Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Sunday, July 31, 2011

நன்றி! மீண்டு வருகிறேன்.


அனைவருக்கும் வணக்கம்.

இந்தியா போனது ஒரு மாதம் என்றால், jetlag மற்றும் ஊரு நினைப்பில் இருந்து மீண்டு வந்து சகஜ நிலைக்கு வரவும், ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு bonding ...... பாசப் பிணைப்பு....


ப்லாக்
பக்கம் வரலாம் என்றால்..... இங்கே பதிவுலகில் ஏகப்பட்ட மாறுதல்கள், குளறுபடிகள் வந்து வந்து வந்து வந்து வந்து போய் கொண்டு இருப்பதாக பதிவுலக நண்பர்கள் சிலரிடம் இருந்து அன்பான "ரிப்போர்ட்". இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வரலாம் என்றால், மேலும் சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான "கட்டளைகள்" ......."உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....

அப்படி இப்படினு காலைத் தேச்சு ஒரு வழியாக மீண்டு வந்து - மீண்டும் எழுதியே தீருவது என்று முடிவு பண்ணிட்டேன். இது எச்சரிக்கை இல்லை, அறிக்கை. (நானும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்து இருக்கேன்ல......)

தமிழ் நாட்டில் இருந்த முப்பது நாட்களில், 26 நாட்கள் ஊர் சுத்தலிலே போய் விட்டன. சந்தித்த பல அற்புதமான மனிதர்கள் - அற்பமான மனிதர்கள்; அடித்த சேட்டைகள் - எடுத்த சாட்டைகள் - பற்றியெல்லாம் எழுதாமல் எப்படி இருப்பது?

இந்த பதிவில், ஊரில் நடந்த வெட்டி பேச்சுக்களில் இருந்து ஐந்து துளிகள்:



கடையில் பரிச்சயமான ஒரு நபர்: "இப்போ எங்கே இருக்கீங்க?"
வெட்டி பேச்சின் பதில் : "அமெரிக்காவில தான்."
அவர்: " அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே....."
வெட்டி பேச்சு : "ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க...."
அவர்: "மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். "
வெட்டி பேச்சின் பதில் அல்ல, ரியாக்ஷன்: "ஞே!!!!!"



நெடு நாள் கழித்து சந்தித்த உறவினர் ஒருவர்: "சித்ரா, இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கியா?"
வெட்டி பேச்சின் பதில்: "இங்கே இருக்கிற சென்னையில் இருந்து கிட்டு, அமெரிக்காவில் இருக்கிறதாக எல்லோர்கிட்டேயும் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்."



டிவி பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உறவுக்கார பெண் : "ஹமாம் சோப்பு போட்டு குளிச்சா, 'என் வீட்டில், பத்து ஸ்கின் ப்ரோப்லேம் - நோ டென்ஷன்'ங்கறா. அப்போ, என் வீட்டு மாமியார் தருகிற 'பத்து ப்ரோப்லேம் - நோ டென்ஷன்' ஆக எதை போட்டு குளிக்கிறதுனுதான் தெரியல."
வெட்டி பேச்சின் பதில்: "எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."



நெல்லையில்
எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."



நெருங்கின உறவினர் ஒருவர்: "வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்?"
வெட்டி பேச்சின் பதில்: "திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்."
உறவினர்: " நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன? Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே."
வெட்டி பேச்சின் பதில்: "மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். "
உறவினர்: "பிளாக்கர்னா என்ன செய்றீங்க? "
வெட்டி பேச்சின் பதில்: "இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்."
உறவினர்: "அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா?"
வெட்டி பேச்சின் பதில்: "ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
உறவினர்: "ஞே!!!!"


பதிவர்
என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....
அட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்?



Sunday, March 6, 2011

என் பேரைச் சொல்லவா ....


இது வழக்கமான பதிவு இல்லைங்க...  இது ஒரு சுய  பெயர் புராண  பதிவு.  இப்போ அதற்கு என்ன அவசரம் என்று கேட்கிறீங்களா?  நம்ம பதிவுலக நட்பு வட்டத்தில் இருந்து,  ராஜியும் இளங்கோவும்  "பெயர் காரணம் தொடர்பதிவு"  என்ற பெயரில்,   என்  பேருக்கு கேள்விகள் கேட்டு இருக்காங்க.... 
என்ன பதிவு,  ஒரு பேருக்காவது  ஒப்பேத்த என்ன பதிவு போடலாம் என்று  நினைத்த பொழுது, இந்த பேர் பதிவே சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன்.  


 
ராஜி:   வணக்கம்,  சித்ரா. 
 சித்ரா:  வணக்கம், ராஜி. 

இளங்கோ:  வணக்கம், சித்ரா.    நாங்க இரண்டு பேரும், ஒவ்வொரு கேள்வியிலும் "பேரு" வைத்து கேட்கப் போறோம். நீங்க பதில் சொல்லணும்னு கேட்டுக்கிறோம்.
சித்ரா:  வணக்கம், இளங்கோ.   சரிங்க...


ராஜி:  சித்ரா என்பது உங்கள் சொந்த பெயரா? இல்லை பதிவிற்காக வைத்த பெயரா
சித்ரா: சித்ரா, என் சொந்த பெயர். அதுவே நல்லாத்தானே இருக்குது -   பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு  எடுக்கணும் என்று சித்ரா என்ற என் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். 


இளங்கோ:  உங்களுக்கு சித்ரா என்ற பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டா? 
சித்ரா:  விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான்  பிறந்ததால்,  எங்க வீட்டில் எனக்கு சித்ரா என்றே  பெயர்  வைத்து விட்டதாக  எங்க அப்பா சொல்லி இருக்காங்க. 
நிறைய குழந்தைகளுக்கு  நட்சத்திரம் பார்த்து  பேரு வைப்பாங்களாம்.  எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க.... 

ராஜி:   பெயர் காரணத்துக்கும்  ஒரு பில்ட் அப்பு..... சரியா போச்சு!   உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்
சித்ரா: சித்து.

இளங்கோ: இதுதான் நீங்கள் பதிவுலகிற்கு தரும் முதல் பேர் சொல்லும்  பேட்டியா?
சித்ரா:  இல்லை... முன்பு ஒன்றிரண்டு  மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன்.

ராஜி: உங்களுக்கு நிறைய பட்டப் பெயர்கள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அவற்றில் உங்களுக்கு வித்தியாசமாக தோன்றும் பெயர் எது?
சித்ரா:   குயீன் குல்னார்.  (Queen Gulnar) இந்த பெயர் எனக்கு ஏன் வந்துச்சு ....எதுக்கு வந்துச்சுன்னு தெரியல... ஆனால், சின்ன வயசுல இருந்து என் கூடவே இருக்குது... 

இளங்கோ:  பதிவுலகில் நல்ல பெயர் வாங்க ஏதாவது டிப்ஸ் கொடுக்க முடியுமா? 
சித்ரா:         நான்  பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால்  போதுமா?  
 
 ராஜி:   பதிவுலகில்,  கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பேர் பெற்று இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 
சித்ரா:  ஒருவர்,  தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு,  அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள்  இருக்கிறது. 
 
 
இளங்கோ:  இப்போ நிறைய பதிவர்கள் வந்து இருக்காங்க.  அவர்கள் சார்பாக ஒரு கேள்வி:  
எப்பொழுது ஒரு பதிவர்,  பிரபல பதிவர் என்று பேரு எடுத்துட்டார்னு  தெரிந்து கொள்வது? 

சித்ரா:  தமிழ்மணத்துல விரைவில்,  பிரபல பதிவர்களின் பெயர்கள்  பட்டியல்கள் வாரா வாரம் வெளியிடப் போவதாக ஒரு ரகசிய செய்தி வந்து உள்ளது.   அதன்படி, இனி
இந்த வார முன்னணி  ப்ராப்ள (problem) பதிவர் பட்டியல்  :  அந்த அந்த  வாரம் பதிவுலக சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பிரபலமாகும்  பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
இந்த வார  முன்னணி "ப்ரா"பல பதிவர் பட்டியல்:            அந்த அந்த வாரம் நடிகைகளின் படங்களை போட்டு,  அவர்களின் ப்ரா பலத்தில் பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும். 
   வேறு எந்த எந்த பிரிவில் எல்லாம் பிரபலப் பதிவர்கள் பட்டியல் போடணும் என்று புதிய பதிவர்கள், தமிழ்மணத்துக்கு "பரிந்துரை" செய்து எழுதி அனுப்பலாம்.  அப்படி வரும்  பட்டியல்களில் ஒன்றிலாவது  உங்கள் பெயர் அங்கே இருந்தால் மட்டுமே,  நீங்கள் பிரபலமான பதிவர்  என்று தெரிஞ்சுக்கலாம்...



ராஜி:  அந்த கேள்விக்கு,  உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே  சொல்லி இருந்து இருக்கலாம்...   ம்ம்ம்ம்.....  நீங்க நிறைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுறீங்க.  ஆனால், சர்ச்சைக்குரிய பதிவுகள் என்றால் அப்பீட்டு ஆகிவிடும் பதிவர் என்று பேர் எடுத்து இருக்கீங்களே.... 

சித்ரா:  சர்ச்சைக்குரிய பதிவுகள் - பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன்.  இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால்,  அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு  போய்டுவேன்.  பின்ன என்னங்க?  நான் என்ன ....இந்தியா -  பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்?  நாலு பதிவுகள் வாசித்தோமா -  நாலு வோட்டுக்கள்  போட்டோமா -  அருமை,  :-) ,  சூப்பர்,  வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல,  வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ  பதிவுகள்  போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  



இளங்கோ:  பேருதான் பெத்த பேரு கேள்விகணைகளில்  உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி.    நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?
சித்ரா:  ஆ .... ஆ......  ஆஆஆ ......  (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.) 




Tuesday, January 18, 2011

2010 - திருப்பி போடணும்.

 எனது சென்ற பதிவில் -  "நல்லா படிச்சீங்களா?"   -  நான் கேட்டு கொண்ட கேள்விக்கு - சிறப்பான பதிலை தந்து, எனக்கு உதவிய "அரசூரான்" அவர்களுக்கு நன்றி.

அவரின் பதில்:

"//இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?//
குழந்தை சும்மா கேட்காது, ஒற்றை விரலை (அப்பா மாதிரியே) நீட்டி கேட்கும், அப்படியே பதில் சொல்லாம ரிவர்ஸ்ல ஓடிப்போயிருங்க..."

ஹா,ஹா,ஹா,ஹா, ..... அந்த கமென்ட் வாசித்து விட்டு நல்லா சிரிச்சேன். 

 2011 ஆம் ஆண்டை  "வா வா...... வாத்தியாரே, வா...." என்று நான் அழைத்துக்கொண்டிருந்த நேரம்,  பதிவுலக நண்பர் பாலாஜி வந்து , நான் 2010 ஆம் ஆண்டை  திரும்பி பார்த்தே ஆகணும் என்று "தொடர் பதிவு" என்ற பெயரில் ஒரு கண்டிஷன் போட்டுக்கொண்டார்.


மக்கா,   நான் அப்படி என்னதான் (போன வருஷம் மட்டும் அல்ல  - இந்த வருஷமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்)  "வெட்டி பேச்சு" பேசுகிறேன் என்று திருப்பி போடுறேன். சாரி, திரும்பி  பார்க்கிறேன்.  (எப்படி பார்த்தாலும்,  பானையில் இருக்கிறது தானே அகப்பையில் (கரண்டியில்) வருது.   அவ்வ்வ்....) என் பதிவுகள் வாசிக்கும் அனைவருக்கும்  தெரிந்து இருக்குமே - நான் எதை பத்தியும் உருப்படியா எழுதலனு  உடனே கண்டுபிடிக்க முடியாத மாதிரி, உருப்படியா எழுதிருவேன்னு.  ஹி,ஹி,ஹி,.....

வெட்டி டைம் இருந்தால்,  வெட்டி பேச்சுக்களின் பிறப்பிடமான "டீ கடை பெஞ்சு..." என்ற தலைப்பில் போன ஜூன் மாதம், நான் கிறுக்கியதை பார்த்து "வெட்டி  அறிவை" வளர்த்துக்கோங்க.

போன வருஷம்தான் எனக்கு பதிவுலகில் நல்லா  kick -off ஆச்சு. எனக்கு interesting  விஷயங்கள் நிறைய  நடந்துச்சு.
எல்லா புகழும் இறைவனுக்கே!  

காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு,  அப், டௌன்,  ட்ராஜெடி கூட   ......பார்த்தேன்.  ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து  வராத வண்ணம் பார்த்துக் கொண்டு,  வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன்.   வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.


அப்புறம்,  13 வருடங்கள்,   நல்ல தோழியாய்  பழகிட்டு, பதிவுலகம் வந்து - அது தந்த போதையில்,  என்னை காயப்படுத்தி, எனது நட்பை தூக்கி எறிந்து விட்ட வேதனையான சம்பவத்தில் இருந்து  --------  முகம் தெரியாது இருந்தும் ,  எழுத்துக்கள் மூலமாகவே அறிமுகம் ஆகி,  சகோதர பாசத்துடன் பழகும் பல நல்ல உள்ளங்களின் அன்பும் நட்பும் கிடைத்த இனிமையான சம்பவங்கள் வரை எல்லாம் நடந்துச்சு.

எல்லாத்தையும் சொல்லி bore அடிக்கணுமா என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ,  பதிவுலகில் ஏற்படும்  எனது   பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி,  ஒரு பாட்டு வந்து இருக்கிறது,  நினைப்புக்கு வந்துச்சு.  அதிலே "This is Africa" என்பதற்கு பதில், "This is வெட்டி பேச்சு" னு  போட்டு பார்த்தா - எல்லாமே  கரெக்ட் ஆக இருக்குதுப்பா... lyrics கவனிச்சு பாருங்க....  நான் சொல்றது பில்ட் அப் இல்லை, சரின்னு தெரியும்.



அந்த பாட்டில்,  ஷகிரா மற்றும் "waka ...waka...."  மட்டுமே கவனித்து விட்டு,  அதில் lyrics இருந்துச்சா ஆஆஆ...... என்று அப்படியே 'ஷாக்' ஆகி இருக்கும் நண்பர்களுக்காக, அந்த பாடலின் வரிகள் - Africa வுக்கு பதில், வெட்டி பேச்சு  - சேர்த்து இதோ:

You're a good soldier -
Choosing your battles.
Pick yourself up
And dust yourself off
And back in the saddle.
You're on the frontline
Everyone's watching -
You know it's serious
We're getting closer.
This isn't over.
The pressure is on
You feel it.
But you've got it all
Believe it.
When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...
Tsamina mina
Zangalewa
Cuz this is வெட்டி பேச்சு.
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு.
This is our motto:
Your time to shine
Don't wait in line.
Y vamos por Todo
People are raising
Their Expectations.
Go on and feed them
This is your moment.
No hesitations.
Today's your day
I feel it.
You paved the way
Believe it.
If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு .
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for வெட்டி பேச்சு.

எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............!

Thursday, November 25, 2010

எந்த ஊரு நேம் பஜ்ஜியோ?

Excuse number 1:  வியாழன் அன்று,  அமெரிக்காவில் "Thanksgiving Day" கொண்டாடப்படுகிறது. வியாழன் முதல், ஞாயிறு வரை பலருக்கு லீவு தான்.  எங்கள் வீட்டில்  விருந்தினர்கள் விசிட். 
Excuse number 2 :  கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் .
Excuse number 3 : "தமிழ்மண நட்சத்திரம்" காரணமாக,  தினம் ஒரு இடுகை  என்பது எத்தனை பெரிய சவால் என்பதை புரிந்து கொள்கிறேன்.  ஈஸி ஆக, தினம் ஒரு இடுகையை தரும்  பதிவர்களுக்கு, ஒரு ஸ்பெஷல் வணக்கம்.
Excuse number 4 :  வேற என்ன excuse எல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதனால் சகல பதிவர்களுக்கும்  அறிவிப்பது என்னவென்றால்,  உங்கள் பதிவுகளில்,  மீண்டும் பின்னூட்டப் புயல் அடிக்க, சிறிது நாட்கள் ஆகும்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  இப்போ draft பரணிலேயே ரொம்ப நாட்களாக இருந்ததை, தூசி தட்டி எடுத்து,  எழுதி  முடித்த இன்றைய  கோட்டா இடுகை:

 நான் Texas க்கு  புதிதாக வந்து இருந்த சமயம்:

இந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்த தோழி ஒருத்தி, சென்னையில் தன் உறவினர் ஒருவர், தன் கடைக்கு நேமாலோஜி (Nameology)  படி -  Vani (வாணி) ஸ்டோர்ஸ்  என்று தன் மகள் பெயரில்  இருந்ததை,   Vaannee (வான்நீ)  ஸ்டோர்ஸ் என்று மாற்றி விட்டதாக சொன்னாள். நல்ல வேளை, அவர் மகளையே இன்னொரு வீட்டுக்கு மாற்ற சொல்லவில்லை. தப்பிச்சிட்டா! என்று கமென்ட் அடித்து கொண்டோம்.   பின், என்னை ஒரு இந்திய Association நடத்திய விழாவுக்கு அழைத்துச்  சென்றாள். 

"எல்லாமே புது முகங்களாக இருக்குதே .... யாரையும் தெரியாது.  சீக்கிரம் திரும்பி போய்டலாம்," என்றேன்.  "போடி புள்ள,  நீதாண்டி இங்கே புது முகம். அவங்க எல்லாம், இங்கேயே பல வருஷமாக பழம் தின்னு கொட்டைய   போட்டவங்க.  நல்ல கதையா இருக்குதே!" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.  அவ்வ்வ்.....

ஒரு வீராப்புடன், நானே என்னை  அறிமுகப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
அருகில் இருந்தவரிடம்:

"Hi - Hello,  I am Chitra."
"Oh!  I am Shawn."
"ஷான்?"
"ஸ்ரீனிவாசன் தாங்க.  சொந்த ஊரு,  அம்பாசமுத்ரம். அமெரிக்கர்கள் கூப்பிட வசதியாக ஷான் என்று சொல்லிடுவேன். அந்த பழக்கத்திற்கு இப்போதும் வந்துட்டுது."
(மக்கா, உங்களுக்கே ஓவரா தெரியல. என்னை பார்த்தால், ஸ்ரீனிவாசன் என்று சொல்ல கஷ்டப்படுற ஆளு மாதிரியா தெரியுது?)

ஆனால்  சும்மா சொல்ல கூடாது! ஷானுக்கு ரொம்ப நல்ல மனசு. அவரே, என்னை தனது நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


இனி,   "நேம் ஈஸியாலாஜி அமெரிக்க பஜ்ஜி சொஜ்ஜி " படி  மாறி இருந்த இந்திய பெயர்களைப்  பாருங்க.

Gary - கேரி - குருப்ரீத் சிங்
Matt - மது
Anna - ஆனந்தி
Rick - ரிக் - ராகவபெருமாள்
ஸ்டான்லி - தேனப்பன்
MARK -   மாதவ் (M) அனந்த (A) ராம (R) கிருஷ்ணன் (K)
 Steve - ஸ்டீவ் - ஷைலேந்தர் தேவ்.
Kayla - கேய்லா - குழலி
Danny - தினேஷ் மணி
Paul - பாலசுந்தரம்
Andy - ஆனந்தன்
Ash - அக்ஷயா
Sam - சாமிநாதன்.
Sara - சாரா - சரஸ்வதி
Chris - கிருஷ்ணகுமார் 
Jay - ஜைலேந்தர் சிங்
Ray - ராம்குமார்
Bob - பாபுமோகன்
Becky - பாக்கியலட்சுமி
 Jack - ஜெகன்நாத் ஷர்மா
Tammy - தேஜஸ்வினி
Vickie - விக்கி - விசாலாட்சி
Nancy - நாகேஸ்வரி
Luke - லக்ஷமணன்
Max - மாதேஷ்வர்
Nathan - நாதன் அல்ல நேதன் -  நரேந்திரன்
Bryan - ப்ரயன் - பரணிகுமார் ரெட்டி
Pam - பிரமீளா தேவி
Ron - ரான் - ராம சுப்பிரமணியன்
Mike - மீனாக்ஷி சுந்தரம்.
Dan - தாண்டவ மூர்த்தி.
Cathy - கார்த்திக்கா

இவங்க இப்படி "அமெரிக்க நேம் ஈஸியாலாஜி"க்காக பெயர்களை மாற்றி கொண்ட பின்,  அமெரிக்க வாழ்க்கை ரொம்ப நல்லா - ஈஸி ஆக  இருக்குதாம். 


இது ஒரு புறம் இருக்க,  சில அமெரிக்கர்களை சந்திக்கும் போது அந்த ஊரில்,  தங்களது தெரிந்த இந்தியர்களை பற்றி உயர்வாக  சொல்ல  ஆரம்பிப்பார்கள்.  அவர்கள் சொல்லும் பெயர்களை வைத்து யாராக இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்குள் ........ ஸ்ஸ்ஸ்ஸ் ......  யப்பா.......  (என் பெயரை  பெரும்பாலும் சரியாக சொல்லி விடுவதால், தப்பிச்சேன்! சிலர் மட்டும்   - ச்சிட்ரா  - Chitra  -  )

சன் டீப் or சன் டிப்  -  Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா) 
அ  ராவின் - Aravind (அரவிந்த்)
 சைத்தான்  யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா

கஸ்ஹந்த் சாம் (Sam )  - அது என்ன கல்கண்டு கஷ்டம்டா சாமி என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது,  எழுதி காட்டினார்.
Kuzhanthai Sami -  குழந்தை சாமி

ஒரு டவுட்டு:  யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது,  "zha "  ("ழி" - "zhi ")  என்று எழுதணும்னு விதி அமைத்தது?  ரூல்ஸ்  போட்டவங்க, தமிழ் மக்களை தவிர, வேற யாருக்கும் அதை  பற்றி சொல்லல போல.  நம்மாட்களை தவிர,  மத்தவங்க "ஜா" - "ஸா" -  "zaa " மாதிரி தான் வாசிக்கிறாங்க.  அவர்களிடம், "zha " என்று இருந்தால் "ழ" என்று சொல்லணும் என்று சொல்லி கொடுக்கிறதுக்குள்ள - உள்ள தமிழும் எனக்கு  மறந்து விடும் போல.  அதனால், நானே இப்போ "L " தான் போட்டு எழுதி காட்டுவேன்.  இந்த ரூல் மீறிய குற்றத்திற்காக,  என்னை தமிழச்சி இல்லைன்னு ஒதுக்கி வச்சிருவாங்களோ?  pleeeeeez ......அப்போ  யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.....

மக்காஸ்.... உங்களுக்கும் இந்த மாதிரி பெயர்ஸ் ...சாரி, பெயர்கள் தெரிந்தால்  எஜூதி - எஸூதி  - சே,  ezhuthi - eLuthi - எழுதி - பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Monday, August 2, 2010

அவள் ஒரு "தொடர்பதிவு"

உருப்படியாக (????????????????????) நானே ஒரு டாபிக் யோசித்து எழுதி,  ஒரு மாதத்துக்கு மேலாக ஆகி விட்டது.... தொடர் பதிவு தயவில் -  மற்ற பதிவர்கள் கொடுத்த டாபிக் தயவில்   எழுதி .....ஜூலை மாதத்தை  ஓட்டி இருக்கேன் என்று இன்றுதான் பார்த்தேன்.... அவ்வ்வ்வ்.....

அப்படியும் இப்படியுமா போயி ஆகஸ்ட் வந்துவிட்டது.  என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.... எழுத எத்தனையோ விஷயங்கள்.......... ம்ம்ம்ம்..... என்ன எழுதலாம்?

மீண்டும், இந்த வாரத்தில் வரும் நான்கு நாட்கள் பயணம் தான் நினைவுக்கு வந்தது.  அந்த நாட்களில், ப்லாக் பக்கம் வருவது சாத்தியப் படாதே என்ற "கவலை" வேறு.....  இந்த நினைப்ஸ் மேட் மீ சிரிப்ஸ்  யா.....

எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள்,  பின்னூட்டம்,  லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா.....   ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?


சரி, இந்த வார quota வுக்கு என்ன எழுதலாம்?  என்னமோ பதிவு  போடலைனா,  கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்து விடும் என்கிற நினைப்பு.... ...... சித்ரா, உனக்கே இது டூ மச்..... மச்சி,  மச்சான்,  மச்சினியா தெரியல?

என்ன பதிவு போட? ம்ம்ம்ம்.....  என்ன இடுகை போட?
யோசிக்காம போடு....... கூகிளார் கொடுத்த "சொத்து" உரிமையோடு ......

"சும்மா"  பற்றி கூட எழுதியாச்சு...... இனி,   சும்மா வேற  என்ன எழுதலாம்?

சமூதாய அக்கறை கொண்டு ஏதாவது எழுதலாம்.  சீரியஸா எழுதுற மூடு இல்லை.... ம்ம்ம்.... வேறு என்ன எழுதலாம்?


ஒரு பெரிய ஆழமான விஷயத்தை எடுத்து,  நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து,  நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....
ம்ம்ம்ம்....... என்ன எழுதலாம்?

 
 
நம்ம  புளப்பு  "சிரிப்பா சிரிக்கிற" மாதிரி வாழ்க்கை போனால்,   tragedy  -
நம்ம புளப்பை பார்த்து நாமே சிரிக்க முடிந்தால்,  காமெடி.
ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?

 என்னைப் போய் சிலர், "பிரபல" பதிவர் என்று சொல்கிறார்கள்.  இறை அருள்,  பதிவுலக நண்பர்களின் ஊக்கமான பின்னூட்டங்கள்,  அவர்களின் பரிசாக பரிந்துரைகள் மற்றும் "லைக்"கள்,  என்று  இன்னும் "பிற(ர்) பலத்தில்" இருப்பதை சொல்கிறார்களோ?  எல்லோருக்கும் நன்றி சொல்லி எழுதலாம்.... ம்ம்ம்ம்.... எப்படி சொல்லி   எழுதலாம்?

 பதிவுலக நண்பர்கள்,  உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால்,  என்ன ஆகும்?  எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும் என்று யோசித்து எழுதலாம்........ ம்ம்ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?


இறைவன் vs மனிதன் என்று ஏதாவது எழுதலாமா?
மனிதன் இருப்பது உருவத்திலா?
மனிதம் உள்ள இதயத்திலா?
 இறைவன் இருப்பதும் உருவத்திலா?
இருக்கும் நம்பிக்கையிலா?
மனிதனின் புரிதல்,  பகுத்து அறிவதிலா?
இறையன்பை  பகுத்து உணர்வதிலா?
ம்ம்ம்ம்ம்ம்........ என்ன எழுதலாம்?

இன்னும் பெண்டிங்ல இருக்கிற தொடர் பதிவு அழைப்புகளுக்கு ஏற்ற மாதிரி யோசித்து எழுதலாம்....ம்ம்ம்ம்.... எப்பொழுது எழுதலாம்?

சரியா போச்சு..... "அவளோட எண்ணங்கள்" என்று தலைப்பு வைத்து இருக்கலாமோ?
சே,..... இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் நண்பரின் பெற்றோர்களை impress பண்றேன்   என்று அவர்களுக்கு கம்பெனி கொடுக்க,   டிவியில்  பழைய பாலச்சந்தர் படம், "அவள் ஒரு தொடர்கதை" பார்த்து விட்டு,  "ஞே"  "ஞா"  " ஞி"   " ஞீ "   "ஞௌ"   என்று முழிக்கும் போது பதிவு எழுத வரக்கூடாது..... முடிவே இல்லாத முடிவு  .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல.....  ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்.....
The End !!!

ஸ்ரீராம். said... விகடன் குட் ப்லாக்ஸ்ல உங்கள் இந்தப் பதிவு....

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp 

Wednesday, July 28, 2010

பேட்டி வாங்கலியா பேட்டி.....!!!



"எல்லா புகழும் இறைவனுக்கே!"


வலைப்பதிவில், இப்பொழுது ஒரு சுற்று வந்து கொண்டு இருக்கும்,  "பதிவுலகில் நான் - பேட்டி" fever - அங்கே சுத்தி - இங்கே சுத்தி, "அமைதிசாரல்" வழியாக எனக்கும் வந்துருச்சு.... 


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


சித்ரா .......   அன்புடன்  சித்ரா -  பண்புடன் சித்ரா  -  பிரியமுடன் சித்ரா  - பாசத்துடன் சித்ரா -  நேசத்துடன் சித்ரா  - சிரிப்புடன் சித்ரா  - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா  -  வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா  - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன்  சித்ரா -  கோபத்துடன் சித்ரா  -  எரிச்சலுடன் சித்ரா  -  கண்ணீருடன் சித்ரா -  ஏக்கத்துடன் சித்ரா  - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா  ........ இப்படி ஏதாவது அடைமொழியோடு வரலாமா என்று கூட யோசித்தேன்.  அப்புறம்,  ஒன்றுடன் மட்டும் வேண்டாம் - இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று இருக்கலாமே என்று ......... அப்படியே  வலைப்பதிவில்  "தோன்றி" விட்டேன். 



2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அதுதான் உண்மையான பெயர் என்று சொன்னால்? இல்லை, அது பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, உண்மையான பெயர் வச்சுக்கிட்டு பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, பொய்யான பெயர் வச்சுக்கிட்டு, அதான் உண்மையான பெயர் என்று சொன்னால்?  அப்போ என்ன செய்வீங்க????.... அப்போ என்ன செய்வீங்க.....????

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
தடாலடியாக ஏதாவது செய்யலாம் என்ற அதிரடி நடவடிக்கை.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்னது? என் வலைப்பதிவு பிரபலமா?  கூகுள் நியூஸ்ல வந்த போது, நான் லீவ்ல போயிட்டேன் போல.... மிஸ் பண்ணிட்டேனே!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எல்லாமே என் சொந்த சரக்கா? இல்லை மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா   என்று நேரிடையாகவே கேட்டு இருக்கலாமே.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இந்த பேட்டிக்கு கூட கேள்விகளுடன் நீங்கள் அனுப்பிய $1000 செக், இன்றுதான் பேங்க்ல டெபாசிட் ஆகிவிட்டதாக செய்தி வந்தது.... அதான் உடனே, பதில் சொல்றேன். 


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
வலைப்பதிவுக்கும் audit ரிப்போர்ட் , income tax ரிப்போர்ட் உண்டு என்பதை, உங்கள் கேள்விகள் மூலம் தெரிந்து கொண்டேன். 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அந்த பீலிங்க்ஸ் எல்லாம்,  தமன்னாவும் அனுஷ்காவும் தூய தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு காட்டிக்கலாம் என்று காத்துக்கிட்டு இருக்கேன்....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பில் கேட்ஸ்....அவர்தான் முதலில் பாராட்டணும்னு நினைத்தாராம், அதற்குள் ஒபாமா முந்திக்கொண்டு பாராட்டி விட்டார்.  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி,  கொஞ்சம் லேட் ஆக வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்து பாராட்டி விட்டு போனதை மறக்க முடியாது. 


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
முந்தைய கேள்விகளுக்கு உள்ள பதில்களை படித்து விட்டு,  நீங்கள் என்னை பற்றி என்னவெல்லாம் சொல்லி திட்டுகிறீர்களோ - அத்தனையும் நான் இல்லை.... நான் இல்லை.... நான் இல்லை...... என்று சொல்கிறேன்...  நம்புங்க.... சார், நம்புங்க.... மக்கா, நம்புங்க..... மேடம், நம்புங்க..... மச்சி, நம்புங்க...... தோழா, நம்புங்க..... தோழி, நம்புங்க..... 
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... 

 பி.கு:  
பதிவுலக நண்பர்கள் -   "warrior " தேவா, விஜய் மற்றும் சௌந்தர் இணைந்து நடத்தும்,  பதிவர்களுக்கான புதுமையான  பல்சுவை கொண்ட  வலைப்பதிவு: "கழுகு"  .  அதில், சென்ற வாரம் , என்னையும் ஒரு பதிவராக மதித்து ஒரு பேட்டி எடுத்து போட்டு இருந்தார்கள்.

http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html

அந்த மொக்கை பதில்களையும் வாசித்து விட்டு, மொத்தமாக என்னை "திட்டிக்" கொள்ளவும்.  அந்த பேட்டி வாங்கினால், இந்த பேட்டி இலவசம்.   நன்றிகள் பல. 

ஆமாம், பேட்டி மேல பேட்டி - என்ன விசேஷம்ங்கறீங்களா?  Tasty Appetite, Jay  - என்னையும் "The Versatile Blogger"
அப்படின்னு சொல்லிட்டாங்கப்பா.....!!  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... 

 

Monday, July 26, 2010

மாத்தி யோசிங்க.....

"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

 என்ன ஆச்சு? திடீர்னு இப்படி ஒரு "வெட்டி பேச்சு"  அப்படின்னு நீங்க யோசித்தீங்கனு வைங்க..... அப்போ, உலகம் சுற்றும் திசை மாறி போச்சுன்னு நினைக்கிறேன்.... அப்படி நினக்கலைனா, "வெட்டி பேச்சு" ப்லாக்ல, இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக்குவீங்க....

http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html 
படித்தீர்கள் என்றால், நம்ம மாதவன் சார் என்னை ஒரு  பதிவுக்கு அழைத்து இருப்பது தெரிந்து இருக்கும்.   அட, பதிவுலக நண்பர், மாதவன் சார்தாங்க..... "அலை பாயுதே";  "3 Idiots" மாதவன் சார் பதிவு எழுத அழைத்திருந்தால், உலகம் சுற்றும் திசை மாறி போச்சுனு அர்த்தம். 

சரி, உலகம் எதிர் திசையில் சுற்றும் போது என்ன நிகழ்வுகள் நடக்கும்?

சு(வ)ணக்கம்.  வால்(தலை)ப்பு  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா":

தமிழ்நாடு:  

*  நமீதா அவர்கள்,  ல, ள, ழ சொல்ல பழகிவிட்டு சென்னை தொலைக்காட்சி நிறுவனத்தில், தமிழில் செய்திகள் வாசித்து கொண்டு இருக்கிறார். 



*  திருமதி குஷ்பூ அவர்கள், அன்னை தெரசா ஆசிரமத்தில் சேர்ந்து விட்டு, சமூக சேவை செய்து கொண்டு இருக்கிறார்.

*  திரு. சிம்பு அவர்கள், தன் விரல் வித்தை உதவியால்,  கேட்கும் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பேசி உதவி செய்து கொண்டு இருக்கிறார்.

*  மே  மாதத்தில்,  சென்னையில், இரண்டு அடி அளவு பெய்த பனியால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* முன்னொரு காலத்தில் கூவம் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படும் நமது "தமிழ்நாட்டு குமரகம்", சிறந்த சுற்றுலா (resort) பகுதி என்று பரிசு பெற்று இருக்கிறது.



*  அரசியலில் இளைஞர்களுக்கும், குடும்ப அரசியல் இல்லாத  புதிய திட்ட வழிமுறைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தனது 65 ஆம் வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர், திரு. கருணாநிதி "கடிதம்" எழுதி உள்ளார்.  அதை,  LIC  இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் மகன், ஸ்டாலின் ஆமோதித்து உள்ளார்.

*  Adayar Cancer Institute க்கு , தன் சொத்து பூராவும் எழுதி விட்டு,   தனது காசி பயணத்தை தொடரப் போவதாக,  செல்வி.ஜெயலலிதா "அறிக்கை" விட்டுள்ளார். 

இந்தியா: 

* போபால் விஷ வாய்வு வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுந்தண்டனை வழங்கியது குறித்து, "நீதி, நேர்மை, நியாயம், தர்மம்"  - இந்தியாவின் நீதி மன்றங்களின்  சிறப்பு அம்சங்கள்  என்று மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி, நீதிபகளுக்கு பாராட்டு விழா எடுக்க உள்ளனர்.  

*  இந்திய தெருக்களைப் போல சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள சிங்கப்பூர் குழு ஒன்று,  நாளை மும்பை வருகிறது.

*   இந்திய ரயில்வேஸ் தொழில்நுட்பம், ஜப்பான் மக்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு ஆலோசனை குழு, இன்று மாலை ஜப்பான் செல்கிறது. 


* இந்தியாவில் குறைந்து வரும் ஜனத்தொகையை எப்படியும் அதிகப்படுத்தி, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள்,  50 கோடியை தொட்டு விடுவோம் என்று தேசிய குடும்ப நல அமைச்சர் கூறி உள்ளார். 

உலக செய்திகள்:  

* "Macro-soft , எந்த கம்ப்யூட்டர் வைரஸ் ப்ரோக்ராம் கொண்டும் ஊடுருவ முடியாதது," என்று "அமெரிக்க அம்பானி" என்றழைக்கப்படும் பில் கேட்ஸ் தெரிவித்தார். 


*   "என்னதான் முயன்றாலும் "quitters" எங்களுக்கு ஈடாகாது  என்று "footbook" கூறி உள்ளது. 


விளையாட்டு செய்திகள்: 

* உலக கால் பந்தாட்ட போட்டியில் இந்தியா, Spain நாட்டை வென்று பரிசு கோப்பையை தட்டி சென்றது.


* கால்பந்தாட்டத்துக்கே எல்லா sponsorship பணமும்,  மக்களின் வரவேற்பும்  சென்று விடுவதால் தான், தங்களை போன்ற  திறமையான விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக, கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு விளையாடும் சச்சின் மற்றும் தோனி வருத்தம் தெரிவித்து உள்ளார்கள். "சேப்பாக்கம் கால்பந்தாட்ட மைதானம்" பிரபலம் ஆகி இருப்பது போல, கிரிக்கெட்க்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்கள். 


*  கில்லி விளையாட்டு,  ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரை  செய்திகள்: 

*  "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக  நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது.  சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது.  "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது.  



*  செம்மொழி தமிழை வளர்க்கும் சன் தொலைகாட்சி நிறுவனம்,  தங்களது கல்வெட்டு ஆராய்ச்சியில் மூலம் தெரிந்து கொண்ட,  சங்ககால கலைநிகழ்ச்சிகளுக்கே  இனி முதலிடம் கொடுப்போம் என்று அறிவித்து உள்ளது.  

* "தொலைக்காட்சி நாடகங்கள் யாவும், அறிவுபூர்வமாகவும் உயர்ந்த நகைச்சுவை தொனியிடனே இருப்பதால், மாறுதல்கள் வர வேண்டும்"  என்று "மினி சீரியல்" நாயகி, தமன்னா கூறினார். 

பதிவுலகம்:  

*   "எங்கள் ப்லாக்" , இனி "எதிர் வீட்டு ஜன்னல்" ப்லாக் என்று அழைக்கப்படும். 

*   "திருக்குறள், என் பார்வையில்" என்ற இலக்கிய புத்தகம் எழுதிய பதிவர்,  தமிழ் காவலர்  "பார்த்ததும் படித்ததும்" ஜெட்லி, தன் அடுத்த தமிழ் இலக்கிய சேவைக்காக, "சங்க கால மனிதர்களும் அவர்களின் "நொறுக்குகளும்" " என்ற  புத்தகம் எழுதப் போவதாக தெரிவித்தார்.


"எந்திரன்" பட பாடல் வெளியீட்டு விழாவுக்காகச் செல்லும்  சித்ராஷ்கானா  வை, பேட்டி எடுக்க விரும்புவதாக "நிறைய வெட்டி பேச்சு" பதிவர், ஐஸ்வர்யா ராய் கூறி உள்ளார். 
  
நன்றி. மீண்டும் வறுபட வருக!  இப்படிக்கு என்றும் "தம்பட்டம் தாயம்மா" 
 
பி.கு.:
படங்கள் அனைத்தையும்  blogspots மற்றும் பிற websites இல் இருந்து எனக்காக "திருடி" ......சாரி, "தேடி"  கொடுத்த Mr.Google Robin Hood க்கு நன்றிகள் பல. 
 

 

Wednesday, April 28, 2010

சும்மா, சும்மா, சும்மா.....



"ஹலோ! "
"ஹலோ!"
"சித்ராவா?  பிஸியா இருக்கீங்களா? சும்மா இருக்கீங்களா?"
" இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து,  சும்மா வந்து உட்கார்ந்தேன். என்ன விஷயம்?"

"சும்மா தான் கூப்பிட்டேன். இன்று எனக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லை. சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கோமே -  சும்மா, யாரையாவது கூப்பிட்டு, சும்மா பேசலாமேன்னு, சும்மா தோணுச்சு. "

"நானும் சும்மாதானே  இருப்பேன்  என்று நினைச்சிட்டீங்க."
 "சும்மா சொன்னேன்.  சும்மா கோபப்படாதீங்க. உங்களை கூப்பிட்டு பேசி நாளாச்சு. சும்மா, அப்படி இப்படினு பிஸியா நாள் எல்லாம் - சும்மா ஜெட் வேகத்துல பறக்குது."

"சும்மா.  இதுக்கெல்லாம், சும்மா கோபம் வருமா?"
" நீங்க, சும்மா விளையாடுறீங்கனு தெரியும். "

"உங்க வீட்டுக்காரங்க  ஆபீஸ் போயாச்சா?"
"அவருக்கு என்ன?   சும்மா லீவ் போட்டு, நம்ம பக்கத்துல இருந்து,  சும்மா  கவனிக்க முடியுமா?  வேலைக்கு போயாச்சு.  ஆனால், ஒரு வாட்டியாவது, சும்மா ஒரு போன் பண்ணி, சும்மாவாச்சும் நான் எப்படி இருக்கேன் என்று சும்மா கேட்டு இருக்கலாம்."

"அவர் ஆபீஸ்ல் சும்மா இருந்தா, சும்மா கூப்பிடாம இருப்பாரா?"
"தெரியுது.  ஆனாலும் அவரை  சும்மா தேடுது. "

"ரொம்ப கஷ்டமா இருக்கா?"
"இல்ல. சும்மா வெறும் காய்ச்சல்தான்.  இப்போதான் ஊருக்கு போன் செய்து, என் அம்மாவிடம்  சும்மா பேசினேன்."
"அம்மா, எப்படி இருக்காங்க?"
"சும்மா, அதை இதை நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டே இருக்காங்க."

"உங்க தாத்தா, எப்படி இருக்காங்க?"
"எப்போ பார்த்தாலும் சும்மா தலை வலிக்குது கால் வலிக்குது அப்படிங்கறார். டாக்டர்,  தாத்தாவுக்கு  ஒண்ணும் இல்ல. வயசாச்சுல. சும்மா அப்படிதான் வலிக்கும்னுட்டார்."

"உங்க அப்பா, எப்படி இருக்காங்க?"
"retirement க்கு அப்புறம், சும்மா அங்கே இங்கே போய்ட்டு வந்து டைம் பாஸ் பண்றார்."

"உங்க தங்கை?"
"படிச்சு முடிச்சிட்டாள். சும்மாதான் இருக்கிறாள்.  சும்மா இருக்கிறதுக்கு, சும்மா ஒரு கம்ப்யூட்டர் course ஏதாவது படிக்கலாமேன்னு - சும்மா போய்க்கிட்டு இருக்கா."
"ஓ. "

"நீங்க அடுத்த மாதம், ஒரு weekend சும்மா இருந்தீங்கனா, சும்மா இந்த பக்கம் - எங்க வீட்டுக்கு,  சும்மா வாங்களேன்."
"எதுவும் விசேஷமா?"
"இல்லை. சும்மாதான். சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சும்மா விசிட் பண்ணா நல்லா இருக்கும்."
"பார்க்கலாம்."

"சும்மா வாங்க.  அப்புறம் சும்மாதான்  சொன்னேன் என்று  வராமா இருக்காதீங்க."
"அப்புறம் போன் பண்றேன்."
"கண்டிப்பா வரணும்.  வந்தா, சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்."
"சும்மா இருந்தா, சொல்றேன்."
"சும்மா சொல்லாதீங்க. வாங்க."

" ஹா,ஹா,ஹா,ஹா.... நான் இப்போ வெளியே போகணும். நான் போனை வைக்கிறேன். நீங்க சும்மாவே இருங்க."
"மனுஷிக்கு காய்ச்சல்னா, சும்மா சும்மா போன் பண்ணி,  சும்மா பேசி,  சும்மா தொந்தரவு படுத்திக்கிட்டு ....... கொஞ்சம் சும்மா இருக்க மாட்டாளா,  என்று நினைச்சிட்டீங்களா?"
 "இல்ல.  நல்லா  ரெஸ்ட் எடுங்க."


அப்புறம், சும்மா இருக்கும் போது,  சும்மா யோசித்து பார்த்தேன்.  அப்பொழுதுதான் புரிந்தது - அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும்,  வேதனைகளும்,  ஆதங்கங்களும், கவலைகளும்,  ஆசைகளும்.
இது  முதலிலேயே தெரியாம போச்சே...... தெரிந்து இருந்தால், சும்மா பேசிக்கிட்டு இருக்காமல்,  ஆதரவாக சும்மா கூட கொஞ்ச நேரம்  பேசி இருந்திருப்பேனே........

சும்மா.........  சும்மா ஒரு வார்த்தைதான் -  ஒன்றும்  இல்லாத வார்த்தை.  ஆனாலும் - சும்மாவுக்கு, எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில். ............

பி.கு.:
 சும்மா - ஒரு வார்த்தை - இங்கிலீஷ்ல எத்தனை வார்த்தைகளை, சும்மா கையாளுது தெரியுமா?
 Idle
Just like that
for no reason
not doing much
not really
for free
not really meaning it
often
unintentional
untrue
goofy
(please, let me know, if there is more......)  - சும்மாதான்......... பரிசு எல்லாம் இல்லை.
ஹிந்தி மொழியில்: சும்மா என்பதற்கு முத்தம் என்று பொருளாம். சர்தாங்க. 

அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர்,
 தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
 நன்றி.
 - யூத்ஃபுல் விகடன்

 எல்லா புகழும் இறைவனுக்கே!

Wednesday, November 11, 2009

nursery rhymes -சின்ன புள்ளதானேனு ஏமாத்தாதீக.

என் ஒரு வயது மகனுக்கு நமக்கு தெரிஞ்ச nursery rhymes, ஏதாவது சொல்லி கொடுத்து, அவன் நம்மை படுத்துறதுக்கு, கொஞ்சம் அவனை நான் பாட்டு பாடி படுத்தலாமேன்னு ஆரம்பிச்சேன். ஒவ்வொரு rhyme ஆ சொல்ல சொல்ல, எனக்கு depression வந்துரும் போல ஆயிட்டு. ஏன்னு கேக்குறீங்களா?

நாம் பொதுவாக வேகமா rhymes சொல்லி இருக்கோமே, என்னைக்காவது என்ன பாடுறோம்னு யோசிச்சு பாத்துருக்கோமா? நீங்க பண்ணி இருந்திருக்கலாம். நான் இப்பதான், வெட்டியா அதை பத்தி யோசிச்சேன். நமக்கு அதுதான் கைவந்த கலையாச்சே.

இந்த rhymes எல்லாம் நான் கை தட்டி action போட்டு பாடிட்டு இருந்ததால, ஜாலி சங்கதின்னு முதல நினைச்சேன். அப்புறமா ரூம் போட்டு உக்கார்ந்து வெட்டியா யோசிச்சா, எதுக்கடா இப்படி சோக பாட்டெல்லாம் நம்ம சின்ன புள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்குறோம்னு தோணுச்சி. பாருங்களேன்:

prayer பண்ணலைனா, சாமி எப்படியோ, நான் கண்ணை குத்திருவேன்:
Goosey, goosey, gander,
Whither shall I wander?
Upstairs, and downstairs,
And in my lady's chamber.
There I met an old man
Who wouldn't say his prayers!
I took him by the left leg
And threw him down the stairs.


முட்டா பய மகளே, அதான் முதலேயே star என்று சொல்லியாச்சே. அப்புறம் ஏன் அது என்னன்னு wonder பண்ணற என்று என் மகன் திருப்பி கேட்டா?
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky.
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.


முட்டையும் வாழ்க்கையும் ஒண்ணு. உடைஞ்சு போயே போச்சுனா மகனே, அவ்வளுதான். ஒண்ணும் பண்ண முடியாது. இந்த வேதாந்தம் ஒரு வயசுக்கு புள்ளைக்கு ரொம்ப அவசியம்?
Humpty Dumpty sat on a wall.
Humpty Dumpty had a great fall.
All the king's horses and all the king's men
Couldn't put Humpty together again!

இது தாலாட்டு nursery rhyme ஆ? என்ன கொடுமை, சார், இது?
Hush-a-bye, baby,
in the tree top.
When the wind blows,
the cradle will rock.
When the bough breaks,
the cradle will fall,
And down will come baby,
cradle and all.


சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி, வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது, சின்ன புள்ள:
Hush, little baby, don't say a word
Mama's gonna buy you a mockin'bird
If that mockin'bird don't singMama's gonna buy you a diamond ring
If that diamond ring turns brass,
Mama's gonna buy you a looking glass
If that looking glass gets broke
Mama's gonna buy you a billy goat
If that billy goat don't pull,
Mama's gonna buy you a cart and mule
If that cart and mule turn over
Mama's gonna buy you a dog named Rover
If that dog named Rover won't bark
Mama's gonna buy you a horse and cart
If that Horse and Cart fall down,
Then you'll be the sweetest little baby in town

தூங்கும் போதே, புட்டுகிச்சுபா:
It's raining, it's pouring;
The old man is snoring.
Bumped his head
And he went to bed
And he couldn't get up in the morning.


எந்த தண்ணின்னு சொன்னியா? தண்ணி இல்ல, "தண்ணி" அடிக்க போகாதே:
Jack and Jill
Went up the hill
To fetch a pail of water.
Jack fell down
And broke his crown
And Jill came tumbling after.


ஆடா? நாயா?
Little Bo Peep has lost her sheep
And can't tell where to find them.
Leave them alone, And they'll come home,
Wagging their tails behind them.


நம்ம ஊரு contractor,  government உக்கு கட்டுன பாலம், லண்டனிலேயும் இருக்கு:
London Bridge is falling down,
Falling down, Falling down.
London Bridge is falling down,
My fair lady.


இருக்குற நாய்க்கே சோத்துக்கு வழிய காணோம். வந்துட்டாக வரிஞ்சிகிட்டு:
Old Mother Hubbard
Went to the cupboard
To fetch her poor dog a bone;
But when she came there
The cupboard was bare,
And so the poor dog had none.


இந்த விலைவாசியில, economic conditions ல, பால்ல red label  டீயா போட்டு  guests உக்கு கொடுக்க முடியும்?
சும்மா film தான் காட்ட முடியும்.
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
We'll all have tea.
Sukey, take it off again,
Sukey, take it off again,
Sukey, take it off again,
They've all gone away.


புள்ளைக்கு அலட்டருதுக்கும் பந்தா பண்றதுக்கும் இப்பவே சொல்லி கொடுக்க தேவையா?
அல்டாப்பு அரவிந்தும் பந்தா பரமசிவமும்  பேசி கொள்கிறார்கள்:
Pussycat, pussycat, where have you been?
I've been to London to visit the Queen.
Pussycat, pussycat, what did you there?
I frightened a little mouse under her chair.

ஏழு கழுதை வயசாச்சு, நாமே இன்னும் life அ சரியா புரிஞ்சுக்கல. சின்ன புள்ளைக்கு இந்த nightmare தேவையா?
Row, row, row your boat
Gently down the stream.
Merrily, merrily, merrily, merrily,
Life is but a dream.
ஏழு நாட்கள்ள மூணு நாட்கள் தான் சுமாரா life போச்சு. அப்பறம், ஒரே பேஜார்தான்பா. கடைசியில் சங்கு ஊதிட்டாங்கப்பா. வார நாட்கள் சொல்லி தர வேற பாட்டா கிடைக்கலை:
Solomon Grundy,
Born on Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday:
This is the end
Of Solomon Grundy.


இந்த சின்ன வயதிலேயே violence, இம்புட்டு தேவையா?
Three blind mice,
See how they run!
They all ran after a farmer's wife,
Who cut off their tails with a carving knife.
Did you ever see such a sight in your life,
As three blind mice?


ஆக, தமிழ் சினிமா பாட்டு மட்டும் இல்ல, nursery rhymes ஆ இருந்தாலும் ஆராய்ஞ்சு தெளிஞ்சு, அப்புறமா பச்ச புள்ளைங்களுக்கு சொல்லி கொடுங்க, பெருசுகளே. ஒரு வேளை, இந்த பாட்டெல்லாம் எழுதினது "நந்தா" பட அம்மாவா இருக்குமோ? யார் கண்டா?