Tuesday, June 29, 2010

அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... பேப்பர் இரண்டு

முன்னுரையும் முதல் ஐந்து கேள்விகளும்: 

சரி, இப்போ அடுத்த கட்ட டொச்சு கேள்விகளுக்கு:

பல்லு வலிச்சாலும் வாய் வலிக்காம பேசும்,  "பஞ்ச்" பக்கிரிசாமியின் கேள்வி:
6.  நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா அவர்கள் பேசற டாப்பிக் கண்டிப்பாக....
   பொண்ணுங்களை பற்றி இருக்கும்
   சமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்
   முந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்
ஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே
அப்படி எதைப்பத்தி பேசுவாங்க...?

1.  அதேதான்....... மற்ற பெண்களை பற்றி - உறவினர் அல்லது தோழிகள் அல்லது சண்டை கோ(தோ)ழிகள், அலட்டல் பொண்ணுங்க,  முகமே தெரியாத/பரிச்சயம் இல்லாத  பொண்ணுங்களை கூட விட்டு வைக்கிறது இல்லை.
   நீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா  gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.
 அதேதான் ......... சினிமா - டிவி ப்ரோக்ராம் - கலை நிகழ்ச்சிகள் - சமையல் - உணவகங்கள் - புத்தகம்.
 அதேதான் ....... அடித்த திருட்டு தம்மு, சரக்கு இருந்தால் அதை பற்றி ...... அஸ்க்கு புஸ்க்கு...  இப்படி சொல்லுவோம்னு நினைச்சீங்களா....... ஆசை... தோசை.... 
2 .   குழந்தைகளை வைத்து பெருமை பாராட்டி கொள்ளல்.
3 .  ஷாப்பிங் - லேட்டஸ்ட் ஐட்டம்ஸ்,  புது கடை, தள்ளுபடி விலை,  etc ...etc....
4 .  பெருமூச்சு விட வைக்கும்  தனக்கு கிடைக்காத வாழ்க்கை அல்லது பொருட்கள்.
5 .   தான்தான் டாப்பு  என்ற வகை  பெருமை பேச்சுக்கள்  - இல்லையென்றால்  -  தான்தான் பாவப் பட்ட ஜென்மம் என்ற வகை  பேச்சுக்கள். 
6 .  பள்ளி - காலேஜ் கால லூட்டிகள்,  கலாட்டா  - சைட்  அடித்த  "ஹீரோஸ்"  -  தன்னை சைட் அடித்த  "ஹீரோஸ்" பற்றி ....
7 . பேச காரணம் வேணுமா என்ன?  ஒண்ணுமே இல்லைனா கூட - எதையாவது மணிக்கணக்காக  பேச கண்டு பிடிச்சு பேசப்படும்.

ஆயிரம் பொற்காசுகளை ஒரு சின்ன பர்சில் திணிக்க திணறும் "திருவிளையாடல்" தருமியின் கேள்வி: 
7 .  நாங்க ஒரு சின்ன purse வைத்து சமாளிக்கிறோம். ஆனால், நீங்கள்  எங்கே போனாலும் ஒரு பெரிய purse - இல்லை என்றால் - ஒரு பெரிய hand bag தூக்கிட்டு போறீங்களே, அப்படி என்னதான் அதில் இருக்கும்?

1 .  Driver's License - credit card/cheque book - money - hand-kerchief or tissues - hand-sanitizer or lotion - make-up items (optional) - sanitary napkins (optional) - first-aid kit (optional) - photos/camera  (optional) - 
mint/mouth refresher (optional)  - pen - cell phone - keys.
2.   ஏதாவது ஒரு லிஸ்ட் அல்லது சின்ன குறிப்பேடு  இருக்கும்.
3.  தேவைப்பட்டால்,  குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும். 
4 .  குழந்தைகள் இருந்தால் வேற கேள்வியே இல்லை - ஒரு மினி மார்ட் உள்ளே இருக்கும்.
5.  "மத்திய பிரதேசத்தில்"  பிரச்சினை செய்யும்  பின் சீட்டு (இருக்கை) " தீவிரவாதிகளை" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .

sample for American humour:

சும்மா  இருந்தாலும்  கிண்டி  விட்டுப்  போகிற  "கோள்மூட்டி" குப்புவின்  கேள்வி : 
8 .   பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த  பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்???
1.  ஒரே வார்த்தை - பொறாமை. 
2 . ஈகோவுக்கு ஒத்து வராது. 
3 .  தன்னைத்தான் மற்றவர்களை விட better என்று நினைத்து எல்லோரும்,  குறிப்பாக ஆண்கள்  அதிகம் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  மண் விழுந்து விடுவது பிடிக்காது. 
4 .  எப்போதும் உண்மை இல்லை.  பெருந்தன்மையாக  அதை ஏற்றுக் கொண்டு  பாராட்டி பேசுவது  உண்டு. 
5 .  தன்னை கடுப்பேத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சில சமயம் ஆண் அப்படி பேசும் போது - நக்கல் அல்லது குத்தல் பதில்கள்  தரப்படும். அந்த கடுப்பான பதில்களுக்கு காரணம்: அந்த பெண் மேல் உள்ள எரிச்சல் அல்ல, அந்த ஆண் மேல் உள்ள எரிச்சல் தான்.


காதல் கப்பல் கரை சேரும் நாள் எப்போ என்று காத்து இருந்து,  கதை கந்தல் ஆன "காத்தாடி" காத்தவராயன் கேட்கிறார்: 
9 .  அது ஏன்  பொண்ணுங்க பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க... இதனால எத்தனை லவ்வு பெயிலிராயிருக்கிறது. அது ஏன் இப்படி பண்ணுறாங்க????

1 .  எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருந்து கொள்வோமே என்று ஒரு நினைப்புதான்.
2 .  இப்போ எல்லாம், பெண்களும் காதலை முதலில் தெரிவிக்கிறாங்களே  .... ஆளை பிடிச்சு இருந்தா கேக்குறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.....
3 . நேரிடையாக சொல்லாமல்,  கண்களாலோ இல்லை  குறிப்பாலோ சொல்லுவார்கள்.  அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம். 
4  .  வெளிப்படையாக சொன்னால் தன்னை பற்றி ரொம்ப cheap ஆக நினைத்து விடுவார்களோ என்ற உணர்வு.  ஈகோ தரும்  பயம்.
5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்.  அது ஒரு பலவீனம். 
6 . தனக்கு பின்னால் ஆண்கள் கெஞ்சி கொண்டு அல்லது லோ லோனு வழிந்து கொண்டு  வருவது இன்னும் பிடிக்கும் - பெருமை என்று கருதப்படும். 
7 .  ஆணாய் வந்து சொல்வது,  தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்.


பஸ் ஸ்டாப் - பஸ் ஸ்டாப் ஆக அலையும்  "ஜோல்னா" சிங்காரம் கேட்கும் கேள்வி: 
10 .  ஆண்கள் திருமணத்துக்கு பின்னும் - குழந்தைகள்  பிறந்த பின்னும் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவதையும் அதை பற்றி பேசிக் கொள்ளுவதும் தவறாக கருதப்படுவதில்லை. ஏன், பெருமையாக கூட நினைத்து பேசுகிறார்கள்.  ஆனால், பெண்கள் திருமணத்துக்கு பின் ஜொள்ளவே  மாட்டார்களா? அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா? அப்படியே பகிர்ந்து கொள்ளும் பெண்களை பற்றி, பெண்களே என்ன நினைக்கிறார்கள்? 

1 .  சும்மா பாக்குறது  தானே ..... ஒண்ணும் தப்பு இல்லை. அதை மற்ற தோழிகளிடம் சொல்வது -  அவர்களுக்குள் இருக்கும்  நெருக்கத்தை, நம்பிக்கையை பொறுத்தது. 
2 .  பொதுவாக,  திருமணமான பெண்கள் அப்படி செய்வது  இல்லை.   வீட்டு கடமைகள் , கவலைகள்  தான் மேலோங்கி நிற்கும்.  அப்படியே இருக்கிறது என்றாலும் சினிமா ஹீரோ  என்ற  ஒரு public இமேஜ்  கொண்ட  குறுகிய வட்டம்தான். 
3 .   பெண்கள்  சொன்னால், ஏதோ கற்பே போன மாதிரி மற்றவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற பயம் ஒரு காரணம்.  எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவது.
4 .  மற்றவர்களிடம் சொல்வது இல்லை  - கதை/கவிதையில் கற்பனை நாயகனாய் ரசிப்பதுண்டு.
5 .  சில  பெண்களுக்கு double   personality உண்டு.  ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை  -  உள்ளுக்குள்  மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள்.   பார்த்தாலே  தப்புதான் என்று அடக்கி கொள்கிறார்கள். இன்னும் அந்த சுதந்திரம் வரவில்லை - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு.
6 . இந்த கேள்வியை கேட்ட ஆண்கள் எத்தனை பேரு ,  தன் மனைவி,  இன்னொருவரை பார்த்து சும்மா சைட் அடிப்பதை   முழு மனதோடு  ஏற்றுக் கொள்வார்கள்? 

இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது.  இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின்  "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால்,  இந்த  சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள்.  :-)

நன்றி:  கேள்விகள் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது  அனைத்து கேள்விகளையும் சேர்க்க இயலாததற்கு  மன்னிக்கவும்.
நன்றி:  பதில்களை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது அனைத்து பதில்களையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.
நன்றி:  எனக்காக படங்களை கண்டு பிடித்து கொடுத்த கூகிள்க்கு நன்றிகள் பல. அந்த படங்களை போட்டு வைத்த தளங்களுக்கும், நன்றிகள் பல....  :-)

பின்குறிப்பில் ஒரு முன் அறிவிப்பு:  அடுத்த கட்ட நேயர் விருப்பம் டாபிக் கமென்ட்டில் வரவேற்கப்படுகின்றன..... இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு  கமிஷன் டீல் ஒத்து வராததால்,  யாரும் SMS அனுப்பி ஏமாற  வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, June 27, 2010

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

எனது முந்தைய பதிவு ஒன்று,  "ஆண் பேச நினைப்பதெல்லாம்"......... வாசித்து விட்டு,  அதன் தொடர்ச்சியாக,
"ஆண் கேட்க நினைப்பதெல்லாம் ....." என்று எழுதுங்க என்று சிலர் எனக்கு இ-மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அடிக்கிறது வெட்டி அரட்டை,   இதுல நேயர் விருப்பம் ...... ஆஹா..... சூப்பரு என்று நானும், கேள்விகளை அனுப்புங்க ....என்னால் முடிந்த அளவு, பெண்களிடம் பேசி, பதில் வாங்கி தருகிறேன் என்று ஒரு சேவை மனப்பான்மையுடன்  அடுத்த "ஆராய்ச்சி" மணி அடிக்க கிளம்பினேன்.......  சந்தோஷமாக,  கேள்விகள் வந்து குவிந்தன.... அதில்,  மொத்தம்  பத்து கேள்விகள் எடுத்துக்கிட்டு, சர்வே ஆரம்பிச்சேன்.....  முக்கியமாக நம் பெண் பதிவர்கள் சிலரும்  ஆர்வமாக பங்கு பெற்று கொண்டாங்க......  மற்ற நட்பு வட்டங்களும் பதில் தந்து இருக்காங்க.... சிலர், அவர்களுடைய தோழிகளிடம் இருந்து பதில் வாங்கி தந்து இருக்காங்க....

 அந்த பதில்களில் முக்கியாமனவற்றை தெரிந்து எடுத்து, இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன்......

பெண்ணின் மனதை தொட்டு அறியாதவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரை: 

பெண் மனதில் - பெண் கொண்டுள்ள attitude பல வகைப்படும்.  கீழ் கண்ட பதில்களில் இருந்து நீங்கள் தெரிந்து/புரிந்து  கொள்ளலாம். அதில், நீங்கள் எந்த வகை பெண் - girlfriend/wife/friend - உடன் டீல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து,   பதிலை சாமர்த்தியமாக செலக்ட் செய்து கொள்ளவும். தவறான பதிலுடன் தவறான வகை மனதுள்ள பெண்ணுடன் அணுகினால்,  மக்கா - உங்க முதுகில "கெட்டி மேளம்" தான்..... இதற்கு கம்பெனி பொறுப்பு ஆகாது. அதனால், உங்கள் மண வாழ்க்கையில் - காதல் வாழ்க்கையில் - வரும் "சுனாமி"களுக்கும் இந்த
வெட்டி பேச்சு "மன்னார் அண்ட் கம்பெனி" பொறுப்பு எடுக்காது.

முதல் ஐந்து கேள்விகளும் பதில்களும் இங்கே:  மற்ற ஐந்து கேள்விகள்  அடுத்த பதிவில்/இடுகையில்:

மந்தைவெளியில் இருந்து "கரிசனம்" கந்தசாமி கேட்கிறார்:
1. நான் ஆணாக பிறந்து இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்தது உண்டா?
(முடிந்தால், இரண்டு மூன்று வரிகளில் எப்பொழுது (why and when)  என்று சொல்லவும்.)

 1.   ஒரு போதும் நினைத்தது இல்லை.
2.   நான் ஆணாகப் பிறக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன்.  
3 .   நான் வளர்ந்ததே ஆண்பிள்ளை (Tom Boy) மாதிரி தான். அதனால், அப்படி தோன்றியது இல்லை.
4 .  சில நேரங்களில்,  நினைத்து ஏங்கி இருக்கிறேன்:
................ பெற்றோருக்கு பண உதவி செய்வதில் இருந்து, கூட வைத்து கவனித்து கொள்ள இயலாத நிலையில்.
.................சில வேலைகளுக்கு (field job) ஆணாக இருந்து இருந்தால், இன்னும் advantage இருந்து இருக்கும். 
................. ஜஸ்ட் லைக் தட் ... நண்பர்களுடன் சௌகரியமாக ஆண்கள்,   கும்மி, ரம்மி, தண்ணி, சைட்  அடிக்க முடியும்.  இந்த செயல்களுக்கும் அவர்களது  "நல்லவர்" இமேஜ்க்கும் நோ டேமேஜ். ஆனால், விளையாட்டாக பொண்ணுங்க செய்தால் கூட, "முத்திரை" குத்திடுறாங்க..... குறிப்பாக, திருமணம் ஆன பெண்களுக்கு இது ஒரு challenge தான்.  ஹி,ஹி,ஹி,ஹி.... 
5.     இது என்ன காஞ்சு போன கருவாட்டு கேள்வி.  ஆண்கள் எப்பொழுதாவது பெண்ணாக பிறந்து இருக்கலாம் என்று நினைத்தது உண்டா? அப்படி நினைத்த தருணங்கள் தவிர மற்ற நேரம்,  நாங்க அப்படி நினைச்சோம் என்று வச்சுக்க சொல்லுங்க...... 

அடுத்த கேள்வி கேட்பவர், நாளைக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆகி கொண்டு இருக்கும் "அசால்ட்"ஆறுமுகம்:

2 .  பெண்கள், தனக்கு வரப் போகும் கணவரிடம், முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?
(எல்லாம் அல்ல.  மிக முக்கியம் என கருதப்படும்  விஷயங்கள் மட்டும்)

1.   தன் மனைவியை  விரும்ப வேண்டும்.
2.  தன் மனைவி  மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த தெரிய வேண்டும்.
3 .  அவ்வப்போது பாராட்டி, உற்சாகப் படுத்த வேண்டும்.  
4 .  வீட்டு பொறுப்புகளில் உதவி செய்ய வேண்டும் - சீண்டலுடன் - கூடலுடன் - சேட்டைகளுடன் - சில்மிஷங்களுடன்.
5 .  நல்ல வேலை அல்லது பிசினஸ் இருக்க வேண்டும்.  ஓரளவுக்காகவது,  பார்க்கிற மாதிரி லுக் இருக்க வேண்டும்.
6 . நல்ல understanding - மனைவியின் உணர்வுகளை, ஆசைகளை மதிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 
7 .  அனுஷ்கா, தமன்னா மாதிரியும் இருக்கணும் - "எங்கும் எங்கெங்கும்" பொம்மீஸ் நைட்டீஸ் போட்ட குடும்ப தலைவியாயும் இருக்கணும் என்று எதிர்பார்த்து - மனைவியை  டார்ச்சர் பண்ணாம இருக்கணும். 

எதிர்பார்ப்புக்கும் கிடைத்ததற்கும் பாலமாக ஒரு கேள்வியை எடுத்து விடுகிறார்,  "பில்ட் அப்" பீட்டரு:
3 .  உங்கள்  கணவரிடம்  பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?  

1 .  விருந்தோம்பல் - பிறருக்கு உதவுவது.
2 .  தன் மனைவி சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது.
3 .  3 Idiots virus மாதிரி டைமிங் சென்ஸ் கொண்டிருப்பது.
4 .  தன் மனைவியுடன் கலந்து பேசி விட்டு, எந்த முடிவையும் எடுப்பது. 
5 .  தன் மனைவி மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை. 
6 .  ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும்,  சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது. 

ஆத்துக்குள்ள காலை விடும் முன், "ஆழம்" பார்க்க எண்ணும் "அடுத்தாத்து" ஆல்பர்ட்டு:  
4 .  உங்கள் கணவர் அல்லது காதலர், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது. உங்கள்  reaction என்ன? என்ன செய்வீர்கள்?  

1 .  கண்டிப்பாக சண்டைதான்.......
2 .   பயங்கர கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாது...... இரு தரப்பு பெற்றோர் வரை விஷயம் போகும்.
3 .  தன்னை பிடிக்காமல் தானே இன்னொரு பெண்ணை தேடினார் என்று ஒதுங்கி விடுவது..... ஒரு வேளை, தன் கணவர் அப்படி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் இவ்வளவு உறுதியான பதிலை  தர முடிகிறதோ என்னவோ.....
4 .  குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து வரை போகாவிட்டாலும்,  "மறந்தேன் - மன்னித்தேன்" என்று நிச்சயம் இருக்க முடியாது.
5 .  "அரிசினு அள்ளவும் விடாமல் - உமினு ஊதவும் விடாமல்" பாடாக படுத்தி,  பழி வாங்கி  விடுவது.
6 .   திருமணத்துக்கு முன் என்றால் - போட்டிக்கு தானும் வேறு ஆளை தேடி கொள்ளுதல்  ....... திருமணத்துக்கு பின் என்றால் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - இந்த கற்பு கிற்பு என்று தடுக்கிறதே...... நிச்சயமாக அவருக்கும் மனம் வலிக்கிற மாதிரி ஒரு செயல் உண்டு....

இந்த கேள்வியை கேட்பது,  வம்பு வேண்டாமே ஆனாலும் ஏதோ ஒன்றை கேட்டு வைப்போமே என்று இருக்கும் "டீசன்ட்டு" தங்கசாமி: 
5 .  உங்கள் கணவர் அல்லது காதலருக்கு, உங்களை (மட்டுமே) பிடிக்க முக்கியமான காரணங்கள் சொல்லுங்களேன்...

1 .  மனைவியின் சமையல்  - வீட்டு நிர்வாகம்.
2 .  மனைவியின் தன்னம்பிக்கையும் தைரியமும்.
3 .  வெளிப்படையான பேச்சு.
4 .  மனைவி அல்லது girl friend கிட்ட ஏதாவது ஒன்று கன்னாபின்னான்னு பிடிக்கணும்.  அப்போ தான் சரிப்பட்டு வரும்.
இது ஆளாளுக்கு வேறுபடுவதால் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
5 .  இதையும் கேள்வின்னு கேக்குறவங்களை என்னனு சொல்றது?  அவரோட டைப்புக்கு, வேற எவளும் இப்படி அட்ஜஸ்ட் பண்ணி இருக்க மாட்டாள்.   இதுதான் "cheap maintenance " .......
 

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... இப்போவே கண்ணை கட்டுதே...... இன்னும் பாதி கிணறு இருக்குதே....." என்று நினைக்காதீங்க..... கேட்டதுதான் கேட்டுட்டாங்க - முழு பதில்களையும் பாத்து தெரிஞ்சுக்கோங்க...
  விரைவில் அடுத்த பாகம்!

நன்றி: படங்கள் கூகிள்.

Friday, June 25, 2010

ஆண் ஒரு சூரியன் - பெண் ஒரு நிலா

 
 படத்துல பாத்தீங்களா? அவர் , சூரியன் வச்சு தான் சிகரட் பத்த வைத்து கொள்வாராம்......This is attitude!

நிலாவை பெண்ணுக்கு ஒப்பிட்டோ அல்லது  பெண்ணை நிலாவுக்கு ஒப்பிட்டோ குறிப்பிடப்படும் அதே வேளையில், ஆணை எப்பொழுதும் சூரியனுக்கு ஒப்பிட்டு தான் சொல்கிறார்கள்.  பெண், ஆணை depend பண்ணி இருக்கிறாள் என்பதற்கு symbolic ஷாட் எடுத்து விடுறாங்களாம்...... அவ்வ்வ்வ்......
 நிலா பெண்ணே................ இந்த படத்தில்!  This is illusion!

 இது எப்படி இருக்கு?




இதுவும் எப்படி இருக்கு?

இப்படியாய் இருக்கும் சூரியனும் சந்திரனும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வரும் சக்திக்கு பெயர், காதல் என்று சொல்றாங்க.... அதையும் இந்த so called சூரியன்ஸ் எப்படி சொதப்புறாங்கனு -   so called நிலாஸ் அப்படி என்ன பண்றாங்கனு பாலாஜி என்பவர் அருமையாக ஒரு குறும் படம் எடுத்து காட்டி இருக்கிறார். இதை நீங்க முன்னே பார்த்து இருக்கலாம்.  மீண்டும்........!!
இந்த குறும்படத்தை, எனக்கு அனுப்பி வைத்த பதிவுலக நண்பர்,  பிரின்ஸ் ராஜனுக்கு நன்றி.
பாலாஜி சாருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Wednesday, June 23, 2010

பச்ச முளகாய் - அது காரம் இல்லை

 
பச்ச முளகாய் அருமை பெருமை எல்லாம் பற்றி, ஒரு அமெரிக்க நண்பர் சொல்லி கொண்டு இருந்தாங்க.
"அதுல நிறைய விட்டமின்ஸ் (A, E and B groups) இருக்காம்.   மேலும்,  metabolism rate அதிகப்படுத்துமாம்.

முக்கியமா அதில் இருக்கிற capsaicin compounds, கான்செர் ட்ரீட்மென்ட்க்கு உபயோகப்படுத்தப்படுவதாக சொன்னாங்க.  பச்ச முளகாய் காரம் அதிகம் சேர்த்து கொள்ளாத நாடுகளில், கான்செர் ரேட் அதிகமா இருக்குதாம்.  சரியா போச்சு...... அல்சர் அது இதுனு சொல்லி காரம் குறைச்சவங்களுக்கு,  இந்த மிரட்டல் செய்தி எப்படி இருக்கும்?  அவ்வ்வ்வ்வ்வ்....  விஷ முறிவுக்கு, சின்ன வெங்காயம் மாதிரி - கான்செர் முறிவுக்கு பச்ச முளகாய் என்று சொன்னார்.

 http://www.chillies-down-under.com/health-cancer.html

அப்புறம், என்ன நினைத்தாரோ - அவரே, " இதில் வேடிக்கையான(???)  விஷயம் என்னவென்றால், பச்சை மிளகாய் சாப்பிட்டுவிட்டு, அதிகம் காரம் தாங்காமல்,  உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டு சில நிமிடங்களில்,  மாரடைப்பு  காரணமாக  இறந்து போனவர்களும் உண்டு," என்று சொல்லி சிரித்தார்.

 மிளகாய்  சாப்பிட்டாலும் குத்தம் - சாப்பிடவில்லை என்றாலும் குத்தம் .... ம்ம்ம் ....... எப்படி என்றாலும் போற உயிரை, பச்ச முளகாய் பேரை சொல்லி விளையாடினால்  ......  என்ன கொடுமை சார், இது?

இப்போ, நான் பச்சை மிளகாய் சாப்பிடுறதா வேண்டாமா? 

திடீர் என்று நான்தான் இந்தியாவின் ஒரே அமெரிக்க பிரதிநிதி மாதிரி ,  கேட்டார்.

(இது அடிக்கடி எனக்கு நடக்குறது தாங்க......   இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க..... அந்த அந்த நேரத்துக்கு தோன்றும் காரண கப்ஸாக்களை,  நானும் சளைக்காமல் சொல்வேன். யாராவது அமெரிக்க ஆளு,  உங்க  கிட்ட இந்தியாவுல அப்படி ஆஹாவாமே ......  இப்படி ஓஹோவாமே என்று கேட்டால், இல்லைன்னு சொல்லி என்னை மாட்டி விட்டுறாதீங்க... நன்றிகள் பல. )

இந்தியாவிலே,  முளகாய்களையும் எலுமிச்சையும் இணைத்து கட்டி, அசுத்த ஆவிகள் (அட, காத்து கருப்பு திருஷ்டி  கண்றாவியை தான் அப்படி சொன்னார்....)    விலகி செல்ல கட்டி விடும் பழக்கம் பற்றி விளக்கம்  கேட்டார்.  எனக்கு உடனே, ஒரு படத்துல,  விவேக் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல,   அஞ்சு கட்டுற தாயத்து காமெடி சீன்  தான் நினைவு வந்தது..... அதையே  "அறிவியல் ஆராய்ச்சி"  ஆதாரமா வச்சு,  என்னவோ விளக்கம் கொடுத்தேன்..... என்ன சொன்னேன் என்று அப்போவே திருப்பி சொல்லச் சொல்லி அவர்  கேட்டு இருந்தால், அங்கேயே "கண்ணை பார் சிரி" மாதிரி நாக்கை தள்ளி கொண்டு நானே பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு,   ஹி ஹி ஹி ஹி னு சிரிச்சு இருந்து இருப்பேன்.  திருஷ்டி போச்சோ என்னவோ, அவர் அங்கே இருந்து அப்போவே ஓடி போய் இருந்துருப்பார்..... ஹூம்......

அப்புறம், நம்ம நாட்டுல உள்ள ஒரு நியூஸ்  எடுத்து விட்டார் பாருங்க...............

ஏப்ரல் 2009, உலகத்திலேயே காரமான பச்ச முளகாய் வெரைட்டில 51 எண்ணிக்கை சாப்பிட்டு விட்டு,  Guinness Book of Records  வைத்து இருப்பது யார் தெரியுமா?  26 வயது,  அஸ்ஸாம் மாநிலத்து பச்சை "முளகாய்" கிளி:  திருமதி.அனந்திதா தத்தா  தான்.


Bhut Jolokia என்கிற மிளகாய் தான் உலகத்திலேயே அதிகம் காரமான மிளகாய்.  ஜோலோக்கியா தான்  கின்னஸ் ரெகார்ட் ஹோல்டர்.    அந்த மிளகாயில் உள்ள ஒரு  சின்ன வெள்ளை விதை மட்டும் சாப்பிட்டாலே, ஐந்து மணி நேரத்துக்கு வாய் எரியுமாம் - கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்குமாம் - மூக்கு எரிச்சல் வருமாம். அப்போ ஒரு முழு மிளகாய் சாப்பிட்டால், என்ன ஆகும் என்று நினைத்து கொள்ளுங்கள்....

இதுல அனந்திதாவுக்கு ஒரு வருத்தம் - practice பண்ணும் போது அறுபது மிளகாய் வரை சாப்பிட்டு விட்டார்களாம்.... இங்கே அத்தனை சாப்பிட முடியாம போய்ட்டோமேனு......  என்னங்க, உங்களுக்கே டூ மச் - nine மச்சா தெரியல.



போதாதற்கு,  கொஞ்சம் மிளகாய்கள் எடுத்து கண்ணில் தேய்த்து காட்டினார்களாம்..... அம்மாடி....... !!!
கீழ் கண்ட லிங்க் கிளிக் செய்து முழு செய்தி வாசித்து கொள்ளவும்:
http://www.dailymail.co.uk/news/worldnews/article-1169045/Woman-gobbles-51-worlds-hottest-chillies--rubs-25-eyes-Gordon-Ramsay-watches-horror.html

                                        




ஆமாம் சித்ரா,   மிளகாய் பத்தி சொல்லி இருக்கியே,  என்ன மேட்டர்னு கேக்குறீங்களா?

என் குடும்பத்துடன் ஒரு mexican restaurant போய் இருந்தேன்.  அங்கே டிவியில்,  SOCCER மேட்ச் ஒளி பரப்பாகி கொண்டு இருந்தது......... அங்கே  வேலை செய்து  கொண்டு இருந்தவர்களும் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களில் பலரும்,   சவுத் அமெரிக்கா நாடுகளில்  இருந்து வந்தவர்கள்.  ஆளாளுக்கு Brazil, Argentina என்று சப்போர்ட் செய்து விவாதித்து  கொண்டு இருந்தார்கள்.  அவர்களுடன் சேர்ந்து நானும் என் கணவரும் , ஏதோ ஆர்வ கோளாறில் மேட்ச் பார்க்க ஆரம்பித்து கோல் போடும் போது சத்தம் போட்டோம்.  நம்ம டீமுக்கு இப்படி சப்போர்ட்  என்று அவங்களுக்கு ஒரே சந்தோஷம்.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்போ, ஒருத்தருக்கு ஒரு டவுட்....... நம்ம டீமுக்கே இந்த கரகோஷம்...... அப்போ,  இந்தியா டீம்  வந்து இருந்தால்....... அப்படியே இந்தியா டீம்  பற்றி கேட்க ஆராம்பித்து விட்டார்கள்....... இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில்,    ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற...... உப்பு சப்பு இல்லாத பதில் சொல்லி சமாளித்தேன். 

ஆனாலும் மனசுல ஒரே பீலிங்க்ஸ்.......  இனி,  restaurant போனா, சாப்பிட்டோமா வந்தோமா என்று இருக்கணும்.  அப்புறம் அமெரிக்க நண்பர்,   காரசாரமான இந்த செய்தி   சொன்னதும், ,   எனக்கு சந்தோஷம் கொடுத்தது.

இல்லாததை நினைச்சு புலம்புறதை விட,  இருக்கிறதை வச்சு பெருமை பட்டுக்க வேண்டியதுதான்.  எத்தனையோ விளையாட்டு டீம்களை விட,    தனி ஆளாய் சாதனை படைத்து இருக்கும் திருமதி.அனந்திதாவுக்கு  - ஒரு ஓ போடுங்க!
 
 அவுட் ஆகாமல், மிளகாய் சாப்பிடுவதில் அரை சதம் அடித்த அம்மணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

Thursday, June 17, 2010

டீ கடை பெஞ்சு

அப்படியும் இப்படியுமா, வாரத்துக்கு ஒரு பதிவு/இடுகை என்று ஆகி விட்டது..... எப்போவாவது ரெண்டு.
வேலை பளு அதிகமாய் இருக்கிறது என்றாலும் "வெட்டி பேச்சு" பேசிய வாய், சும்மா இருப்பேனா என்கிறது.

சரி, அப்போ எதையாவது எழுதி தொலை என்று மனம் சொன்னாலும், என்ன எழுதுறது - எதை எழுதுறது  - எதை பத்தி எழுதுறதுனு ஒரே குடைச்சல்........ ஓகே,  அந்த "thinking process"  பற்றி எழுதுனா என்னானு தோணுச்சு......

1 .  சமையல் குறிப்பு:

"திருமணத்துக்கு முன், அம்மா வீட்டு சமையலில் மூக்கு முட்ட சாப்பிட மட்டும்  தெரிந்து வைத்து இருந்தவள், திருமணத்துக்கு பின் வேறு வழி இல்லாமல்  சமைக்க வந்தவள், நான்.    பசி பத்தும் செய்யும் - என்னை சமைக்க வச்சது.  இப்போ ஓரளவு தேறிட்டேன்......   நம்ம பதிவுலக சமையல் மகாராணிகள், ராணிகள், இளவரசிகள் அளவுக்கு இல்லைனாலும்,  ஏதோ சபையில அரசிக்கு பின்னால இருந்து சாமரம் வீசும் - விசிறி கொண்டு இருக்கும் - அந்த பெண்கள் அளவுக்கு சமைக்கிறேன் என்று பேசிக்கிறாங்க..... வேற யாரு,  என் சமையலை சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைத்த பாவப்பட்டவங்க தான்..... இதுல குறிப்பும் போட்டேன்னு வைங்க....... நாட்டுல கரண்டி பஞ்சம் வர வரைக்கும், எல்லோரும் கையுல கரண்டி தூக்கிக்கிட்டு அடிக்க வருவீங்க..... வேணாம்......... விட்டுருவோம்.

2 .   சினிமா விமர்சனம்:

வீட்டுல DVD ல பாத்தாலும் சரி, தியேட்டர்ல பாத்தாலும் சரி -  ஒரே kids friendly movies என்கிற அளவில்,  இப்போ  வீட்டு நிலவரம்.....   எழுதுனா Shrek 4 அல்லது The Spy Next Door பத்திதான் விமர்சனம் எழுதணும்..... அந்த படங்கள் மட்டும் பாக்குற அளவில் இருக்கிறவங்க யாரும் என் பதிவுகளை வாசிக்கிறதில்லை என்று சர்வே சொல்லுது..... அவ்வ்வ்வ்.....

3 .  குழந்தை வளர்ப்பு:

இதை பத்தி நான் சொல்றதை விட,  "நொய், நொய்னு"  அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது என் குழந்தைகளின் தாய் மாமா - அதாங்க, என் தம்பி என்கிற தங்க கம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை........ (இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)

4 .  கணவன் மனைவி   உறவு:

என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும்.  பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?

5 .  கவிதை:

இது வரைக்கும் மூன்று கவிதைகள் (அப்படின்னு நினைச்சிக்கிட்டு), என் ப்லாக்ல போட்டு இருக்கேன்.  என்னை தெரிஞ்சவுங்க,   நம்ம தோழி மனது நோகக் கூடாதுனு, "ஆஹா..... கவிதை அருமை. வாழ்த்துக்கள்!" என்று வெளியே சிரிச்சிக்கிட்டு,  உள்ளே அழுதுட்டு சொல்லிட்டு போய்ட்டாங்க...... என்னை தெரியாம, கவிதைனா என்னனு தெரிஞ்சவுங்க, "ஆஹா..... இந்த வசனங்கள் அருமை.  எந்த படத்துல வருது? பகிர்வுக்கு நன்றி," என்று "உண்மை"யை சொல்லிட்டு போய்ட்டாங்க.... அப்புறம், என்ன செய்ய? நம்ம கவுஜையை நாம் தான் அழகு பாக்கணும்னு, Blog archives ல "கவிதை" னு தனியா label போட்டு,  frame மாட்ட வேண்டியதா போச்சு...  இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த பக்கம் போக வேண்டாம்னு இருக்கேன்.

6 .   sports:

கிரிக்கெட்,  soccer , பாஸ்கட் ball , ஹாக்கினு எழுதுற குரூப் - விளையாட்டின் வரலாறு, பூகோளம், அறிவியல், கணக்குனு பக்கம் பக்கமா எழுதி பின்னி பெடல் எடுக்கிறாங்க.... நான் இன்னும் விளையாடுற கண்ணாமூச்சி,  Sequence கார்டு கேம்,  Pictionary , Taboo , Guesstures எல்லாம்  டிவி ல நேரடி ஒளிபரப்பு ஆகுற அளவுக்கு எப்போதான் வரப் போகுதோ?  ச்சே.....

7 .  இந்திய அரசியல் :

நாட்டு நடப்பு, அவல நிலை, அவசர நிலை பத்தி எல்லாம்,  என் ப்லாக்ல -  நான் பாலாய் பொங்கி - பன்னீராய் தெளிச்சி எழுதுனாலும் எழுதலனாலும் - அது பாட்டுக்கு ஒரு பக்கம் நாறிக்கிட்டு தான் இருக்குது....... போபால் gas வழக்குல, ஏற்கனவே நீதிபதிகள் காமெடி பண்ணிட்டாங்க..... என்னை மாதிரி ஆளுகளுக்கு அவங்க வேலை வைக்கல.
முதல, என் மனசாட்சி என்னை பாத்து கேள்வி கேக்குது: "இந்தியாவுல election நேரத்துல எல்லாம், நீ இங்கே குப்பை கொட்டிக் கிட்டு இருக்கே,  அங்கே உன் பெயருல தவறாம ஏதோ ஒரு கட்சியில இருந்து ஒரு ஆளு போய் கள்ள வோட்டு போட்டுட்டு போறாங்க...... அதுக்கே, நீ கண்டுக்காம இருக்கியே?  உனக்கே இது அசிங்கமா தெரியல?"
இருங்க, ஒரு நிமிஷம். இந்த ipod volume  இப்படி கூட்டி வச்சுட்டேன் என்று வைங்க,  "டொட்ட டோய்ங் ..." சத்தத்துல,  மனசாட்சி சத்தம் கேக்கல.  அப்பாடி!

8 .  பதிவுலக அரசியல்:

அப்படின்னு ஒண்ணு இருக்குறதே, சிலர் சொல்லி தான் எனக்கு  தெரிஞ்சுது. - ஆனால் புரியல.  தெரியாத மேட்டர் மட்டும் இல்ல, புரியாத மேட்டர் கூட எனக்கு வேண்டாம்.  இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி.

9 . உலக பிரச்சினைகள்:

ப்லாக் டீ கடை பெஞ்சுல - எல்லாத்தையும் பத்தி பேசலாம் - உலக ஞானம் வளத்துக்கலாம் - என் சிந்தனைகளை கொட்டிக்கலாம் - என் ஆதங்கத்தை தெரிவிச்சிக்கலாம் - விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் - தகவல் பகிர்ந்துக்கலாம் - கோபப்படலாம் - நொந்துக்கலாம் -  சரி, சரி  - பிரச்சினைகளை தீர்த்துக்க முடியுமா? முற்று புள்ளி வைக்க முடியுமா?  ஒரு பதிவு கணக்குக்கு அப்போ அப்போ ஏதாவது எழுதிடணுமா?  இல்லைனா, உலக அக்கறை - கரிசனம் இல்லைன்னு ஆகி விடுமா?  ம்ம்ம்ம்........

10 .  டி.வி. நிகழ்ச்சிகள்:

நித்தி மேட்டர்ல சன் டிவி எப்போ ஒரு வரைமுறை இல்லாமல் தணிக்கை பற்றி கவலைப்படாமல் - குழந்தைகள் பார்ப்பார்களே என்ற கவலை இல்லாமல் நடந்து கொண்டதோ, அன்றே - சன் டிவி connection கான்செல் செய்து விட்டேன்.    - கமென்ட் போட்டுக்கிட்டு - பதிவுல நொந்து கிட்டு - புலம்பிக்கிட்டே சன் டிவி பாக்கிறதை விட - இந்த புறக்கணிப்பு என் மனசுக்கு ஆறுதலா இருக்குது..... சில விஷயங்களில் வெட்டி பேச்சு  இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.

தம்பட்டம் தாயம்மா:  "அடியே சித்ரா!  நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி மட்டும் வச்சுக்கிட்டு, முக்கியமான பத்து டாபிக் பத்தி முழுசா deal பண்ணாம, எப்படி ஏழு மாசத்துல 74 இடுகைகள் போட்டு வந்துருக்கே?  அப்போ வெட்டி பேச்சு என்று இருக்கிற உன் ப்லாக்ல என்னதான் எழுதிக்கிட்டு இருக்கிற?"

ஆஆஆஆஆஆ........... அதான் இன்றைய வெட்டி பேச்சு இடுகை...... எப்பூடி?

Sunday, June 13, 2010

மியாமி பீச் "அழகி" ல்

Miami Beach ...................


  ஒவ்வொருத்தருக்கும்,  ஒவ்வொரு சம்பவம்,  ஒரு இடத்தை பற்றி மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.  நீங்க ஒரு இடத்தை சுற்றி  பார்க்க  போகும்போது ஏதாவது நடக்கணும். (Newton மட்டும்தான் விதி வச்சுக்கணுமா?)

Chitra's law # 1: நல்லதாக இருந்தால் பெரு மகிழ்ச்சி. "நாங்க அங்க போனோம்.  நல்லா enjoy பண்ணினோம். திரும்பி இப்படி எப்படா போவோம்னு இருக்கு " என்கிறோம்.  so, every good sambavam brings an actual positive reaction to that place.

Chitra's law # 2:  அதே இடத்தில் பிடிக்காதது வேண்டாதது நடந்திருந்தால் "அந்த இடத்துக்கு இனி யார் போவா? அப்படி அங்க என்ன இருக்கு?" என்கிறோம். so, every negative sambavam brings a bad reaction to that place.

அதாகப்பட்டது,  மேட்டர் இடத்தில் இல்லை.  ஒரு இடத்தை விட அந்த இடத்தில் நடப்பவை, அனுபவித்தவை  தான்,  நம் உணர்வுகளை தொடுகிறது...... மனதில் நிற்கிறது.

Miami இல் இருக்கும் சில beach களில் Crandon Beach ஒன்று   ................
என் கணவருக்கும் நண்பர்களுக்கும் rule # 1 apply ஆக்கிய  அதே வேளையில் எனக்கு rule # 2  apply ஆக்கிய  இடம்.

ஒரு சமயம், என் பிறந்த நாளை,  நண்பர்களுடன் Crandon பீச்சில்  போய் கொண்டாட  என் கணவர் பிளான் செய்து வைத்து இருந்தார்.  எல்லோரும் போனோம். நீச்சல் தெரியாத என்னையும் கடலில் ஆட்டம் போட தள்ளி விட்டார்கள். இவர்கள் என் நண்பர்களா,  இல்லை எதிரிகளா - பிறந்த நாள் அதுவுமா என்னை கொல்ல பாக்குராங்களேனு கத்தினேன். எங்கள் நண்பர், Paul,  "திருநெல்வேலிய தேடுது தேடுதுன்னு சாலமனை  படுத்துறீங்களே, அப்படியே direction பாத்து போனா, தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் வரும். அங்கே இருந்து ஒரு மணி நேரம்தான்" என்று பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா,  பரலோகத்துக்கு வழி சொன்னார்.

தாமிரபரணி  கரையை விட Crandon கடற்கரை அருகில் இருந்ததால் தண்ணீரை விட்டு வெளியே கரைக்கு  வந்தேன். ஒரு beach-walk போகலாம் என்று தோன்ற,  சாலமனை  தேடினேன். சற்று தள்ளி 2 pieces swim-suit அணிந்த சுந்தரிகள் குளித்து ஆட்டம் போட்டு கொண்டிருந்ததற்கு அருகில்,  எங்கள் நண்பர்கள் ரெண்டு பேர்களோடு  சேர்ந்து  கொண்டு கடல் நீரில் throw-ball ஆடுவதாக இருந்தார். இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா,  ஜொள்ளு கடலா  என்று  தெரியாது பாருங்கள்.

பிறந்த நாள் எனக்கு -   கொண்டாட்டம்  அவருக்கு!


என் தோழி,  லிண்டாவுடன் வாக் போய் விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நானும் லிண்டாவும் திரும்பி வந்து பார்த்தால்,  எங்கள் மக்காவை காணோம். அவர்கள் எல்லோரும் Beach volley-ball விளையாட போயிருக்கலாம் என்று லிண்டா சொன்னாள்.  அங்கும் இல்லை.  இவர்களை தேடிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது,  கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன் - நான் பார்க்கும் காட்சி நிஜம்தானா?

அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் சாலமன் பாதி ஏறியபடி - மரத்தை தழுவியபடி - உட்கார்ந்தது போல் தொங்கி கொண்டு இருந்தார். மரத்தின் கீழே,  இவர் விழுந்தாலும் பரவாயில்லை, மரம் விழுந்து விடக் கூடாது  என்பது போல் மரத்தை தாங்கி பிடித்தபடி, Paul உடன்  மற்ற  நண்பர்களும் நின்று கொண்டு இருந்தார்கள். நான் கத்தியபடி ஓடி வந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லாத்தானே எல்லோரும் தண்ணீரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். பின்னே எப்படி மரம் ஏற  வேண்டி வந்தது? நான் நிஜமாகவே கடல் பயணத்தை ஆரம்பித்து விட்டேனா என்று மரத்தில் இருந்து பார்க்கிறாரா? ஒன்றும் புரியாமல் பயந்து கத்தியபடி ஓடி வந்தேன்.

"Paul, Paul, என்னாச்சு? ஏன் இவர், இப்படி பாதி மரம் ஏறியிருக்கிறார்?" என்று கேட்டு கொண்டே வந்தேன்.
Paul, எனக்கு பதில் சொல்லாமல் வேறு எங்கோ மற்றவர்களுடன்  பார்த்து கொண்டிருந்தார். லிண்டா என் தோள் பிடித்து அமைதி படுத்தினாள்.
Paul  மெல்ல திரும்பி,  என்னை பார்த்து, "ஒண்ணும் இல்லை, சித்ரா. volley-ball விளையாடி கொண்டிருந்தோம். பந்து தென்னை மரம் மேலே மாட்டி கொண்டது. எப்படி எடுப்பது என்று தெரியவில்லை.  உங்க ஆளு, மரம் ஏறி பந்து எடுக்க முயற்சி பண்ணுவதாக சொன்னாங்க. ஆனால்  பாதி மரத்துக்கு மேல் ஏற முடியவில்லை. அதான்."


நான் லிண்டாவை பார்த்து உதவிக்கு police or fire-engine service  கூப்பிடும்படி சொன்னேன்.
மேலிருந்து சத்தம்:  "வேண்டாம்.   நானே மெல்ல  இறங்கிடுவேன்."
Paul ஏக்கத்துடன், "solomon got the best seat in town.  அங்க பாருங்க. கூட்டத்தில் எங்களுக்கு சரியா தெரிய மாட்டேங்குது.  அவருக்கு  பிரச்சினை இல்லை."
"என்ன கூட்டம்? என்ன பிரச்சினை?" என்றேன் பதட்டத்துடன்.

லிண்டா விரல் காட்டிய திசையில், ஒரு topless model அழகி,  ஒரு calendar photo-shoot  ஒன்றுக்காக  பல போஸ் களில் சிரித்து கொண்டு இருந்தது அரை குறையாக கூட்டம் நடுவில் தெரிந்தது. முதலில் பயத்தில் கத்தியவள் இப்பொழுது கோபத்தில் கத்தினேன். வேறு என்ன செய்ய?  மரம் ஏறியா உதைக்க முடியும்?

இன்று வரை, என் ஆளு  தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும்,  பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார். பனை மரத்தின் அடியில் குடித்தது பால்தானாம் - கள் இல்லையாம்.   "நம்பிட்டேன்."

There is never a dull moment in our happily married life.  :-)



Thursday, June 10, 2010

வலைச்சரம்

ஞாயிற்று கிழமை வரை, வலைச்சர ஆபீஸ் வேலை இருப்பதால், வெட்டி பேச்சு அரட்டை, அடுத்த வாரம் வரும்.
ஞாயிறு வரை, தினந் தோறும் ........ வலைச்சரத்தில் என்னை சந்திக்கலாம்:  முகவரி:

Monday  -
 http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_07.html

Tuesday  -
  http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_08.html

Wednesday -
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html

Thursday - 
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html

3 more to go:

Monday, June 7, 2010

நல்லது, கெட்டது தெரியுமா?

"சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்? நல்லது கெட்டது நாமதான் சொல்லி தரணும்," என்று என் தோழியின் அம்மா, என் தோழியை சத்தம் போட்டு கொண்டிருந்த  "நல்ல" நேரத்தில், அவள் வீட்டினுள் அடி எடுத்து வைத்தேன்.


  அவள் அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு "ஆமாம்" போட்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தேன். நான் வரும் போது, அம்மாவின் அர்ச்சனையில்  உர் என்று இருந்த  என் தோழி,  கொஞ்ச நேரத்தில்,
முகத்தை திருப்பி கொண்டு சிரிப்பதை பார்த்த பின் தான், நான் என்னையும் அறியாமல் விளாயாட்டுத்தனமாக பேசி கொண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். ஆனாலும், என் தோழியை சிரிக்க வைத்து விட்டோமே என்ற சந்தோஷம் எனக்கு.

அதன் பின், என் மனதில் தோன்றிய கேள்விகள்....

குழந்தைகளுக்கு  நல்லது கெட்டது சொல்லி கொடுக்கிற வயது என்ன?
குழந்தைகளுக்குரிய innocence,  எப்பொழுது தொலைகிறது?
அல்லது, தொலைக்க வைக்கப்படுகிறது?
குழந்தை மனதில்,  உலகத்தை குறித்த பார்வை என்ன வென்று தெரிந்து கொள்கிறோமா?
உலகத்தை குறித்த நம் பார்வை என்னவென்பதைத்தான்  குழந்தைகளின் மனதில் விதைக்கிறோமா?
குழந்தையின் வெள்ளை மனதுக்கும் (child-like),  சின்ன புள்ளத்தனத்துக்கும் (childish) உள்ள வித்தியாசம் எப்பொழுது பிள்ளைகளிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது?

இது நடந்து, இரண்டு வருடங்கள் ஆயிற்று. 

என் மகளுக்கு,  பிறந்த நாள் பரிசாக, ஒரு நண்பர்,   "தீயதை பார்க்காதே; தீயதை பேசாதே; தீயதை கேட்காதே" என்ற பொம்மையை (figurine) கொடுத்தார்.

 அவளிடமும் அதை பற்றி சிறிது விளக்கினார். நன்றி சொல்லி பெற்று கொண்ட அவள், பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த தன்  தம்பியிடம் காட்டினாள்.
 
"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு"  (head phones ல பாட்டு)


 கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.   என் மகன்  சொல்வதை திருத்த யாருக்கும் மனம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு, அவன் விளையாட்டு பார்வையில் உலகத்தை பார்க்கட்டுமே......

ஒரு நாள், நல்லது கெட்டது அவனுக்கும் தெரியும். அன்று அவனும், "தீயதை பேசாதே; தீயதை பார்க்காதே; தீயதை கேட்காதே" என்று சொல்லி கொண்டு இருப்பான். 
 

ம்ம்ம்ம்ம்ம்..........  ..... Once innocence is lost, நல்லது கெட்டது புரிந்து விடுகிறது.  இல்லை, நல்லது கெட்டது தெரிவதற்காக, innocence தொலைத்து விடுகிறோமா?   ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இந்த வாரம், என் மகன் செல்வம், தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான்.  :-)

(படங்கள்: கூகிள்)

Sunday, June 6, 2010

ஹலோ, ஹலோ நலமா?

ஹலோ ...... எப்படி இருக்கிறீங்க? நலமா?

நான் ஆங்கிலத்தில் லீவ் லெட்டர் சப்மிட் செய்து விட்டு  போனால், அதையும் யாரோ என் மேல உள்ள பாசத்தில்,  அவர்களாகவே  தமிழ் மணத்துல இணைத்து விட்டு பரிந்துரை செய்து விட்டார்கள்.  எனக்கு தமிழ் மணத்துல இருந்து ஒரு வார்னிங் மெசேஜ் வந்து இருக்கிறது. வேறு மொழியில் எழுதி விட்டு, தமிழ் மணம் பரப்ப முயன்ற குற்றத்தால், அந்த பதிவை நீக்கி விட்டோம் என்று செய்தி.   அதை எனக்கு தெரிந்த மொழியில் எழுதி இருந்ததால்  எனக்கு புரிந்து விட்டது.  இதையே பரிந்துரைக்க சேர்த்து விட்ட நல்ல உள்ளம்,  தமிழ் மணத்துக்கு பதிலாக  சைனீஸ் மணத்துல சேர்க்க அனுப்பி விட்டு, எனக்கு வார்னிங் மெசேஜ் வந்து இருந்தால், எனக்கு ஒண்ணும் புரிந்து இருக்காது. ஏதோ சைனீஸ் ரெஸ்டாரண்டு, ஆர்டர் பண்ண மெனு அனுப்பி இருக்கிறது என்று, நானும் எதையாவது லஞ்ச்க்கு ஆர்டர் செய்து விட்டு, இன்னும் பட்டினியாக காத்து இருந்து இருப்பேன்........ வாயில சிரிப்பு வருது.....

அப்புறம்,  இந்த வாரம்,   வலைச்சரம் பொறுப்பு என் கையில்...... என்னையும் நம்பி, இப்படி விஷப் பரீட்ச்சை செய்யும் சீனா ஐயாவுக்கு வணக்கமும் நன்றியும்......  கண்ணுல தண்ணி வருது.......

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_07.html
இங்கே கொடுக்கும் அன்பின் ஆதரவு கரத்தை அங்கேயும் நீட்ட வேண்டுகிறேன்....... தொண்டையில 'கிச்கிச்' வருது......

இனி, வழக்கம் போல வெட்டி பேச்சு தொடரும்: