப்ப பாத்தாலும் உங்களை பற்றியே எழுதிக்கிட்டு இருக்கீங்களே. அரசியல் பத்தியும் நாட்டு நடப்பை பற்றியும் எப்ப எழுத போறீங்கனு தெரியுமாஆஆஆஆ.??????" னு கேக்கிறவங்களுக்கு: "கேளு, மக்களே கேளு - வாயை மூடிக்கிட்டு கேளு -  மாலு நகி மாலு - அரசியல் நகி மாலு. இந்த bloggai படிச்சு புட்டா உனக்கு முளைக்கும் வாலு!" என்று அந்த பாடலில் இருந்தே அநியாயமான பதிலும் copy அடிச்சுட்டு எழுதுறேன்.

இன்னொரு காரணமும் உண்டு. நாளைக்கு யாராவது, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்டால் அரசியல் கட்சிகள்  பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்லலாம் அல்லவா? நிறைய பேர் இப்படித்தான் நாட்டு மேல அக்கறை கொண்டு பாட்டு எழுதிறாங்க, blog எழுதுறாங்க, பேட்டி கொடுக்கிறாங்க, வசனம் பேசுறாங்க, புலம்புறாங்க, திட்டுறாங்க, ஏன் - ஒரு படி மேல போய் உண்ணாவிரதம் கூட இருக்குறாங்க ....... இதெல்லாம் மாற்றம் ஏதும் கொண்டு வராத வழிமுறைகள் - ஆக்கப் பூர்வமாக நாட்டுக்கு துரும்பை கூட எடுத்து போடாத வெட்டி பேச்சு என்று தெரிந்தும் ...................

பாரதியார் பாடல்கள்,  காந்தியடிகள் பேச்சு, திருப்பூர் குமரன் செயல் எல்லாம் வெள்ளையனை வெளியேற்றி சுதந்தரம் பெற்று தரும் - புரட்சி வரும் அளவுக்கு -  அனலுடன் இருந்தன.  நம் blogging,  "நாட்டு நடப்பு" reality மறக்க
நல்ல time-pass. சூப்பர் திண்ணை பேச்சு - டீ கடை பெஞ்சு அரட்டை.

புது Blogger சித்ராவின் பேட்டி: "அரசியல் சேட்டை" பத்திரிகை நிருபர் வருகிறார்.

நிருபர்:   வணக்கம்.
சித்ரா:    வணக்கம். கொஞ்ச blog matter வந்ததிலேயே, இப்படி ரித்தீஷ் மாதிரி பேட்டி கொடுக்கும் அளவு வருவேன்னு எதிர் பாக்கலை. எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். இவ்வளுவுக்கும் நான் அம்பது ரூபா கூட செலவு பண்ணலை. பிரியாணி பொட்டலம் ஒண்ணு கூட வாங்கி கொடுக்கலை.

நிருபர்:   மன்மோகன் சிங் ஆட்சி பத்தி?
சித்ரா:    அவங்க ஆச்சி உயிரோட இல்லை. சோன்யா காந்தி மேடம் அவங்க ஆச்சி வயசு இல்லை. அதானல அவர் ஈன குரலில் strongaa ஏதாவது பேசி செய்ய முயற்சிக்கிரார்னு நான் நினைக்கிறேன்.

நிருபர்:    ADMK future?
சித்ரா:     அம்மா செல்வியா ஏன் இருந்தோம்னு நினைக்கிறாங்க. வாரிசு அரசியல் policy பத்தி தெரியாம தத்து எடுத்த புள்ளையையும் விலக்கிட்டு அவங்க futureaiye கேள்வியா பாக்கிறாங்க. சசிகலா வயசு கம்மினாலும் ஏதோ பொண்ணு role ல சமாளிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னதான் close ஆனாலும் தோழி வேறு; குடும்பம் வேறு.

நிருபர்:     நீங்க ADMK future பற்றி கேட்டா, ஜெயலலிதா future பற்றி பேசுறீங்க.
சித்ரா:      ADMK வேறு; ஜெயலலிதா வேறா? என்ன சொல்றீங்க? ஜெயலலிதாவுக்கு அப்புறம் ADMK நிலைமை என்னன்னு அந்த அம்மாவே யோசிக்காதபோது நான் ஏன் யோசிக்கணும்?

நிருபர்:     நீங்க விஜயகாந்த்'s DMDK கட்சியை ஆதரிக்கிறீர்களா?
சித்ரா:      கேப்டன் களம் இறங்கிட்டாரு. அவர் இரண்டு மகன்களும் இன்னும் கொஞ்சம் பெரிதானதும் முழு மூச்சா DMK குடும்ப அரசியல் மாதிரி வர நல்ல வாய்ப்பிருக்கு.  இதுக்கு மேல என் கருத்தை சொல்லி நான் ஆதரிக்கிறேனா இல்லையானு  என் ரசிகர்களை influence பண்ண நான் விரும்பலை.

நிருபர்:    ப.ம.க.????
சித்ரா:     பக்காவான  மங்கி (monkey) கட்சி.  இவருக்கு மற்ற கட்சிகளின் support வேணும்னு மரம் விட்டு மரம் தாவுவார். மக்களுக்கு அப்படி ஒரு கட்சி இருக்கு, அப்படி ஒரு கட்சி தலைவர் இருக்காருன்னு மறந்திட கூடாதுன்னு அறிக்கை மேல அறிக்கை விட்டு attendance கொடுப்பார். குடும்ப அரசியல் பண்ண மாட்டேன்னு ஆரம்பத்தில்  ராமதாஸ் சத்தியம் பண்ணினதாக ஞாபகம். அவர் மகன் MP ஆகலையா? அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா......

நிருபர்:     சரத் குமார் கட்சி பற்றி?
சித்ரா:      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  (அ.இ.ச.ம.க. - a.k.a. - அகில இளிச்ச சன மங்கி (monkey) கழகம்) என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்சி பெயரை வச்சிருக்கார். மொட்டையா சரத் குமார் கட்சின்னு நீங்க மட்டும் இல்லை, எல்லாரும் சொல்றது சரி இல்லை. 16 வயதினிலே படத்தில் சப்பாணி கமல், மயிலிடம், "என்னை யாரு கோபால்னு கூப்பிடுறா? சப்பாணி சப்பாணினுதான் கூப்பிடுறாங்கன்னு" அங்கலாச்ச மாதிரி நேத்து கூட சரத்குமார் என்ட்ட புலம்பினார். கட்சி பெயரையே மக்கள் தெரிஞ்சிக்க முயற்சிக்கலை. கட்சியப் பற்றி?

நிருபர்:    அப்போ கார்த்திக் கட்சியை பற்றி?
சித்ரா:      ஒரு நிமிஷம். (google....google.....google....)
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - All India Parliamentary People's Party - 
(AIPPP) - அய்யோ பாவம் பரிதாபம் party.
 இதுவும் ஒரு கட்சி; அதுக்கும் ஒரு தலைவர்னு இருக்க விடுறாங்களே.  serious அரசியலுக்கும் வாழ்க்கைக்கும்  ஒரு comedy relief தேவைதான். அதுக்காக இப்படியா? அவர் comedy kingaa இல்ல அவர் கூட கூட்டணி வச்சிருக்கிற சரத்குமார் comedy kingaa னு ஒரு போட்டி வைக்கலாம்.

நிருபர்:     இப்போ ஒரு முக்கியமான கேள்வி: DMK பற்றி?
சித்ரா:       நாட்டை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்தை மட்டும் இல்லை -  நாட்டையே பங்கு போட்டு பிரித்து கொடுத்த ஒரு "உயர்ந்த" தமிழ் வரலாற்று நாயகனை குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அரசியல், குடும்பம், டி.வி., சினிமா, இலக்கியம், வியாபாரம் சேர்ந்த ஒரு கதம்ப குடும்பம்,  நாட்டை ஆள்கிறது. ஜன நாயக ஆட்சியா? அப்படினா இப்படிதான் போல  என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அர்த்தம் மாற்றத்  தெரிந்த சூத்திரதாரர்கள். மனைவி, துணைவி, இணைவி மற்றும் அவர்கள் மூலமுள்ள வாரிசுகள் கொண்டு நடத்தப்படும் action packed குடும்ப சித்திரம். இந்த மெகா மெகா சீரியல் இன்னும் எப்படியெல்லாம் போகும்? சிந்துபாத்திடம் கேட்க வேண்டும்.  மூன்றோடு  (அல்லது மூன்றை மட்டும்) நிறுத்திக் கொண்டதற்காக,  நான் தமிழ் மக்கள் சார்பாக கட்சி தலைவருக்கு  நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மனைவி, துணைவி, இணைவி மாதிரி அடுத்த  decent தமிழ் வார்த்தை அதிகார பூர்வமாக தமிழில் அறிமுகப் படுத்திவிட்டு தொடருமோ என்னவோ? தமிழ் வாழ்க!

நிருபர்:      நீங்க ஏன் நக்கலாவே பேசுறீங்க?
சித்ரா:       இதெல்லாத்தையும் சகிச்சுகிட்டு சினிமா, டி.வி. மோக போதைகளில் சுயநல லாபங்களில்  தன்னை அடகு வைத்து இருக்கும் தமிழ் மக்களிடம் இல்லாத நக்கலா? லொள்ளா? குசும்பா? தமிழ் வாழ்க! தமிழ் நாடு வாழ்க! தமிழ் மக்களை ஏலம் விட்டு வாழும் கட்சி தலைவர்கள் வாழ்க! இவர்கள்தான் அரசியல்வாதிகள் என்று வரை படுத்தி கொண்ட ஜன நாயகம் வாழ்க!

நிருபர்:      நன்றி. கடைசியா ஒரு கேள்வி.  நீங்க அரசியல் கட்சி  எப்ப ஆரம்பிக்க  போறீங்க?
சித்ரா:       பிரியாணி பொட்டலம் வாங்க sponsors கிடைக்கணும். ஒரு டி.வி. சேனல் ஆரம்பிக்கணும். இப்போ கிண்டல் பண்ண அத்தனை கட்சிகளோடும் சந்தர்ப்பம் பார்த்து கூட்டணி வைக்க சந்திச்சு பேசணும். எனக்கு அடைமொழி பெயர்கள் கொடுக்க நண்பர்களிடம் கெஞ்சணும்.  வசூல் ராஜாக்களை சந்திக்கணும். publicity க்கு ஏதாவது ஏடாகூடமாக நடத்தி  காட்டணும்.  போஸ்டர் எழுத ஒட்ட ஆள் பிடிக்கணும். அறிக்கை நிறைய விடணும்.  ஒரு universitya சரி கட்டி doctor பட்டம் வாங்கணும். எல்லாத்துக்கும் மேல சினிமாவில் ரெண்டு படமாவது நடிக்கணும். போங்க சார். எனக்கு இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்ல. வந்ததும்............