Sunday, August 22, 2010

எனக்கே எனக்கா?


 சில சமயம்,  நண்பர்களுடன் சீரியஸ் ஆக  பேசி கொண்டு இருக்கும் போது கூட ,  intention இல்லாமலே,  ஏனோ காமெடி டைம் ஆகி விடுகிறது.

எனக்குதான்  BLOGGOTOPICTIS  நோய் தாக்கி விட்டதா? ( (எல்லா விஷயங்களையும்  Bird's eye view மாதிரி Blogger's eye  கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் நோய்)
இல்லை,  வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், இருக்கும் கவலைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும்  தெரியவில்லை.  ம்ம்ம்ம்ம்ம்.........

எங்கள் தோழி,  தேன்மொழியை நாங்கள் தேனா என்று அழைப்போம்.  ஒரு சமயம்,  மற்றொரு நண்பருடன் பேச,  தொலைபேசியில் அழைத்து இருந்தார்.
"ஹலோ"
"ஹலோ! நான் தேனா பேசுறேன்."
"ஹலோ,  நீங்கள் தேனா (honey) பேசுங்க. இல்லை, பாலா (milk)  பேசுங்க. முதலில் யார்னு பேரை சொல்லிட்டு பேசுங்க."

..... இன்னொரு சம்பவத்தையும் நான் கண்டிப்பாக சொல்லணும். 

எங்கள் நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது.  வேறு மாநிலத்தில் இருக்கும் அவர்களை, ஒரு லீவில் பார்க்க சென்ற போது, குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. நாங்கள் சென்று இருந்த வேளையில்,   அவர்களை காண வேறு ஒரு நண்பரும்,  தன் மனைவியுடன்  வந்து இருந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி, சில நாட்கள் முன் தான் அமெரிக்கா வந்து இருந்தார்கள்.  
நானும்,  அந்த புது பெண்ணும்,  குழந்தையுடன் உள் அறையில் இருந்த நண்பரின் மனைவியை காண உள்ளே சென்றோம்.

நான்:  "எப்படி இருக்கீங்க?"
தோழி: "இப்போ, பரவாயில்லை, சித்ரா."
நான்:  "ரொம்ப கஷ்டமாக இருந்ததா?"
தோழி:  " ஆமாம்,  வலி தாங்க முடியாம இருந்தது. "
நான்:  " அப்படித்தான் இருக்கும்ப்பா... இது ஈஸினு யாரும் சொல்லலியே."
தோழி:  "அதாங்க..... சேர்த்தே இரண்டையும் எடுத்துடுங்க என்று டாக்டர் கிட்ட சொன்னேன். கேட்க மாட்டேனுட்டார். இப்போ, நான் கொஞ்சம் recover ஆகி இருக்கும் நேரம்,   திரும்ப  அடுத்ததுக்கும் போகணும்."
புது பொண்ணு:  "அப்படியா? எப்போ?"
தோழி:   "அடுத்த வாரம்,  டாக்டர்  வர சொல்லி இருக்கிறார்."
புது பொண்ணு:  "இந்தியாவுல இப்படி எல்லாம் விட மாட்டாங்க..... என்ன அமெரிக்காவோ?  ஒரு குழந்தை  பிறந்து, ஒரு மாதம் ஆகி போச்சு...... இன்னும் இரண்டாவதை  டெலிவர் பண்ணலைனா என்ன அர்த்தம்?  டெலிவரி date முடிஞ்சும் இப்படி இருக்கிறது, குழந்தைக்கு நல்லது இல்லை.  உங்களுக்கு பாருங்க, மறுபடியும் வலி, வேதனை...... எல்லாம்."
தோழி:  "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா?  சரியா போச்சு.  நான் போன வாரம் பிடிங்குன பல் பத்தி சொல்றேன். இன்னொரு பல்லை, அடுத்த வாரம் எடுக்கப் போறாங்க.... டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
நான்:  "நியாயமான கேள்வி. அவரவர் வலி  அவரவர்க்கு."

எனக்கே எனக்கா? இப்படி நண்பர்கள், எனக்கே எனக்கா?   ...........
இன்னும் எத்தனை பேர், இப்படி உலகத்துல கடவுள் படைத்து விட்டிருக்காரோ? அதில் எத்தனை பேர் , எனக்கு நண்பர்களாகப் போகிறவர்கள் என்றும் எழுதி இருக்கிறதோ?   ம்ம்ம்ம்ம்ம்ம்........
தம்பட்டம் தாயம்மா:  "எப்படி சித்ரா, வழக்கம் போல......  புலம்புற மாதிரியே,  நல்லா பெருமை அடிச்சிக்குற?
நீ நடத்தும்மா!"

78 comments:

எல் கே said...

vaara muthal naalil sirika vaithatharkku nandri

Chitra said...

Thank you, LK!

சிவகுமார் சுப்புராமன் said...

வெட்டியாகப் பேசினாலும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது தோழி!

BLOGGOTOPICTIS - புதுசா இருக்கு!!!

Unknown said...

நீங்க நல்லா எழுதுறீங்கன்னு ஒரு நண்பர் சொல்ல ..
ரொம்ப நன்றிங்கன்னு சொல்லிட்டு .. எல்லாத்தையும் படிப்பீங்களான்னு கேட்டேன் ...
அவரு ஆமாங்க எல்லாத்திலையும் உங்க பின்னூட்டம் நல்லருக்குன்னார்....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... சித்ரா.. சூப்பர்..
நீங்க தேனா இருங்க, இல்ல பாலா.. இருங்க... சூப்பர் அப்பு சூப்பர்.. :D :D

உங்கள் கூட இருந்தாலே... எல்லாரும் இப்படி தான் நகைச்சுவையா பேசுவாங்க போல இருக்கு!!
மீண்டும், தம்பட்டம் தாயம்மா வந்ததுல ரொம்ப சந்தோசம்... :-))

Robin said...

//positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும் தெரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்.........// ஆமா, உண்மைதான்.
ஒருவகையில் இதுவும் நல்லதுதான்.

Unknown said...

எனக்கு பல்வலிகுது

நாமள சுத்திதான் நகைசுவை இருக்கு வேற எங்கேயும் போக தேவையில்லை

நாடோடி said...

அந்த‌ நோய் உங்க‌ளுக்கும் வ‌ந்திடுச்சா?... :)

அருண் பிரசாத் said...

அந்த நோய்தானா அது? எனக்கும் ஒரு 2 மாசமா இருக்கு.

//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//

செம டைமிங் காமெடி...

settaikkaran said...

எல்லாம் சரி, BLOGGOTOPICTIS வியாதி வந்தா எந்த டாக்டரைப் போய்ப் பார்க்கணுமுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே! இது நியாயமா? :-)

Anonymous said...

Its interesting Chitra...
Keep it up...

Anonymous said...

எப்படிங்க சித்ரா உங்களால மட்டும் இப்படி தேனா பாலா காமெடி பண்ண முடியுது?
ரொம்ப ரசிச்சேன் :)

ஹுஸைனம்மா said...

//பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//

“அந்த தெய்வத்துக்கே கஷ்டம்னா யார்கிட்ட சொல்ல?”ங்கிற சிவாஜி டயலாக்தான் ஞாபகம் வருது. அதுவும் அதே டோன்ல சொல்லிப்பாத்தா...

உங்களைப் பாத்தவுடனே எல்லாரும் “சிரி”யஸா ஆகிடுவாங்க போல!!

Anonymous said...

Nice Chitra
Funny

vasu balaji said...

:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//

செம டைமிங் காமெடி...

ரொம்ப ரசிச்சேன் :)

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

super

ரசித்துப் படித்தேன்

சௌந்தர் said...

பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//

என்ன ஒரு தத்துவம் நல்ல நகைசுவை

என்னது நானு யாரா? said...

எப்படிங்க இப்படியெல்லாம். தெயவ சோதனையா எல்லோரும் உங்க கிட்டேயே இப்படி மாட்டுறாங்க!

அந்த பல்வலி டயலாக் ரொம்ப கலக்கலுங்கோ!

பதிவு சுட சுட போட்டிருக்கேன். படிச்சு பாத்து கருத்து சொல்லுங்க!

Asiya Omar said...

உங்க காமெடி பீஸ்கள் வர வர சிரிச்சு தாங்க முடியலை.இது மாதிரி எழுத எல்லாருக்கும் வராது.

Anonymous said...

பால் போல மனம் இருக்கற நீங்க தேன் போல தித்திக்கும் பதிவுகள் போடுங்க நான் தான் படிக்கா ரெடியா இருக்கேன் இல்லையா ஹி ஹி ..உங்க பதிவு எப்போதும் போல சூப்பர் ..நன்றி

நட்புடன் ஜமால் said...

தேனா? பேசுறது ஆமாங்க நான் தேனா தான் பேசுறேன் :) :) :)

-------------

சிரிப்புக்கு பஞ்சமில்லைன்னு தலைப்பு வச்சிருக்கலாம் உங்கள் ப்லாக்குக்கு

வினோ said...

திங்கள் கலையில.. செம பதிவு... நல்ல இருக்கு சித்ரா... நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"///

ha ha ha ha ha ha ha ha ha ha ha ha .. this is ur style.

goma said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

நான் பயந்தே போயிட்டேன்

S Maharajan said...

SUPER AKKA

ஜெய்லானி said...

சரி இப்ப எப்படி இருக்கீங்க வியாதின்னு சொன்னவங்களை நலம் விசாரிகாம போகக்கூடாது...ஹா..ஹ..




@@@ஹுஸைனம்மா

//பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//

“அந்த தெய்வத்துக்கே கஷ்டம்னா யார்கிட்ட சொல்ல?”ங்கிற சிவாஜி டயலாக்தான் ஞாபகம் வருது. அதுவும் அதே டோன்ல சொல்லிப்பாத்தா...

உங்களைப் பாத்தவுடனே எல்லாரும் “சிரி”யஸா ஆகிடுவாங்க போல!!

ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

mkr said...

"டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"

ஆட... ஆமால்லே.எப்படி முடியும்.வெட்டிபேச்சாக இருந்தாலும் சிரிப்பை தருகிறது.பாரட்டுகள் சகோதரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் :))

சாருஸ்ரீராஜ் said...

very nice chitra , i like your positive approach.

ராமலக்ஷ்மி said...

பதிவு தேனா இருக்கு சித்ரா:)!

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி சூப்பர்.

நிறைய பேருக்கு இப்போ அந்த நோய் இருக்குபோல?

சாந்தி மாரியப்பன் said...

செம கலகலப்புப்பா :-))))))

goma said...

நான் இப்பொழுதுதான் பிளாகோடாபிக்ஸ் நோயிலிருந்து விடுபட்டு வருகிறேன்.....உங்களுக்கு இது எந்த ஸ்டேஜ்?
:-)))))

Menaga Sathia said...

ha ha super chitra!!

கண்ணா.. said...

எங்க போனாலும் ப்ளாக்கோமேனியாவா ரைட்டு நடத்துங்க :)

Prathap Kumar S. said...

ஹஹஹஹ... தேனா பேசுறேன்...செம காமெடி... :))))))

Ramesh said...

ரசித்துப் படித்தேன்..அருமையா இருக்குங்க..

Anonymous said...

டேய் முனியாண்டி.. மாயாண்டி.. நாகப்பா.. எல்லாரும் வாங்கடா.. சித்ரானு ஒரு பொண்ணு பதிவுங்குற போ்ல மொக்கை பண்றது தாங்க முடில.. கொஞ்சம் இன்னானு கேட்டுட்டு வருவோம்..

ஹேமா said...

நகைச்சுவை எப்பவும்போல
கலக்குது சித்ரா.

ராஜவம்சம் said...

ரொம்பவும் ரசித்-தேன்
வாழ்த்துக்கள்.

அப்பரம் ஒரு விசயம் எங்கூருப்பக்கம் தேனா-ன்னா கெட்டவார்த்தைங்க.

Nithu Bala said...

Chitra,
sariyana comedy..ennaiku kalaila naan padicha mudhal pathivey ungaluthu thaan..arumai.

தமிழ் அமுதன் said...

///டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?///

பக்கத்துல இருக்குற யாரயாச்சும் புடிச்சு கடிக்க வேண்டியதுதான்..!

இப்போ நீங்க கடிக்கல அதேபோல ..!
;))


நல்ல நகைச்சுவை பதிவு நன்றி..!

அன்பரசன் said...

பல் மேட்டர் சூப்பர்..
ஹா ஹா ஹா

Jey said...

எனக்கும் இந்த BLOGGOTOPICTIS வியாதி இருக்காம் ஆனா முத்துரதுக்குள்ள... சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொல்ராரு

Priya said...

தேனா பாலா... superb!

Mythili (மைதிலி ) said...

பல்லு பிடிங்கின கதை ரொம்ப ரஸமாய் இருந்தது......

சுசி said...

நல்ல நோய் தான் போங்க..

தெய்வசுகந்தி said...

LOL!!!!!!!

மங்குனி அமைச்சர் said...

உங்க ராசி போல மேடம், இந்த தேனு , பாலு பல்லூபுடுந்குரது எல்லாம் உங்கள் பக்கத்துலே நடக்குது

கவி அழகன் said...

ஆஹா என்ன ஒரு சுவாரஸ்யமாக ஹா ஹா ஹா

எம் அப்துல் காதர் said...

அருமையான கலக்கல் காமெடி சித்ரா மேடம்.

Vidhya Chandrasekaran said...

உங்க பல்ல எப்ப பிடுங்குவாங்க...

திருவாரூர் சரவணா said...

இந்த மாதிரி காமெடியா முடிஞ்சா பரவாயில்லையே... நான் ஒரு முறை சாதாரணமா பேசினது வம்புல கொண்டு பொய் விட்டுடுச்சு.பிரபல அரசியல் தலைவர் ஒரு ..................ரை செருப்பால அடிச்சுட்டதா செய்திகள் பரவிய நேரம். என்னோட உயரதிகாரி (?) புது செருப்பு வாங்கியிருந்தார். இது ..................ரை அடிக்கவா என்று நான் கேட்டதும் அவர் பொங்கி விட்டார்.

காரணம் வேறொன்றுமில்லை. அவருக்கு பண உதவி செய்யப்போவதாக சொல்லியிருந்த ஒரு நபரை அடிக்கவா இந்த செருப்பு என்று நான் கேட்டதாக தவறாக புரிந்து கொண்ட உயரதிகாரி என்னை வார்த்தைகளாலேயே வருத்தெடுத்து விட்டார்.

dheva said...

கடவுளால் ஆசிதிர்வதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களையும் சிரிக்க வைத்து தானும் சந்தோசமாக இருந்து....காணும் ஏஎல்லாவற்றிலும் மகிழ்ச்சியையே கண்டு.....சந்தோசமாக வாழ்வை மாற்றிக் கொள்கிறார்கள்....

நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

dheva said...

கடவுளால் ஆசிதிர்வதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களையும் சிரிக்க வைத்து தானும் சந்தோசமாக இருந்து....காணும் ஏஎல்லாவற்றிலும் மகிழ்ச்சியையே கண்டு.....சந்தோசமாக வாழ்வை மாற்றிக் கொள்கிறார்கள்....

நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

குட்டிப்பையா|Kutipaiya said...

எல்லாமே ப்ளாக்கர் கண்ணோட்டத்தில :) :) :) அய்யோ அய்யோ :) :)

லெமூரியன்... said...

மல்லாக்க படுத்து யோசிச்சா கூட இப்டிலாம் தோணாதே??
காமடிலாம் நல்லாத்தான் இருக்கு...
ஆனா உங்க போட்டோவை பார்த்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு
:-)

மோகன்ஜி said...

அடேயப்பா! மென்மையான நகைச்சுவை
நானும் ஒரு 'BLOG'GARD ஆனப்புறம் இப்போதான் உங்க வலைப்பதிவை பார்த்தேன்.உடனே follower ஆயிட்டோம் இல்ல!

எப்பூடி.. said...

:-))))))))))))))))))))))))))))))))))

மோகன்ஜி said...

அடேயப்பா! மென்மையான நகைச்சுவை
நானும் ஒரு 'BLOG'GARD ஆனப்புறம் இப்போதான் உங்க வலைப்பதிவை பார்த்தேன்.உடனே follower ஆயிட்டோம் இல்ல!

Unknown said...

ஹா ஹா ஹா.

வேலன். said...

ரக்ஷ்ச பந்தன் வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளமுடன்.
வேலன்.

R.Gopi said...

BLOGGOTOPICTIS

அசத்தல் சித்ரா....

தேனே...பாலே....மானே... தேனே.... பொன்மானே.... இதுவும் பட்டையை கிளப்பிய நகைச்சுவை....

டெலிவரியையும், பல் பிடுங்கியதையும் குழப்பியது சூப்பர் காமெடி....

NADESAN said...

நல்ல காமெடி படித்தேன் ரசித்தேன் அட நானும் நெல்லை மாவட்டம் தாங்க
நெல்லை நடேசன்
அமீரகம்

அண்ணாமலை..!! said...

தேனா..? பாலா..?

உங்க பிளாக்குங்க!
(உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!)
:)

Anonymous said...

டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"

I laughed out loud reading this sentence... Thanks very much for the fun!!! Looking for the next post...

Unknown said...

கலக்கலா இருக்கு.. நகைச்சுவையான பதிவு.. சூப்பர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Happy Raksha Banthan.....

ஸ்ரீராம். said...

//"தோழி: "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா? சரியா போச்சு."//

அட, இது என்னங்க..

ரெண்டாவதா பிறந்த நான் கூட ரொம்ப லேட்டாதான் பிறந்தேனாம்...எங்க அம்மா சொல்லியிருக்காங்க...எங்க அண்ணன் பிறந்து நாலு வருஷம் கழிச்சு...!!

ஹி..ஹி...

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவையான பதிவு..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிமே சித்ராங்கிற பேர மாத்திர வேண்டியதுதான்.. கலகல சித்ரா..ஓகேவா..

Anonymous said...

I am not able to control my laugh by readin this topic... :)...Unga approach enakku pidichu irukku....:)

Jaleela Kamal said...

ஹாஅ ஹா எப்படி சித்ரா இவ்வ்ளவு வெட்டி பேச்சு சுவரசிய்மாச்சு,,
ஹிஹி
பல் வலியும் , டெலிவரியும்,,, ஹி

புது டெம்லேட் டிசைன் நல்ல இருக்கு,

பின்னோக்கி said...

சிரிச்ச மாளலை... டெலிவரிக்கும் பல்லுக்கும் முடிச்சுப் போட்டு... என்னவோ போங்க

Yoganathan.N said...

//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
எப்படிங்க இப்படி எல்லாம்? வாய்விட்டுச் சிரித்தேன். :)

பாலா said...

:DDDD
BLOGGOTOPICTIS -> nalla peru vachirukeenga..... nalla vela intha noi peravathu "phobia" la mudiyala...