Tuesday, November 23, 2010

வாயை வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்கலாம்

 நானும், ஒரு இந்திய நண்பரும், இரண்டு அமெரிக்கர்களுடன் (மருத்துவ மாணவர்கள்)  சும்மா பேசி கொண்டு இருந்தோம்.  பேச்சு  - அங்கே சுத்தி - இங்கே சுத்தி -  ரைட்டுல திரும்பி -   லெஃப்ட்ல கட் பண்ணி -   ஒரு ரவுண்டு அடிச்சு நேரா  இந்திய கலாச்சாரத்தில் வந்து விழுந்தது.  நாங்களும்  பெருமையாக இந்தியாவில் இன்னும் மேலோங்கி இருக்கும் "Arranged Marriages"  பற்றி சொல்ல ஆரம்பித்தோம்.   "ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை முதல்,  இந்தியாவின் குறைந்த விவாகரத்து விகிதம் வரை எதையும் விட்டு வைக்கவில்லை.

அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவர்களில்,  Ben என்பவர்   ஆங்கிலத்தில்,  "நான் கேட்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள்.   நான் நேற்று தான், எனது வகுப்பில், உலகம் முழுவதும்  இருக்கும் பிரச்சனையான AIDS பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.   உலக நாடுகளிலேயே, AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது  இடத்தில் இந்தியா இருக்கிறது.   நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது?  வட இந்தியாவை விட, தென் இந்தியாவில்  ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகம் பரவி உள்ளதாகவும் statistics  இருக்கிறதே," என்று சந்தேகம் கேட்பது போல  அணுகுண்டு கேள்விகளை வீசி கொண்டு இருந்தார்.

http://www.indexmundi.com/g/r.aspx?t=10&v=35
http://www.indexmundi.com/map/?v=35&l=en&t=10

பேச்சு,  பேச்சாத்தான் இருக்கணும்.  இப்படி லா பாயிண்ட் எல்லாம்  வச்சு கேள்வி கேட்டு "தாக்க" கூடாது என்று சொல்லணும் போல இருந்தது.  ஆனால்,  என் மூளை -    திருவிழா நேரத்துல, அம்மா அப்பா கிட்ட சொல்லிக்காமலே  பலூன்காரன் பின்னால போற சின்ன புள்ளையாட்டம் -  மனசுக்குள்ள ரெட் சிக்னல் அடிக்கவும்,  என் கிட்ட சொல்லிக்காமலே,  ஹாய்யா எங்கேயோ போய்டுச்சு.   "மேல்மாடி"யில்  ஆள் இருக்கிறாப்புல தெரியல.   பரீட்சையில நல்ல கேள்வி கேட்டாலே, தலை நாலு நாளுக்கு வலிக்கிற மாதிரி  சொரிஞ்சி யோசிப்பேன்.  என்னை நிக்க வச்சு நல்லா கேள்வி கேக்குறாங்களே, இதுக்கு நாலு ஆளை வச்சு சொரிஞ்சி யோசிக்கணும் போல.


கூட இருந்த இந்திய நண்பருக்கு வந்ததே கோபம்!  "என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க?  ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை  வச்சு - அப்படி  சொல்லாதீங்க, "  என்று பாய்ந்தார்.

Ben விடாமல், "ஏன்?  அவர்களும்  இந்தியர்கள் - தென் இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.

என்னுடைய லொடலொட வாய், இப்போ "கப்சிப்"!  நண்பரும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் தானே?

" ஒரு அமெரிக்க பெண்ணை, கல்யாணம் கட்டிக்கணும்னா நான் யோசிப்பேன். ஆனால், தென் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கணும்னா, நான் யோசிக்க தேவையில்லை," என்று சூடு குறையாமல் சொன்னார்.

அவரது கையை பிடித்து அழுத்தினேன்.  அமெரிக்காவுல,  இன்னைக்கு நடக்கப் போகும் கொலைக்கு நான்தான்  சாட்சியா அப்படின்னு தோணுச்சு.
"AIDS சர்ச்சை:  தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!"  அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது. 
"கோன் பனேகா HIV? -  ஆந்திர மதராசி? or சென்னை மதராசி?"  அப்படின்னு  வட நாட்டு ஆளு  ஒருத்தர்,  ஹிந்தி  சேனல்ல ஒரு டிவி ப்ரோக்ராம் நடத்துற மாதிரி தெரிஞ்சுது. 

                                       Ben சிரித்துக் கொண்டே, " அமெரிக்கர்கள் அனைவரும் AIDS   நோயாளிகள் என்று எதற்கு நினைக்கிறீர்கள்?  இந்த சர்வே பார்த்த பிறகும், இந்தியாவில் அனைவரும் அப்படித்தான் என்று நான் நினைக்கவில்லையே, " என்றார்.

என் நண்பரோ,  "இந்தியாவில் யாரோ செய்யுற தப்புக்கு, எதற்கு மொத்த  இந்திய  பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும்? பெரும்பான்மையோர் ஒழுங்காத்தான் இருக்கோம்,"என்றார்.
 Ben , நண்பரின் தோளைத் தட்டி கொடுத்த படி,  "நாட்டில் இருக்கும் ஒரு  problem பற்றி பேசாவிட்டால்,  நாட்டில் அந்த problem இல்லவே இல்லை  என்று அர்த்தம் இல்லை.  It is just a form of denial. பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும்.  அதை ஒழிக்க முடியும்," என்று கூறி விட்டு தன் நண்பருடன் சென்று விட்டார்.

புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுத்து இருப்பீங்க .... "அசட்டு "  புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுக்க ஆள் தேடிக்கிட்டு இருந்தீங்கனா,   என் நண்பருக்கு தான் அன்னைக்கு கொடுத்து இருப்பீங்க..... யெம்மா ... என்னா அசடு! என்னா வழிசல்! என்னா சமாளிச்சிஃபையிங்  ஆஃப் இந்தியா ஸ்மைல்!


  அவர்கள் சென்றதும் என்னிடம்,  " அமெரிக்கர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கு தெரியும்.  அவர்கள், இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாம் நினைக்கிறாங்களோ? "

"நான் வேணா ஒரு சர்வே எடுக்கவா?" என்று கேட்டேன்.  

""ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்.  அதையே கண்டுக்காமல் தான், இந்திய கலாச்சாரம் பற்றி பேசிக்கிட்டு இருக்கேன்.  நம்ம நாட்டில் நடக்கிற,  தெரிஞ்சே செய்யுற சில  தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்?   நான் சுவத்துல முட்டிக்கிறதா?  மரத்தில முட்டிக்கிறதா?  எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா? என்று சர்வே எடுத்து சொல்லுங்க," என்று ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா காட்டினார்.

பஞ்ச் டயலாக் அடிக்க என் மூளையின் உதவியை மீண்டும் தேடினேன்.  "மேல்மாடி"யில்  அமைதியாக நின்று, "என் புருஷன்தான் - எனக்கு மட்டும் தான்," என்று  என் கணவரின் முகம் பார்த்து   முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.  தொந்தரவு  செய்யாமல் நடந்தேன்.

இந்தியாவில் AIDS ஒழிப்பு பற்றிய விவரங்களுக்கு:
   http://www.avert.org/aidsindia.htm

ஹலோ

106 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

Asiya Omar said...

சித்ரா,நல்ல விழிப்புணர்வையும் நிலைமையையும் சந்தடி சாக்கில சொல்லிட்டீங்க.அட இதுவும் ஒரு நாட்டுபற்று தான் போல.நண்பர் பாவம்,நீங்க பிழைச்சிப்பீங்க.

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா - ம்ம்ம்ம்ம் - அமெரிக்கரின் கேள்விகள் - நம்மைப் பதில் சொல்ல விடாமல் தடுத்து விட்டனவா .... விவாதம் என வரும் போது கோபப்படக்கூடாது - ஆக்க பூர்வமாகச் சிந்தித்துப் பதில் சொல்லவேண்டும்

Chitra said...

உண்மைதான் சீனா ஐயா. இதை பற்றி நிறைய வாசித்து வருகிறேன். அடுத்த முறை, இம்மாதிரி சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், விவாதிக்க தயாராக இருக்க வேண்டுமே....

கவி அழகன் said...

நல்ல படைப்பு எல்லாத்திலும் விழிப்பாக இருப்போம்

priyamudanprabu said...

நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது?
///


KETTANE ORU KELVI........

Unknown said...

same felling

வருண் said...

2.77 million in 1 billion population.

Is that 0.3 % are not following ஒருவனுக்கு ஒருத்தி?

What is the BIG DEAL here??? I would as that American. You should have asked him too! :)

Chitra said...

அந்த statistics எல்லாம், அப்புறம் வந்து படித்து தெரிஞ்சிக்கிட்டது, வருண். முதலிலேயே தெரிந்து இருந்தது என்றால், பதில் பேசி இருப்பேனே.

Chitra said...

Another article says that, many of the cases go unreported too. :-(

priyamudanprabu said...

புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுத்து இருப்பீங்க .... "அசட்டு " புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுக்க ஆள் தேடிக்கிட்டு இருந்தீங்கனா, என் நண்பருக்கு தான் அன்னைக்கு கொடுத்து இருப்பீங்க.....
///
hi hi

எல் கே said...

well i have read somewhere statistics wont give full and correct picture :)

வருண் said...

***logger Chitra said...

Another article says that, many of the cases go unreported too. :-(

November 23, 2010 9:01 PM***

Even if India has 100 million HIV +ve cases, one can theorize that only 10% of people dont follow the oruvanukku oruththi. I still feel, that is not good enough to criticize that "our culture" as NOT EXISTING! Nowhere culture is followed by 99.99% people.

It is sad but I dont think this (10%)is good enough to laugh at our culture! You know the wives are innocent in great % of cases too!

ஆனந்தி.. said...

ம்ம்..செம டாபிக்...வாழை பழத்தில் ஊசி ஏத்துற லாஜிக் இது தானோ...??)) அமெரிக்காவையும்,இந்தியாவையும் கம்பேர் பண்றதே பெரிய அபத்தம் இல்லையா சித்து?? நிச்சயம் தனிமனித ஒழுக்கம் மேலை நாட்டை விட நம்ம நாட்டில் அதிக அளவு தான் இருக்கு...அதில எந்த சந்தேகமும் இல்லை...இப்படி வேணும்னால் சொல்லலாம்...aids வராமல் அவங்க பாதுக்காதுக்கிறாங்க..அவங்களுக்கு அந்த precautions தெரிஞ்சிருக்கு(more awareness)...மத்தபடி பெரிய ஒழுக்க சீலர்களா இருப்பாங்க னு எல்லாம் எனக்கு அபிப்ராயம் இல்லை...நம்ம ஊரில் சில லோகல் மக்களிடையே மட்டுமே அந்த அறியாமை இல்லை...அதனால் பெரிது படுத்த படலாம்...இந்தியாவையும்,உசிலம்பட்டியையும் கம்பேர் பண்ற லாஜிக் மாதிரி தான் இது தோணுது...ஆனால் என் நாட்டு பற்றுக்காய் நான் இவ்வளவு சொன்னாலும்...இப்போ நம்ம நாட்டிலும் கொஞ்சம் நிலைமை சரில்லை தான்..தனி மனித ஒழுக்கம் அதீத சுதந்திரம் அப்டிங்கிற ஒரு வெட்டி ஈகோ விலே சீரளிஞ்சுட்டு வருவதையும் நான் மறுக்க வில்லை...ஆனால் நம் இந்தியா...எப்பவும் கிரேட் தான்.,,,)))) இன்னும் மனசாட்சிக்கு பயந்து வாழும் மக்கள் நம்ம நாட்டில் ரொம்பவே அதிகம்....)))

என்னது நானு யாரா? said...

அமெரிக்க நண்பரின் கேள்வி ஞாயமானதே. இந்தியாவில் பல நெருக்கடிகள். அதற்கு செக்ஸ் வடிகாலாக இருக்கிறது பல பேர்களுக்கு.

Migrating Population இந்தியாவில் பல நகரங்களில் அதிகமாக இருக்கிறது. அங்கெல்லாம் செக்ஸ் வியாபாரம் கொடிக்கொட்டிப் பறக்கிறது. சொந்த ஊரில் இருக்கும்போது ஒருவனுக்கு ஒருத்தி தான். ஆனால் ஊரை விட்டு ஊரு வந்தால் அங்கே அவர்களின் செக்ஸ் தேவைகளுக்கு விலைமகளீர் தானே இருக்கிறார்கள்.

அவர்கள் ஈடுபடும் Risky sex behaviour-களினால் தான் பல பல வியாதிகள் பரவிவருகிறது. Aids-க்காக வேலைசெய்யும் தொண்டு நிறுவனங்கள் லாரி டிரைவர்களுக்கு ஆணுரையை இலவசமாக வினியோகம் செய்கிறது தெரியுமா?

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. மனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்றால் பொருளாதார தேவைகள் பூர்த்தி அடைந்திருந்தால் தான் அது சாத்தியம். ஒருவனுக்கு ஒருத்தி எல்லாம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் பலருக்கு இல்லை. அவர்கள் விதிவிளக்கு. மேல் தட்டு மக்கள் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி விதி பொருந்துவதில்லை.

Anonymous said...

உன்ளேன் டீச்சர் :)

Sukumar said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மேடம்...

நைஸ் போஸ்ட்...

Chitra said...

வருண் said...

/////I still feel, that is not good enough to criticize that "our culture" as NOT EXISTING!/////


.... No one said, our culture is not existing. When we tend to brag about our culture, we tend to portray that as 100 % of people follow it. The same way, when we comment on the western culture, we tend to show 100 % negative light to it too.

priyamudanprabu said...

ஒருவனுக்கு ஒருத்தின்னு மனசுல இருக்கணும்
அடிக்கடி மாறும் கலாச்சாரம் கற்றுத்தருமா அதை ?
முருகனும் , சிவனும் யார் ?
ஒரு மனைவி மட்டும் கொண்டவன் உண்மையாகவே ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்பவன?
,ம்ம்ம்ம் இப்படி கேள்வி எழுதே......

S Maharajan said...

சமுக அலசலான பதிவு

Unknown said...

//என்னா சமாளிச்சிஃபையிங் ஆஃப் இந்தியா ஸ்மைல்!//
:))
//பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும். அதை ஒழிக்க முடியும்,"//
இது point! ஆனா நாங்க ஏற்றுக்கொள்ள மாட்டோம்!!:)

Thekkikattan|தெகா said...

நான் சுவத்துல முட்டிக்கிறதா? மரத்தில முட்டிக்கிறதா? எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா? என்று சர்வே எடுத்து சொல்லுங்க," என்று ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா காட்டினார். //

ஹாஹாஹா... இல்ல, இல்ல மண்ணுக்குள்ளர தலையை விட்டுக்கிட்டு அந்த என்னக் கோழி mmm ஆஸ்ட்ரிச் அது மாதிரி நின்னா எல்லாம் சரியாகிடும். சூழ்நிலைக்கு ஏத்தப் பதிவு.

நன்றீ!

Prathap Kumar S. said...

//AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது? //

நாக்கு பல்லு, கண்ணு எல்லாத்தையும் புடுங்கறமாதிரி..கேட்டாம்பாருங்க வெள்ளைக்காரன் ஒரு கேள்வி... :))

ஆனந்தி.. said...

ம்ம்..செம டாபிக்...வாழை பழத்தில் ஊசி ஏத்துற லாஜிக் இது தானோ...??)) அமெரிக்காவையும்,இந்தியாவையும் கம்பேர் பண்றதே பெரிய அபத்தம் இல்லையா சித்து?? நிச்சயம் தனிமனித ஒழுக்கம் மேலை நாட்டை விட நம்ம நாட்டில் அதிக அளவு தான் இருக்கு...அதில எந்த சந்தேகமும் இல்லை...இப்படி வேணும்னால் சொல்லலாம்...aids வராமல் அவங்க பாதுக்காதுக்கிறாங்க..அவங்களுக்கு அந்த precautions தெரிஞ்சிருக்கு(more awareness)...அதனாலே prevent பண்ணிக்கிட்டு aids இல் இருந்து தப்பிக்கிறாங்க..மத்தபடி பெரிய ஒழுக்க சீலர்களா இருப்பாங்க னு எல்லாம் எனக்கு அபிப்ராயம் இல்லை...நம்ம ஊரில் சில லோகல் மக்களிடையே மட்டுமே அந்த அறியாமை ரொம்ப அதிகம்.....aids கருத்து கணிப்பு பெரும்பாலும் அவர்களை முன்னிறுத்தியே இருக்கு..அதனால் பெரிது படுத்த படலாம்...இந்தியாவையும்,உசிலம்பட்டியையும் கம்பேர் பண்ற லாஜிக் மாதிரி தான் இது தோணுது...ஆனால் என் நாட்டு பற்றுக்காய் நான் இவ்வளவு சொன்னாலும்...இப்போ நம்ம நாட்டிலும் கொஞ்சம் நிலைமை சரில்லை தான்..தனி மனித ஒழுக்கம் அதீத சுதந்திரம் அப்டிங்கிற ஒரு வெட்டி ஈகோ விலே சீரளிஞ்சுட்டு வருவதையும் நான் மறுக்க வில்லை...ஆனால் நம் இந்தியா...எப்பவும் கிரேட் தான்.,,,)))) இன்னும் மனசாட்சிக்கு பயந்து வாழும் மக்கள் நம்ம நாட்டில் ரொம்பவே அதிகம்....)))

Vidhya Chandrasekaran said...

சிரிப்புனூடே சிந்திக்க செய்யும் பதிவு.

Alarmel Mangai said...

An interesting topic....

According to US Census Bureau, the US population is 307,006,550 (http://quickfacts.census.gov/qfd/states/00000.html) and according to Henry J Kaiser Family Foundation ( http://www.kff.org/hivaids/upload/3029-071.pdf) an estimated 1.2 million live with AIDS in the USA. India's population is 1 billion and the affected population is around 2.27 million. I also found this interesting fact about USA in the same website; "Percent of people infected with HIV who don’t know it: 25%."

Besides, the Indian reports states, "In a country where poverty, illiteracy and poor health are rife, the spread of HIV presents a daunting challenge." The Indian website provides an interesting research about AIDS in India. India is considered as 3rd largest country with AIDS patients because of the population.

It is amusing that your friend became so agitated. If he had the facts handy, he could have argued with valid points.

Lastly, we also need to accept that Indians' morality compass is not facing up North :) We need to stop becoming defensive, accept/admit that we also have problems in India like any other country.

Gayathri Kumar said...

Very nice discussion.

GEETHA ACHAL said...

ஆஹா...சித்ரா...நல்லா மட்டிகொண்டிங்களா....

Arun Prasath said...

ரெண்டு வெளிநாட்டு காரங்களோட நம்ம ஊர் காரங்க சேந்தா இந்த டாபிக் தான் வரும் போல

VELU.G said...

நகைச்சுவையாக தோன்றினாலும் யோசிக்க வேண்டிய விஷயம்

Anonymous said...

விழிப்போட இருங்க..
ஓ இதுக்கு பேர் தான் விழிப்புணர்வுப் பதிவோ...??

மங்குனி அமைச்சர் said...

நாம அடுத்தவுங்கள குத்தம் சொல்லியே பழகிட்டோம் மேடம் , அதான் நம்மலப்பத்திய உண்மைகளை உணர நேரம் இல்லாமல் இருக்கிறோம் .

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு....

சௌந்தர் said...

நான் சுவத்துல முட்டிக்கிறதா? மரத்தில முட்டிக்கிறதா? எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா?////

நான் சொல்றேன் மூணு இடத்திலும் முட்டிகொள்ளுங்கள்

சுந்தரா said...

//" அமெரிக்கர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கு தெரியும். அவர்கள், இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாம் நினைக்கிறாங்களோ? " //

இதையெல்லாம் யோசிக்காமதான் சிலநேரம் அவஸ்தையில் மாட்டிக்கிறோம் :)

நல்ல பதிவு சித்ரா.

ராமலக்ஷ்மி said...

// பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும். அதை ஒழிக்க முடியும்,//

நல்லதான் கேட்டிருக்கிறார் பென்.

விழிப்புணர்வைத் தரும் நல்ல பதிவு சித்ரா.

அமுதா கிருஷ்ணா said...

எதையும் ஒத்துக் கொண்டு நாங்கள் அப்படி தான் என்று ஓபனாக அவர்கள் இருக்கிறார்கள். இங்கு திருட்டுத்தனம் ஜாஸ்தியாய் போச்சு. உண்மை இல்லை. நம்பிக்கை துரோகம் ஜாஸ்தியாய் இருக்கிறது. இனிமேல் வக்காலத்து வாங்கி பிரயோஜனம் இல்லை.கலாச்சாரம் என்று இருப்பதாய் நினைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொண்டு வருகிறோம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு சகோதரி .. அப்படியே நட்சத்திர வாழ்த்துக்களும்

மொக்கராசா said...

ben சொனனது முற்றிலும் உண்மை.

உண்மையில் இந்தியாவில் கலாசாரம், கலாசாரம் என்று கோஷம் போடாமல்,கவர்மெண்ட் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் இருக்கும் மிச்ச சொச்ச மரியாதையும் காற்றில் பறந்து விடும்.

mightymaverick said...

தனி மனிதர்கள் ஒன்றாய் கூடும் போது தான் ஒரு சமுதாயம் உருவாகிறது... பல சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து தான் ஒரு நாடு உருவாகிறது... அதனால் ஒரு சமுதாயத்தை பற்றி பேசும் போது தனி மனிதனையும் அது பாதிக்கிறது... ஒரு தனி மனிதனின் தவறுகள் சமுதாயத்தை பாதிக்கிறது... ஆக தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுக்கமாக மாறி விடுகிறது... அதனால் சமுதாயமும், தனி மனிதனும் இந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகி விடுகிறது...


அவரிடம் நீங்கள் ஒரு கேள்வி மட்டும் கேட்டிருக்கலாம்... விட்டு விட்டீர்கள்... அதாவது முறையான பாலியல் கல்வி (sex education) உள்ள இந்த அமெரிக்க மண்ணில் AIDs என்பது சுத்தமாக இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும்... ஆனால் இங்கும் இந்த நோய் உள்ளதே என்று நீங்கள் கேட்டிருந்தால் அவர் அவரது முகத்தை எங்கு கொண்டு போய் வைத்திருப்பார்... ஒருவனுக்கு ஒருத்தி என்பது குறைந்து வந்தாலும், இங்கு பணக்காரர்களிடம் இந்த முறையான பாலியல் கல்வி மேற்கத்திய நாகரீக புரிதல்களினால் சென்று சேர்ந்து விடுகிறது... ஆனால் அடித்தட்டு மக்களுக்கு இந்த பாலியல் கல்வியை சென்று சேர விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது யாரோ அவர்கள் தானே முதல் குற்றவாளியாக இதில் கருதப்பட வேண்டி இருக்கிறது...

Chitra said...

////முறையான பாலியல் கல்வி (sex education) உள்ள இந்த அமெரிக்க மண்ணில் AIDs என்பது சுத்தமாக இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும்... ////

இந்த பொருள் படும் விதமாக வேறு மாதிரி நண்பர் கேட்டார். நாங்கள் பேசியதில் ஒரு பகுதி தான் கொடுத்து இருக்கிறேன். அதற்கு, எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து தான் அதை தடுக்க - ஒழிக்க முயன்று கொண்டு இருக்கிறோம். அப்படி ஒரு பிரச்சனை இல்லவே இல்லை என்று ஒதுக்குவதில்லை என்று சொல்லி விட்டார்.

மங்கை said...

சித்ரா...

உங்க பதிவை படிச்சது, நிறைய விஷ்யங்களை சொல்லனும்னு தோனுது.. எச் ஐவி துறையில் கடந்த 15 ஆண்டுகளாக ப்ணிபுரிந்து கொண்டு இருப்பவள் என்கிற முறையில் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்..

எச் ஐவியால் பாதிக்கபட்ட பெண்கள் பலர் திருமணம் ஆகி கணவருடன் மட்டுமே உடலறுவ வைத்துக்கொண்டிருப்பவர்கள்... கணவர் மூலமாக இப்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... தாம்பத்திய வாழ்க்கையில் இந்தியப்பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம், விருப்பு வெருப்பு பற்றி தனியாகத்தான் எழுத வேண்டும்... நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும்...

மேலும்..என்னை மிகவும் வருத்திய ஒரு வரி...
//"என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க? ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை வச்சு - அப்படி சொல்லாதீங்க, " என்று பாய்ந்தார்.//

மிகத்தவறான கண்ணோட்டம்... சித்ரா நண்பரிடம் சொல்லுங்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் இன்று சமுதாயத்தில் எல்லா மட்டத்திலும் இருக்கிறார்கள் என்று...லோகிளாஸ் என்று கூறுவதே தவறு...அதிலும்.. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாறும் லோகிளாஸ் என்று கூற்வது அதை விட தவறு... ஏதோ இல்லாதப்பட்டவர்கள் மாரல் இல்லாமல் அலைவதைபோலவும்... பணம் படைத்தவர்கள் மட்டுமே ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள் என நம்பிக்கொண்டு இருப்பது மிகத்தவறான கண்ணோட்டம்...

ஒழுக்கத்தையும் எச் ஐவியையும் சம்பத்தப்படுத்தி பேசக்கூடாது என்பது தான் எங்கள் போன்றோர்களின் கொள்கை...அதற்குத்தான் போராட்டம்..

நன்றி சித்ரா...எச் ஐவி பற்றிய ஒரு பதிவிற்கு

i hope you dont mind my words... the word used is the one which causes stigma everywhere and nobody knows the stress HIV positive goes though because of this stigma and discrimination...

Chitra said...

i hope you dont mind my words... the word used is the one which causes stigma everywhere and nobody knows the stress HIV positive goes though because of this stigma and discrimination...


.....I totally agree with you. It was a total eye opener for my friend. When he read more on this topic, he came to know about the spread of this disease in all walks of life. We understood, how many Indians brush the matter off, with prejudiced understandings. I am glad that you have shared the views in a clearer way. Thank you very much.

சசிகுமார் said...

benn கேட்ட கேள்வி சரியே. எங்கே சென்றது நம் கலாச்சாரம்

Chitra said...

Sometimes, we are hypocrites. No doubt about it.

சசிகுமார் said...

//"என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க? ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை வச்சு - அப்படி சொல்லாதீங்க, " என்று பாய்ந்தார்.//

மிகத்தவறான கண்ணோட்டம்... சித்ரா நண்பரிடம் சொல்லுங்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் இன்று சமுதாயத்தில் எல்லா மட்டத்திலும் இருக்கிறார்கள் என்று...லோகிளாஸ் என்று கூறுவதே தவறு...அதிலும்.. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாறும் லோகிளாஸ் என்று கூற்வது அதை விட தவறு.

சகோதரி மங்கை சொல்வது மிகவும் சரியே

சசிகுமார் said...

//"ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்//

இதையே தலைப்பாக வைத்திருக்கலாம்.

மங்கை said...

புரிதலுக்கு நன்றி சித்ரா

இது போன்ற தலைப்புகளில் பலர் எழுத முன் வரவேண்டும் ...அப்பொழுதுதான் ஆரோக்கியமான விவாதங்கள்.. அது தொடர்பான பல விஷ்யங்கள்... பொதுவாக நாம் பேச தயங்கும் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்... பதிவுகளை இது போன்ற விழிப்புணர்வூட்டும் விவாதங்களுக்கு பயன்படுத்தவேண்டும்...

Chitra said...

Sasikumar, லோ கிளாஸ் - மிடில் கிளாஸ் என்ற ரீதியில் அவர் பார்த்ததை தான் கமென்ட் பண்ணினார். எனக்கும் அவர் பேச்சு, அன்று ஓவராக தான் தெரிந்தது. இன்னும், நாங்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

Chitra said...

அன்புள்ள மங்கை, முதலில், அன்றைய விவாதத்தை எப்படி எழுத என்று யோசித்தேன். இன்னும் நிறைய பேசினோம். சில குறிப்பிட்ட விஷயங்கள் மட்டும் தான் இங்கே கூறி இருக்கிறேன். இந்திய நண்பரும், நானும் இன்னும் விவாதத்தில் முட்டி கொண்டு தான் இருக்கிறோம். சில விஷயங்களை புரிந்து கொள்கிறார். சில விஷயங்களை ஏற்று கொள்ள மறுக்கிறார்.

Kurinji said...

Really nice post mam!

Aruvaa AArumugam said...

இதே தான், இப்படி தான் 1998 லே எனக்கு நடந்தது. இப்படி தான் நான் இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்று 'நமது ஊடகங்கள் அமைத்த 'பாரத கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம்' (மத்தவனுக்கு ஒன்றும் இல்லை) படித்து விட்டு, அடித்த அறியாமை சவடாலை ஒரு ரொமானியா காரன் இந்த சின்ன கேள்வியால் 'ஆப்பு' அடித்தான். எல்லா தவறும் நமது ஊடகங்கள் அமைத்த பொய் பிம்பங்களால் தான்.

ஆல்வின்

Aruvaa AArumugam said...

ஆல்வின்

இதே தான், இப்படி தான் 1998 லே எனக்கு நடந்தது. இப்படி தான் நான் இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்று 'நமது ஊடகங்கள் அமைத்த 'பாரத கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம்' (மத்தவனுக்கு ஒன்றும் இல்லை) படித்து விட்டு, அடித்த அறியாமை சவடாலை ஒரு ரொமானியா காரன் இந்த சின்ன கேள்வியால் 'ஆப்பு' அடித்தான். எல்லா தவறும் நமது ஊடகங்கள் அமைத்த பொய் பிம்பங்களால் தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்ரா நீங்க் விவாதிச்சது மட்டுமில்லாம அழகா இங்க எழுதி நாலு பேருக்கும் விசயம் போய் சேர வழி செய்திருக்கீங்க..

பேசப்பேசத்தானே என்னல்லாம் நாம நினைச்சிவச்சிருக்கோம் அது சரியா தவறான்னு தெரிஞ்சுக்க வாய்ப்பா இருக்கு..

வெட்டிப்பேச்சு said...

//நம்ம நாட்டில் நடக்கிற, தெரிஞ்சே செய்யுற சில தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்? //

தாங்கள் செய்தியை சொல்லியிருக்கும் விதம் அருமை..

விவாதத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் தங்களது மௌனம் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டு விட்டது..

சிந்தனைக்குரிய சிறப்பான பதிவு.

வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

அக்கா வந்துட்டங்கா மனசு சந்தோஷமா இருக்குக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீடெயிலு....!

ம.தி.சுதா said...

அக்கா எது எப்படியிருந்தாலும் எம் ஊரைக் கேடபவருக்கு எம் கலாச்சாரம் தான் கண் முன் வரும்... எமக்கு சிறப்பானதே அது தான்...

சுசி said...

சிரிப்போடு சிந்திக்கவும் வேண்டிய விஷயம் சித்ரா.

இங்க யாராவது கலாச்சாரம்னு ஆரம்பிச்சாலே நானும் தமிழ் கலாச்சாரப்படி அடுத்தவன் தலையில பழியை போட்டுடுவேன். அதாவது வெள்ளைக்காரங்க எல்லாம் எங்க நாட்டுக்கு வந்துதான் எங்க கலாச்சாரம் சீரழிஞ்சு போச்சுன்னு சொல்லிடுவேன். கேட்டாங்க.. ஏன் நீங்க அன்னப் பட்சி மாதிரி இல்லைன்னு. அதனாலதான் இன்னமும் எயிட்ஸ் இல்லாதவங்களும் இருக்காங்கன்னு அதுக்கப்புறம் போட்டு அடிச்சு விட வேண்டியதுதானே.. :))
என்ன இருந்தாலும் விட்டு குடுக்க கூடாதில்லையா.

Unknown said...

வாய்ச் சவடாலில் மட்டுமே வல்லவர்கள் நாம்...

ஸாதிகா said...

அருமையான டாபிக் அருமையான அலசல்.

kashyapan said...

கலாச்சாரம் என்பது ஒப்புநோக்கில் பார்க்கப்படுவது.காலத்திற்கும் ,அனுபவத்திற்கும்,அறிவின் விசாலத்திற்கும் மாறும் தன்மை கொண்டது. எய்ட்ஸ் பற்றி ஐம்பதுவருடத்திற்கு முன் நமக்கிருந்த ஞானம் குறைந்ததே. .இன்று ஆண்-பெண் உறவு பற்றிய நமது புரிதல்மாறிவிட்டது.பலதாரமணம்,பலகணவன் எல்லா நாட்டிலும் இருந்ததுண்டு.நாம் கலாச்சாரப்பெருமை பேசியே நசிந்து போகிறோம். நாம் மாற மறுக்கிறோம். கண்டிப்பாக மாற்றப்படுவோம்.---காஸ்யபன்

Madhavan Srinivasagopalan said...

"வாயை வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்கலாம்" :|

சைவகொத்துப்பரோட்டா said...

பொருத்தமான தலைப்புதான்!

'பரிவை' சே.குமார் said...

நல்ல விழிப்புணர்வு சமூக அலசல் பதிவு.

துளசி கோபால் said...

இப்படித்தான் ஒரு நாட்டைப்பற்றி ஒரு சிலருக்கு சில அபிப்பிராயங்கள்.

நான் நியூஸி போன புதுசில் (அப்பெல்லாம் அங்கே ஒரு சில இந்தியர்கள்தான் இருந்தாங்க. அவுங்களும் உகாண்டாவிலிருந்து வந்த குஜராத்திகளே)

'இந்தியா ரொம்ப ஏழை நாடாமே. உணவே இல்லாம பட்டினி கிடப்பாங்களாமே' ஒருத்தர் என்னைக் கேட்டாங்க.
அப்படியா? என்னைப்பார்த்தா பட்டினி கேஸ்மாதிரி தெரியுதான்னேன்.
சிரிச்சுட்டாங்க. நம்ம சைஸ் அப்படி:-)))))

இன்னிவரைக்கும் அவுங்க என் தோழியா ஆனது தனிக்கதை!

வினோ said...

நல்ல விசயம் தான் சொல்லிருக்கீங்க.. அனைத்து இடங்களிலும் தப்பு இருக்கு சித்ரா...

"உழவன்" "Uzhavan" said...

//ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்//
 
"தமிழ்நாட்டுத் தலைவர்" என்பதை நீக்கினால் நன்றாக இருக்கும் :-)

settaikkaran said...

ஆஹா! நீங்களும் இந்த கலாச்சாரம் ஜோதியில் கலந்து விட்டீர்களா? இது குறித்து இரண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்:

ஒன்று: ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியாவின் கலாச்சாரமாக இருந்தது என்று சொல்ல முடியாது. இதிகாசங்கள் மற்றும் வரலாறுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே, அது ஒரு கோட்பாடாக இருந்து, பெரும்பாலும் மீறப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. உதாரணங்கள் சொன்னால், என்னை பிற பதிவர்கள் அடிக்க வருவார்கள்.

இரண்டு: உலகத்திலேயே அதிகபட்சமான விவாகரத்துகள் அமெரிக்காவிலும் (4/1000), குறைவான விவாகரத்து இந்தியாவிலும் (0.998/1000) இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அண்மைக்காலமாக இந்திய நகர்ப்புறங்களில் விவாகரத்து அதிகமாகி வருகின்றன என்பதும் உண்மை.

ஆப்பிளை ஆப்பிளோடு ஒப்பிடுவதே சாலச்சிறந்தது. அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடுவது இவ்விஷயத்தில் சரியா என்று எனக்குத் தெரியவில்லை.

இளங்கோ said...

எல்லா இடத்துலயும் தப்பும், சரிகளும் சரிசமமாகவே இருக்கும். :)

goma said...

நான் என்ன நினைக்றேன்னா ,,உங்க ஊர் பென் [அல்லது பென்சில்],
நம்ம குஷ்பு , கற்பு பற்றி பேசியதைக் கேட்டிருக்க வேண்டும்

goma said...

நல்லா கொளுத்திப் போடுங்க ...அங்கே போட்டா, இங்கே வெடிக்கணும்.

ஈரோடு கதிர் said...

||தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்||

அப்படியே வந்ந்ந்ந்ந்துட்ட்ட்டாலும்!!!

வந்தாலும் என்ன கவலை, எங்கள் தலைவர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதுவார்.. வாங்கி வைத்த கவர் இன்னும் நிறைய இருக்கு!:)

செல்வா said...

//"AIDS சர்ச்சை: தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!" அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது///

எப்படி அக்கா ., இப்படியெல்லாம் தெரியுது ..? ஆனா என்ன பண்ணுறது ., அவுங்க சொல்லுறதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும் ..!! அத விட ஆனந்தி அக்கா சொன்னது மாதிரி அவுங்களுக்கு அதற்க்கான முன்னேற்ப்பாடு தெரிஞ்சிருக்கு ., இங்க அந்த மாதிரி முன்னேற்ப்பாடுகள் தெரிந்திருப்பதில்லை .. அதுதான் பிரச்சினை ..

பனித்துளி சங்கர் said...

/////// உலக நாடுகளிலேயே, AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது? வட இந்தியாவை விட, தென் இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகம் பரவி உள்ளதாகவும் statistics இருக்கிறதே," //////


சரியாகத்தான் கேட்டு இருக்கிறார் . இந்தக் கேள்வி சிந்திக்கவேண்டிய ஒன்றுதானே . விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான பதிவு ஒன்றை நேர்த்தியான நடையில் சொல்லி இருக்கிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி தோழி

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கவும்

நான் ஒரு பெண்

http://maattru.blogspot.com/2010/11/blog-post_23.html

அப்பாதுரை said...

வெட்டிப்பேச்சுனு நீங்க சொன்னதும் சரிதான் :)
ஜொலிக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.

Prabu M said...

வழக்கம்போல செம லைவ்வா எழுதுயிருக்கீங்கக்கா...
நெழிய வெச்சுட்டானே வெள்ளைக்காரன்....
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம்ம கலாச்சாரமா!!?? அப்படி எதுவும் இருந்திருக்கா நம்ம ஊருல..அரண்மனையில்லாத அரசர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள் ஆனால் அந்தப்புறம் இல்லாத கடை நிலை ஊழியர் கூட இருந்ததில்லையே நம்ம ஃப்ளாஷ்பேக்கில்...!! ( நம்ம கடவுள்களே ராமர் தவிர யாருமே இந்த மேட்டரை ஃபாலோ பண்ணதா ரெகார்ட் இல்லையே)
ந‌ம்ம‌ க‌லாச்சார‌ம் குடும்ப‌ அமைப்பு,பாச‌ம், உண‌ர்வுப்பூர்வ‌மான‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம், அச்ச‌ம‌ட‌ நாண‌ப் ப‌ருப்புக‌ள்..... அவ‌ற்றொடு நிறுத்திக்கொள்வ‌து ந‌ல‌ம்... த‌னிம‌னித‌ ஒழுக்க‌த்துக்குக் க‌லாச்சார‌ம் ரொம்ப‌ கோடு போட்டுவிட‌ முடியாது.... அமெரிக்க‌ர்க‌ள் பெற்ற‌ விழிப்புண‌ர்ச்சி ந‌ம்ம‌ ஏரியாவுல‌ க‌ம்மி.... அவ்ளோதான்... அதான் புள்ளிவிவரப்படி நம்ம புள்ளிராஜாக்கள் நிறைய இருக்காங்க இங்க....

க‌லாச்சார‌த்துக்கும் ஒழுக்க‌த்துக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்ல‌ங்குற‌து என்னோட‌ ந‌ம்பிக்கை அக்கா...

Menaga Sathia said...

நல்ல அலசல்!!

ரிஷபன் said...

//நம்ம நாட்டில் நடக்கிற, தெரிஞ்சே செய்யுற சில தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்?//

வாயை வச்சுகிட்டு சும்மா இருந்தா இப்படி ஒரு மேட்டர் கிடைக்குமா.. நல்ல அலசல்..

vasu balaji said...

தெ.கா. you rock everywhere man:))

Thenammai Lakshmanan said...

ரொம்ப தேவையான பகிர்வு சித்ரா..
அருமை..

துளசி கோபால் said...

//வாங்கி வைத்த கவர் இன்னும் நிறைய இருக்கு!:)//

ஆமாமாம். இன்னிக்குக் கூட சன் நியூஸ்லே சொன்னாங்க. இலங்கைத்தமிழரை விரைவில் மீள்குடி அமர்த்தணும் என்று கடிதம் எழுதி இருக்காராம்.

சென்னையில் இருந்து எனக்குக் கடிதம் வர 12 நாள் ஆகுது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

goma said...

ஒரு கை, பொரி போட்டதும் , தெப்பக்குளத்து மீன்கள் எல்லாம் அப்படியே கூட்டமாக பொரியை நோக்கி நீந்தி வரும் அழகை ,
’கொஞ்சம் வெட்டிப்பேச்சு’
’முத்துச்சரம் ’ஆகிய இரண்டு பதிவிலும் கண்டு ரசிக்கிறேன்.

இப்படிக்கு மீன்

Jaleela Kamal said...

சித்ரா,தலைப்் ்டி்்தத்தும்., என் ஞாபகம் வந்து விட்டது

www.samaiyalattakaasam.blogspot.com
inga vaangka

சி.பி.செந்தில்குமார் said...

சிந்திக்க வைத்த பதிவு,யோசித்து நாளை கமெண்ட் போடறேன்

பவள சங்கரி said...

சிந்திக்க வைக்கும் பதிவு சித்ரா.

அன்பரசன் said...

யோசிக்க வச்சிட்டீங்களே!

ராஜவம்சம் said...

நல்லவேலையா நான் பாகிஸ்தானிகளோட விவாதம் பண்னும்போதெல்லாம் வெற்றி எனக்கு (இந்தியாவுக்கு)தான்.

இப்பொழுதெல்லாம் கூட வேலை செய்யும்பாகிஸ்தானியர்கள் ஒரு சலாத்தோட ஓடிருறானுங்க.

என்னையவிட தெறமையானவர்களிடம் இன்னும் மோதலன்னு நினைக்கிறேன்.

Riyas said...

ம்ம்ம்ம்ம் நீண்ட நாட்களாக பிளாக் பக்கமே வர முடியல்ல.. தூள் பறக்குது,, சித்ரா அக்கா

புல்லாங்குழல் said...

சித்ரா! நீங்கள் நட்சத்திர பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டதும் என் கூட பிறந்த தங்கைக்கு கிடைத்த மாதிரி ஒரு சந்தோசம்.

இந்த இடுகையை பார்த்ததும் அது இரண்டு மடங்கானது. உங்கள் தந்தையின் அருளாசியுடன் நீங்கள் விரைவில் சிறுகதை, நாவல் எழுதும் சிறந்த எழுத்தாளராக வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

டீச்சரையே கலாய்ச்சி புட்டான்களே !!!!!!

மோகன்ஜி said...

அடடா! பத்த வச்சுடீங்களே! நாக்கைப் புடிங்கிக்குரா மாதிரி நல்லா கேட்டாரு வெள்ளைக்கார தொரை!
அட்டகாசமா எழுதி இருக்கீங்க சித்ரா!
இந்த மாதிரி அவ்வப்போது எழுதுங்கள்.

துமிழ் said...

இந்தியாவில் எயிட்ஸ் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் பாலியல் நோய்களை தடுப்பது
பற்றி போதிய அறிவின்மை. கலாச்சாரம் மூலம் பாலியல் நோய்களை கட்டுப்படுத்திவிட முடியாது.
கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்திற்கான கொள்கை .அதிலே நிறையப் பேர் கலாச்சாரத்தின் வழி நடக்கலாம்
நிறையப் பேர் எதிராக நடக்கலாம். அதற்காக எயிட்ஸ் அதிகமாக இருக்கிறது என்பதை மட்டும் வைத்து ஒரு நாட்டின்
கலாச்சாரத்தை எடை போட்டு விட முடியாது....
இந்தக் கருத்து நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல ,இனிவரும் காலங்களில் யாராவது
இந்தக் கேள்வியைக் கேடால் சமாளித்துக் கொள்வதற்காக

Starjan (ஸ்டார்ஜன்) said...

சித்ரா.. ரொம்ப அருமையான பகிர்வு.. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

அருமையான அலசல்! விவாதிக்கவும் சிந்தனையைத்தூண்டவும் வைத்த பதிவு!

Philosophy Prabhakaran said...

// "AIDS சர்ச்சை: தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!" அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது.
"கோன் பனேகா HIV? - ஆந்திர மதராசி? or சென்னை மதராசி?" அப்படின்னு வட நாட்டு ஆளு ஒருத்தர், ஹிந்தி சேனல்ல ஒரு டிவி ப்ரோக்ராம் நடத்துற மாதிரி தெரிஞ்சுது. //

இந்த வரிகள் நல்ல நகைச்சுவை...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இப்பிடி ஒரு உரையாடல் எனக்கும் நடந்திருக்கு.. ஆனா என்னிடம் உரையாடியவர், கருப்பினச் சிறார்களுக்கான வாழ்வியல் போதகர்.. ஒழுங்குடனான வாழ்க்கை முறைய பாராட்டினார்..

மாற்று said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

ஹிப்போக்ரேட்டுகளின் உலகில் நாம் வாழ்கிறோம் அதனால்தான் கலாச்சாரம் அது இது என்று இன்னும் பல விஷயங்களை வெளியில் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறோம். அது சரி இந்த பதிவில் வேறு யாருக்கோ.. பதில் இருக்கா..? :))

Anisha Yunus said...

சித்ராக்கா,

இந்த மாதிரி சில நேரங்களில் மேல் மாடி காலியாய் இருப்பதே சிறந்தது. ஏன்னா நம்ம நாட்டின் கலசாரத்தை நாம் இப்படி பொக்கிஷம் மாதிரி போற்ற்ப் பேசற காலம் மாறிப்போச்சு!! ஆனாலும் உங்க நண்பர், அதென்ன “சூப்பர் சமாளிச்சிfying of India” ஹி ஹி ஹி

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...!!
வந்தாலும் என்ன கவலை, எங்கள் தலைவர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதுவார்.. வாங்கி வைத்த கவர் இன்னும் நிறைய இருக்கு!:)//

ஒரு திருத்தம், ‘ஒபாமாவுக்கே கடிதம் எழுதுவார்’ன்னு இருக்கணும்.

நல்ல இடுகையும் செய்தியும், நமக்குத்தான் தவற ஒத்துக்கிற மனப்பான்மையே கிடையாதே. கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத கதை நம்மளோடதுதான்..

Ramesh said...

நல்ல பதிவு சித்ரா..

கண்ணகி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்....

vasan said...

த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் கூவ‌த்தில் குளித்தால்தான் இந்த‌ சாப‌ம் தீரும்.
மானாட‌..ம‌யிலாட‌, பிள்ளை குட்டி பெத்துகிட்டு ஓடுற‌து, 10 வ‌யது குழ‌ந்தை க‌ற்ப‌ழிப்பு,
85 வ‌ய‌துக்கார‌ன் 16 வ‌ய‌து பெண்ணை நுக‌ர்வ‌து, இந்த‌ அலை 80ன் துவ‌க்க‌த்தில், அலைக‌ள் ஓய‌வ‌தில்லையில் ப‌ள்ளிமாண‌வ‌ன் காத‌ல், பார‌திராஜாவால் ரிப்ப‌ன் வெட்ட‌ப்ப‌ட்டு, அவ‌ரின் வாரிசு பாக்யராஜால் முருங்கைகாயாய் காய்த்து, ர‌ஜினி ச‌ம்ப‌ந்தியால் இள‌மை பட‌ங்க‌ளாய் த‌மிழ‌க‌
க‌லாச்சார‌ங்க‌ளை க‌றைக‌ளாக்கி விட்ட‌ன‌. ஒரு செய்தி, 70ன் இறுதியில் கிராம‌த்து வீட்டில் வானொலியில் பாட‌ல்க‌ளுட‌ன் சுற்ற‌ம் ம‌ற்றும் ந‌ட்பு சூழ‌ அளவ‌லாவிக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌ம்,
"ம‌ச்சானைப் பாத்தீங்க‌ளா"ன்ன, பாட்டைக் கேட்ட‌தும், சுற்றியிருந்த‌வ‌ர்க‌ளின் குறிப்பாய் பெண்க‌ளின் முக‌த்தில் தெரிந்த‌ விய‌ப்பும் ச‌ங்க‌ட‌மும் என்னால் ம‌ற‌க்க‌ முடியாதவை. நிலைமையை சீராக்க‌ ஒட்டிச் சென்று வானொலி அண‌த்து விட்டேன். இப்போது, உங்க‌ளால் அத‌ன் தாக்க‌ம் உண‌ர‌முடியாது. இது என்ன‌? என்ற‌ கேலி கூட‌ தேன்ற‌லாம். முப்ப‌தாண்டுக‌ளில்
இன்று, 'அம்மா அப்பா வீட்டில் இல்லை' அள‌வு பாட‌ல்க‌ளும், சீரிய‌ல்க‌ளும், முத்த‌ங்க‌ளும், வ‌ரிவில‌க்குக‌ளுமாய் த‌மிழ‌க‌ம் மிக வேக‌மாய் போய் கொண்டிருக்கிற‌து.
சாரி .. சித்ரா, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க‌ வைக்கிற‌ மாதிரி எழுத‌ வ‌ர‌ல‌, பிய‌ர் இட்.

Unknown said...

hello Chitra
I like your posts very much, just a humble suggestion-pls try to avoid English words-sentences-expressions as much as possible.
Gopi