Tuesday, April 13, 2010

கதை கதையாம் காரணமாம்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 சிநேகிதன் அக்பர்,  சின்ன வயசுல கேட்ட கதையை சொல்ல சொல்லி தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கார். அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.  (அவரிடமே இருந்து சுட்ட வரிகள்)
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html 

நான் பலரிடம் "விட்ட" கதைகளை விட்டு தள்ளுங்க. அந்த கதை எல்லாம் இப்போ வேணாம்!  உண்மையிலுமே, கதை சொல்ல போறேன்.   கதை வேண்டாம் என்று இருக்கிறவங்க,  இங்கேயே ....  s டைம்  இதுதான்  ...........
 
 பல கதை புத்தகங்கள் படித்து இருந்தாலும், பலரிடம் கதை கேட்டு இருந்தாலும், என் தந்தையிடம் கேட்ட கருத்துள்ள கதைகளில், என்னை மெருகேற்றி கொள்ளும் அம்சங்களும்  அமைந்து இருந்ததால், அவற்றை மறக்க முடியாது.
அவற்றில் ஒன்று: 

அன்பே கடவுள்: 

மார்டின் என்பவன், தினமும் ஜெபங்கள் செய்வதிலும் ஞாயிறு தவறாமல் ஆலயம் செல்வதிலும், ஜெப கூட்டங்களுக்கு  தவறாமல் செல்வதிலும் இருந்தான். நாட்கள் ஆக ஆக, எப்படியும் ஒரு நாளாவது இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை, பேராசையாய் வளர்ந்து கொண்டு வந்தது.
ஒரு நீண்ட ஜெபத்துக்குப் பின்,  தன்னை சந்திக்க இறைவன் எப்படியும் வர வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து விட்டு சென்றான்.

அன்று இரவு கனவில்,  ஒரு பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் நடுவில் இருந்து வந்த குரலில்: "நாளை நீ, என்னை காண்பாய்."

சந்தோஷத்துடன்,  மதிய விருந்து தயாரித்தான்.  இறைவனுக்கு பரிசாக கொடுக்க, ஒரு பெரிய சால்வை/போர்வை பரிசாக வாங்கி வந்து வைத்தான்.

மாலை நான்கு மணி ஆனது. இறைவன் வரவில்லை.

ஒரு வயதானவர், காலை நொண்டி கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். முதலில், அவருக்கு உணவு மறுத்து விட்டு உள்ளே சென்று விட்டான், மார்டின்.
மீண்டும் அந்த முதியவரின் குரல் கேட்டு, மனது கேட்காமல், உள்ளே இருந்த உணவில், தன் பங்கை எடுத்து முதியவருக்கு கொடுத்து உண்ணக் கொடுத்தான்.  முதியவர், சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

மாலை மணி ஐந்து ஆனது. இறைவன் வரவில்லை.

வெளியில் கடைத்தெரு வரை சென்று , இறைவன் வருகிறாரா என்று பார்த்தான். மெல்லிய மழைச்சாரலில், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்ணையும், குளிரில் வாடி கொண்டு இருந்த  அவளது கைக்குழந்தையும் கண்டான்.   கண்டும் காணாதது போல அவர்களை கடந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, மனதில் ஒரு நெருடல்.  இறைவனுக்கு வாங்கி வைத்து இருந்த அந்த சால்வையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான். அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  பால் வாங்க கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினான்.

மாலை ஏழு மணி ஆனது.   இறைவன் வரவில்லை.

அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. அவருடன் அவரது 14  வயது பேரன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, மார்டினை உதவிக்கு அழைத்தான்.
தான் அங்கு உதவ சென்று இருந்த நேரம், இறைவன் வந்து விட்டால்............... தயங்கிய மார்டின், சிறுவனின் முகம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டு, அவனுடன் சென்றான். பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு,  அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து விட்டு,  வேலைக்கு சென்று இருந்த அவரின் மகனுக்கும் தகவல் அனுப்பி விட்டு, அவர் வரும் வரை காத்து இருந்தான்.  பாட்டி, நன்றாக இருப்பதை அறிந்து கொண்டு,  இரவு, வீட்டுக்கு வந்தான்.

இரவு பத்து மணி ஆனது. இறைவன்   வரவில்லை.

இறைவன் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இறைவன் இல்லையோ? தன்னை ஏமாற்றி விட்டாரோ? என்ற குழப்பங்களுடன், பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்தான்.

மத்தேயு 25:  " பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்;
                       தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்;
                       அன்னியனாய் இருந்தேன், என்னை சேர்த்து கொண்டீர்கள்;
                      உடை இல்லாதிருந்தேன், எனக்கு உடை தந்தீர்கள்;
                      நோயுற்று இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
                      காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள் ....................
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்."

இரவு பத்தரை மணி ஆனது. இறைவன் வந்து விட்டு சென்றதை புரிந்து கொண்டான்.

நான் புரிந்து கொண்டது:   கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச்   செய்தால் -  மனித நேயத்துடன்  நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.

ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. 
 
             

109 comments:

எல் கே said...

//மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.//

உண்மைதான் சித்ரா .. நலல் அருமையான கதை. இன்றைய காலகட்டத்துக்கு மிக தேவையான ஒன்று. புத்தாண்டு அன்று மிக நல்ல பதிவு போடுல்ல்லேர்கள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra said...

Thank you, LK. வாழ்த்துக்களுக்கு நன்றி. இனிய புத்தாண்டுக்கு ஒரு மெசேஜ். :-)

எல் கே said...

நல்லதுதான் சித்ரா. :)

பித்தனின் வாக்கு said...

கதை மிகவும் அருமை, நான் சின்ன வயதில் என் வீட்டின் அருகில் இருக்கும் சர்ச்சில் விளையாடிக் கழித்தேன். அப்போது இந்தக் கதைகளைக் கேட்டேன். மீண்டும் உன் வாயிலாக கேட்பதில் சந்தோசம்.

Chitra said...

நன்றி, சுதாகரன் அண்ணா. எனது ஆன்மீக எண்ணங்களுக்கு, தெளிவாக முதல் முதலில் வித்திட்ட கதை என்று கூறலாம்.

S Maharajan said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு//

உண்மைதான் அக்கா,
உங்களுக்கும்,சாலமன் சார்,குழந்தைகள் அனைவர்க்கும்
எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra said...

நன்றி, மகாராஜன். உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

இப்பத்தான் நீங்க ஒரு உண்மையான டீச்சர்னு ப்ருவ் பண்ணிட்டீங்க... நல்ல கதைக்கு நன்றி டீச்சர்...

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Chitra said...

நாஞ்சிலானந்தா, என்னை குரு ஸ்தானத்தில் வைத்து அழகு பார்க்காதீர்கள், ஐயா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்பே கடவுள் - கடவுளே அன்பு.//

உண்மை
புத்தாண்டு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் புதிய நாடகத்தின் டைடில் 'மனசேதான் கடவுளடா'

Chitra said...
This comment has been removed by the author.
Unknown said...

இதே கதையை நான் சிவபெருமானை வைத்துக் கேட்டிருக்கிறேன்.

கடைசி பைபிள் வாசகங்களைத் தவிர.. :))

Chitra said...

Thats very interesting, Mukilan!

goma said...

இறைவணக்கம் பலவகை,
அவற்றில் இது முத்தான ஒரு வகை.

Mythili (மைதிலி ) said...

நல்ல நாளும் அதுவும் நல்ல கதை சொல்லி இருக்க சித்ரா... புததாண்டு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

நீங்க சொன்ன மத்தேயூ வசனம் நான் படித்த பள்ளியில் போர்டில் எப்போதும் பார்க்கும் வசனங்களில் ஒன்று.

உண்மைதான்.

settaikkaran said...

சாரம் என்பது - மனிதநேயத்தை விடப் பெரிய வழிபாடு இல்லை என்பதே! சக்கைகள் தான் மற்றவை எல்லாமே! சுருக்கமாக ஒரு நறுக் கதை! பகிர்வுக்கு நன்றி!!

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம்....

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

மாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.//

சிவமே அன்பு.. அன்பே சிவம்.. எல்லாரும் நல்லா இருக்கனும்.. அவ்ளோ தாங்க..

நல்ல பதிவு சித்ரா.

ஜெய்லானி said...

நீங்க சொன்ன மத்தேயூ வசனம் நான் படித்த பள்ளியில் போர்டில் எப்போதும் பார்க்கும் வசனங்களில் ஒன்று.

உண்மைதான்.

கண்ணா.. said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா....

கதை நல்லாருக்கு :)

//நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.//

அருமை. ஏற்கனவே கேட்ட கதையென்றாலும் புதிதாக வாசிக்க நல்லா இருந்தது..

iniyavan said...

ரொம்ப சூப்பரா எழுதி இருக்கீங்க சித்ரா.

ஈரோடு கதிர் said...

அன்பே கடவுள்

ஆம்!!!

Robin said...

//மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.// True !

Ramesh said...

மனித நேயம்,.......வரிகள் மனதுக்குள்
உண்மையான நல்ல விடயங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.
அன்பே கடவுள்...
நன்றி சித்ரா

Madumitha said...

மனசைத் தொட்டக் கதை.
நன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாடோடி said...

ஒவ்வொரு வ‌ருட‌ ச‌ர்ச் திருவிழாவின் ம‌றையுரையில் அருட்த‌ந்தை சொல்லும் க‌தை இது தான்...போலியான‌ கொண்டாட்ட‌ங்க‌ளுக்கு செல‌விடுவ‌தை விட‌ இவ‌ர்க‌ளுக்கு உத‌வுவ‌து ந‌ல்ல‌து. ப‌கிர்விற்கு ந‌ன்றி..

மனோ சாமிநாதன் said...

" நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.


ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு."

இது தான் நல்லதொரு வாழ்க்கையின் ரகசியம். இது புரியாமல்தான் இன்றைய ஞானிகளும் அறிவிற்சிறந்தவர்களும் கூட தடுமாறார்கள். சின்ன வயதிலேயே இதைப்புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்கூட!!

Anonymous said...

//கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.//

அருமையாக சொல்லி இருக்கிறீங்க சித்ராக்கா. இதே போல சைவ சமயத்திலும் கேள்வி பட்டிருக்கிறேன். (சைவ சமயம் என்று குறிப்பிட காரணம், சிவனை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடுபவர்கள் எங்கள் வீட்டினர்.)

Anonymous said...

Nice to start the new year with such a wonderful story. =))

வால்பையன் said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. /


:)

Paleo God said...

அன்பே கடவுள்/கடவுளே அன்பு..:))

--

ரெண்டையுமே காணோம்!

Ahamed irshad said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

கதை நல்லாயிருக்கு சித்ரா, என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அம்பிகா said...

\\ கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது.\\
அருமை! அருமை!

செ.சரவணக்குமார் said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சித்ரா டீச்சர்.

சைவகொத்துப்பரோட்டா said...

அன்பே சிவம் என்று அழகாய்
சொல்லி விட்டீர்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

என்னகக்கா.. பழைய பஞ்சாங்கமாவே இருக்கீங்க. latest trend-க்கு மாறுங்க, காசேதான் கடவுளடா!

Vidhoosh said...

நல்லா இருக்குங்க. புது வருட வாழ்த்து சொன்னா ஜெயில் போற்றுவாராம்ல!!!

Vidhoosh said...

//@ஷங்கர்
அன்பே கடவுள்/கடவுளே அன்பு..:))
--
ரெண்டையுமே காணோம்!///

இதையாவது ஒன்னோட விட்டு வைங்கப்பு.. :))

Deepan Mahendran said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. /
உண்மை..!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா மேடம்...!!!

dheva said...

சித்ரா........அதேதான்.....பதிவின் சாரம்.... நேரே மனதில் இறங்கி விட்டது....! ஆமாம் எழுத்தின் மூலம் எழுத்தாளனின் மனதை புரிந்து கொள்ள நிறையவே.... முடியும்...உங்களின் அன்பான மனதை அப்பட்டமாய் புரிய வைக்கிறது.....!


// ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. //


அசத்தலான...பதிவு....! வாழ்த்துக்கள் சித்ரா!

Santhappanசாந்தப்பன் said...

நல்லா கருத்து சொன்னீங்க போங்க!

"சிந்தனை சிற்பி" சித்ரா‍‍ன்னு, இந்த
சித்திரை நன்னாளில் உங்க‌ளை அழைப்ப‌தில்
பெருமை அடைகிறோம்!

சிநேகிதன் அக்பர் said...

//அன்பே கடவுள்/கடவுளே அன்பு.//

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

நல்ல சுவாரஸ்யமா கதை சொல்லியிருக்கீங்க.

அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி.

Jaleela Kamal said...

அருமையான பகிர்வு சித்ரா, நல்ல கதை , மனோ அக்கா சொல்வது முற்றிலும் உண்மை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

மனம் உருக வைத்த அழகிய கதை. மிகவும் நெகிழ்ந்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்ல அருமையான கதை, அதுவும் இந்த தமிழ் புத்தாண்டில்! மனத்துள் நிறைவு!!!

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்

மங்குனி அமைச்சர் said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. ///


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் , அப்புறம் இந்த லைன் எப்பவுமே எனக்கு ரொம்ப புடிக்கும்

சத்ரியன் said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. //

ஆமாக்கா...ஆமா.

என் பாலிஸியும் இதுதான்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

malar said...

நீங்கள் சொன்ன கதை ஏற்கனவே கேட்டது (பைபிள் வசனம்) என்றாலும் உங்கள் ப்திவை படிக்கும் போது புதிதாக படிப்பது போல் இருந்தது.அருமை வாழ்த்துக்கள்...

திருவாரூர் சரவணா said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. //

மிகச் சரி

Anonymous said...

ஸ்கூல்ல படிக்கும்போது இந்தக்கதை அடிக்கடி கேட்டிருக்கேன்.

ஸாதிகா said...

சித்ரா டச்சிங் டச்சிங் பெரிய பொக்கே பிடியுங்கள்!

அகல்விளக்கு said...

நெகிழச்செய்துவிட்டீர்கள்...

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...

மாதேவி said...

சிறந்த கருத்துள்ள கதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா.

சாருஸ்ரீராஜ் said...

கதை மிகவும் அருமை ...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Priya said...

அன்பே கடவுள்: உண்மையிலேயே ஒவ்வொருவரும் உணர வேண்டியது!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா!

(உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்)

க.பாலாசி said...

இந்த கதை முன்னமே கேட்டதுதான்...

கடைசியா நீங்க புரிஞ்சிகிட்டது ஏத்துக்கக்கூடியதுதான்...

அன்பும்கூட கடவுள்தான்...(என் மொழி)

சுசி said...

கடைசில சொன்னத அப்டியே வழி மொழிகிறேன் சித்ரா.

ஸ்ரீராம். said...

அழகு, குழந்தை, அன்பு, ஏழையின் சிரிப்பு....எல்லாமே கடவுள்தான்..

ஹுஸைனம்மா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிரிப்பு சித்ரா, சீரியஸ் சித்ராவா இப்ப? :-))

Chitra said...

நான் சீரியஸா பேசி இருப்பதே, உங்களுக்கு சிரிப்பு வரும் என்று நினைத்தேன். ஹா,ஹா,ஹா,ஹா....

Aba said...

ரொம்பச் சரி.....

பத்மா said...

நல்லவையோடு துவங்குது புத்தாண்டு .
வாழ்த்துக்கள் சித்ரா

ரிஷபன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
அன்பே கடவுள்.. இதைத்தான் அத்தனை மதங்களும் சொல்கின்றன.. நாம்தான் அவ்வப்போது மறந்து போகிறோம்.. வசதியாக..

ரோஸ்விக் said...

அன்பு தான் அவன். அனைவரையும், அனைத்தையும் அன்பு செய். துதித்தலும், படைத்தலும் உங்கள் மன நிறைவுக்காக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவனுக்கு அது நிறைவு தராது.

நல்ல கருத்து சித்ரா. நன்றி.

Menaga Sathia said...

கதை அருமை சித்ரா!!

////ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு//உண்மையான வரிகள்...

ராமலக்ஷ்மி said...

//அன்பே கடவுள் - கடவுளே அன்பு. //

அழகாய் விளக்கும் பதிவு. .அருமை சித்ரா.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அரசூரான் said...

கதை உங்கள் மனத்தில் நல்ல விதையாக விதைக்கப் பட்டு இன்று (உங்கள் பதிவின் மூலம் மேலும் சிலருக்கு சென்றடைய) அறுவடை செய்யப் பட்டு விட்டது. அருமை.

திருவருச்செல்வர் என்ற படத்தில் கண்ணதான் இதை அழகாக எழுதியிருப்பார்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத்தங்கமே... என்று

நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அன்பை கட்டுவதே காடவுளை காணும் வழி.

நசரேயன் said...

//
ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு.
//

பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்

வருண் said...

***நான் புரிந்து கொண்டது: கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.***

நல்ல புரிதல் :)!

கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத் தேடி அலைகின்றார்! :(

தமிழ் உதயம் said...

ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு.


மகான்கள் காலங்காலமாக சொல்லும் உண்மை இது தான்.
மனிதர்கள் காலங்காலமாக மறந்த உண்மையும் இது தான்.

prince said...

""மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்.""
//இது தான் நல்லதொரு வாழ்க்கையின் ரகசியம். இது புரியாமல்தான் இன்றைய ஞானிகளும் அறிவிற்சிறந்தவர்களும் கூட தடுமாறார்கள்.- மனோ சாமிநாதன்//
உதவிகள் கிடைக்காமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும்...வலிய போய் உதவி செய்தாலும் வேண்டாம் என்று மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் காரணம் என்னனு பார்த்தீங்கன்னா இன்று மனிதர்களிடையே நிலவும் நம்பிக்கை இன்மையே அல்லது இப்படியும் சொல்லலாம் மற்றவர்களை விட தான் தான் அறிவில் சிறந்தவர் என்றொரு கர்வம்.


என்ன தான் எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் பல நேரங்களில் நாம் மறந்தே போய் விடுகிறோம்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும். காலத்திற்கு ஏற்ற பதிவு

அக்கா,
உங்களுக்கும்,அத்தானுக்கும் ,குழந்தைகள் அனைவர்க்கும்
எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு.//

அருமையான கதை.அழகான கருத்து.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் கதை...அன்பே கடவுள்...அருமை...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கதையில் புத்தாண்டு செய்தி சொல்லியிருக்கீங்க. தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

smart said...

//அன்பே கடவுள் - கடவுளே அன்பு. //

Nice

Chitra said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

Present Chitra

அன்பரசன் said...

நைஸ் ஸ்டோரி

அன்பரசன் said...

வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஹேமா said...

அனபே கடவுள்ன்னு சொல்லி அழகா புது வருஷத்தை தொடங்கியிருக்கீங்க சித்ரா.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இனிய புத்தாண்டு வாழ்துக்கள் சித்ரா..

அருமையான கதை.. புத்தாண்டில் உங்க மெசேஜ் சூப்பர்..
அனைவரிடமும் அன்பாய் இருந்தாலே அதில் ஆண்டவனை காணலாம்..!!
மிக மிக சரியான விஷயம்.. நன்றி.

வரதராஜலு .பூ said...

//மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.//

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு//

ரொம்பவே அருமை மேடம். சக மனிதர்களுக்கு தக்க நேரத்தில் உதவுவதை விட வேறு எதுவுமே பெரிதில்லை.

உங்களுடைய இந்த பதிவு டாப் க்ளாஸ் மேடம்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கதை

"உழவன்" "Uzhavan" said...

//ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு//

அதான் எங்க தலைவர் கமல் சொல்லிட்டாரே :-)

மன்னார்குடி said...

அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

இனியா said...

எனக்கு புதிய ஏற்பாட்டில் மிகவும் பிடித்த வசனங்கள் எல்லாம் மத்தேயு எழுதியதே. மலைப்பிரசங்கம் படித்துப் பாருங்கள்

Alarmel Mangai said...

ஓடியாடிக் கொண்டிருந்ததில் ப்ளாக் பார்க்க நேற்று நேரமில்லை...
அன்பே சிவம்...அன்பே கடவுள்..அன்பே உலகின் ஆதாரம்
புரிந்தவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை...புரியாதவர்களுக்கு எத்தனை சொன்னாலும் புரிவதில்லை...
தங்கக் கோவிலுக்குள்ளும், வைரக் கிரீடத்துனுள்ளும் கடவுள் வெளியேறி எப்போதோ ஓடி விட்டதாகக் கேள்வி...

நேசமித்ரன் said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

மனசைத் தொட்டக் கதை.
நன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

Great one Chitra....loved the thoughts !

Wish this is understood by people in India and other countries where religion is a dividing factor among people.

தயாளன் said...

நல்ல பதிவு

Chitra said...

அனைவருக்கும் நன்றி. வாழ்க அன்புடன்!

சென்னைத்தமிழன் said...

வலைதளத்துக்கு நான் புதுசு.... வந்துதான் பருங்களேன்....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்

தக்குடு said...

வயல்வெளிக்கு நடுவில் வரும் ரயில் வண்டி, யானை, வானவில் இதை எல்லாம் எத்தனை தடவை நாம பாத்தாலும் நமக்கு புதுசாவே இருக்கும், அதுபோல தெரிஞ்ச கதையா இருந்தாலும் அதை இயல்பாகவே பாசக்கார பயலுகலான நெல்லையை சேர்ந்த நம்ம சித்ரா அக்கா சொல்லும் போது அது ஒரு தனி அழகுதான்! வாழ்த்துக்கள் அக்கா! அருமையான சிந்தனை!

தாராபுரத்தான் said...

கடவுளை காட்டி விட்டாய் அம்மா.

Asiya Omar said...

சித்ரா அருமையான கருதாழமிக்க கதை.அன்பே கடவுள்.

Matangi Mawley said...

nalla kathai.. very well put.. well written.. :)

பருப்பு (a) Phantom Mohan said...

//மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.

ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு//

இது ரெண்டும் சூப்பர்...இததான் கமல் ஒரு மூணு மணி நேரம் அன்பே சிவம்ன்னு சொன்னாரு...எவன் கேக்கான்?
பிரார்த்தனைக்காக உதவும் இரண்டு கைகளை விட, உதவுவதற்காக வரும் ஒரு கை மிகவும் உன்னதமானது...

தாரணி பிரியா said...

nice story :)

கே. பி. ஜனா... said...

அன்பின் மகத்துவத்தை அழகாய் சொல்கிறது...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடுத்தவர் தேவையை பூர்த்தி செய்ய நாம் துணிந்தால், அந்த இடத்தில் ஆண்டவர் இருக்கிறார் என்பது திண்ணம்!!

Anonymous said...

Leo Tolstoy wrote this story.
I remember reading the translated
version in Tamil. I forgot the details but its essence remained
with me, mark of a good story!
Thanks for sharing!